வெள்ளி, நவம்பர் 18, 2011

use of can ,sak, mudiyum

use of can/sak/mudiyum. english/hindi/tamil

I can give 10 lakh rupees.=main das lakh rupye de sakta hoon.=ennaal  oru laksham roopaay kodukka mudiyum.
                     मैं दस लाख रूपये दे सकता हूँ.=என்னால்  பத்து லக்ஷம் ரூபாய் கொடுக்க முடியும். నేను   పది లక్షలు ఇవ్వగలను

2.you can walk now.=tum ab chal sakte ho.=unnaal ippoluthu nadakka mudiyum..
                                  तुम अब चल सकते हो.=உன்னால் இப்பொழுது நடக்கமுடியும்.నువ్వు ఇప్పుడు నడవగలవు

3 .He can run fast.=vah tez doud  sakta hai. avanaal vekamaaka oda mudium.

                                वह तेज़  दौड़ सकता है.=அவனால் வேகமாக ஓட முடியும் అతడు  ఇప్పుడు శీఘ్రముగా పరగేత్త గలడు

4.He (respect form )=avar=ve
   He can do this work=Avaraal intha velai seyya mudiyum.=Ve yah Kaam kar sakte hain.

அவரால்  இந்த வேலை செய்ய முடியும்.=वे यह काम करसकते हैं.

5.we can help you. engalaal unakku udhava mudiyum. ham aap kee  madad kar sakte hai.

 எங்களால் உனக்கு உதவ முடியும்.=हम आप की मदद कर सकते हैं.

inraiya aanmeekam

இன்றைய ஆன்மிகம்
இன்றைய  ஆன்மிகம் வளர்ந்த நிலையில் காணப்பட்டாலும்  பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் காணப்பட்டாலும் அது ஒரு போலியாகவே
உணரப்படுகிறது.ஆன்மீகத்திற்கு ஆதாரம் அன்பு,பற்றற்ற தன்மை, எளிமை,ஆடம்பரம் இன்மை போன்றவை .எளிய குடிலில்தான்  எளிய ஆடையில் தான் ஆன்மீகத்தொடக்கம் இருந்தது.  இன்றைய ஆஸ்ரமங்களுக்குள் பணம்  படைத்தவர்களே அருளாசி பெற ,அந்தரங்க பூசை என்று தனிக்கட்டணம் பெற்று அனுமதிக்கப்படுகின்றனர்.ஆன்மிகம் மட்டுமே இன்றி மழலைப்பள்ளி முதல் மருத்துவக்கல்லூரி  வரை என்று பணம் pபொன் விளையும் ஆதார ஸ்தலம் ஆக்கப்பட்டுள்ளன.
  புத்தர்,  சங்கரர், மகாவீர,ராமானுஜர், சுவாமி  ரமணர்,ராமகிருஷ்ண  பரமஹன்சர்,போன்றோர் அச்சமின்றி வாழ்ந்தனர்.இன்றைய சூழலில் துப்பாக்கியும் ,மிக்க வலிமை மிக்கவர்கள் காவலில் ,பெரும் மதில் சுவருடன்
கறுப்புப் பணம் மிக்க கிடங்குகளாக காட்சி அளிக்கின்றன ஆஸ்ரமங்கள்.
.பல ரகஸ்யங்கள் மறைக்கப்படும் இடமாக விளங்குகின்றன.
இறைவன் முழு அருள் பெற உண்மை நேர்மை,ஒரு மன தியானம் ஒன்றே போதும்.ஆழமான த்யானம்  தான்  முஹம்மது   நபியையும் ஏசுநாதரையும் இறைத்தூதர்களாக்கியது.
பாரதத்தில் சங்கரர்,இராமானுஜர்,மத்வாச்சாரியார் புத்தர் மகாவீரர் ஷீரடி சாய் பாபா, ராகவேந்திரர் போன்றோர் மகான்களாக   தெய்வமாக   போற்றப்படுகின்றனர்.  ,
  பக்த   துருவன் இறைவனைக்கண்டான்.பக்த பிரகலாதன்     தன்  வலிமை அதிகாரமிக்க  கடவுள் வரம் பெற்ற  தந்தையை எதிர்த்து பக்தியின் மகிமையை உணர வைத்தான்.
பகுதறிவுப்பிரசார பாரதத்தில் சாமியார்களிடம் ஏமாறுவோர் ஏராளம்.அதற்காக பல கவிகள்  பக்தியின் ஆழமான தன்மையை விளக்கியுள்ளனர்.
கீதை உபதேசித்த நாட்டில் ,    ஏகபோக அதிபதிகளாக சாமியார்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருப்பதும் ஏமாற்றுபவர்களாக இருப்பதும்
மக்களின் ஆழமான பக்தி இல்லாமை, ஆடம்பர பகட்டான போலி பக்தியை  காட்டுகிறது.
மக்கள் மனதில் இறைநாமமே போதும் துன்பங்களிலிருந்து விடுபட.
பரிகாரம் செய்தால் பாவமன்னிப்பு என்றால் நீதி சாகடிக்கப்படும்.

தாங்கள் விரும்பும் இறை நாமத்தை
உச்சரியுங்கள்.பலன் கிடைக்கும்.
பரிகாரங்கள் பின்னால் சென்று பலியாகாதீர்கள்.
அல்லாவின் பக்தர்கள் அல்லா!அல்லா!என்று தொழுங்கள் எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
ஏசுவின் நாமம் ஜெபியுங்கள் இன்பங்களைப்பெருங்கள்.

இந்துக்கள் ராமா,முருகா,சிவா,துர்கா,
விநாயகா,கிருஷ்ணா, என்று இஷ்ட குல கிராம தேவதை களை நாம ஜபம்
செய்யுங்கள்.இறைவழி பாட்டில்
ஞானத்தைப் பயன்படுத்துங்கள்.
அன்பு, நேர்மையைப்பயன் படுத்துங்கள்;
 குறுக்கு வழியில் குறுகிய மனதுடன்,
குற்ற உணர்வுடன் பொன் பணத்தால்,
இறைவனருள் இந்த ஜன்மத்திலும் எந்த ஜன்மத்திலும் கிட்டாது .உண்மையான நாம ஜெபமே
 பரிகாரம்.

advise for +2

+௨ (2) மாணவர்களுக்கு   அறிவுரைகள்
அன்பும் ஆற்றலும் உள்ள மாணவச் செல்வங்களே,
பாரதப் பெருநாட்டை பார் புகழைச் செய்ய,
தோன்றிய நாட்டின் எதிர்கால,சந்திர சூர்யர்களே,விண்மீன்களே,
அன்பும் பண்பும் அறிவும் ஆற்றளுமுள்ள,ஆளுமைத்திறன் உள்ளோரே,
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள்,
உங்கள் எதிர்கால உயர்விற்கான அடிக்கற்கள்!
உயர்ந்த கோபுரம் போன்ற
உங்கள் வாழ்க்கைக்கு -அதுவே
கைகொடுக்கும்  கைகாட்டி.
உங்களை ஏற்றம் பெறச்
 செய்யும் ஏணிப்படிகள்.
தேர்விற்காக  ஐயம் நீங்கிடப் படியுங்கள்.
ஒரு முகமான மனதுடன் ஓய்வின்றி படியுங்கள்.
படிப்பு பாரினில் உங்களுக்கு,
நல்லதோர் பிடிப்பை ஏற்படுத்தும்.
பிற்கால வாழ்க்கையைப் பிரகாஷமாக்கும்.
பீடு நடை போடச்செய்யும்.
பெரும் செல்வங்களை, அருட் செல்வங்களை
அரிய மன விருப்பங்களை
 ஈடேற்றி வைக்கும்.
பேறுகள் பதினாறையும் ஈன்ற வைக்கும்.
போற்றுவர் சுற்றத்தார்,
பெருமை படும் கல்வியகம்.
இன்னும் மூன்று திங்கள்களே,
இனிய ஈடற்ற    உயர்கல்வி  உங்களை
  கூவி   அழைக்க,
உங்கள் "பிற ,வீண்  சிந்தனைகள்,
அரட்டைகள்,தொலைகாட்சி
தொல்லைகள்,"  அகற்றி,
உள்ளத்தில் ஊக்கமும்
ஆர்வமும் கொண்டு,மனதை
ஒருமுகப்படுத்தி,
தேர்வை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு,
கருமமே கண்ணாயிரமாக
கருத்தாழத்துடன்  படியுங்கள்
கடவுளின் அருட்பார்வை
ஆசிகளாக அமையட்டும்.
அகவை மிக்க என் வாழ்த்துக்கள்,



 ,


வியாழன், நவம்பர் 17, 2011

soolnilaikketra manitha gunam

சூழ்நிலை : மனித குணமும் மாற்றமும்.


மனிதன் ஆறறிவு பெற்றிருந்தாலும் அவனின் சூழ்நிலை நட்பு மிருகமாகவோ தெய்வமாகவோ மாற்றுகிறது. மனிதனைத் தனிமைப்படுத்தினால் அவனால் பேச முடியுமா? என்ற ஆய்வில் பேரரசர் அக்பர்   .தனியாக     தனி மனிதனை சிறையில் அடைத்து வைத்தார்.அவன் பேசமுடியாத நிலையில் தள்ளப்பட்டான்.ஆனால் ரொட்டி என்ற சொல்லை மட்டும்  அவன் பேசினான். காரணம் உணவு கொண்டு சென்றவன் அந்த ஒரே சொல்லைப் பயன் படுத்தி உள்ளான்.மனிதன் பேச்சா ஆற்றல்  பெற   பேசும் சூழல் அவசியம் என நிரூபணம் ஆகியது.
        மனிதன் தன் முயற்சியால் பூனையையும் கிளியையும் பேசவும் பாடவும் வைத்துள்ளான்.மண்டன மிஸ்ரர் ஆஷ்ரமத்துக்கிளிகள் வேதங்கள் வோதின .
திருடன் வளர்த்த கிளி வசை பாடியது.சத்சங்கம் இல்லை என்றால் மனித எண்ணங்கள் விகாரமடையும்.அவன் ஆறாம் அறிவு நல்ல சூழலில் நல்லவனாகவும் தீய சூழலில் தீயவனாகவும் மாற்றுகிறது.அவனது அறிவாற்றல் சில நேரங்களில் அவனுக்கு நிகர் அவனே என்ற ஆணவத்தை ஏற்படுத்து கிறது. பல வெற்றிக்கனியை குவிக்கும் அவனுக்குஅவன் மமதையை அடக்க அவனுக்கு மேலான சக்தி  அவனை அழித்துவிடுகிறது.அவனது அறிவு  பயனற்றதாக நிரூபிக்க அவனால் வெல்ல முடியாத இயற்கை ,அவனது ஆற்றலை செயலற்றதாக்குகிறது.
 தமிழகத்தில் நிலங்களை நான்காக பிரித்து அந்நிலை அமைப்பின் காரணமாக அந்நில மக்களின் பண்புகளையும் வகுத்துள்ளனர்.
   குறிஞ்சி நில மக்கள்   தேன் எடுத்து ,கிழங்கு தோண்டி வாழ்ந்தனர். முல்லை நில மக்கள் பசுக்கூட்டங்களை மேய்த்து வாழ்ந்தனர்.மருத நில மக்கள் நாகரிகம் பெற்று  விவசாயம்  செய்து வாழ்ந்தனர். நெய்தல் நில மக்கள் கடலில் படகு செலுத்தி மீன் பிடித்து உப்பு காய்ச்சி வாழ்ந்தனர்.நிலமற்ற பாலை நில மக்கள் ,கொலை ,கொள்ளை போன்ற செயல்களைச்  செய்து வாழ்ந்தனர்.அவர்  அவர்  சார்ந்த நிலங்களுக்கேற்ற  குணநலன்களோடு வாழ்ந்தனர்.



(tamil)education for human excellence

மனிதன் சிறப்பிற்கு கல்வி.

 "மனிதன்" என்ற சொல்  மற்ற விலங்குகளுக்கு ஒப்பானது."மனிதன்"என்ற சொல் ஆதிவாசி மனிதனையும் குறிக்கும்.கல்வி அறிவற்ற மனிதனையும் குறிக்கும்.கல்வியில் சிறந்தவர்களையும் ,மகான்களையும் ,ஆன்மிகவாதிகளையும்,அவதார புருஷர்களையும்,குறிக்கும்.மண்-மனிதன்,Human  =மனிதனுக்குரிய என்ற சிந்தனையால் தான் "மனிதனை மனிதனாக்கும் கல்வி, என்ற கருத்து உருவானது.அதைப்பற்றி சிந்தனைகள் ,கருத்தரங்கங்கள் ,ஆய்வுக்கட்டுரைகள் ,
எழத்தொடங்கி ஏற்றமடைந்த மனநிறைவின்றி அலைகள் ஓய்வில்லாமல்
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன.

மனிதனை மாமனிதனாக ஆக்கவும் ,மெருகூட்டவும்,மேதை ஆக்கவும்,மையலில் காக்கவும்,மொய்ம்புடையவனாக்கவும்,(வலிமை)

மோக்ஷமடையவும்,மௌனமாக இருக்கவும் கல்வி உதவுகிறது.


இத்தகைய கல்வியை எப்படி வழங்குவது?மனிதனை எவ்வாறு மனிதனாக்குவது?மனிதத் தன்மையை,எவ்வாறு முற்றிலுமாக உணரச்செய்வது/?அவனை வீட்டிற்கும் ,நாட்டிற்கும்,சமுதாயத்திற்கும்,மனித இனத்திற்கும் ,பூவுலகிற்கும்,நன்மை தரத் தக்கவனாக,பயனுள்ளவனாக,உருவாக்குவது?என்ற வினாக்கள் இந்த அறிவியல் காலத்திலும் ,கவிஞர்களாலும் ,சித்தர் களாலும்,அனுபவ பூர்வமாகக்
 அறிவுறுத்தப்பட்டு  முடிவின்றி சென்றுகொண்டே இருக்கின்றன.

காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்தால் பல புதிர்களுக்கு விடைகள் புலப்படும்.சமுதாய அமைப்பின் படி ,தட்ப வெப்ப நிலையின் படி ,நாட்டின் இயற்கை  வளங்களுக்கு ஏற்றவாறு முன்னேற்றம் ,பின்னேற்றம் ,அமைதியான எண்ணங்கள் ,அஹிம்சை,உண்மை,ஆன்மிகம் ஆகியன மிளிர்கின்றன.
  "கல்வி" என்பது மனிதனை மனிதனாக்குகிறது.அவன் காட்டிலேயே மற்ற விலங்குகளுடன் வாழ்ந்தால் அவனுக்கும் விலங்குக்கும் வேறுபாடு இருக்காது. அவனுக்கு  மொழி தெரியாது.அவன் தன் மன உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது.இறையாண்மை பற்றிய சிந்தனைகள் வராது.உணவுப்பண்டங்களை பக்குவப்படுத்தி வேகவைத்து உண்ணத் தெரியாது.அவனை நெறிப்படுத்த ,குணசீலனாக்க  நீதிநெறியுடன்  கூடிய உயர்
கல்வி அவசியமாகிறது.

sakala varam tharum Sairaam manthiramசாய் ராம் மந்திரம்



சகலவரம் தரும் சாய் ராம் மந்திரம்
"சாய்ராம்" சாய் ராம்" மந்திரம்,
சகல சந்தோசம் தரும் ,
சாய் ராம் சாய்ராம்

அறத்தை வளர்க்கும் மந்திரம்,
சீரடி சாய் மந்திரம்.
அறிவை வளர்க்கும் மந்திரம்,
அமைதி தரும் மந்திரம்.
ஆன்மிகம் வளர்க்கும் மந்திரம்,
ஆன்றோனாக்கும் மந்திரம்,
ஆற்றல் தரும் மந்திரம்,
இன்னல் தீர்க்கும் மந்திரம்,
இன்பம் தரும் மந்திரம்.

இன்மையில் நன்மை தரும் ,
சாய் ராம் சாய் ராம் மந்திரம்.
ஈஸ்வரன் அருள் தரும்,
மந்திரம்
 சாய் ராம் சாய்ராம் .
ஈகைக் குணம் தரும் ,
எங்கும் ஒலிக்கும் ,
மந்திரம்
 சாய் ராம் சாய்ராம்.
எல்லா நன்மைகளும் தரும் .
எளிய மந்திரம்,
ஏற்றம் தரும் ,
மந்திரம்
சாய்ராம் சாய்ராம் .
சாய்ராம் சாய்ராம் மந்திரம்,
சாஸ்வத சுகமளிக்கும்,
சங்கடங்களைத் தீர்க்கும்
மந்திரம் சாய்ராம் சாய்ராம்.
ஜகத் உத்தாரண,
ஜகாத் ரக்ஷக,
ஜகம் புகழும்
மந்திரம்
சாய் ராம் சாய்ராம்.
அகங்காரம் அழிக்கும்,
ஆரோக்கியம் அளிக்கும்,
ஆத்மா சுகம் அளிக்கும்,
மந்திரம்
சாய்ராம், சாய்ராம்.
சாய் ராம் சாய்ராம்  சாய்ராம்
அகிலம் காக்கும் மந்திரம்.
மனச்
சாந்தி தரும் மந்திரம்.
சாய் ராம் சாய் ராம் சாய்ராம்.
+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*+*
  



புதன், நவம்பர் 16, 2011

kavi poyyaa moli

कवि पोय्यामोली  கவி பொய்யாமொழி

तमिल  संसार की प्राचीनतम भाषाओं में एक है.संसार में मेरी जानकारी के अनुसार तमिल भाषा के लोग अर्थात  मेरी मात्रुभाषा  में प्रेयसी को खुश करने के लिए  कहते है कि तू तमिल जैसी मधुर हो. तमिल की दूसरी विशेषता है कि  संस्कृत के सामान तमिल कवियों ने ईश्वर से वरदान पाकर कविता या  काव्यों की रचना की है.

अरुनागिरिनाथर  को भगवान कार्तिकेय  ने  रक्षा की है.  उनसे वरदान पाकर  कंदर अनुभूति और तिरुप्पुकल
की रचना की है. आंडाल विष्णु भक्ता है. उन्होंने तिरुप्पावे नामक कीर्तन अपने इष्ट देव को पति मानकर रचना की है.
नक्कीरर नामक कवि ने महादेव के सामने तर्क की कि  तिरिनेत्र दिखाने पर भी आप की गलती गलती ही है.ऐसे निडर कवियों की संख्या तमिल में अधिक  हैं.   पोय्यामोली नामक एक भक्त कवि थे.नाम का अर्थ ही झूठ न बोलनेवाला.
वास्तव में पोय्यामोली काली  माँ के भक्त थे.उनको भगवान कार्तिक ने खुद शिक्षा देकर अपना भक्त बनायाथा.
वह रोचक कहानी पढ़िए.:-
           एक बार पोय्यामोली रूपये की थैली लेकर घने जंगल में जा रहे थे.  तब कार्तिकेय ने  चोर के वेश में  उनको डराया था.कवि डर गए. खूब उनको डराने के बाद कहा--"तू अंडे के बारे में एक कविता सुनाओ. मैं  छोड़
दूंगा. कवि ने अपने को बचा लेने के लिए अंडे की तारीफ़ में कविता रचकर सुनायी.तब कार्तिक अपने असली रूप में प्रकट होकर पूछा---तू तो माँ काली के भक्त हो.तूने कहा कि मैं छोटा बच्चा हूँ.मेरी तारीफ़ नहीं करोगे.लेकिन आज अंडे के बारे में गाया है.यह तो मुझसे छोटा है.

कवि को अपनी भूल का पता लगा.उन्होंने भगवान कार्तिक के चरणों पर गिरकर  क्षमा याचना की.तब से मुरुग भक्त अर्थात भगवान कार्तिक का भक्त  बन गए  और उन्होंने  उनके यशोगान करने लगे.
इस कहानी की सीख   है  कि ईश्वर बड़े है. मनुष्य अपनी विपत्ति में जो चाहे,अपने को बचाने के लिए कर सकता है.
लेकिन  भगवान की उपेक्षा न करके अपने इष्ट देवी की प्रार्थना में  मन  लगाने में  ही   कल्याण  है.


USE OF "KAR" IN hINDI //"VITTU" IN TAMIL

""
use of  ""' KAR"""hindi word


kar   MEANS  DO.,TAX,HAND

WHEN" KAR" IS ADDED AS A SUFFIX WITH  A VERB  ITS MEANING IS AFTER. IN TAMIL VITTU" SUFFIX  ADDED WITH VERB  MEANS AFTER.

SEE EXAMPLE:

1.I WIIL GO AFTER MEETING MY FRIEND.
= (TAMIL)=
NAAN EN NANBANAI SANDITHTHUVITTU POVEN.
நான் என் நண்பனை சந்தித்துவிட்டு போவேன்

ஹிந்தி HINDI

मैं अपने दोस्त से मिलकर जाऊंगा.
MAIN APNE DOST SE MILKAR JAAOONGAA.

2.I WILL READ BOOK AFTER READING THE NEWS PAPER.
நான் செய்தித்தாள் படித்த பிறகு புத்தகம் படிப்பேன்.
NAAN SEYTHTHITHAAL PADITHTHA PIRAKU PUTHTHAKAM PADIPPEN.
मैं समाचार -पत्र पढ़कर किताब पढूँगा.
MAIN SAMAACHAAR PATR PADHKAR KITAAB PADHOONGAA.

3.HE  CAME HERE AFTER STAYING FOR TWO DAYS IN THE VILLAGE.
 
அவன்  இரண்டு நாட்கள்  கிராமத்தில் தங்கிவிட்டு வந்தான்.
AVAN  IRANDU NAATKAL GIRAAMATHTHIL THANGIVITTU VANTHAAN.
वह दो दिन गांव में ठहरकर आया.
VAH DO DIN GAAMV MEIN THAHARKAR AAYAA.

4.WHAT WILL YOU DO AFTER  PASSING THE EXAMINATION.

.நீ தேர்வில் தேர்ச்சி செய்துவிட்டு என்ன செய்வாய்?

NEE THERVIL THERCHI SEYTHUVITTU ENNA SEVAAY.
तुम परीक्षा में उत्तीर्ण होकर क्या करोगे?

5.ON GETTING YOUR GIFT WE WERE HAPPY.
TUMHAARAA//AAPKAA  INAAM PAAKAR HUM KHUSH HUYE.
तुम्हारा//आपका  इनाम पाकर हम खुश हुए.
T
TUMHAARA/AAPKA PURASKAAR PAAKAR HAM KHUSH HUYE.

6.THE CHILDREN SLEPT AFTER DRINKING MILK.

BACHCHE DOODH PEEKAR SO GAYE,
बच्चे दूध पीकर सो गए.

குழந்தைகள் பால் குடித்துவிட்டு தூங்கி விட்டன.
KULANTHAIKAL PAAL KUDITHTHUVITTU THOONGIVITTANA,

7.WHEN DID THEY GET UP AFTER SLEEPING.
அவர்கள் தூங்கிவிட்டு எப்பொழுது இருந்தனர்.
AVARKAL THOONGIVITTU EPPOLUTHU ELUNTHANAR,
वे कब सोकर उठे,
VE KAB SOKAR UTHE.

8. AFTER RECEIVING  MY LETTER HE IMMEDIATELY  REPLIED.
मेरे पत्र पाकर  उसने   तुरंत जवाब दिया.
MERE PATR PAAKAR  USNE TURANT JAVAAB DIYAA.
என்னுடைய கடிதம் பெற்றதும் அவன் உடனே பதில் அளித்தான்.
ENNUDAIYA KADITHAM PETRATHUM AVAN  UDANE PATHIL ALITHTHAAN.

9.WE  WILL COME AFTER TAKING A BATH,
நாங்கள் குளித்து விட்டு வருவோம்.
NAANGAL KULITHTHUVITTU VARUVOM.
हम नहाकर आयेंगे,
HAM  NAHAAKAR AAYENGE,
10. THE COWS WILL COME AFTER GRAZING.

गायें चरकर आयेंगी.
GAAYEN CHARKAR AAYENGI.
பசுக்கள் மேய்ந்து விட்டு வரும்.
PASUKKAL MEYNTHU VITTU VARUM.

**************************









.

hindi/tamil/ english present continious tense

 1.  I am speaking with my friend.=naan en nanbanudan pesikkondirukkiren.=நான் என்  நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.
मैं अपने दोस्त से बोल रहा हूँ./बोल रही हूँ.   ====  main apne dost se bol rahaa hoon.//bol rahee hoon.

   2.He is talking with his friend,=avan than nanbanudan pesikkondirukkiraan.அவன் தன் நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறான்.

  vah apne dosi se bol rahaa है,==वह अपने दोस्त से बोल रहा है./बोल रही है.

3,She  is stitching the cloth.==aval thuni thaiththukkondirukkiraal.=அவள் துணி தைத்துக்கொண்டிருக்கிறாள்.
वह कपडे सी रही है.=vah kapde see rahee hai./सी रही है.

4.you are writing a story.==நீ கதை எழுதிக்கொண்டிருக்கிறாய்.=nee kathai eluthikkondirukkiraay.
 वह पत्र लिख रहा है.=vah patra likh rahaa hai./लिख रही है.

5.we are helping others.=naangal matravarkalukku udavi seithu kodirukkirom. =நாங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம்.
  हम दूसरों की मदद कर रहे हैं  =ham doosron kee madad kar rahe hain./कर रहीं है.

meygyana maargam

மெய்யறிவு பெற ஆண்டவன் அருளட்டும்.

மனிதர்கள் தனை படைத்தவன் ஒருவன் மிக சக்தி வாய்ந்தவன் எங்கோ இருந்து ஆட்டிபடைக்கிறான் என்பதை உறுதியாக எண்ணி தான் ஆற்றும் ஒவ்வொரு செயலும் அவனால் தான் என்பதில் முழு நம்பிக்கை கொள்ளவேண்டும்.
அது எப்படி?மனிதனுக்குள் தெய்வம் இருக்கிறார் .நானே கடவுள் என்ற ஒரு கொள்கை கோட்பாடு உள்ளதே.இறைவனுக்கு வுயிர் ஊட்டுவதே மனிதன் தானே.
வைரக்க்ரீடமும்   வைர அங்கியும் சாத்தி மகிழ்பவன் மனிதன் தானே .
.மனிதனுக்குள் இருக்கும் ஆற்றல் தானே, இந்நில உலகில் மனிதனுக்கு அனைத்து அறிவியல் ரீதியான வசதிகளும் வாய்ப்புகளும். மனிதன் கண்டுபிடித்தது தானே.உண்மைதான்.ஆனால் அனைத்து வசதிகளையும் உலகில் பிறந்த அனைவர்களும் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார்கள என்பதே கேள்வி,
நான் ஒரு இதய அறிவியல் நிபுணரை சந்தித்தேன்.அவரது மனைவியும் புகழ் பெற்ற மருத்துவர்.அவருக்கு வருமானம் என்பது இயற்கையிலேயே வருகிறது.
அவர் பணத்தட்டுப்பாடு என புலம்பினார்.அவர் தன் சமுதாய அந்தஸ்த்திற்காக
பெரிய வீடும் நவீன வசதிகளும் நோய் அறியும் கருவிகள் என கோடிக்கணக்கில் முதலீடு   செய்துள்ளார்.அனைத்தும் தவணை முறைக்கடன். மனைவி,மகன், தனக்கு என மூன்று விலை உயர்ந்த சிற்றுந்து வாங்கியுள்ளார்.மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல வர என  ஒரு வோட்டுனரையும் நியமித்துள்ளார்.கணவன் மனைவி இருவரும் தான் பெற்ற திறமையின் காரணமாக மிகப்பெரிய சமுதாயத் தொண்டு ஆற்றுகின்றனர்.
வீட்டில் குளிர் சாதனங்கள், நவீன தொலைக்காட்சி பேட்டிகள்,வளர்ப்பு நாய்கள் என குறை இல்லை.அனைத்தும் இருந்தும் நேரத்திற்கு மன நிறைவுடன் அமர்ந்து பேசவோ உணவு உண்ணவோ முடியவில்லை.ஏழைகளுக்கு இலவச சிகிச்சை என்பதை கொள்கையாக ஆரம்பித்த மருத்துவ தொழில் அதை மறந்தே விட்டது.ஒவ்வொரு மாதமும் லக்ஷக்கணக்கில் குறிப்பிட்ட நாளுக்குள் தவணை செலுத்த வேண்டும். மருத்துவ மனை ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்தவேண்டும்.எங்கே நிம்மதி. இதில் ஒன்று குறைந்தாலும் நெருக்கடிதான்.சேவை  மனப்பான்மை தேவையால் தேய்ந்து மறந்து போனது.

இந்நிலையில் தான் அறிவியல் யுகம்  தள்ளப்படுகிறது.இவ்வுலக வாழ்வியல் இன்பத்திற்காக துன்பத்தை இன்பமாக கருதும் உலகியல் மன இயலாக மாறிவருகிறது,
இந்த உலகியல் நவீன சுகங்களை வசதிகளை அறியாதவர்கள் பல்லாயிரம்
 கோடி.அனுபவிக்காதவர்கள் பல்லாயிரம் கோடி.

இந்த அமைப்பு முறைக்கு ஒரு புலப்படாத சக்தி உள்ளது என்பதை சிந்திக்காமல் இருக்க முடியுமா? அதுதான் இறை சக்தி.இந்த உண்மையை
மூட நம்பிக்கையாகவும் குருட்டு நம்பிக்கையாகவும் ஏற்படுத்தி மக்களை சுரண்டும் கூட்டம் தயாராகி அங்கங்கே ஆலயங்கள் ஏற்படுத்தி வருகிறது.
இதற்காகத்தான் கபீர் பக்தியில்  ஞான மார்கத்தை ஏற்படுத்தினார்.

இந்த ஆலயங்களின் முதலீடுகள் இலவச கல்வி சாலைகளாகவும் மருத்துவ மனைகளாகவும் மாறி தங்க  மயமாக இல்லாமல் சேவை இல்லங்களாக மாற இறவன் தான் ஞானம் தரவேண்டும்.ஆலையம் தோறும் பள்ளி சாலைகள் அமைப்போம் என்றார் மஹாகவி முன்டாசுக்கவிஞர்.