வியாழன், ஜூன் 28, 2012

நீண்ட ஆயுளுடன் ஆரோக்ய வாழ்க்கைக்கு

மனிதன் உழைப்புக்கேற்ற உணவு உண்ணவேண்டும்.கடுமையாக உழைப்பவர்கள் தான் அரிசியை அதிகமாக சாப்பிடவேண்டும்.பொதுவாக 25 வயதிற்குப்பின் கோதுமை அரிசி உணவு சாப்பிடுதல், கிழங்குவகைகள் சாப்பிடாமல் இருத்தல்.  சர்க்கரை அளவு குறைத்தல், பச்சைக்காய்கரிகள் உண்ணுதல், அரிசியால் செய்யப்படும் இட்லி, தோசை, அடை, ஊத்தப்பம் போன்ற வற்றைத் தடுத்தல்  ஆயுளை அதிகப்படுத்தும் என்கின்றனர்.
சர்க்கரை சோதனையில் சிறிதளவு வுயர்ந்தாலும் உடனே சர்க்கரை மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுப்பொருட்களைத் நாம் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய் பல நோய்களுக்கும் அடிப்படை.பக்கவாதம்,இதய நோய்கள் மாரடைப்பு,மேலும்  உயிர்க்கொல்லி  நோய்களை அமைதியாக அதிகரிக்கும்  சர்க்கரை நோய்.

இனிப்பு  ஆராம்பத்தில் கொண்டாட்டம் பின்னர் திண்டாட்டம்.  விளைவு -

  • ஆயுள் காலம்  குறையும்.
  • மருத்துவ சிலவு அதிகரிக்கும்.

ஆகையால் கடின உழைப்பில்லா 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோதுமை உணவு சாப்பிடுவது  பல நோய்களைத் தடுக்கும்.


மேலும் வேக நடைப்பயிற்சியும் அவசியம்.  இருபது நிமிடத்தில் ஒரு மைல்  நடக்கவேண்டும்.


இந்தியாவில் ஆரம்பநிலையில் சர்க்கரை நோயை கண்டுபிடித்து கட்ட்ப்படுத்தாததால்  பலர் 60-65 வயதில் இறைவனடி சேர்ந்து விடுகின்றனர்.
ஆகையால்  அரிசிச்சாப்பாடு  குறைத்து ,  நோய்களைக் குறைத்து

கோதுமை  உணவை  உண்டால்  நோய்கள் கட்டுப்படும். ஆயுளை அதிகப்படுத்தும்.

அக்னி குஞ்சு " என்று கூறிய பாரதியார் அது ஒரு காடே பற்றி எரிய
 காரண மாகியது..அவ்வாறே நோய் ஆரம்ப நிலையிலேயே தடுக்காவிட்டால்
உடல் அழிய காரணமாகும்..


ஆலோசனை  மற்றும் அறிவுரை வழங்கியவர் -

DR.RAVI IYYER M.D.,Ph.D;
INTERNAL MEDICINE & PREVENTIVE CURE.
PHONE 703 404 5900
website: www.driyer.com
driyer.novahealth@gmail.com.

கருத்துகள் இல்லை: