செவ்வாய், நவம்பர் 08, 2011

chinthanai

ஓய்வு பெற்ற எனக்கு சிறு பிரயத்தி இருந்து இன்றுவரை  வாழ்வின் நிகழ்வுகள் அலை அலையாக எழுந்துகொண்டே உள்ளன.எனது ஆரம்பக்கல்வி ராமநாதபுறமாவட்டம் சிங்கம்புனரியிளும் போக்குவரத்து வசதியில்ல கொம்புக்காரநேன்தல் என்ற குக்கிராமத்திலும் ஆரம்பமாகியது.கொம்புக்காரநேன்தலில் உள்ள சப்த கன்னிகோயில் ஒரு வாய்க்கால் கரையில் இருக்கும்,பக்கத்தில் சவேரியார் பட்டினம் என்ற ஊரில் ஒரு சர்ச் இருக்கும்.நான் இன்றும் அருள்தருவதுபோல் இருப்பது அந்த சப்தகன்னிகள் என்ற நினைவுதான்.

என் வாழ்க்கையில் எனது அப்பா ஒரு உழைப்பாளியாக இருந்தும் சம்பாதிக்கத் தெரியாதவர்.சாது ,யதார்த்தம் என்று பெயர் வாங்கியவர்.அம்மாவும் அப்படியே.

ஹிந்தி போராட்டம் நடந்த தமிழகத்தில் ஹிந்தி அம்மா கற்றதால் தான் அடுப்பெரிந்தது. அதே ஹிந்தி எனக்கு வாழ்வளித்தது.
இந்த ஓய்வு பெறும் நாள் வரை இறைவனை அதிகம் வணங்கியும் காயத்ரி மந்திரம் ஜபித்தும் பல அருளாசிகளும் ,அருள்வாக்கும் பெற்றுள்ளேன்.
கடவுள் மனித வடிவத்தில் அருள் பாலிப்பார் என்பதற்கு பல நிகழ்வுகள் என்வாழ்வில் நடந்துள்ளன.அந்த அன்பவங்களை சிந்தனைகளாக இனி வெளியிடுவேன்.

கருத்துகள் இல்லை: