செவ்வாய், நவம்பர் 22, 2011

education without spirituality is incomplete

 ஆன்மிகம் இன்றி கல்வி முழுமை ஆகாது.

சனாதன தர்மம்   தான் இந்து தர்மம் என்ற குறுகிய  நோக்கில் காலமாற்றத்தால்
பிரபலம் அடைந்துள்ளது.இந்த கருத்தை உணர்ச்சி வசப்படாமல் ஒவ்வொரு இந்துவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
நாம் இறைவனை ஆதி அந்த மில்லா  அருட்பெரும் ஜ்யோதி என்கிறோம்.நாம் இயற்கையின் ஆற்றல் அறிந்து அதற்கு இறைவன்  பெயரிட்டு வணங்கு கிறோம்.கடவுள் உருவமும் அருவமும் அற்றவர் என்பதை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்கிறோம். வையகம் வாழ்க என்கிறோம். மனிதனை மனிதனாக பார்க்கிறோம். விருந்தினரை தெய்வமாகப் போற்றுகிறோம். ஜெய் ஜகத்  என்று
கூறும் சனாதன தர்மம் தான் .
ஆணவம்,பேராசை,பெண்ணாசை,பொன்னாசை அழிவைத்தரும் என்று கூறும் ஞானிகளும், ஆடைகளைத்துறந்த மகாவீரரும்,அரசபதவியைத் துறந்த
புத்தரும் பிறந்த புண்ணிய பூமி   பாரதம்.

ராவணன் ஆயகலைகள் அறுபத்து மூன்றும் அறிந்தவன். வேதம் பயின்றவன்.
பலம் மிக்கவன். கல்வியில் சிறந்தவன்.கலைமகள்.நிலமகள்,மலைமகள் மூவரின் அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமானவன்.ஆனால் அவன் பழிக்கு ஆளானான்.
ராவணனைப்போன்று பலர்.   தெய்வ  சிந்ததனையும் எண்ணமும்  கல்வி ஞானமும்  பெற்ற இராவணன்  முழுமை பெற்ற மனிதனாகவில்லை.காரணம்   அவன் மனத்தில் முழுமையான மாசற்ற தெய்வ ஆன்மீக எண்ணம் இல்லை.

நாம் திட மாக ஏற்க வேண்டியது
   ஆன்மீகத்துடன் கலந்த உலகியல் கல்வி.

கருத்துகள் இல்லை: