ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013

வெந்நீர் அருந்துவதன் பலன்கள்.


FILE
பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீர்அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் வாயுத் தொல்லையே இருக்காது.

அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது.

நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

மிருதுவான சருமம் பெற பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

கால்கள் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் விட்டு அதில் கல் உப்பையும் போட்டுக் கலந்து அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சனி, ஆகஸ்ட் 10, 2013

be careful in this society.

our modern education and mass media completely changing our forefathers thoughts.see,they also loved  .in those days also there was love marriage. they thought sex education in temple sculptures. but the thought everything thorough divine fear. that divine fear protected the society from evil deeds.they loved not like street dogs. public kissing on parks and beech.every thing moral fear based behaviour. they gave respect their parents. now you see in cinema's father is unfit to give money. in gilly and some vivek jokes,love stories they don't want their parents.               it is entertiantment ,but it spoils youth.God created natural feelings in the age of 16.it is a period to away from those secenaries which iduces sex feelings. but every thing in the moden world misguides the youth directly openly giving importance only love and girlfriends and boy friends. Now cheran,film director and actor is crying. this is divine direction  towards to think about the parents who are crying due to the love among children. now divorce becom fashion and also illegal connections. suicides,murder.It was in mahabhaarata.

be careful in this society.

புதன், ஆகஸ்ட் 07, 2013

ஆகையால் ஆன்மீக விஷயத்தில்.........

ஆன்மிகம்  என்பது மக்களின்  புற ஆசைகளை கட்டுப்படுத்தும்

நெறி. இதில் சுயநலம் மேலோங்கும்  போது அதில் அவநம்பிக்கை

ஏற்படுகிறது.

ஆன்மிகம் ஆஸ்தியைத் தேடும் போது  அந்த சக்தியை இழந்து அவமானம்

நேரிடுகிறது.

ஆன்மீகப் பெரியோர்கள் மக்களிடம் ஒழுக்கத்தைப் பிரதானப் படுத்தினர்.

தனிமனித ஒழுக்கம் அவனை தீய ஆசைகள் ,எண்ணங்கள் ,கோபம் ,ஹிம்சை

பேராசை ஆகியவற்றில் இருந்து வெளியே இழுத்துவந்தனர்.

அவர்கள் செய்யும் நற்காரியங்களுக்காக பணம் சேர்ந்தது.அவர்கள் தானம்,தர்மம் செய்தனர்.மற்றவர்களையும்  நேரடியாக செய்ய வைத்தனர்.

ஒருகுறிப்பிட்ட ஆஷ்ரமம் ,மடாலயம் அந்த தோற்றுவித்தவரின் ஜீவ சமாதிக்குப்பின்  அவப்பெயர்களுக்கு ஆளாகிறது.காரணம் அதன் பின் அவர் வழியில் வந்தவர்களின் சுயநலமே.

அந்த சொத்தை அனுபவிக்க வேண்டும் என்று சண்டை சச்சரவுகள்.வழக்கு.

அநாச்சாரங்கள்.

இதை எல்லாம் சிந்திக்காமல் குருட்டு நம்பிக்கையில் பலர் இருப்பதால்

போலி ஆன்மீகவாதிகள் தோன்றி சொத்துக்கள் சேர்த்து சுகபோகமாக வாழ்கின்றனர்.

பொருள் சேரச் சேர அவர்களின் தெய்வீகத் தேடல் ,ஆன்மீக  நாட்டம்  அலௌகீக கோட்பாடுகளை  லௌகீக சுகத்திற்குப் பயன் படுத்துகின்றனர்.



இது ஹிந்து மதத்தில் அதிகம்.இருப்பினும் இந்த போலிகள் ,போலி ஜோதிடர்கள்  அதிகத்துக்கொண்டே இருக்கின்றனர்.இதில் படித்தவர்,படிக்காதவர்,உயர் பதவியில் உள்ளவர்கள் என்ற வேறுபாடே இல்லை. காரணம் போலிகள் பலரை தன சீடர்களாக அவர் புகழ்பாட வைக்கும் தந்திரம். அனால் அவர்கள் காளான்கள் போல் தோன்றி மறைந்து விடுவர்.

தோன்றி மறைவதற்குள் ஏமாறுபவர்கள் அதிகம்.

ஆகையால் ஆன்மீக விஷயத்தில் மிக்க ஜாக்கிரதை ஆக இருக்கவேண்டும்.

அதற்காக நாம் சத்சங்க  விஷயத்தில் நல்லவை நடக்கின்றன என்பதை
மறக்கக் கூடாது,


வடக்கில் தலை வைத்துப் படுக்கக் கூடாது. அறிவியல் விளக்கம்.


..
FILE

இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம். 

மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு - இனி எந்த வாத்தியும் திட்டக்கூடாது ...! Repost | வேடந்தாங்கல்

வாத்தி  என்பது
வருத்தம் அளித்தாலும்,
அது கிராமத்து மரியாதை,
மா டுமேய்ப்பதும்,
கோழி ஓடிப்பிடிப்பதும்,
ஆழக்குழி  வெட்டலும்
தொழிலுக்கு மரியாதை
இது பட்டதாரிகளால் இயலாது ,
அனுபவக் கலை.
இதை மதிக்காமல்
இருந்ததால் கிராமமே காலி.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
மாறிவிட்டதால் எதிர்கால உணவுப்பஞ்சம்.
விலை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி
இந்நிலை  வரும் காலம்.
மாடுகள்  மேய்ப்பது உயர்தொழில்.
விவசாயத்தோடு இணைந்த தொழில் .
ஏனோ ஏளனம் !செய்து பார்த்தல்  கடினம்.
நல்லதொரு கவிதை,
அரசு கொடுக்குது இலவச ஆடு.
இது அன்றே விடுதலை ஆன ஆரம்பத்தில் செய்தால்.
கிராமம் காலி யாகாதிருந்திருக்கும்.

சனி, ஜூலை 27, 2013

ரைஸ் என்றாலே வாணிகம். அரிசி என்றால் departmental ஸ்டாரே.

தாயகம் தாய் மொழி புறத்தே தள்ளி.
கடல் தாண்டி வணிகம் செய்ததால்
காரைக்குடியில்  அழகு கட்டிடங்கள்;
கண்ணீர்மல்கி நெஞ்சுருக்கும்
கதிகாமம்,சிங்கப்பூர்  தமிழ்த் தெய்வக் கோயில்கள்.
பசிவந்திடப் பறந்துபோம்;
புலவர்களை வாழவைத்த சங்ககாலாம்,
அரசாட்சி நடந்த காலம்.
தமிழின் பெயரால் ஆட்சிபீடம் ஏறியவர்களின்
திறந்த பள்ளிகள் எல்லாம் ஆங்கிலப்பள்ளி.
தெரிந்தும் தெரியாமலும் திறந்த பள்ளிகள்.
பணமே குறிக்கோள் என ஆட்சியர்கள்
ஆங்கிலம் வளர்த்து,தமிழால்
பொருட்செல்வம் இல்லை ஐயா.
பசிவந்திட பற்றும் பறந்து போகும்.
கணிமொழியில் என்னை அம்மா என்று
அழைத்தல் போதும்.அவள் ஆங்கிலம் மட்டுமே படிக்கிறாள்
என்ற துணைவியின் மகள் வாக்கு.
ஏட்டுச்  சுரைக்காய் கறிக்கு உதவுமா?
தமிழ் பட்டதாரிகள்,தமிழ் வழி பட்டதாரிகள்,
தாயகம் குளிர சம்பாதிக்கவில்லை.
ரைஸ் என்றாலே வாணிகம்.
அரிசி என்றால் departmental  ஸ்டாரே.
இந்நிலை ஒழிய  என்ன செய்வோம்.
சன் டி .வி. பரிதியாக மாறுமா?
பாரதி சொன்ன வாக்கு தமிழ் இனி மெல்ல சாகும்.
அரசுப்பள்ளியிலும்  ஆங்கில வழி .
இதே ஆஸ்தி தரும்.
ஆஸ்தி தர எல்லாம் அழிவு தானே.

வெள்ளி, ஜூலை 26, 2013

நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. வாழ்க ஜனநாயகம்.

நாட்டின் விடுதலைக்குப் பின்  நாடு முன்னேறி இருக்கிறது.
நடுத்தர மக்களின் பொருளாதாரம் திருப்தி அளிக்கிறது.
மாநகரங்கள்  எல்லை விஸ்தரித்துக்கொண்டே போகிறது.
கட்டடங்கள் சிலைகள் சாலைகள் மேம்பட்டுள்ளன.
இருப்பினும்  பல பெருங் குறைகள்  என்று குறை படுகிறோம்.
ஏன் ?
விவசாயிகள்  தற்கொலை காரணமா ?

விலை நிலங்கள்  கட்டடங்கள்  தொழிற்ச் சாலைகளாக மாறிவருவதாலா?

கல்வி நிலையங்களின்   கொள்ளைகலாளா ?

மாநில மொழிகளால் சம்பாதிக்க வழியில்லை என்பதாலா?

ஊழலும் கையூட்டும் பெருகுவதாலா/?

சாமியார் மடங்களில் கோடிகோடியாக பணம் குவிந்து வருவதாலா>

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப்பணம் சேர்வதாலா?

விலைவாசி ஏற்றத்தாலா?
ஏழைகள் நடுத்தர மக்கள் தங்கம் வாங்கி அவசர ஆத்திரத்திற்கு பயன்படுத்தும்
ஒரு வசதியை  கூடாது ஏழைகள் தங்கம் வாங்கக் கூடாது என்ற உயரிய
கொள்கை உள்ள சிதம்பரத்தாலா?

வெளிநாட்டு நிறுவனங்கள்,முதலீடுகள் பெருகுவதாலா/

தனியார் மயம்  அதிகரிப்பதாலா?

மக்கள் வரிப்பணத்தை   தேர்தல் இலவச வாக்குறுதி அளித்து இலவசம் வளங்குவதாலா?

மின்சார ம்  சீராகா விநியோகிக்கப் படுவதாலா?

புறம்போக்கு நிலங்கள்,கோயில் நிலங்கள்,கிரனைட் கற்கள் அரசியல் வாதிகளால் அபகரித்துக் கொள்வதாலா?

கற்பழிப்புகள் ,கொலைகள் ,கொள்ளைகள்,ஆசிட் வீச்சு,கூலிப்படை ஆகியவற்றாலா/

மக்களிடம் விழிப்புணர்ச்சி இல்லாததாலா?

நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள், கள்ளக்காதல் படுகொலைகள் நடப்பதாலா/

அப்பா-அம்மா வீட்டில் இல்லை  போன்ற பாடல்களலாலா /

தண்ணீர் தட்டுப்பாடாலா/

ஆலயங்களில் கழிப்பிடம் ,தூய்மை ,நேர்மை,சமத்துவம் இல்லாததாலா/

எதோ  நாடு முன்னேற்றம் என்ற மகிழ்ச்சி ஏற்படததாலா/?

நாடு  முன்னேற்றம் அடைந்துள்ளது. வாழ்க ஜனநாயகம்.


வியாழன், ஜூலை 25, 2013

கொஞ்சம் கூட பலி-பாவத்திற்கு அஞ்சாத கலி யுகம் இது தானா?

பிராயச்சித்தம்

ஹிந்திக்  கதைச்  சுருக்கம்.

 திருமணம் முடிந்து மாமியார் வீட்டிற்கு வந்த மருமகளுக்கு   அந்த வீட்டில் உள்ள பூனையால் பெரும் தலைவலி. பால் ,தயிர் வைத்துவிட்டு வந்தால் பூனை குடித்துவிடும்.எவ்வளவு தான் எச்சரிக்கையுடன் இருந்தாலும்  சற்றே அசந்துவிட்டால் அன்று முழுவதும் தலைவலிதான். என்ன செய்வது.

பொறுமை இழந்த அந்த 13 வயதுள்ள மருமகள் ஒரு நாள் பலகை எடுத்து வீசியதும் பூனை மல்லாந்து விழுந்து விட்டது. பூனையைக் கொன்றபாவம் பூலோகத்தில் தீராது.மிகவும் பதறினார் மாமியார்வீட்டார்.

 ஒரு பெரும் கூட்டமே சேர்ந்து பலவித பரிகார யோசனைகள்.இறுதியாக அந்த நகரத்தின் பரிகார பண்டிதர்  பரமசுகத்தை அழைத்துவர முடிவு செய்தனர்.

பண்டிதர் பரமசுகத்தின் உயரம் 4 1/2 அடி. தொந்தி 42 " .ஐவர் சாப்பாட்டை அவரே சாப்பிடுவாராம்.

பண்டிதர் வந்ததும் அவர் பார்வை வீடுமுழுவதும் சென்று வந்தது. முகத்தில் அகத்தில் மிக்க மகிழ்ச்சி.
நல்ல பசைஉல்ல இடம். இருமாதத்திற்கு கவலை இல்லை. நல்ல வருமானம் என்ற நிம்மதி.

அனைவரும் கவலையுடன் பூனை இறந்ததைகூறினர். அவர் ஒரு பழைய பரிகார புத்தகத்தை  கையில் எடுத்து புரட்டினார்.கட்டைவிரல் ஒவ்வொருவிரலிலும் இருந்த ரேகையை தொட்டுவந்தது.

பின்னர் பரிகார பூஜைப் பொருள்கள் சொல்ல ஆரம் பித்தார்.

இந்தப் பூனையின் கொலை மிகப் பெரிய பாவச்செயல்.இதற்கு கும்பிபாக்கநரகம் தான்   கிடைக்கும்.ஆனால் இந்த பரிகார பூஜை சிரத்தையுடன் செய்தால் பாவ விமோசனம் கிட்டும் என்றார்.

மிக சிரத்தையுடன் வீட்டுப்பெண்கள் அவரை வணங்கி பூஜைப் பொருள் பட்டியல் எழுத ஆரம்பித்தனர்.

10 கிலோ அரிசி/ கோதுமை.நவதானியங்கள் ஒவ்வொன்றும் 5 கிலோ,நெய் 4 கிலோ,தங்கத்தால் செய்த பூனை தங்கள் சக்திக்கு ஏற்றவாறு குறைந்ததளவு 4 கிராம். பட்டியல் எழுத எழுத வீட்டில் உள்ளோர் தலை சுற்றியது. பண்டிதர் பரமசுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு இரண்டுமாதம் வேறு பரிகார நிவர்த்திக்கு ஆள் வரவில்லை என்றாலும் குடும்பத்தை சமாளிக்கலாம்.
இறுதியாக தக்ஷிணை ரூபாய் 500/.
கூடி இருந்தவர்கள் ,இதென்ன சிறிய பாவமா/மிகப்பெரிய பாவம் செய்ய வேண்டியது தான் என்று கோரஸ் பாட,பண்டிதர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட ,திடீர் என்று பூனை அசைய பண்டிதர் முகம் வாட,அது எழுந்து ஓடிற்று.

  அந்தக்காலத்தில் ஒரு பூனை அடித்ததற்கே இவ்வளவு வேதனைப் பட்டுள்ளனர்.

இன்று பல அரசியல் கொலைகள்;கற்பழிப்புகள்;சத்துணவு விஷம் பிகாரில் அதுவும் அரசியல் சதி.

கொஞ்சம் கூட பலி-பாவத்திற்கு அஞ்சாத கலி யுகம் இது தானா?

செவ்வாய், ஜூலை 23, 2013

புதுமை எல்லாம் பழமையுள் அடக்கம்.

அகவை கூடுவதால்  புதிய காலம்

அறியாதவர்  என்றே  தோன்றும்.

பழையன கழிதல்,புதியன புகுதல்

உலக நீதி  என்பர். அதில் தவறு.

பழையன கழியவில்லை.

புதுமைக்கு  ஆணிவேராகிறது.

இலைகள் உதிர்கின்றன.

புது இலைகள் தளிர்கின்றன.

புதிதா இது?
இதற்கு பழமையின் ஆணிவேர்

பலமாக இருக்கிறது.

புதுமை என்பது புதியவர்களுக்கு.

பழமை இன்றி புதுமை எங்கே?

ஜாதிகள் ஏற்றத்தாழ்வு,நிறவெறி

புதுமை யா?இல்லை.

அதற்கு ஒழிக்கும் எண்ணங்கள் இன்றா?
ஒலிக்கின்றன.

ஔவையார் காலத்தில் இருந்தே அல்லவா?

கபீர்  ஜாதி யைப் பற்றி கூறி உள்ளார்.

ராமாயண ,மகாபாரதத்தில்  வருகின்றன.

அதிலும்  ஜாதி ஒற்றுமை பேசப்படுகிறது.

இன்றைய தொலைக்காட்சி,கணினி குறிப்புகள் ,

ஜோதிடம் ,வானவியல் அனைத்தும்

பழமையில் இருந்தவை என்றே

பலர் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளனர்.

அஹிம்சை,சத்தியம்,அன்பு,இரக்கம்,

ஹிம்சை,அசத்தியம் ,வெறுப்பு ,கொடுமை

புதிய எண்ணங்களா?பழமையே.

இன்றைய திரைப்படங்களின் கருக்கள்

பழமையில் மெருகூட்டப்பட்ட புதுமை.

கர்ணனை ஆற்றில் விட்ட கதை,
கபீரை குளக்கரையில் விட்ட கதை,
இன்று  குப்பைத்தொட்டி,ரயில்பெட்டி .

தொட்டில் குழந்தை என்ற பெயரில்.

சீரடி சாய் பாபா அண்மையில் வாழ்ந்தவர்.

அவர் தெய்வப்பிறவி;வாழும் தெய்வீக புருஷர்;

மத ஒற்றுமைக்கு ஆன்மிகம் வளர்த்தவர்.

அவர் பெற்றோர்,எப்படி ,எங்கு என்பதே  புதிர்.

காதலிக்காக  போரிடுவது,அன்னமிடு தூது

இன்று கைபேசி ,தொலைபேசி,கணினி.

அகவை கூடுவதால் எனக்கு எதுவும்

புதிதாகத் தோன்றவில்லை.

ஆனால்  ஒன்றே  புதிது  படித்தவர்கள்

சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி

குற்றவாளிகளை ,ஊழலை வளர்ப்பது.

அதுவும் மகாபாரதத்திலும் ,ராமாயணத்திலும்

வரும் காட்சிகளே.

அகவை கூடினாலும் புதுமை தெரியவில்லை;
முதுமையால் புரியவில்லை.

புதுமை எல்லாம் பழமையுள்  அடக்கம்.


திங்கள், ஜூலை 22, 2013

உண்மை,நேர்மை,என்ற ஒன்றே இருந்தால் , வையகம் எப்படி இயங்கும்

2014  பொதுத் தேர்தல் ஒரு தர்ம யுத்தமாம்.

ஆட்சி பீடம் என்றாலே தர்ம யுத்தம் தான்.

என்றுதான் இந்த யுத்தம் பொருளற்று நடந்தது.

நான் தொண்டன். நாட்டுக்குப் பாடுபடுவேன்.

நேர்மையானவன் ;உண்மையானவன். 

கையில் காசு இல்லை;கடவுள் பக்தி உண்டு;

உண்மைத்தொண்டன்  நான்  வாக்களிக்கின்றேன்.

ஊழலற்ற ஆட்சி ;கையூட்டு இல்லா ஆட்சி,

வாக்களிக்கிறேன்; வாக்களியுங்கள்;

வாக்கு  கிடைக்குமா?இல்லாளை இல்லாளும் வேண்டாள்.

வாக்கு கிடைக்காது. ஏழை சொல் அம்பலம் ஏறாது;


நானே செய்த  தவறு,நண்பர்களுக்காக  செய்த  தவறு,

உற்றார் உறவினருக்காக செய்த தவறு;

தெரிந்த அறிந்த புரிந்த தவறு;தெரியாத அறியாத  தவறு;

செய்த தவறை மற்றவர்கள் எடுத்து இயம்பினாலும் 

ஏற்க இயலா   தவறு; கண் செய்த தவறு,

எண்ணங்களால்  தவறு; சிந்தனைத்தவறு,

பேராசைப்படும் தவறு,கோபத்தால் வந்த தவறு,

ஆணவத்தால் செய்த தவறு,பெரியோர்களை நிந்தித்த தவறு,

ஆசிரியர் சொல் கேட்காத் தவறு,கோயிலுக்கு சென்று 

கோபுர தரிசனம் கண்டு இதுதான் கோடிப்புண்ணியமா

என்று பரிகசித்த தவறு,பரிகசித்தோருடன் சேர்ந்து 

ரசித்த தவறு,இளமைத்தவறு, உளவியல் தவறு,

தவறுகள் தான் எத்தனை ?எத்தனை?

தவறு செய்யா மனிதர்கள் தரணியில் உண்டா ?என்ன?

இறைவனவதாரம் எடுத்த ராமனிடமும் தவறு;

கிருஷ்ணனிடமும் தவறு;சிவனிடமும் தவறு;

தவறான மனிதர்களைப்படைத்த பிரம்மனிடமும் தவறு;

அனைவருக்கும் அறிவைத் தராத கலைமகள்.

அனைவருக்கும் செல்வம் தரா அலைமகள்,

அனைவருக்கும் வீரம் தரா மலைமகள் 

என அவரவர்கள் தவறை மறைக்க தவறு செய்யும் தவறு 

என  பூ உலகில் தவறுகளே காணுகின்றோம்.

உண்மை,நேர்மை,என்ற ஒன்றே இருந்தால் ,

வையகம் எப்படி இயங்கும் ?இப்படி எண்ணும் தவறு.