மணல் திருட்டு ,
விவசாய நிலம் வீட்டுமனை 
ஏரிகள்  நிரப்பி  அடுக்கம் 
பொறியியல் கல்லூரி 
கோயில் நில ஆக்கிரமிப்பு 
என்று மாநிலத்தில் நடக்க 
தில்லி சென்று போராட்டமாம் 
ஆழ்ந்து சிந்தித்தால் மாநில திராவிட கட்சிகள் 
அடிக்கும் கொள்ளை புரியவரும்.
புயல் பாதிப்பு 
மக்கள் வேதனை .
ஆண்டவனை வேண்டுகிறேன் 
இந்த சுய னல அரசியலுக்கு 
முற்றுப்புள்ளி வைக்க 
மக்களுக்கு இளைஞர்களுக்கு 
ஞானம் கொடு.
உன்னையே சிதறவைக்கும் மூட பக்திக்கு 
முடிவுகட்டு .
பாலும் தெளிதேனும் பாகும் ,பருப்பும் 
இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் 
கோடிக்கணக்கில்  சிலை செய்து 
உன்னை அவமானப்படுத்தி 
ஆலயநிலங்கள் சிலைகள் 
கொள்ளை அடிக்கும் கூட்டத்தை 
 அழிக்க  வா ! விநாயகப் பெருமானே!
பூஜைக்கு முதல்வோனே!
அறிவு கொடு!  மணல் கொள்ளை 
நாட்டை மலடாக்குவோரும் 
மண்ணுக்குள்ளே என்ற ஞானம் கொடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக