வியாழன், ஏப்ரல் 12, 2012

nandana aandu vaalththukkal.

நந்தன ஆண்டு பிறப்பு,
நாளான இன்று.
   ஆனந்தம் இல்லங்களில்
நாட்டியமாட,
நலம்,நன்மை,
என நாளும் நல்க,
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதுமை விரும்பும் நாம்,
பழமையின் நலந்தரும்,
பாடல்கள் போற்றுவோம்.
பார் ஓங்கி வளர,
பார்த்த சாரதி .
அருள்வேண்டுவோம்.
ஆன்றோரின் வழியை
பின்பற்றுவோம்.
இயற்கை அன்னையின் ,
இயல்பை சீற்றமின்றி,
இன்ப சூழலில் வாழ்வோம்.
இயற்கையோடு இயல்பான,
இன்னலற்ற வாழ்விற்கு ,
பசுமையை போற்றுவோம்.
நந்தன ஆண்டு,nalinamaaka,
நவீனம் படைக்க,
நந்தன் அருளும் ,நடேசன் அருளும்,
பெற்று நானிலம் போற்றும்.
நாணயம் வளர்த்து,நா நயம் காப்போம்.
நாட்டிற்கும்,நட்பிற்கும் .உறவுக்கும்,
உற்றார் சுற்றத்தாருக்கும்
கைகொடுப்போம்.
உலகம் போற்றும்,
உத்தம எண்ணங்களை
 ஏற்றம் பெற செய்வோம்.

நா மகள்.
நிலமகள்,
நான்மகன் இல்லாள்,
நீலகண்டன்,
நீலமேநியோன்.
நீங்காத இன்பமும் ,செல்வமும்,
நந்தன ஆண்டில் நந்தா விளக்காக,
நலம் பெற  கருணைகாட்ட ,
பிரார்த்தித்து ,புத்தாண்டு வாழ்த்துக்கள்.

.


கருத்துகள் இல்லை: