தேசீய கீதம் வங்க மொழி. எழுதியவர் வங்காளி.
இரவீந்திரநாத் தாகூர்.
தேசீயப்பாடல்
சம்ஸ்க்ருதம்..
வங்காள தாய்மொழி கொண்ட
பங்கிம்சந்திர சாட்டர்ஜீ.
பாரதத்தின் தொடர்பு மொழி
ஆங்கிலேயர் ஆட்சி வரை சம்ஸ்க்ருதம்.
தமிழ் ஐம்பெருங்காப்பியங்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள்
புத்த சமண மதத்தின் காவியங்கள்.
பல சமணத் துறவிகள் எழுதியவை நீதிநூல்கள்.
நாலடியார்
சிறுபஞ்சமூலம்
திரிகடுகம்
திருக்குறள் ஆகியவை.
சம்ஸ்க்ருத தொடர்பு மொழியால் தான்
பாரதத்தின் அனைத்து மொழிகளிலும் இராமாயணம் மஹாபாரதம் பகவத்கீதை இலக்கியங்கள்.
வேதங்கள் உபநிஷத்துக்கள்
மக்களுக்கு வாழ்க்கை நெறாமுறைகளைக்கூறி
புலன் அடக்கம் ஒழுக்கம்
பரோபகாரம் தியாகம் தான் தர்மங்கள் மனித நேயம் கற்பிப்பவை.
பைபிள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தால்
அதை எளிதாக புரிய முடிகிறது.
அதை ஆங்கிலேயர்கள்
அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து மனித சேவைக்கு முதலிடம் கொடுத்தனர் ஈ
மருத்துவமனைக்குச் சென்று நோய் குணமடைய மண்டியிட்டு
பிரார்த்தனைகள் செய்தனர்.
அனைவரும் பயில கல்வி நிறுவனங்கள் நிறுவின.
ஆனால் மக்களை எழுத்தர் வக்கீல் ஆக்கினர்.
ஆங்கில உடை உடுக்க வைத்தனர்.
வேலை வாய்ப்பு அறிவு மேதாவிகள் பணம் படைத்தவர்கள் தாய்மொழி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மறந்து ஆங்கிலம் படித்தால் வேலை என்றும் ஆங்கிலம் பேசினால் தான் மேதை என்ற நிலைக்கும் பணம் தான் வாழ்க்கை என்று
குலத்தொழில் சிறந்த இந்தியர்களை தொழில் செய்ய விடாமல் எழுத்தர்கள் ஆக்கி
ஆங்கில மொழி ஆங்கில ஆட்சிக்கு அடிமை யாக்கினர்.
விளைவு படித்தவர்கள் அனைவரும் தங்கள் தொழில் மறந்து மாத ஊதியம் பெற அரசாங்க வேலை நகர வாழ்க்கை என்று புறப்பட்டனர்.
தமிழகத்தில் ஜஸ்டிஸ் பார்ட்டி திராவிட கழகம் பாரத சுதந்திரத்தை விரும்பவில்லை.
தனித் தமிழ்நாடு தமிழ் தமிழ் என்று பல இளைஞர்கள் உயிர் துறக்க காரணமாக இருந்தனர்.
தமிழ் அழிந்தாலும் பரவாயில்லை என திராவிட முன்னேற்றக் கழகம் பணம் தரும் ஆங்கிலப் பள்ளிகளை திறக்க தனியாருக்கு அனுமதி அளித்தனர்
ஆங்கில உடை டை சூ பேட்ஜ் புத்தகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதுடன் கல்வி பணக்காரக் கல்வியாக்கி மாணவர்கள் தமிழ் வழி அரசுப்பள்ளி மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தினர்.
ஒழுக்கமற்ற கல்வி தமிழ்த்தாய் வாழ்த்து ஹிந்தி ஒழிக என்று தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்து
வடமொழி அந்தணர் எதிர்ப்பு என்று அறுபதாண்டுகள் ஆட்சி,.
இதற்குக் காரணம் இந்திரா காந்தி . பஞ்சாப் வங்காளம் தமிழகம் என் மாநிலக் கட்சிகளை வளர்த்தது.
அதன் பலன் இந்திரா ராஜீவ் படுகொலை.
இன்று விஜயின் வெற்றிக் கழகம் காங்கிரஸ் எம்எல்ஏக்களை அமைச்சர் ஆக்கியது தேசீயம் காக்க.
மாநிலம் காக்க.
தமிழகம் என்ற குறுகிய வட்டத்தை தேசீயத்துடன் மாநில வளர்ச்சி என்ற விழிப்புணர்வு.
தேசீயப் பாடல்
தேசீய கீதம்
தமிழ்த்தாய் வாழ்த்து
இதுதான் தமிழ் வளர்ச்சி.
ஒரு தமிழ் பள்ளி மூடி பதினைந்து ஆங்கிலப்பள்ளிகள் திறப்பது
ஆங்கில வழி இல்லை என்றால் அரசுப் பள்ளிகள் மூடப்படும் என்ற நிலை ஏற்படுத்தியது.
தமிழர்களை தமிழ் நாட்டில் வேலை செய்ய விடாமல்
வட இந்தியத் தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழில் முடக்கம் என்ற நிலையில் தள்ளியது.
இன்றைய விஜயின் வெற்றிக் கழகம் தேசீய கீதம் தேசீயக் பாடல் தமிழ்த் தாய் வாழ்த்து என்ற பரந்த சிந்தனை ஏற்படுத்தியது.
மக்கள் விழித்துக் கொண்டார்கள்.
தமிழகம் மட்டும் தான் தேசீயப்பாடல் எதிர்ப்பு.
அந்த நிலை மாற்றிய விஜய் அவரது வெற்றிக் கழகம்
வாழ்க வளர்க.
பழனி சே. அனந்த கிருஷ்ணன்
சென்னை. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல் நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக