சனி, மார்ச் 17, 2012

maanavarkal

நமது பாரதப் பண்பாடு ஆசானை இறைவனுக்கு சமமாகக் கருதினாலும் ,குருவின்றி குருவின் ஆசிகள் இன்றி,வழிகாட்டல் இன்றி ஞானம் கிட்டாது என்றும் மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளனர். அறிவுரை வழங்கி உள்ளனர்.
ஆனால்,திரைப்படம்,சினத்திரை என்றாலே ஆசிரியர்களை அவமானப்படுத்துதலே.
காரணம் சில திறமைகள் மாணவர்களிடம் அதிகமாக இருக்கும்.அது அவர்கள் அனுபவத்தாலோ அல்லது பெற்றோகள் அல்லது குடும்ப சூழ்நிலையினால்  ஏற்படுவது.

என்னிடம் படித்த மாணவர்களிடம் மரியாதை  குணங்கள் காணப்பட்டாலும்
பெற்றோர்கள் பலரால் அவர்கள் மன நிலை வேறுபட்டிருந்தது.
பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலையில் மாணவர்கள் போக்கு காணப்பட்டது.எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவன் வேறு பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்தான்.அவனிடம் நான் தெரிந்து கொண்டது.பிறந்தநாள் சான்றிதழ்  பணம் கொடுத்து புதிதாக வாங்குவது.அந்த வயதே இருந்தால் விளையாட்டில் புதிய சலுகைகள் பெறுவது.
மற்றொரு மாணவன்  ஏழாம் வகுப்பு படிக்கும் போதே தந்தேன் வியாபாரத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பது.அவனிடம் விசாரித்த போது நான் படிப்பில் கவனம் செலுத்தாவிட்டால் என்ன,என் தந்தை படி த்தவறல்ல.
அவருக்கு பல சொந்தவீடுகள் உள்ளன. வாடகையே மாதம் முப்பதாயிரத்துக்கும் மேல் வருமானம்.அவன் ஆசிரியர் வீடு .ஊதியம் ஒப்பிட்டு
தன திறமைக்கு பல ஆசிரியர்கள் அவனிடம் கடன் வாங்குவதையும் குறிப்பிட்டான்.நடிகர்கள்,பாடகர்கள்,ஓவியர்கள்,பல கலை வல்லுனர்கள்  ,அரசியல்   தலைவர்கள்  ,எழுத்தாளர்கள் ,கவிஞர்கள்
 என பட்டம்  பெறாதவர்களை ஒப்பிட்டுப் பேசுகிறான்.பணம் பெற்று வினாத்தாள் தருவதையும்,டியூஷன்  மாணவர்கள் பெரும் சலுகைகளையும் ,
காணும் மாணவன்,காவல் துறையையும் கவருவதில் திறமை அடைகிறான்.
பள்ளிகளில் ஒழுங்கீனம் எங்கிருந்து வருகிறது .ஒரு மாணவன் நீண்ட நாள்
பள்ளிக்கு  வரவில்லை.அவன் பள்ளிவரை   சென்று வீடு செல்வது வழக்கம்.
ஆனால் அவன் பெற்றோர்கள் மருத்துவ சான்று ஐம்பது அளித்து  பெற்றுவந்தனர்.மாணவன் ரூபாய் ஐம்பதுக்கு மருத்துவசான்று கிடைக்கிறது என்று சக மாணவனிடம் கூறுகிறான்.
படிப்பு,திறமை,முன்னேற்றம்,பணம் மூன்றும் தொடர்பு இன்றியும் தொடர்புடனும் இருப்பதே ஒழுங்கீனத்திற்குக் காரணம்.



கருத்துகள் இல்லை: