வெள்ளி, நவம்பர் 23, 2012

கல்வி அறிவு பெருகினாலும் போலிகளிடம் ஏமாந்தாலும். உண்மை புரிவதில்லை.

  அதிகாலை நேரம்,

ஆண்டவனைத்  தொழும்  நேரம்.

இன்றைய நாட்களில் , பொருள் 

ஈட்டும்  தொழில் நுட்பப் பணியில்,

கடமையைச் செய் .
கடவுள் கருணை உண்டு 
என்ற  கீதை உபதேசம்.
ஏற்புடையதாயிற்று.

ஹிந்தியில் நான் படித்த தோஹை,

வீரர்கள் செயலில் இறங்குவர்.
கோழைகள்   வீண் பெருமை பேசுவர்.
வீரர்கள் களத்தில்  குதிப்பர் .
கோழைகள்  தற்பெருமை பேசுவர்.
காலம் மாறுகிறது.
கருத்துக்கள் மாறுகின்றன.
ஒரு கிணறுவெட்ட பழைய முறை 
உதவாது.
நெசவு நெய்ய கைத்தறி ,
காலத்திற்கேற்ற நூற்பாலை.
அகல் விளக்கு ,
இன்று மின் விளக்கு.
கட்டை வண்டி 
இன்று ஜெட் விமானம்.
கதை பேச நேரமில்லா உழைப்பு.
நான் சிறுவனாக இருந்த போது .
ஒருவர் உழைப்பு;
பலர் அமர்ந்து உண்பர்.
வெட்டிப்பேச்சு ;
திண்ணைப்பேச்சு;
வீண் வம்பு;
அரசியல் கூட்டம்;
அலை மோதும்.
இன்று மோதியின் 
ஒருமேடைப் பேச்சு .
நான்கு ஊர்களில் .
பொதுமேடைப் பேச்சு.
தொலைக்காட்சியில்  வீட்டில் இருந்தே,
நேரடி ஒளி பரப்பு.
அறிவியல் விந்தைகள்.
அன்றாட வாழ்வில்.
பல மொழிகள் அறிவு பாமரனுக்கும் தேவை.
பொருட் செல்வம் இருந்தால் ,
தன் இனம் வளரும்.
தன் மொழி வளரும்.
வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றும் சேவை,
ஆர்வம்  தோழி நுட்ப வசதியால் தானே?
மடி கணினி இலவசம்.-ஆனால் 
மின்சாரம் இல்லை.
தொலை பேசி வசதி இல்லை.
வலை அலை வசதி இல்லை.
பயன் படுத்த முடியவில்லை.
அலைகற்றை ஊழல் அலை ஓயவில்லை.
வீண்பேச்சுக்கள் தான்.
பொருளாதாரம் இருந்தால்,
தமிழ் மொழி வளரும்.
திரைகடலோடியும்  திரவியம் தேட,
தமிழ்,தமிழ் என்ற வீண் பேச்சுப் பேசி,
காலத்திற்கேற்ப கல்வி  இன்றி ,
கல்வித்துறையில் நேர்மையின்றி,
காசேதான் கல்வி,
இல்லாருக்கு இல்லை என்ற நிலை இன்று.
அரசுப்பள்ளி தரம் உயர,
என்னதான் செய்தாலும்.
பெற்றோர்கள் பொருளீட்ட அலையும் பொது,
நல்  ஒழுக்க சூழல் சமுதாயத்தில்,
ஊடகங்களில்,
திரைப்படங்களில் .
ஆடைகளில் கவர்ச்சிகள்  கண்ணைப்பறிக்கும் போது ,
ஊழல்,கொலை,கொள்ளை,லஞ்சம் என்பதே
 பேச்சாக 
இருக்கும்  போது ,
ஒழுங்கீனங்கள்  தானே மிஞ்சும்.
ஆன்மிகம் அமைதி தந்தது.
ஆனால் அதில் ஆஸ்தி தேடுவோர் அதிகமானதால்,
பொருளின்றி அருள் இல்லை 
என்ற நிலை.

எல்லா இடத்திலும் இருக்கும் இறைவன்,
அவன் அருள் பெற உள்ளார்ந்த பிரார்த்தனை,
உள்ள இடத்திலேயே போதும்.
உண்மை சொன்னால் ஊர் நகைக்கும்.
ஊர்க்கோடியில் ஒரு சாமியார்,அவரோ போலி,
அவருக்கு பல கோடி சொத்து.
இதுவா இறைவன் அருள் பெறும் இடம்.
பணம் இருந்தாலே பத்தும் செய்யும்.
அங்கு எங்கே தர்மம் தலைக்கும்.
காலம் மாறினாலும்,
கல்வி அறிவு பெருகினாலும் 
போலிகளிடம் ஏமாந்தாலும்.
உண்மை புரிவதில்லை.

மம்மி டாடி கலாச்சாரம் வளரவும் காரணம் யார்?

      தமிழகம்  சேர,சோழ,பாண்டிய நாடு என்ற மூன்று பிரிவுகளாகவும்,குறுநில மன்னர்கள்,கடையேழு வள்ளல்கள் 
பாரி ,ஓரி ,அதியமான் என்று என்றுமே ஒன்று பட்ட வரலாறு காணப்படவில்லை.அப்படிப்பட்ட நிலையிலும் அனைவருக்கும் கல்வி என்ற நிலை இருந்ததா?என்ற நிலை தெரியவில்லை.அதிவீரராம பாண்டியர் "பிச்சை புகினும் 
கற்கை  நன்றே என்றாலும், வெந்தனலால்  அழியாது கல்வி என்றாலும்,ஜாதி இரண்டொழிய வேறில்லை என்றாலும்
இன்றும் ஜாதி அரசியல் தான். என்றுமே அனைவரும் அறிவாளிகளாக நாட்டு பக்தியுடன் பல மொழி,அறிவு பெற்று 
ஒற்றுமை  உடன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் என்றுமே இருந்த தில்லை. தமிழ்நாடு தமிழர்களுக்கே ,கடவுள் இல்லை,பார்ப்பான் ஒழிக, தமிழன் வாழ்க என்று தமிழர்களை கிணற்றுத் தவளைகளாக ,பாரத நாட்டின் அறிவே தெரிந்து கொள்ள முடியாமல் தமிழ் தமிழ் என்று இன்று ஒய்  திஸ் கொலைவரி  என்றும்,பட்டி தொட்டி எல்லாம் மம்மி டாடி கலாச்சாரம் வளரவும் காரணம் யார்?
ஹிந்தி கூடாது என்றவர்கள் பொதுமக்களைப் படிக்கவிடாமல்,மத்திய அமைச்சர்களானால்  பெரும்பான்மையானவர்கள் அறிந்த மொழியை மறுத்து  தமிழில் தமிழ்நாட்டிலேயே முடிய இல்லை. தமிழ் வழிப்பள்ளிகள்  ஏழைகள், வழி  இல்லாதோர்  சரணடையும் பள்ளிகளாக காட்சி அளிக்கின்றன.
ஏதாவது அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர்கள்,படித்தோர் யாரும் தமிழ் வழி  பள்ளிகளை விரும்ப இல்லை. ஹிந்தி ஒழிந்ததா? தமிழ் வழி படித்த பட்டதாரிகள் வேலை இல்லாமல் அலுத்து புலம்பும் நிலை.
கடவுள் இல்லை என்று ஒரு பெரும் கூட்டத்தை உருவாக்கியவர்கள் திருக்கடைஊர்,காளகஸ்தி சென்று பூஜை செய்யும் நிலை. அம்மாவிற்கு நன்கு ஹிந்தி தெரியும்.
பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றாலும் ,
பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு  என்ற பாடலும் இக்பால் எழுதிய சாரே ஜகான் சே அச்சா என்ற வரியும் ஒன்றே.
பல நாட்டு நல்லறிஞர் சாஸ்திரங்கள் தமிழ் மொழியில் வர வேண்டும் என்றால் பல மொழி அறிவு வேண்டும்.
கம்பருக்கு வட  மொழி  அறிவு  இல்லை என்றால் கம்ப ராமாயணம் தமிழுக்கு கிடைத்திருக்குமா?நீதிபதி இஸ்மாயில் ,கம்பர்கலகம் எத்தனைபேருக்கு இதய நூலாக இருக்கிறது.
ஐம்பெருங் காவியங்கள் பெயர் வடமொழியா?தமிழா? ஆதி  பகவன் என்பது வடமொழி.
இன்று எப்படி தமிழ் ஆங்கிலம் இன்றி பேசமுடியா நிலையோ அன்று அப்படித்தான் வடமொழி. இன்று ஆங்கிலம் கலந்தால் பெருமை. ஆனால் அகில பாரத்தையும் இணைக்கும் தேசத்தந்தை காந்தி ஏற்படுத்திய  பொதுமொழியால்  தமிழுக்கு ஆபத்தா? இன்று கலையுலகம் ஹிந்தி மொழி விரும்புகிறது. லியோனி ஒரு பட்டிமன்றத்தில் ஹிந்தி தேவை என்ற பொருள் பட பேசயுள்ளார்.
பாரதி ராஜா ,வை.கோ. திராவிடன்,தமிழன் பற்றிய சர்ச்சை. தில்லியிலும் தமிழர்கள் அதிகம். பாம்பேயிலும் அதிகம். தென்னக மூன்று மாவட்டங்களிலும் ஹிந்தி எதிர்ப்பு இல்லை.தமிழகம் மட்டும்.
தமிழர்களுக்குள் ஒற்றுமை இருந்தால் திராவிடர் என்ற பெயரில் இத்தனை கட்சிகள். இத்தனை தலைவர்கள்.
வேற்றுமைகள். வட இந்தியாவில்  மைதிலி,போஜ்புரி,மார்வாடி,அவதி,உர்து, சத்தீஸ் கடி ஆயிரக்கணக்கான மொழிகள்.
ஹிந்தி என்பது டில்லி,ஆஜ்மீர்,ஆக்ரா என்ற இடங்களில் இரண்டரை லக்ஷம் பேசும் கடி போலி.
மொழிகள் என்பது ஜீவாதாரம் கொடுப்பதால் வளர்வன. இன்று எத்தனை பேர் ஷேக்ஸ்பியர் நாடகங்களும்,தமிழ்  இலக்கியங்களும் ,வடமொழியும் அறிந்துள்ளனர்.
பார்ப்பனர்கள் 3%  ஆதிக்கமா? என்று பேசுபவர்களுக்கு ஆங்கிலம் படித்து வடமொழி அறியவில்லை என்பதுதான் சத்தியம். காரணம்  வாழ்க்கைக்கு வேண்டிய தொழில் ஆங்கிலம் தருகிறது.இன்று வடமொழி ஒரு தெய்வ மொழி.
எப்படி நம்முன்னோர்கள் இறந்தால் தெய்வ மாகிவிட்டார் என்கிறோமோ?அப்படி.
 இனிமேல் தெய்வம், பார்ப்பான்,ஹிந்தி என்ற பெயரில் அரசியல் சுயநல வாதிகள் பிழைப்பு நடத்த முடியாது.

புதன், நவம்பர் 21, 2012

! பாரதம்!

வாழ்க பாரதம்!


மனிதன்  பேராசை உள்ளவன்.அனைத்து உயிரினங்களும் அன்றாடத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொண்டு   திருப்தி  அடைகின்றன.ஆனால், மனிதன் பல தலைமுறையினர்களுக்காக  சொத்து சேர்த்துவைக்க ஆசைப்படுகிறான்.அதன் பலனாக ஆஸ்தி சேர்ப்பதற்காக அவன் முயற்சிக்கிறான். ஆட்சி செய்பவர்கள் முதலில் தன்  பாதுகாப்புக்காகவும்,நாட்டின் பாதுகாப்புக்காகவும் தன கரூவூலங்களை நிரப்பிவைத்தனர்.மக்களும் அரசனை தன் பிரதிநிதியாகக்
கருதினர்.நாட்டின் நலத்தைப் பெரிதாக மன்னர்கள் கருதிய காலம்.ஆனால்  அவர்கள்,மக்கள் நலத்திற்காக  கல்வி என்ற அழியா செல்வத்தை அனைவருக்கும் தர முன்வரவில்லை. அதன்,பலனாக
நாடு துண்டு  களானது.  இந்த மன்னர்கள் நாட்டை விட  தன் ஆணவம், வீரம்,காதல், தன குறிகிய நாட்டின் எல்லைப் பாதுகாப்பு என்ற வலையில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தனர்.
எதிரிநாட்டு செல்வங்களைக் கொள்ளை அடித்து  தன்  அரண்மனை கரூலத்தில்  சேர்த்து வைத்தனர்.
அந்தப்புரங்களை அழகு படுத்தி ராணிகளுடன் ஆனந்தமாக இருந்தனர்.கல்வி அற்ற மக்களும் அரசன் கைதட்டினால் சேவகம் செய்ய உயிரை விட தயாராக இருந்தனர்.
        பல  மொழி,இயற்கை,உணவுப்பழக்க வழக்கங்கள் கொண்ட நாட்டில் ஹிமாலயம் முதல் கன்னியாகுமரி  வரை  வேறுபாடு  இருந்தாலும்  ஒரு தெய்வ ஷக்தி  நாட்டை ஒற்றுமை படுத்தி வந்தது.
சிவன்,விஷ்ணு ,சூரியன்,சந்திரன் என்ற தெய்வங்களை விட ,உருவ,அருவ வெளிப்பாடும் நடந்துவந்துள்ளன. இறைவனைப்போற்றும் நூல்கள்   வட மொழி,தென் மொழிகளில் இயற்றப்பட்டாலும்,குஹன் சபரி,விதுரன் ,நந்தனார்,கண்ணப்பர் கதைகள் கூறப்பட்டாலும் சமுதாயத்தில் மிகப்பெரிய வேறுபாடு.

      இந்த சனாதன தர்மம் வளந்த பாரத தேசம்  வெளிநாட்டினர் புகுந்ததால் சிந்து நதி மூலம் வந்து
ஹிந்து அல்லது ஹிந்துஸ்தானம் ,ஹிந்து தர்மம் என்று மாறியது. சுயநலத்தால் இருந்த மன்னர்களும்,
மதவாதிகளும் மக்களை மடையர்களாக்கி தங்களுக்குள் இருந்த பகையால் வெளிநாட்டினர் ஆட்சி
அமைக்க காரணமாக இருந்தனர்.விருந்தாளிகள் தெய்வம் என்றனர்.  अथिति देवो भव्
ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்றால் ஆண்டவனுக்கு மற்ற மொழி  வழிபாடு புரியாத.? என்ன.
சர்வ ஷக்தி உள்ள ஆண்டவன் பல சோதனைகளைக் கடத்து வந்த மக்களுக்கு சர்வ சிக்ஷா அபியான்
அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் வரை வழிகாட்டி உள்ளார்.
பல இளைஞர்கள் ஜாதி,மத,இனம் வேறுபாடு மறந்து காதல் திருமணம் செய்யும் அளவிற்கு பகுத்தறிவு ப பெற்றுள்ளனர்.
மக்கள்  தன்  நாட்டின் வரலாறு அறிந்து சிந்தித்து பரந்த மனப்பான்மை உடன் சயநலம் மறந்து
பாரத நாட்டின் ஒற்றுமைக்கும் தேசனலனுக்கும் வேறுபாடுகள் மறந்து  நாட்டைப் பாதுகாக்கும்
உயர்ந்த எண்ணங்கள் தர இறைவனைப் ந்ப்ரார்த்திப்போம்.
வாழ்க பாரதம்! வாழ்க பாரத மணித்திரு நாடு!வந்தே மாதரம்!

என் அம்மாவின் நினைவு அலைகள்பகுதி -11.

என் அம்மாவின் நினைவு அலைகள்பகுதி -10

அம்மாவிற்கு  உடல் நிலை சரி இல்லாத போதும்  ,ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள். எனக்கும் தம்பிக்கும்  19. ஆண்டுகள் வித்தியாசம்.மிக செல்லமாக வளரவேண்டியவன்.
அம்மா  பள்ளிகள் நடத்தினாலும் பையனை கவனிக்க முடியவில்லை. அவனையும்  பட்டதாரி  ஆக்கினார். அம்மாவிற்கு நான் தான் வேலைக்கு போய் விட்டேன். என் தம்பியாவது பள்ளியை நிர்வஹிக்கவேண்டும் என்று.ஆனால் எனக்கு அவன் வேலைக்கு செல்ல வேண்டும்  என்று. அவனும் வேலைக்கு சென்றான்.நானும் என் பள்ளியிலேயே வேலைக்கு ஏற்பாடு செய்தேன்.
ஆனால் அம்மாவின் விருப்பமோ அல்லது ஆண்டவனின் விருப்பமோ தெரியவில்லை,எங்கெங்கோ வேலைக்குச் சென்று இறுதியில் பழனிக்கே வந்து பள்ளியை நிர்வாகம் செய்கிறான். அவன் மனைவியும் பள்ளியில் கவனம் செலுத்துகிறாள்.வருமானம் குறைவு என்றாலும்,இருவருமே சிக்கனமாக,பள்ளியை நடத்திவருகின்றனர். எல்லாம் வல்ல முருகப்பெருமான் துணை இருந்து பள்ளியை நடத்த அருளவேண்டும்.பல சோதனைகள்.பொருளாதார வசதி இல்லை.அம்மாவிற்கு இன்றும் அந்த பள்ளியின் நினைவலைகள் தான்.பள்ளிவளர வேண்டும் என்பதே.எல்லாம் அவனருளால்  தான் நடக்க வேண்டும்.

இறைவனின் சூட்சுமம் ஆத்மானுபவத்தால் தான் புரியும்.

மரணம்  மற்றவர்களின் மரணம் .ஆறுதல் .மரணம் நிச்சயம். நம் தந்தையின் மரணம் நமேக்கே நாம் தேற்றிக் கொள்வது.
என் அப்பா சொல்வார்.உலகம் மிகவும் ஆபத்தானது. மிகவும்  ஜாக்கிரதை. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். மரங்கள் பல தானாகவே வளர்கிறது. அதில் முள்ளும் இருக்கின்றன. நிமிர்ந்தும் ,வளைந்தும் உள்ளன.முடத்தேங்குகளும் உள்ளன. விஷமும் உள்ளது.அது பருவகாலங்களுக்கேற்ப இலைகளை உதிர்த்து துளிர்கிறது. அப்படியே குடும்ப விருக்ஷம். இன்ru சொன்னதுபோல் இருந்தாலும் 22 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவர் போன்ற தளிர்கள் பேரன் பேத்தி,நான். இறைவனின் அதிசயம்.அறிviயல் சற்றே பணிவது இதற்குத்தான். இல்லை எனில்...உலகம்......ஆஹா!
அஹங்காரர்களின் அசுர ஆட்சிகள் அழியாமல் தான் இருக்கும்.நான் எனக்கு நானே செய்துகொண்ட ஆறுதல். ஆறு பருவகாலங்கள் போல் தான் வாழ்க்கை.மனிதவாழ்க்கையும் அப்படித்தான். நாம் அழுவது சிரிப்பது புரிந்து தெரிந்தே செய்யும் அறிவற்ற ஆனால் அறிவுள்ள செயல்.இறைவனின் அபூர்வ உணர்வுகள். தான் ஆடவிட்டாலும் தன்  சதை ஆடும்.என் அப்பா பழனியில் ப்ராnaaவஸ்தை. 
அன்று என் பையன் பத்தாவது பாஸ் சேதி. 
என் அடிவயிற்றில் ஒருகலக்கம். 
ஐயோ என்று கதறவேண்டும் என்ற துடிப்பு.சென்னையில் .
எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் விஷயத்தை சொல்லாமல் பழனி செல் என்றார். புரிந்துவிட்டது.இதுதான் ரத்தபந்தம்.
இறைவனின்  சூட்சுமம் ஆத்மானுபவத்தால் தான்  புரியும்.மற்றவர்களுக்குக் கூறும் ஆறுதலை நினைத்து  naam aaruthal adaiya vendiyathuthaan.

செவ்வாய், நவம்பர் 20, 2012

அம்மாவின் நினைவலைகள்-10





அம்மாவின் நினைவலைகள்-9

அம்மாவிற்கு சோதனை நேரங்களில் ஆண்டவன் கொடுக்கும் தைரியமும்,மனித உருவில் உதவ வருபவர்களும்
என்னை மிக ஆச்சரியப் பட வைக்கும். ஒருமுறை அம்மாவை மிரட்ட பின் வீட்டுக்காரரின் மகன் ஒரு அடியாளை
அனுப்பி உள்ளான்.அம்மா அவனை எந்த ஊர் என்று கேட்டு,அந்த ஊர் மாணவர்கள் பற்றி கூறியதும் அவன்
அம்மா காலில் விழுந்து வணங்கி உங்கள் மாணவன் என் சித்தப்பா என்று சொல்லி,யார் பணம் கொடுத்து அம்மாவை மிரட்ட அனுப்பினானோ
அவனையே மிரட்டி விட்டுச் சென்றுள்ளான்.
அம்மாவின் வாழ்க்கையில் பல தெய்வீக நிகழ்ச்சிகளும் நடந்தது உண்டு.
சோக நிகழ்ச்சிகளும் நடந்தது உண்டு.
அனைத்திலும் அவர் நீந்தி கரை ஏறினாலும் அப்பாவின் மரணமும்,மாப்பிள்ளையின் மரணமும் தாங்க முடியா வேதனை. என்னால்
இந்த இரு வேதனைகளும் அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன.மரணம் ஏற்படும் பொழுது மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது சுலபம்.
ஆனால் அந்தப் பெருந்துன்பம் ந செயலற்றதாக்கிவிடும்.ஆனால்,என் தங்கைக்கு எங்கிருந்தோவந்த தைரியம்,துணிச்சல்,தன வேதனையை மறைத்து,எல்லாம் அவரவர்கள் தலை எழுத்து,இதை நினைத்து வருந்துவதால் என்ன பயன் !என்று தைரியம் சொல்லுவாள்.
மரணம் அதுவும் அகால மரணம் ...இந்த நரக வேதனை மனித வாழ்வில் ஏன் ? அப்படிப்பட்ட வாழ்க்கை சம்பவங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்பட்டாலும் மனிதன் போட்டி,பொறாமை,பேராசை அகந்தை,என்ற தீய குணங்கள் தோன்றுவது ஏன் ? இதுதான் அறிவுள்ள அறிவியல் உலகை சற்றே ச்தம்பிக்கச்செய்கிறது.
தொடரும்.

திங்கள், நவம்பர் 19, 2012

அம்மாவின் நினைவு அலைகள்-9


அம்மாவின் நினைவு அலைகள்-9

பழனியில் அம்மா மூன்று இடங்களில் பள்ளி நடத்தினார்.இதில் திடீரென்று காஞ்சிப்பெரியவரின் ஜனகல்யாண்  பெயரைச்சொல்லி சுப்ரமணியன் என்பவர் தலையிட்டு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினார். இதனால்சண்முகபுரம் கிளை மூடப்பட்டது. இது குறித்து  காஞ்சி மடம்  பெரியவருக்கு எழுதிய கடிதத்திற்குப் பதில் இல்லை. ஜனகல்யாண்  பெயரில் பல ஏமாற்றங்கள் நடந்துள்ளது.
இப்படி பல சோதனைகள்.பலர் அம்மாவிடம் நேரடியாக பள்ளியை ஏற்று நடத்த கோரிக்கைவைத்தனர்.
அவர் தன்  போக்கில்  மன தைரியத்தால் குறைந்த கட்டணத்தில் பள்ளிகளை நடத்திவந்தார்.ஆசிரிகைகளும் குறைந்த ஊதியத்தில் திறம்பட உழைத்தனர். நான் அரசு உதவி பெரும் பள்ளியில்  வேலை கிடைத்து சென்னைக்கு வந்துவிட்டேன். என் பெரி யமாமாவிற்கு ஏழு  குழந்தைகள்.
மூத்த மகள் கோமதிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது.அத்தைக்கு சிறிதும் இஷ்டமில்லை.அம்மா எனக்குத்தெரிந்து அண்ணன் வீட்டிற்கு சென்று எவ்வித உதவியும் பெற்றதில்லை.அவரும் உதவி செய்யும் நிலையில் இல்லை. அண்ணனின் கஷ்டத்திற்கு அம்மா உதவி செய்துள்ளார். என் மனைவி கோமதி அமைதி;பொறுமை திறமை அன்பு அடக்கம் உழைப்பு மரியாதை குணக்குன்று என்று சொல்லலாம்.திருமணம் ஆன பின்  இரண்டு குழந்தை பெற்ற பின் தான் எனக்கு சென்னையில் வேலை கிடைத்தது.அம்மாவிற்கு ஒரு பயம். மகன் பிரிந்து தனியாக சென்ருவிடுவானோ என்று. என் மாமாவிற்கு திருமணமான பின் மாமா என் பாட்டிக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. அதற்கு அத்தை ஒரு காரணம் என்று பாட்டி சொன்னதால் சொல்லிக்கொண்டே இருந்ததால் அடிக்கடி எனக்கும் அம்மாவிற்கும் சண்டை வரும்.எனது பேச்சு,நடைமுறை அனைத்தும் மாறிவிட்டத சண்டை போடுவார். ஒருநாள் கூட என் மனைவி என் தாயாரிடம் கோபமாக பேசியோ சண்டபோட்டதோ கிடையாது.எனக்குத்தான் கோபம் வரும். இருப்பினும் வேலை கிடைத்து 10 ஆண்டுகள் காலாண்டு,அரையாண்டு,முழுஆண்டு விடுமுறை என சென்னையில் இருந்து பழனி சென்று வருவோம்.ஊதியம் தவிர வேறு வருமானம் கிடையாது. சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.என் மனைவியும் இது பற்றி பேசியதும் இல்லை. 525 ரூபாய் ஊதியம். வீட்டுவாடகை 100/-எப்படி சமாளித்தாளோ ?நான் M.A;B.Ed;MEd; படித்து முடிக்கும் வரை எதிலும் ஈடுபடவில்லை.வேலை;படிப்பு; தேர்வு;B.Ed; சார்ட்,படம்,கற்பிக்கும் உபகரணங்கள் எல்லாம் மனைவியே.எல்லாம் முடிந்து முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று ஹிந்து மேல் நிலைப்பள்ளியில்  பணியில் சேர்ந்தேன்.நான்கு ஆண்டுகள் கழிந்தன. நிம்மதி என்ற நிலையில்
நடைபாதையில் சென்ற என் மீது புது கார் வாங்கியர் மோதினார்.படுத்த படுக்கை.55 நாட்கள்.
இதற்கு மேலும் நடந்த சோதனைகள். தங்கையின் திருமணம். அம்மா பட்ட மனவேதனை. அப்பாவின் மரணம். மாப்பிளையின் மரணம் என்பவை பெரும் கதைகள்.
தொடரும்.

சனி, நவம்பர் 17, 2012

அம்மாவின் நினைவலைகள்--பகுதி 8

அம்மாவின் நினைவலைகள்--பகுதி 8

அம்மா பல துன்பங்களை எதிர்த்துப் போராடி ஒரு அமைதிநிலை எட்ட இறைவன் விடுவதே இல்லை.எங்கள் பெரிய வீடு மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.என் தாத்தா முன் பகுதி எங்களுக்கு என்று கூறி இருந்தார்.எங்களுக்கோ,என் பெரியப்பாவிற்கோ  வீடு பாகப்பிரிவினை செய்யும் எண்ணம் இல்லை. எங்கள் அத்தை நெம்மேனியில்  இருக்கும் பூர்வீக வீட்டைத் தன பெயரில் மாற்ற இந்த பழனி வீடு  மூன்று  பாகமாகப்  பிரிக்கப்பட்டது. என் தாத்தாவின் ஆஸ்தி அந்த ஒரு வீடுதான்.இன்னும் அதிகமாக சொத்து இருந்திருந்தால் என்ன ஆகுமோ தெரியாது.அண்ணன் தம்பிகளுக்குள் பெரிய யுத்தம்.கடைசியில் திருவுளச்சீட்டு போட்டு சமாதானமாக வீடு பிரிக்கப்பட்டுவிட்டது.பெரிய கூடம்.நடுவில் ஒரு சுவர் எழுப்பப்பட்டது.பெரியப்பா வெங்கடேஸ்வரருக்கு எவ்வித கெட்ட  பழக்கம் 
இல்லை என்றாலும் சாமியார் ஜோதிடம் நம்பிக்கை அதிகம். பல ஆண்டுகள் அவர் குடும்பத்துடன் எங்கோ சென்றுவிட்டார். தாத்தாவின் மரணத்திற்குக் கூட அவர் வரவில்லை.அவருக்கு ஒரு ஜோதிடர்.எங்கள் பெரியப்பா மகாதேவா அய்யர் அரசியல் வாதி.ம.போ.சிவஞானம் ஆரம்பித்த தமிழரசுக்கழகத்தில்  அடிப்படை உறுப்பினர். தமிழரசுக் கழக வேட்பாளராக நின்று நகரமன்ற உறுப்பினர் ஆனவர். சம்பாதிக்கத் தெரியாதவர்.அவருக்கு பச்சை என்ற நண்பர். அவர் ஒரு தலால்.அவர் எப்படியோ அவரை மடக்கி வீடு விற்பதற்கு சம்மதம் வாங்கிவிட்டார்.பெரியப்பா வெங்கடேஸ்வரருக்கு ஜோதிடர் வந்து வீட்டை விற்கவில்லை என்றால் பெரும் கஷ்டம் வரும் என்று கூறி வீடு விற்கத்  தயாரானார். இருவருமே கெட்டிக்காரர்கள்.என் அப்பா சேது என்றாலே சாது.அனால், அவர்  வீடு விற்கும் விஷயத்தில் மட்டும் தன அண்ணன்கள் சொல்வதை கேட்கவில்லை.வீட்டு வரைபடம் "ட " வடிவம்.இதில் எங்கள் பாகம் நடுவில்.மூன்றடி நடை பாதை.அதை வாங்கிய கணேசன் செட்டியாருக்கும் எங்களுக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கும்.இந்த சண்டையில் எங்களுக்கு உள்ளூர் பெரியவர்கள் ஆதரவு அதிகம். எங்களுக்காக எங்கள் எதிர்வீட்டில் இருக்கும்   துரை,கந்தசாமி போன்றோர் அடிதடியில் இறங்கி காவல் நிலையம் செல்வோம். இது அம்மாவிற்கு நிம்மதியில்லை.அப்பாவிற்கும்.அந்தவீட்டில்தான் மழலையர்,பள்ளி ஹிந்தி வகுப்புகள்.
அவரின் பலவித எதிர்ப்புகள் நடுவில் இரண்டுமே நன்றாக நடந்தது.நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜ சண்முகம்,தங்கராஜ்,நகர்மன்றத்தலைவர் கோவிந்தராஜ்,தலைவர் காணியாளர் கே.சின்னப்பன்,p.s.கே.லக்ஷ்மிபதிராஜ் ,லக்ஷ்மணன் செட்டியார்.எம்.கே.எம். அப்துல் காதர்,. போன்ற அனைவரும் எங்களுக்கு பேராதரவு வழங்கினர். செட்டியாரிடம் வீடு கை மாறியது, அவர்முதலில் வீட்டிற்குப் பின்னல் வீடு கட்டினர்.அதை ஒரு  பாலசமுத்திரம் அய்யங்கார் வாங்கினார்.அனைவருக்குமே நாங்கள் வீட்டை விற்றுவிடுவோம் என்ற எண்ணமே.நாங்கள் விற்கவில்லை என்றதும் அவர் ஒரு தாசில் தா ருக்கு விற்றார். சில நாட்கள் மிக நட்பாயிருந்தவர்  வீடு விற்கமாட்டோம் என்பதை அறிந்ததும் முதலில் தன செல்வாக்கைப்பயன்படுத்தி பள்ளி நடத்த விடாமல் ஒரு நீதிமன்ற இடைக்கல் உத்திரவு போல் தன மேலதிகாரியிடம் வாங்கினார். பள்ளி கோடை விடுமுறைக்குப்பின் திறக்க ஐந்து நாட்களே. அம்மாவிடம் பணம் இல்லை. எப்படியோ சமாளித்து ச,வெங்கடாசலம் வழக்கறிஞர் மூலம் இடைக்காலத்தடையை வுயர் நீதிமன்றம் மூலம் நீக்கி பள்ளி ஆரம்பித்தார். இந்த மனோ திடம் பொருளாதார வசதியின்றி எப்படி?இது ஒரு தெய்வ பலம்.அனைவரின் ஆதரவு. எதிரிகள் பணபலம் மிக்கவர்கள்.என் தாத்த ஆசீர்வாதம் உள்ளூர்  பெரியவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது காட்டிய அக்கறை.எல்லாம் இறைவன் அருள்.
அங்கு எங்கள் காவல் தெய்வம் கருப்பணசாமி இருந்து காப்பதாக எங்களுக்கு பல அனுபவம்.அதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர்,எதிர் வீட்டு சுயமடத்தில் இருந்த பெரியவர்கள் நேரில் 
கண்டதாகவும் கூறுவார். எதோ ஒரு ஆற்றல் மனிதர்களை ஆட்டி வைக்கிறது என்பது உண்மை.
தொடரும்.

வெள்ளி, நவம்பர் 16, 2012

அம்மாவின் நினைவு அலைகள்-7

அம்மாவின் நினைவு அலைகள்-7
1968ஆம்  ஆண்டு பள்ளி திறந்ததும்,அம்மா இலவச ஹிந்தி வகுப்புகள் நடத்தினார். நானும் நடத்த ஆரம்பித்தேன்.அதற்கு சபா மூலம் மாதம் 120 ரூபாய் மத்திய அரசு மானியமாக வழங்கினர். அதுவும் ஓராண்டிற்கு ஒரு முறை வரும்.நாற்பது மாணவர்கள் கட்டாயம் தேர்வு எழுதவேண்டும்.நுழைவுக்கட்டணம் ரூபாய் ஒன்று  என்ற விகிதத்தில் வசூலித்துத் தரவேண்டும்.சபாவுக்கு வருமானாம். ஹிந்தி போராட்டத்தால் சபாவின்  மாணவர்கள் குறைந்த நேரத்தில் நாங்கள் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.அப்பொழுது சபாவில் பணியாற்றிய செயலர், அமைப்பாளர்கள் பிரசாரகர்களை சந்தித்து  உற்சாகப் படுத்தினர். செயலாளர்   தி.பி.வீரராகவன் ஜீ ,அமைப்பாளர்கள் ஈ.தங்கப்பன் ஜீ ,சுமதீந்திரா ஜீ ,எம்.சுப்ரமணியன் ஜி, வி.எஸ்.ராதாக்ருஷ்ணன் ஜி, போன்றோர் சபாவை காப்பதற்குப் போராடினர். எங்கள் வீட்டிற்கும் கல்லூரி மாணவர்கள் ஹிந்தி வித்தியாலயத்தை மூடவேண்டும் என்று ஊர்வலமாக வந்தனர்.நான் மூடிவிடுகிறேன், இங்கு விரும்பி வருபவர்களுக்கே கற்பிக்கிறேன். எனக்கு மாத வருவாய் வேண்டும் என்றேன். மாணவர்கள் சென்று விட்டனர். அன்று மாலையே சில கல்லூரி மாணவர்கள் ஹிந்தி பயில வந்தனர்.
அன்றைய சபா செயலர்கள்,அமைப்பாளர்கள் அனைவரும் எங்கள் சேவையைப் பாராட்டினார். ஆனால் அங்கும்  தேர்தல். ஜாதி,போராட்டம். ஜே,எஸ்,ராமதாஸ் செயலராக வந்ததும் என் தாயாரின் முழு நேர வித்யாலயம் பகுதி நேரமாக மாற்றப்பட்டது. நேர்மையான பிரசாரகர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.சென்ற ஆடு வயதான ப்ரசாகர்களுக்குப் பாராட்டுவிழா நடத்தினர். அதற்கு என் அம்மாவிடமே  ரூபாய் 600/-கட்டணம் வாங்கி உள்ளனர். அம்மா வயதானதால் , ஆடோவில் தான் செல்லவேண்டும் .இரண்டாயிரம் செலவு. அங்கு பாராட்டி எதுவும் பேசவில்லை. பிரசாரகர்கள்  ஊக்குவிக்கப் படவில்லை. ஆனால் ,ஹிந்தி பிரசாரம் மட்டும் நடந்துவருகிறது. பலர் சபாவை எதிர்பார்ர்க்காமல் ஹிந்தி பிரசாரம் செய்கின்றனர்.ஏனென்றால் பொதுமக்கள் விரும்பி படிக்கின்றனர். நிரந்தரமான பிரசாரகர்கள் இன்றியே ,மாநில அரசின் உதவியும் இன்றி லக்ஷக்கணக்கில் மாணவர்கள் ஹிந்தி படிப்பது மகாத்மா காந்தி அடிகளின் தீர்க்க தரிசனம் தான். அவர் சென்னையில் 1918இல் சபாவை ஆரம்பித்தார்.
தொடரும்.

இளைஞர்கள் வலைத்தளம், இந்தியாவின் எதிர்காலம்


 





தர்மத்தால் செல்வம் குறையாது
?????????? 26,2012,
09:09  IST
* நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர். 
* பொறாமை மனிதனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது.
* வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்தவனாக உங்களிடம் ஏதாவது கேட்டால் அவனை விரட்டாதீர்கள். கொஞ்சமேனும் கொடுங்கள். 
* ஒருவர் தர்மம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமேயாகும். கஞ்சத்தனம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட தவறான எண்ணத்தின் காரணமேயாகும்.
* கஞ்சத்தனத்தைப் பற்றி பயந்து கொள்ளுங்கள். கஞ்சத்தனம் ஷைத்தானின் குணமாகும். 
* தர்மம் கொடுப்பதினால் இருக்கும் செல்வம் அழிந்து போவதில்லை. தர்மம் செய்கின்றபோது வருகின்ற துன்பமும் துயரமும் அல்லாஹ்வின் கருணையின் அறிகுறியாகும்.
* துர்பாக்கியமுள்ளவனிடமிருந்து இரக்க சிந்தனை அகற்றப்படுகின்றது.
- நபிகள் நாயகம்


 இடுகைகள்  பல ,
கணினி  பிறப்பிக்கிறது
வலைத்தளங்கள் மூலமாக.
இளைஞர்கள்  வலைத்தளம்,
இந்தியாவின்  எதிர்காலம் 
ஒளிமயமானது  என்பதற்கே 
ஒரு ஒளிச்சுடராக விளங்குகிறது.
அதில் வெளிநாட்டு வேதனைகள் ,
சஹிக்கும்  நாங்கள்,
மத வேற்றுமை மறக்கிறோம்.
மொழி வேற்றுமை  மறக்கிறோம்.
அழகுதேவதைகள் கண் முன் தோன்றினாலும்.
எண்களின் பார்வை,அவர்களின் மேல் 
படுவதில்லை. புலன் அடக்கம் கற்றுக்கொள்கிறோம் .
புலால் உண்பதில் சில சமயம் ஜாதி வேறுபாடு மறக்கிறோம்.
தம்பி,தங்கைகளுக்காக,அம்மாவிற்காக ,உற்றார் உறவினர்களுக்காக,
சிக்கனைத்தை  கடைபிடிக்கிறோம்.
தாய்நாட்டில்  இல்லா வேதனை இருந்தாலும் 
நாங்கள் இருக்குமிடத்தில்,
வையகம் வாழ்கிறது.
ஜாதி வேற்றுமைகள் இல்லை.
மொழி வேற்றுமைகள் இல்லை.
மத வேற்றுமைகள் இல்லை.
வசுதைவ குடும்பகம் என்ற நம் ஆன்றோர் 
கூற்று இங்கு மெய்யாகிறது,
இது ஒரு வெளிநாட்டு இளைஞரின் கவிதை.(surukkam)
வெளிநாட்டுப்பிரிவில் அவர் காணும் சுகம்.
பாரதநாடு பலம் பெரும் நாடாக  
இளையர்கள் கனவில் ஏற்படும் தடைகள் 
மத-இன-ஜாதிக் கலவரங்கள்.
மீண்டும் மீண்டும் ஒளிக்க  வேண்டிய 
அவ்வையின் பாடல்:
இட்டார் பெரியார் ;இடாதார் இழி குலத்தோர்.
பாரதியின் பாடல் 
ஜாதிகள் இல்லையடி பாப்பா.
ஆனால் இன்று ஜாதி என்ற பெயரில்.
3% விகித முள்ள ஜாதியைமட்டும் 
மிகக் கீழ்த்தரமாக தாக்கும் கூட்டம்.
இது பொறாமையா?இயலாமையா?
அந்தப்  பிரிவு இல்லை என்றால் 
சுபகாரியங்கள் யாரும் நடத்த 
ஒரு அச்சம்.
திதி கொடுக்க அந்த இனம் வேண்டும்.
புதிய தொழில் துவங்க 
கணபதி ஹோமம் வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற யாகங்கள் வேண்டும்.
ஹோமங்கள் வேண்டும்.
உண்மைகளை உதைக்க உதைக்க ,
ஆலயங்களில் கூட்டம் .
முன்னேற்றச் சிந்தனைகள் 
முன்னேறச் செய்யும்.
பாரதம் பார் புகழ  
இன வேற்றுமை ஒழிய வேண்டும்.
ஆனால்,
அரசியல்வாதிகள் 
தங்கள் சுய நலத்திற்கே 
ஜாதி வெறி, சமயவெறி தூண்டும் போக்கு.
இதே சத்திய வாக்கு.