சனி, நவம்பர் 19, 2011

sweet-flag

வசம்பு
எனக்கு சிறு வயதிலிருந்தே நாட்டு மருந்தில் ஆர்வம்.அதை அறியும் ஆவல் இருந்தும் வாய்ப்புகள் குறைவு. என் பாட்டி,தாத்தா ,அம்மா அனைவரும் வசம்பு ,
வசம்பு என்று குழந்தைகளுக்கு ஒரு சிறு கட்டை போன்று வைத்து ஒருகல்லில் அரைத்து பாலில் கலந்து தருவார்கள்.
 அப்பொழுது  நான் கேட்டால் விளக்கமாக கூறமாட்டார்கள்.6 -7  வயதில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்,62   வயதில்  எதிர்பாராமல் ஒரு பழைய புத்தகத்தில் இருந்து கிடைத்தது.
அது இக்காலத்தில் பயன் படலாம் .ஆனால்  இன்றைய தலை முறையினருக்கு  பாட்டி வைத்தியம்/வீட்டுவைத்தியம் செய்ய நேரமில்லை.ஆனால் கணினி     யுகத்தில்  சிலர் ஆர்வத்துடன் அறிய விரும்புவதை நேரில் கண்டேன்.
அதன் விளைவே  "வசம்பு".
வசம்பு தான்  ஆங்கிலத்தில் "sweet -flag".

இதற்கு  , உக்கிரம் ,வாச ,வசம் , கடுவான் , பச் ,பிள்ளை மருந்து ,சொல்லா மருந்து என்று பெயர் உண்டு. சொல்லா மருந்தாக எதிர்கால சந்ததியினருக்கு சொல்லாமல் கடும் மந்தணமாக
நம் முன்னோர்கள் இருந்த்தது தான் நமது சித்தம் 
தெளிவு பெறாததற்குக் காரணம்.
 இந்த வசம்பு இந்திய,பர்மா,வட அமெரிக்கா,ஐரோப்பா,போன்ற நாடுகளில் விளைகிறது.
இதன் மருத்துவ குணம்:-வசம்பினால்,எல்லா வகை நச்சுகள்,புண்கள்,இரத்த பித்தம்,வாய்நாற்றம், இருமல்,ஈரல் சம்பந்த நோய்கள்,நாடாப்புழு,வயிற்றுப்பூச்சி போன்றவைகளுக்கு  சிறந்த அரிய மருத்துவ குணம் கொண்டது  வசம்பு.இதற்கு " அகோருஸ் கலமுஸ்" என்ற மருத்துவப்பெரும் உண்டு.(தாவரப்பெயர்)(acorus calamus)
வசம்பை போடி செய்து  தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரணம்,வயிற்றுப்பொருமல்,வாயுத்தொல்லை,சொறி, சிரங்கு,காய்ச்சல்,முறைக்காய்ச்சல்,ஆகிய நோய்கள் குணமாகும்.வயிற்றில்உள்ளா பல  வித   புழு -பூச்சிகள் தொல்லை வசம்பால் தீரும்.




,

 



கருத்துகள் இல்லை: