செவ்வாய், அக்டோபர் 09, 2012

யார் குற்றம் ?

யார் குற்றம் ?

வழியில் செல்லும்போது.
தள்ளுவண்டி வியாபாரியிடம் ,
இரண்டு டசன்  வாழைப்பழம்
எடுத்துச்சென்ற போக்குவர த்துக்காவலர்.
 வியாபாரியிடம் கேட்டேன் .பதில்
ஐயா,
நான் என்ன   செய்ய ?
இங்கு நின்று  வியாபாரம் செய்ய,
அங்கு போக்குவரத்து அதிகம்.
என் பொழப்பு அப்படி.
அன்று வரும் வாடிக்கையாளர் ஏமாந்தால்
விலை அதிகம்.
 இது  யார் குற்றம்?

கனரக்வாஹனம்.
தடுத்து நிறுத்தியதும்,
காவலருக்கு  ஓட்டுனர் காணிக்கை.
பலர் முன்னிலையில்.
உடனே இது தவறு என்பது போய்
எனக்கு காவலர் வேலை கிடைக்கவில்லையே?
என்று வருத்தப்படுவோர் அதிகம்.

போக்குவரத்து அலுவலகம்,
மின்வாரியம்.
மாநகராட்சி அலுவலகம்,
பத்திரப்பதிவு அலுவலகம்
என எங்குமே லஞ்சம் .
நாடறிந்த உண்மை.
அனைவருக்கும் மகிழ்ச்சி
அலையவைக்காமல்
காரியம் நடக்கிறதே
பல முறை ஆட்டோ சிலவு மிச்சமாகிறதே.
இது எல்லாம் யார் குற்றம்?
67 ஆண்டுகள்  விடுதலை அடைந்து
அனைத்து  அலுவலகங்களிலும்
மக்கள் மனம் விரும்புவது
கொடுத்தால் காரியம் ஆனால்
சரி.
அதனால்  இது அங்கீகரிக்கப்பட்ட
குற்ற நியாயங்கள்.
இந்நிலைதீருமா?
எப்படியோ காரியம் ஆனால் சரி என்று
மக்கள் கருதும் போது .
இது பொதுவான குற்றம் .
ஆகையால் நியாயம் தானே?





கருத்துகள் இல்லை: