திங்கள், ஆகஸ்ட் 27, 2012

கணநாயகா !!! ஞானம் கொடு!

கடவுள் - Vinayakar - God - Ganesh - Ganapati - Pillaiyar - பிள்ளையார் - விநாயகர் - கணபதி

பார்க்கப் பார்க்கப்
பரவசம் அடையச்செய்யும்,
கணநாதனின் ,
கருணை உருவம்.
கைகளில் 
கருணை,
படைத்தவனின்,
கடும் உழைப்பு.
அழகு 
உருவம்.
ஓம் என்ற பிரணவ
எழுத்து.
அழகுத்தொந்தி,
அழகுத்தந்தம்,
இந்த அழகு 
பொம்மை,
குரங்குகையில் 
கொடுத்த 
பூமாலையாக,
அங்கம் அங்கமாக ,
கடலலைகளால்,
பிய்க்கப்படுவது ,
ஆழ்ந்த பக்தியின் ,
ஆன்மீக வழிபாடு.
இதில் பல்லாயிரம் 
காந்தி பட காகிதங்கள்.
ஏழைகள்  சிரிப்பில் 
இறைவன் காணும்
 அரசின்பாதுகாப்பு.
இது பக்தியா?
அழகு இறைவன் 
ஆகாரத்தை,(உருவத்தை)
அவமானப்படுத்தும்,
அநியாயமன்றோ?
சிவகாமிமகனை  ,
கந்தனின் 
மூத்தோனை ,
சிவகுமாரனை ,
சினாபின்னமாக்கும்,

இந்த,
ஆன்மீக வாதிகளின்,
அடிமதில்,
இந்த அறிவற்ற 
பக்திமுறை மாற்ற 
முப்பெரும் தெய்வங்களை,
முப்பெரும் சக்திகளை,
முக்தி தரும் கிராமதேவதைகளை,
நீலியை,காளியை,கருப்பணனை,

மன்றாடி வேண்டுகிறேன்.
கரை ஒதுங்கும்,
உன் முண்டம் ,
கரம்,கை,
தொந்தி,
ஞானம்பெற்ற 
சனாதன 
தர்மத்துக்கே ஒரு 
நீங்காக் கரை யன்றோ?

சனாதன தர்மம் தழைக்கத் 
தடையன்ரோ?
கண்ணீர் மல்க .
காலடி தொழுகின்றேன்.
உவர்மண் நிறைந்த 
வண்ணான்,
சிவனாக காட்சியளித்த 
பக்தர் பிறந்த 
நாட்டில்,
அழகுச்சிலை,
அலங்கோலப் படுவது,
அகிலத்தில்,
அவமானமன்றோ /?
மேல்நாட்டில்,
உள்ளாடையில் ,
உன் உருவம்பதித்து  ,
அணிவது 
மதத்திற்கு,
அவமானமென்று அலறிய ,
ஹிந்துக்கள்,
சாக்கடையும்,
மலமும்,
மூத்திரமும் 
சங்கமாகும் 
கடலில் 
கரைப்பது 
படு பாதகச் 
செயலன்றோ?
கணநாயகா !!!
ஞானம் கொடு!
இந்த இழி   

செயலை,
தடுத்துவிடு.


















கருத்துகள் இல்லை: