புதன், நவம்பர் 30, 2011

every thing in the modern age is old.not new.

பழமையே புதுமை. சிந்தித்தால் புரியும்.
உணர்ச்சிவசப்பட்டால் எரியும்.

1959 ஆம் ஆண்டு   வரை  பிறந்தவர்களுக்கும் 1960  முதல் 1970  வரை பிறந்தவர்களுக்கும்  1971  முதல் 1980 வரை பிறந்தவர்களுக்கும் 1981  முதல் 1985 வரை பிறந்தவர்களுக்கும்  மிகுந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன.
மாற்றங்கள் மனித சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றிவிடுகின்றன.
கண்ணகி பத்தினி தெய்வம் என்பதை ஆதரித்து மௌனமாய் இருந்த காலம் ஒன்று.இன்றைய தலைமுறை ஏற்க மறுத்து விடுகின்றன.
         கோவலன் கட்டிய மனைவியை விட்டு விட்டு மாதவியிடம் சென்று வறிய நிலையில் திரும்புவானாம்.கண்ணகி கன்னி கழியாமல் கற்புக்கரசியாக காத்திருப்பாளாம். தான் செய்த தவறை உணர்ந்து மன்னனும்  அரசியும் உயிரை விட்டுவிடுவார்களாம். கண்ணகி  மதுரையை எரித்து விடுவாள்.என்னே பெண்ணடிமை.இறுதிவரை மணநாள் முதல் மரணநாள் varai  துன்பம்.இக்காலத்தில் நீதிமன்றங்களில் விவாகரத்துக்கள். மறுமணம்.விதவைகள் துணிந்து பூவும் போட்டும் வைப்பது.பாரதியின்     கற்பனை நிறைவேறும் காலம்.
நீ ஒருத்தியைப்பார்த்தல் நான் ஒருவனைப்பார்ப்பேன் என்று துணிந்து கூறும் பெண்கள். ஆண் பாவம் என்று  பெண்களிடமிருந்து  ஆண்களை காக்க சங்கங்கள். கனியைப்பகர்ந்த பாண்டவர்கள் கதை.சீதையைக்கவர்ந்த ராவணின் கதை , செர்ஷாவைக்   கொன்று ஷாஹ்ஜஹான்  மும்தாஜைக்  கவர்ந்த கதை, பீஷ்மர் வென்று மூன்று அரசிளங் குமரிகளைக்கவர்ந்த கதை அனைத்தும்   நவீன முறையில் நடைமுறையில்  செய்தித்தாள்களில் காண்கிறோம். நாடு எங்கும் செல்ல வில்லை. பழமைகள் புதிய வடிவங்கள் எடுக்கின்றன. சோதனைக்குழாய் குழந்தைகள் ராமாயணத்திலும் உண்டு மகாபாரதத்திலும் உண்டு.விந்து தானமும் உண்டு.விதவைக் குழந்தைகளும் உண்டு . வாடகைத்தாய்களும் தொட்டில் குழந்தைகளும் உண்டு.பெட்டிக் குழந்தைகளும் உண்டு. எதுவும் புதுமை இல்லை.பழங்கதைகள் வரலாறுகள் தெரியாத படிக்காதவர்களுக்குத்தான் அனைத்தும் புதுமை.யாகத் தெரியும்.

செவ்வாய், நவம்பர் 29, 2011

devotional thoughts

முற்பகல்  செய்தால் பிற்பகல் விளையும்.

மனிதனுக்குத்   தன் வாழ்நாளில்  பல விஷயங்கள் புரியாமல் கழிகின்றன.ஆனால் அவன் தன்னால் அனைத்துச் செயல்களும்  செய்யமுடியும் என நினைக்கிறான்.அவன் ஆணவம் ஒழிய ஒரு சிறு தூசி போதும் என்பதை ஒரு ஹிந்தி கவிதையில் படித்துள்ளேன்.
 கவிஞர் தான் தான் என்ற ஆணவத்துடன்,பால்கனியில் நின்று,
வேடிக்கை பார்த்துக்கொண்டிருத்தர். அப்பொழுது வீசிய காற்றில் ஒரு துரும்பு
கண்ணில் விழுந்தது.அந்த தூசி கண்ணில் இருந்து வரும் வரை உலகமே இருண்டு இருந்தது.  பத்து நிமிடம் அவர்  பட்ட பாடு தான் என்ற அகம்பாவத்தை

அடியோடு அழித்தது. ஒரு தூசியால் மனிதன் துடிக்கிறான். அவன் ஆணவம் அழிகிறது.இவ்வாறே பல விஷயங்கள் அவனுக்கு புலப்பட தூசி கண்ணில் விழுந்து உருத்துவதுபோல் நடைபெறுகிறது.
எப்படிப்பட்ட   உயர்ந்த பொருளாதாரத்தில்  உள்ளவர்களுக்கும் .உயர்பதவியில் இருப்பவர்களுக்கும்,கண்ணில் தூசிபடுவதுபோல் சில துன்பங்கள் ஏற்படுகின்றன. அதனால் தான் உலகில் மக்கள் அநியாயம் செய்ய அஞ்சுகின்றனர்.தவறு செய்பவர்கள் பாவ மன்னிப்பு கேட்கின்றனர்.அசோக சக்கரவர்த்தி நாட்டிற்கு பல நன்மைகள் செய்துள்ளார். அவர் எவ்வளவு கொடுமையான இரக்கமற்றவர் என்பதை சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். அன்பின் சின்னமான தாஜ்மஹால் கட்டிய ஷஹ்ஜஹான் தான் மகளின் காதலன் கொப்பரைக்குள் ஒழிந்து  இருப்பதறிந்து அக்கொப்பரையை தீயில் வைத்து கொன்ற கொடுமையான செயலை  மதுரை தொலை கல்வியில் கல்வியியல் பேராசிரியர் வர்ணனை செய்ததைக் கேட்டு சிலர் கண்ணீர் வடித்தனர்.அதே ஷஹ்ஜஹான் சிறையில் அடைக்கப்பட்டு தான் கட்டிய தாஜ்மகலை காணமுடியாமல்  புதல்வனே கொடுமைப்படுத்தியதையும்
காண்கிறோம். இதைதான் முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்கின்றனர்.  இவைகளை எல்லாம் அறிந்தும் மனிதன் தவறுகள் செய்கிறான் என்றால் அவன் துன்பப்பட வேண்டியதுதான்.

இவ்வுலகில்  ஹரிச்சந்திரர்களுக்கும்  அமைதி  கிடையாது ஹிரன்யகச்யபுகளுக்கும் நிம்மதி கிடையாது.ராமனுக்கும் கிடையாது.

spoken tamil /written tamil

       1.  angu aadu meikirathu.(W) angu aadu meyuthu (S)அங்கு ஆடு மேய்கிறது ./மேயுது.A
1.A goaT  grazes there.


2.He teaches Tamil and Hindi.=avar tamilum hinditum katruththarukiraar./kattuththarraar.kaththuththarraar.

அவர் தமிழும் ஹிந்தியும் கற்றுத்தருகிறார்./கற்றுத்தர்றார் or கத்துத்தர்றார்.

நாம் இறைவனை நம்புவோம்

ஒவ்வொரு செயலிற்கும் ஒரு காரணம் உண்டு என்று நம்புவது சனாதன தர்மம்.ஐந்து லிட்டர் பால் கொட்டிவிட்டால் வருத்தப்படமால்  அது பூமிதேவிக்கு சமர்ப்பணம்  என்றும் அது இறைவனின் சித்தம் என்றும் அடுத்த செயலில் ஈடுபடுத்த ஊக்கமளிப்பது சனாதன தர்மம். அது கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்பு  என்று திருத்திக்கொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் கூறினாலும் அந்த இழப்பு கவனமாக இருந்தாலும் ஏற்படுவதுதான் ..இருந்தாலும் எல்லாம் அவன் செயல் என்ற படிப்பினை.

சாலையின் நடுமையத்தில் ஏற்படும் விபத்தை விட சாலையின் நடைபாதையில் செல்வோருக்கு விபத்துக்கள் ஏற்படுகின்றன.பால் குடிக்கும் போதோ வெற்றிலை போடும்போதோ இருமல் வந்து மடிந்தொரும் உள்ளனர்.
இதய நோய் உடனடி மரணம்.ஆஸ்மா பிராணா வஸ்தை  கொடுத்துக்கொண்டே இருக்கும். மரணம் சம்பாதிக்காது. புண்ணியவான் பேசிக்கொண்டே இருந்தான்.
திடீர் மார்பை பிடித்து வலி என்றான் உயிர் பிரித்துவிட்டது.இதில் இருந்தும் தாப்பா ஆண்டவன் சிலருக்கு ஞானம் அளித்து சிகிச்சை முறையால் பிழைக்க வைக்கிறான்.அது மருத்துவ விரயம்.திருமணச் சிலவு சுப் விரயம்.பணம் வைத்துக்கொண்டு நகைகள் வைத்துக்கொண்டு உயர்ந்த ஊதியம் பெற்றுக்கொண்டு வரன் வது  தேடி  அலையும் பெற்றோர்களைப் பார்க்கிறோம்.எதோ திடீர்னு மாப்பிள்ளை வீட்டார் வந்தனர் /பெண்வீட்டார் வந்தனர் .திருமணம் முடிந்து விட்டது. பணத்திற்கு எப்படி ஏற்பாடு  செய்தேன்  என்றே  தெரியவில்லை. அனைவரும் பாராட்டும் படி நடந்தது.என்பர்..

பல விஷயங்கள் மனிதன் எதிர்பாராமல் நடக்கின்றன.அதற்கு மனித முயற்சியும் இறைவன் அருளும் இணைந்தே உள்ளன.கடும் முயற்சி எடுத்தும் தன் நோக்கத்தில் வெற்றி பெறாதவர்கள் உண்டு.தன் விருப்பங்கள் நிறைவேறாமல் தன் நோக்கை மாற்றுபவர்களும் உண்டு.நான் பொறியியல் வல்லுனராக ஆசைப்பட்டேன் ..திடீர்னு மாமா என்னை மருத்துவம் படிக்க வலியுறுத்தினார். என்று மருத்தூவராவதும்   அவ்வாறே மருத்துவர் ஆக விரும்பியவர்  வேறு துறைக்கு மாறுவதும் விதிப்படியாக அமைவது.சிலருக்கு தான் விரும்பியதெல்லாம் நடக்கும். சிலருக்கு விரும்பாததெல்லாம்  நடக்கும்.வெளிநாட்டில் வேலை கிடைக்க கடும் முயற்சி எடுத்தாலும் வெளிநாடு செல்ல முடியாத நிலை. சிலர் வெளிநாட்டுப்பயணம்  என்ன என்பதை  கனவிலும் நினைக்காதவர்கள் வெளிநாடு செல்வர்.இதெல்லாம் எப்படி?
இந்நிலையில் எல்லாம் அவன் செயல் என்று ஆண்டவன் அளித்த கடமை அல்லது துன்பம் அல்லது இன்பத்தை மன மகிழ்ச்சியுடன் ஏற்று மன திருப்தி யுடன் இருக்க  ஊக்கமும் ஆக்கமும் அளிப்பது சனாதன தர்மம்.
அதுவே கீதாசாரம்.எது நடந்ததோ நன்றாகவே நடந்தது.எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ நன்றாகவே நடக்கும்.

In God We Trust  இது  ரூபாய் நோட்டிலும் நாணயத்திலும் காணும் வாசகம். இது எந்த  நாட்டில்.பாரத நாட்டின் பக்கம் பார் முழுவதையும் திரும்பிப்பார்த்து
மதிப்பளிக்கச்  செய்த  சுவாமி விவேகனந்தர் சகோதர சகோதரிகளே என்று ஆன்மீகச் சொற்பழிவு   செய்த நாடு.

திங்கள், நவம்பர் 28, 2011

sanaathana dharmam

சனாதன தர்மம்

அனைத்து  வெல்ல முடியா இயற்கை  சக்திகளுக்கும்  இறைவடிவம் கொடுத்த சனாதன தர்மம்  இயற்கையாகவே மனிதனுக்கு  உடல் நலம் பேணும் மன அமைதி தரும் மன இயலையும் கற்பித்தது.ஆனால் நமது இயல்பான  அமைதி,பொறுமை,எல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணங்கள்  நமது நாட்டின் இயற்கை வளம் அனைத்தும் அயல் நாட்டினரை கவர்ந்து காந்தம் போல் இழுத்தது.உலகிலேயே பல அமைதி ஒப்பந்தங்கள்,வணிகத்தொடர்புகள் ,ஆன்மீக சிந்தனைகள்,சகிப்புத்தன்மைகள் கொண்ட பாரதம் வேதகாலத்திலும் சரி,முகலாய ஆட்சியிலும் சரி,ஆங்கிலேய ஆட்சியிலும் சரி,இராமாயண மகா பாரதத்திலும் சரி  நாட்டின்  நலமே பெரிது என்று ஓரணியில் நம்மக்கள் இருந்தது இல்லை.இதுவே நம் நாட்டின் முன்னேற்றத்தில் தடைக்கற்களாக இருந்துள்ளது.

நமது நாட்டில் போர்கள் ராமாயணத்தில் சீதையின் காரணமாகவும்,மகா பாரதத்தில் பீஷ்மர் போரிட்டதும்,மூன்று அரசகுமாரிகளை கவர்ந்ததும் சுயநல  பங்காளிகள் போராட்டம் தான். அந்நூல்களில் உயர்ந்த கருத்துக்கள் இருக்கலாம். மாத்ரு பக்தி,பித்ரு பக்தி ,பிராத்ரு பக்தி,உயர்ந்த கீழ் ஜாதி சமத்துவம்,அரசனின் குணங்கள்,கடமை உணர்வு,அனைத்தும் அறிவுறுத்தப்பட்டாலும்  போர்கள் பாரதநாட்டின் நலம் கருதி நடக்கவில்லை.
உயர்ந்த எண்ணங்கள்,சித்தாந்தங்கள்,தெய்வீக அம்சங்கள் ஆனவத்திற்காகவும்,குறிகிய கோட்பாட்டிற்காகவும் என்ற முறையில் அமைக்கப்பட்டு எதிர் சிந்தனைகள் தூண்டுவதாகவே அமைந்தன.

ஒரே கடவுள்,அதை வழிநடத்த பல குருமார்கள்,பல மடாலயங்கள்,சிவ வழிபாடு,சக்தி வழிபாடு,சங்கரர் மார்க்கம்,ராமானுஜ மார்க்கம்,மத்வ மார்க்கம்,
க்ருஷ்ண மார்க்கம்,ராம மார்க்கம்,அவைகளின் மூலம் மனிதர்களிடம் வெறுப்புணர்ச்சி ,ஜாதி உணர்வுகள்.இவைகளுக்கும் மீறி நாட்டுப்பற்று.பாரதத்தின் பிரமிக்கத்தக்க  வளர்ச்சி கருத்து ஒற்றுமை.

இதற்கெல்லாம் மூலமாக நமது சனாதன தர்மம் ஆழமான  அருவ உருவ தெய்வாம்சங்களை  ஏற்றதுதான்.நமது மக்கள் அனைத்து மதங்களையும் சகோதர மாதங்களாக ஏற்றனர்.


.

sheer

sanaathana dharmam

சனாதன தர்மம்

மனிதன்  ஆரம்ப காலத்தில் இருந்தே இயற்கையை வெல்ல முடியாமல்  இயற்கையை  அதீத சக்தி உள்ள ஆண்டவனாக வழிபட ஆரம்பித்தான்.நவ கோள்களையும் ஆண்டவனாக உருவகப்படுத்தினான்.பூதேவி  என்று பூமியை மட்டும்  எதையும் தாங்கும் பெண்ணாக உருவகப்படுத்தினான்.மனிதனைக் கருவில் சுமந்து பெறுபவள் பெண்.பூமி தாவரங்களின் விதைகளைச் சுமந்து தனைப் பிளந்து  வளர்க்கிறாள். பொன்,வைரம்,வைடூரியம்,நிலக்கரி போன்ற அனைத்தையும்  தோற்றுவிக்கிறாள்.இறந்தபின் மனிதனின் சடலத்தையும் தனதாக்கு கிறாள்.மனிதன் வாழ நீர் நிலத்தின் மூலமாக.பெட்ரோல் நிலத்தின் மூலமாக. வாழும் மனிதனின் அஸ்திவாரமாக நிலமங்கை.

நிலத்தில் நீர். அங்கே அக்னி. அக்னிதேவனை பெரும் சக்தியாக மாற்ற வாயு.
அந்த அக்னி அனைய நீர்.அந்த நீரைப் பொழியும் ஆகாயம். இந்த சக்தி எப்படி எங்கிருந்து உண்டாகிறது என்ற ஆய்வுகள்.சுட்டெரிக்கும் சூர்யன்.குளுமை ஏற்படுத்தும் சந்திரன்.இந்த இயற்கையின் எதிர்மறை சக்திகள்.

இவைகளை கட்டுப்படுத்த அறிவியலா?ஆன்மீகமா? இதுதான் அறிவியல் வளர்ச்சி பெற்ற நாட்டிற்கும் ஆன்மீக சடங்குகள் நடத்தும் நாட்டிற்கும் நடக்கும் போராட்டம்.

சனாதன தர்மத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதிலுள்ள அறிவியல் உண்மைகள் வெளிப்படும்.புரியும்.
வனதேவதை என்று வனத்தை தெய்வமாக போற்றுவது சனாதன தர்மம்.
மரங்களை ஆலயங்களின் ஸ்தல வ்ருக்ஷமாக்கி மரங்களின் செடிகளின் மருத்துவ உண்மைகளை எடுத்துக் கூறுவது சனாதன தர்மம்.
மலைகளின் மீத்து ஆலயங்கள் அமைத்து ஆன்மிகம் என்ற பெயரில் பக்தர்களை  அறிவியல் ரீதியில் வரதம்,தவம் மௌனம் ,பிராணாயாமம் ,தோப்புக்கரணம்,கிரிவலம் அங்கப்ப்ரதக்ஷனம் என்று  உடல் ஆரோக்யத்திற்கு ஆன்மீக ரீதியில் அறிவியல் பூர்ண மாக வழிகாட்டுவது சனாதன தர்மம்.

பாரத நாடு அனைத்து வளமும் கொண்டது. அதனால் அமைதியான ஆன்மீக நாடு. வள்ளுவர் கூறியது போல் -நாடென்பது நாட வளத்தன என்ற இலக்கணம் கொண்டது சனாதன தர்ம பாரதம்.
அன்னியர் இங்குவந்து நாலனவைகளை அறிந்து புரிந்து ஏற்று ஏற்றம் அடைகின்றனர்,.வேள்வி அதில் வரும் புகையின் மதிப்பை ஆய்ந்து வெளிநாட்டினர் கூறிப் புகழ்கின்றனர். தொப்பிக்கரணம் ஒரு உடற்பயிற்சிக்கலையாக கர்பிக்கக்கத்தொடங்கியுள்ளனர்.திருநள்ளார் நவகோள்களின் ஈர்ப்பு  பற்றி வியந்துள்ளனர்.
பாரதம் மேற்கத்திய மோகத்தில் இருந்து விடுபட்டு நம் நாட்டின் சிறப்பை அறியச்செய்வதில் முயல்வதும் பிரார்த்தித்து சக்தி பெறுவதும் தான் இன்று அனைவருக்கும் தரும் செய்தியாக உணர்வு பெற்றேன்.

spoken/written tamil

  1 .yesterday you saw me.=netru nee ennai  ppaarththaay.(W) netru nee ennai paththe.
                                      
                                     நேற்று நீ என்னை பார்த்தாய்.  நேற்று நீ என்னை பாத்தே.

   2.  I gave 10 ,000/-rs. to him.=naan avanukku paththaayiram roopaay koduththen.(W)  nan avanukku paththaayiram roopaa koduththe.(s ) நான் அவனுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன்.
நான் அவனுக்கு  பத்தாயிரம் ரூபா கொடுத்தே.

3.SHE   SANG A SONG.=AVAL PAATTUP PAADINAAL.(W)AVA PAATTU PAADINAA.(s)
                                          அவள் பாட்டுப்பாடினாள்.   அவ பாட்டு பாடினா. 

spoken tamil/written tamil

imperative mood=kattalavinai =கட்டளை வினை.

நீ படி.=nee padi.you read. you (respect)=neengal padiyungal.நீங்கள் படியுங்கள்.(written )
spoken  )=நீங்க படிங்க.neenga pad

you speak=nee pesu=neengal pesungal. neenga pesunga.நீ பேசு. நீங்கள்  பேசுங்கள்./  நீங்க பேசுங்க.

you  do  this  work =நீ இந்த வேலையைச் செய்./நீங்கள் இந்த வேலையைச்  செய்யுங்கள் ./நீங்கள் இந்த வேலை செய்ங்க .nee indha velaiyaich chey./neengal indha velaiyaich cheyyungal. nenga intha velai chynga.

you teach me.=nee sollikkodu.neengal sollikkodungal./neenga sollikkodunga.

                       நீ சொல்லிக்கொடு. நீங்கள் சொல்லிக்கொடுங்கள்../நீங்க சொல்லிக்கொடுங்க.
you  learn ,=nee katrukkol.(WRITTEN) nee kaththukka.(SPOKEN}நீ கற்றுக்கொள்.நீ கத்துக்க.
                    நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். நீங்க கத்துக்கங்க.

                     neengal katrukkollungal (W) neenga kaththukanga.

ஞாயிறு, நவம்பர் 27, 2011

spoken tamil and written tamili

read and learn the difference:-

    1.i am reading tamil.=Nan thamil padiththukkondirukkiren.(WRITTEN THAMIL)
நான் தமிழ் படித்துக்கொண்டிருக்கிறேன்.
naan tamil padichchukkittu irukke,(SPOKEN THAMIL)=நான் படிச்சிக் கிட்டு இருக்கேன்


2.அவன்  விளையாடிக்கொண்டிருக்கிறான்// அவன் விளையாடிக்கிட்டு இருக்கான்.

avan  vilayadikkondirukkiraan./ avan  vilayaadikkittu irukkan.=he is playing.

there is a great difference between spoken and written tamil.)

i come,=naan varukiren.=naan வர்றேன்=நான் வருகிறேன் =நான் வர்றேன்.

he  comes=avan varukiraan/ avan varran.=அவன் வருகிறான்=அவன் வர்ரன்.

you help  =நீ உதவி செய்கிறாய். =நீ உதவிசெய்ரே-nee udhvi sekiraay.=nee udavi seyre.
past tense continious

  1. sarala was writing a letter.=sarala kaditham eluthikkondirunthaal.சரளா கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள்.
  2. सरला ख़त लिख रही थी. sarala likh rahee thee.
  3.  

2.மோகன்  விளையாடிக்கொண்டிருந்தான். Mohan  was playing.
मोहन खेल रहा था.mohan khel rahaa thaa.

 3.   the girls were singing.sirumikal paadikkondirunthanar.=சிறுமிகள் பாடிக்கொண்டிருந்தனர்
लड़कियां गा रही थीं =ladkiyan gaa rahee theen.

4..Where were you going yesterday/?=netru nee enge poykkondirunthaay.நேற்று நீ எங்கே போய்க்கொண்டிருந்தாய்.
kal thum kahaan jaa rahe the?  कल  तुम कहाँ जा रहे थे?

4.we were buying things in the shop.நாங்கள் கடையில் பொருள்கள் வாங்கிக்கொண்டிருந்தோம்.
हम दूकान में सामान खरीद रहे थे/ ham dookaan mein saamaan khareed rahe the.

5 cows were grazing on the field. பசுக்கள்  வயலில் மேய்ந்து  கொண்டிருந்தன.
 गायें  खेत में चर रही थीं. gaayen khet mein  char rahee theen.