வியாழன், ஏப்ரல் 24, 2025

ஹிந்தி

 வணக்கம்.

 இந்தியா விடுதலை அடைந்து 78 ஆண்டுகள் .

 தமிழகத்தில் மக்கள் விரும்பும் திமுக அதிமுக.

தேசீயக் கட்சிக்கு 

இங்கு 58  ஆண்டு களாக மக்கள் ஆதரவு இல்லை.

 

ஹிந்தி மொழி விஷயத்தில் திராவிடக் கட்சிகள் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று தெய்வததிரு ஜெயலலிதா அறிவித்தார்.

 ஹிந்தி தேவைப்பட்ட ஓர் தனியாக படிக்கிறார்கள். வட இந்திய பயணம் வியாபாரம் செய்ய ஹிந்தி தேவை.

  அதை தமிழக அரசு தடுக்க வில்லை.

 தக்ஷிண் பாரத் ஹிந்தி பிரசார சபையில்  ஆந்திரா கேரளா கர்நாடகா மூன்று மாநிலத்திலும் சேர்த்து மாணவர்கள் எண்ணிக்கை குறைவு. அங்கு பள்ளிகளில் ஹிந்தி உண்டு.

 தமிழகத்தில் ஹிந்தி படிக்க சபா ஒன்று தான்.

 அங்கு நிரந்தர ஹிந்தி ஆசிரியர்கள் கிடையாது.

 ஹிந்தி பிரசாரம்  பிரச்சாரகர்  களால் செய்யப்படுகிறது.

ஆயுள் காப்பீடு முகவர்கள் போல் தான் ஹிந்தி பிரச்சாரகர்கள்.

 ‌.

தேசீய அளவில் அனைவரும் விரும்புவது ஆங்கிலம்.

 பத்தாம் வகுப்பு வரைதான் ஹிந்தி.

சிபிஎஸ்இ பள்ளிகளில்.

 மூன்றாம் மொழி ஹிந்தி

 ஆனால் எட்டாம் வகுப்பு வரை.

 பத்தாம் வகுப்பில் 30 மதிப்பெண் போதும்.

 தமிழகம் மக்களால் விரும்பி படிக்கும் தனியார்  ஹிந்தி தான்.

சனி, ஏப்ரல் 05, 2025

அரசியல்

 






தமிழகம் ஆங்கிலம் விரும்பும் மாநிலம்.

  தமிழுடன் ஆங்கிலம் கலப்பதை ஹிந்தியுடன் ஆங்கிலம் கலப்பதை 

 கௌரவமாக  மக்கள் விரும்பு கின்றனர்.

 தமிழகம் தவிர தென்னிந்திய  மொழிகளில் வடமொழி சொற்கள் அதிகம்.

 தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளின் பெயரை வடமொழியில் தான் வைக்கிறார்கள்.

கருப்பையா வெள்ளையம்மாள் 

 குண்டு என்ற பெயரை கௌரவமாகக் கருதுவதில்லை. காரணம் தெய்வீக மொழியாக சம்ஸ்கிருதம் ஏற்றப்படுகிறது.

தமிழக முகலாய சகோதரர்கள் 

அரபு மொழிப் பெயரையும் 

கிறிஸ்தவ சகோதரர்கள் அந்த மதம் சார்ந்த பெயரையும்

 ஆரோக்ய ராஜ் அற்புதராஜ் என்ற பெயரையும் ஜார்ஜ் ஜான் தாமஸ் என்று வைக்கின்றனர்.

 அதனால் தமிழக மக்கள் பெயர் சூட்ட 

மும்மொழி பயன்படுத்தி வருகின்றனர்.

அரபு மொழி பெயர்கள் பைபிள் பெயர்கள் வடமொழி தெய்வீகப் பெயர்கள்.

 தூய தமிழ் பெயர் வைக்க அரசு சட்டம் இயற்ற முடியாது.

 அரசு அலுவலகங்கள் பணியாற்றுபவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர் ஊழியர்கள் அரசுப் பள்ளிகளில் தான் படிக்கவேண்டும் என்று சட்டம் இயற்ற முடியாது.

 அரசியல் வாதிகள் அமைச்சர்கள் பாராளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தான்.

 தமிழ் என்பது அரசியல் நடத்த.

 தமிழ் வளர்க்க அல்ல என்பது

திராவிட மாடல் உதயசூரியன் என்பதில் உள்ள ஆழ்மன சத்தியம் 

மக்கள் சிந்திக்க வேண்டும்.

 பாரத யாத்திரை செய்பவர்களுக்கும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ம் ஹிந்தி அறிவு அவசியம் என்பது மனசாட்சிக்குப் புரியும்.

 இந்த மொழி அரசியல் மக்களை திசை திருப்ப.

 மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

 சே. அனந்த கிருஷ்ணன்.