சனி, நவம்பர் 26, 2011

raheem eeradi

ரஹீம் ஈரடி
அப்துர்ரஹீம் கான்கானா    என்பது ரஹீம் என்ற ஹிந்தி கவிஞரின் முழுப்பெயர்.
இவர் பேரரசர் அக்பரின் அமைச்சர் , சேனாபதி . அவரது அரசபையின் நவரத்தினங்களில்  ஒருவர்.இவர் தானவீரர் கர்ணன்  அவர்களுக்கு சமமானவர்.
வருடத்திற்கு ஒரு நாள் தன்னிடம் உள்ள அனைத்தையும் தானம் கொடுத்துவிடுவார்.
ரஹீம்   ஹிந்து தர்மத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர்.

அவரது dhohai  அதாவது  ஈரடி
१.1.

இயற்கையில் நல்ல உயர்ந்த  குணப்பண்புகள்  உள்ள உயர்ந்த மனிதனை கெட்ட சேர்க்கைகள்  தீய குணங்கள் உள்ளவனாக மாற்றமுடியாது.குளிர்ச்சியும் நறுமணமும்  கொண்ட சந்தனமரத்தில் சுற்றியுள்ள பாம்பால்
சந்தன மரம் தன்  பண்புகளை இழக்காது.

जो रहीम उत्तम प्रकृति ,का करी सकत कुसंग. चन्दन विष  व्यापत नहीं, लिपटे रहत भुजंग.

2. வைரத்தின் மதிப்பை மற்றவர்கள்தான் மதிப்பீடு செய்வர்.வைரம் தன் விலையை ஒருபொழுதும் ஒரு லக்ஷம்  என்று கூறியதில்லை.அவ்வாறே உயர்ந்த மகான்களை  மற்றவர்கள் தான் மதிப்பர்.உயர்ந்தவர்கள் தற்புகழ்ச்சி
செய்ய மாட்டார்கள்.
बड़े बडाई ना करें ,बड़े न बोली बोल. रहीमन हीरा कब कहे ,लाख ताका है मोल.

கருத்துகள் இல்லை: