வியாழன், நவம்பர் 24, 2011

DIVINE INDIA

பாரத நாடு பாருக்கு வழிகாட்டுகிறது. நம் வாழ்க்கை முறை ,பக்தி நெறி,மேலை நாட்டினருக்கு ஒரு வியப்பையும் மனித சக்திக்கு மேலான ஒரு சக்தி கட்டாயம் இயக்குகிறது என்ற முடிவிற்கு வருகின்றனர்.நான் எங்கேயோ கேட்ட கதை.அது உண்மையா பொய்யா என்பதை விட அதன் உள்ளார்ந்த பொருள் தான் என்னை சிந்திக்க வைத்தது.
ஒரு ரஷ்ய நாட்டு ஆர்வலர் இந்தியாவின் ஊழல் பற்றியும் இன மொழி இயற்கை வேற்றுமை,அரசியல் கட்சிகள் ,பல உட்பிரிவுகள் ,பல வித சம்பிரதாயங்கள்,பல பெயர்களில் உள்ள இறைவன்கள்,,தெய்வ உருவங்கள் ,மனித நேயம் போன்றவற்றை ஆராய வந்தார் என்றும் அவரை ஆச்சரியப்பட வைத்தது பாரத நாட்டின் முன்னேற்றம்.கரணம்:-

.௧.அரசியலில் ஒற்றுமை இல்லை.ஒரே கட்சியில் பல உள் கட்சிகள்.ஒரே தலைவர்.ஒரே கொள்கை.ஆனால் கட்சிகள் பல.
௨.ஒரே மதம். பல கடவுள்கள்.இந்துமதம்.இந்து என்ற பெயர் சிந்து நதியைக்கடந்து வந்த அந்நியநாட்டவர்களால் கொடுக்கப்பட்டது.ஆனால் அதை சனாதன தர்மம் என்று கூறும் பிரிவினர்.
௩.சிவனை வழிபடுபவர்கள்.அதிலும் வீரசைவர்கள்.விஷ்ணுவை வழிபடுபவர்கள்.அவரின் ராமாவதாரத்தை மட்டும் வழிபடும் ராமதாசர்கள்.
கிருஷ்ணா அவதாரத்தை  மட்டும் விரும்பும் கிருஷ்ண தாசர்கள்.
தேவி உபாசகர்கள்.சக்தி உபாசகர்கள்.ஹனுமான் பக்தர் கள்.
௪.அத்வைதம்,த்வைத்வம்,விஷிச்டாத்வைத்வம் ,சங்கரர் ,ராமானுஜர்,மத்வாசாரியார்,
பின்னர் ஷீரடி சாய்பாபா,புட்டபர்த்தி சாய்பாபா,ராகவேந்திரர்,அருட்ப்ரகாச இராமலிங்க அடிகளார்,என்ற வழிபடும் தெய்வங்கள்.
௫.இத்தனை வேறுபாடுகள். வேறுபட்ட கருத்துக்கள்.விரோத  மனப்பான்மைகள்.
ஒருவருக்கு மற்றொருவர் பார்த்தாலே பாவம் என்ற வெறுப்புகள்.வடகலை தென் கலை நாமங்கள், வீபூதிப்பட்டைகள்,அதற்காக
நீதி மன்ற வழக்குகள்.
கலியுக தர்மங்கள் இன்று கலப்புமணத்தை ஆதரிக்கும் சட்டங்கள்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வேதங்களில்  எழுதப்பட்ட ..எதிர்கால கணிப்புகள் .

இவ்வளவு மன  வேற்றுமை  களுக்கு நடுவில்  நாட்டின்  முன்னேற்றம் அந்த  ரஷ்ய  ஆர்வலரை அதிசய  மூட்டியது. 
 நாத்திகரான அவர் முதன் முதலில் ஆஸ்திகம் பற்றியும் சிந்தித்து இறைவன்  உள்ளார்  என்று பக்தரான சம்பவம் நடந்துள்ளது.அமைதியைத் தேடி பாரதம் வரும் அயல்நாட்டினரும் அதிகம்.

இறைவனின் பாரதம் காக்கப்படும்.ஒற்றுமை  காக்கப்படும்.
  

,

கருத்துகள் இல்லை: