திங்கள், ஆகஸ்ட் 13, 2012

ஒற்றுமை காப்போம்.


சுதந்திர தினம் 

பாரதநாடு  பழம்  பெரும்  நாடு.--பிற 

நாடுகளை நாடிச்செல்லா  நாடு.

கடல் கடந்தால் கரை படியும் 

என   தேசத்தந்தையை   முதலில் தடுத்து,

அன்னையின்  பயம் போக்க 

நல்ல   குணங்கள்  பின்பற்ற 

சபதம்   செய்து  ஒழுக்கமே விழுப்பம் தரும் 

என்ற உயரிய நாடு.

"ஆன்மிகம் "  எண்ணங்களால் , 

 வையகம்  புகழும் நாடு.

இந்த நாட்டில் அன்னியர்  புகலிடம் தேடி  வந்தனர் .

கொள்ளை  அடிக்க வந்த கூட்டம்.-அதில் 

நம்  நாட்டின்  கருங் காலிகளால்,

சுயநலமிகளால்,

 பொறாமை  கொண்டாரால்,

அண்ட வந்தவர்கள் .

ஆட்சியாளராக   மாறிய  விந்தை.

ஆண்டவர்கள்  அடிமையான விந்தை.

பாரதியார் பாடிய  

நம்மில்  ஒற்றுமை நீங்கில் ,

அனைவருக்கும் தாழ்வே .

என்பதற்கு ஓர்  எடுத்துக்காட்டு.

இந்த 66வது சுதந்திர நாளில் ,

நம் நாட்டு தியாகிகளுக்கு அஞ்சலியாக 

இதுதான் சபதம்--

நம் நாட்டு கறுப்புப் பணம் ,

வெளிநாட்டில் இருக்க  இட மாட்டோம்.

இந்த உறுதியில் வேற்றுமை மறந்து 

ஒற்றுமை காப்போம்.

நாடே நமக்கு ;

சுயநல வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க  சபதமெடுப்போம்.










கருத்துகள் இல்லை: