திங்கள், நவம்பர் 03, 2014

பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

    இடுகைகள்   இடாமல் பல மாதங்கள் ஓடிவிட்டன.

       அரசியல்  எழுதினாலும் .ஆன்மிகம்  எழுதினாலும்


இங்கொன்றும் அங்கொன்றும் எதிர் கருத்தே வெளிவரும்.

ஆலயங்கள்   பெருகிவரும் இந்நாளில் ,

ஊழலும் பெருகி உண்மையும் மறைந்து

அனைத்திலும் சுயநலமே என்பது உறுதியாச்சு.

ஆலயங்கள்  வணிக  வளாகங் களுக்கு நடுவில்

புராதானக் கோயில்கள் பாழடைந்த நிலையில்,

அந்த   அரிய  அற்புதகட்டிடங்கள் சிற்பங்கள்

கவனிப்பார்  இன்றி. இருக்கும் நிலையில்

புதுப் புது ஆலயங்கள்.

அதன்  உள்நோக்கம் பக்தியா?முக்தியா?வாணிகமா?

ஆண்டவன் காட்சி அரசமர அடி நிழல் என்று மாறி

ஆஸ்திகள் குவியும் ஆஷ்ரமம் ஆலயங்கள்

என்ற நிலை பக்தியா ?

அங்கு அரசியல்வாதிகள் பங்குகள் அதிகம்.

பணக்காரர்களின் பங்கு அதிகம்.
ஏழைகளுக்கு  அன்னதானம்.
ஏற்றமுடையோருக்கு சந்நிதானம்.
சிந்தித்தால் சிரிப்பு வருது,
இந்த நிலைகெட்ட மானிடர்களை
நினைத்துவிட்டால் நெஞ்சு பொறுக்கவில்லை .
என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை: