ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

vinaayakare oru vendukol.விநாயகரே!வினை தீர்ப்பவரே!



விநாயகரே!வினை தீர்ப்பவரே!

விக்னங்கள் விலக்குபவரே!

உனது அழகு சிலைகள் 

இரவுபகலாக 

கொசப்பெட்டையிலும்,
வேலூரிலும் ,
 கண்ணுக்கு 
அழகாக '
குளிர்ச்சியாக,
உன் வதனம் 
பிரசன்னமாக 
பல் வண்ணங்களில் ,
பல உயரங்களில்,
பல்லாயிரம் 
ரூபாய் சிலவில்,
அழகுக்கு அணிகலனாய் 
உருவாவது கண்டு 
அகமகிழ்ந்தாலும் 
உன்னை ஆராதித்த பின் ,
கடல் அலைகளில் 
தலைவேறு ,
கால் வேறு ,
தொப்பைவேறாக 
அலைகழிக்கப்பட்டு,
கரை ஒதுங்கும் ,
பரிதாபம் 
தான் 
உனக்கு  மகிழ்ச்சி என்றால்,
உனது அருள் பெரும் 
வழிபாடு  -என்றால் 
உன் கருணை  உண்மை 
என்றால் ,
பல கலைஞர்களின் 
உழைப்பை,
அரிய  படப்பை 
அவமானப்படுத்தும் ,
உனது ஆராதனை 
முறை 
அவ்வை இருந்தால் அலறியிருப்பாள் .

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கொடுத்து 
சங்கத்தமிழ் மூன்றும் தா   என்றாள் .

இந்த கடலில் உன்னை 
அலங்கோலம்  
செய்வதால்  
கொலைவெறி தமிங்க்ளிஸ் வளர்கிறதோ?

செந்தமிழ்   தேய்கிறதோ ?

ஆங்கிலம் கலந்த தமிழ் 

அலங்கோலமாகிறதே !!!


வேண்டாம்!பக்தர்கள் எண்ணங்களை  மாற்று.
இந்த படைப்புகளில் உயிரோட்டம் கொடுத்து,
உன் அலங்கோல நிலையை 
நீயே மாற்றிக்கொள்.
கரையில் ஒதுங்கும் உன் முண்டங்கள்,
பக்திக்கு ஒரு ஏளனம்.
இந்துக்களுக்கு இழுக்கு.
ஹிந்து என்ற பெயர் ஏற்பட 
காரணமான வர்களுக்கு  
கொக்கரிப்பு.
சிலைகளை உடைப்பவர்களுக்கு 

பதில் 
சிலை கரைப்பு.
என்னே! தர்மம்!



கருத்துகள் இல்லை: