ஞாயிறு, ஜனவரி 12, 2014


THE SPRITUAL PEOPLE ARE STRICT IN OLD THINGS. THEY NEVER LIKE NEW FLOOD. WHY?


AATMMATHAN MEANS SOUL-CHURNING THAT IS CONTEMPLTION. IN THE BEGINING HOW A CHARM CREATED?


REALLY GOD? REALLY A DEVOTTE?BUT WE DON'T KNOW.BUT EVERY RELIGION ACCEPTS THE MESSAGE GIVEN BY GOD IS COLLECTED AND COMPOSED BY THE MESSENGER OF GOD.MOHAAMAD GOT MESSAGE IN HEERA MOUNTAIN CAVE. THE HIDU'S ARE TEELLING GOD DIRECTLY APPEARS AND WRITING AND INSPIRING THE POETS. KALI WROTE FIRST WORD IN KALIDAS'STONGUE. BUT AAL RELIGIOUS HOLY BOOKS ARE HAVING SOME DIVINE POWER. WHEN WE READ IT GIVE PEACE TO OUR MIND. WHY WE ARE NOT FOLLOWING STRICTLY TO CHANT. OR READING SLOKAS,VEDAS,BIBLE,KURAN DEEPLY.BECAUSE WE WANT TO GET GAIN OR FRUIT IMMEDIATELY. TATKAAL. IS IT POSSIBLE. TAKING THIS AS A ADVAANTAGE THERE ARE GROUPS WHO ARE SELFISH CHEATIN THE COMMON MAN ,DIVIDING THE PEOPLE ,THEY ARE CREATING ENEMITY IN THESE HOLY BOOKS. BUT ALL RELIGION'S PURPOSE IS TO ESTABLISH PEACE IN THE WORLD;SPREAD LOVE AMONG MEN AND WOMEN. FOR THIS GREAT PURPOSE AATMAMANTHAN I.E.,SELF-CHURNING I.E., CONTEMPLATION IS COPULSARY FOR EACH AND EVERY HUMANBEINGS.EVERY ONE IS PROPHET.PROHIT.OR RELIGIOUS HEAD.


FOR THIS MAXIMUN HALF AN HOUR IS ENOUGH. SELF ASSESMENT YOU CAN DO WITH IN 5 MINUTES.

செவ்வாய், டிசம்பர் 31, 2013

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


அவனி முழுதும் ஆங்கிலப் புத்தாண்டு
ஆனந்தமாக ,பூஜை பஜனையுடன்
வரவேற்கும் நாம் , வளம் பெறுகிறோம்
பொருளாதார ரீதியில்.
ஆங்கிலமின்றி அவனியில் வாழ ,
வழியில்லை வேறு.
நட் என்றும்,போல்ட் என்றும்
பிட் என்றும் பிகர் என்றும்
டிரெஸ் என்றும் ரோடு என்றும்
நடு சென்டர் என்றும் ஷாப் கடை என்றும்
டைம் என்று பேசியே தனிதமிழ் இயக்கம்
வளர்ந்த நாட்டில் வொய் திஸ் கொலைவெறி
ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்.
இப்படியே வளம் பெற்றாலும்
அரைகுறை ஆடை,ஆட்டம் ,போதை
நடு ரோட்டில் ஆட்டம்,முத்தம் ஆலிங்கனம்
என்ற அநாகரீகம் ,பண்பற்ற ,ஒழுக்கமற்ற செயல்
தவிர்த்தால் விலங்கிலிருந்து வேறுபடுவோம்.
ஆங்கிலம் அறிவைத்தந்து ஆற்றலைத்தந்து ஆஸ்தியைத்தந்து
அவனை சுருக்கி இனவெறி ,மதவெறி,அனைவருக்கும் கல்வி என்று
உணர்த்தினாலும் பெற்றோரை மதியாமை,அமைதியற்ற குடும்பவாழ்க்கை ,ஒருவர் மற்றவரை மதியாமை
விவாகரத்து,தற்கொலை என்ற படித்து பட்டம் பெற்றாலும்
பண்பற்ற செயல்கள் அங்கெங்கு தலை தூக்குவதால்
தாய்மொழி அறிவுரை நட்சத்திரம் மினுமினுக்குதே என்ற பாடலுடன்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
மாதா பிதா குரு தெய்வம் ,ஆறாம் செய விரும்பு என்பதையும்
நினைவில் வைத்து இந்த ௨௦௧௪ புத்தாண்டை
ஆனந்தத் துடன் கொண்டாடுவோம்.
ஸ்பீட் தேவை அதில் ஆக்ஸிடென்ட் தடுக்க
தாய் நாட்டு புத்தாண்டுக்கு தாய் மொழிக்கு அதிகம்
இம்பார்டன்ஸ் கொடுப்பதும் தேவை.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

செவ்வாய், டிசம்பர் 24, 2013

செவிச்செல்வம் உனது புகழ் .

இறைவா !
 இரைக்காக    வா,?
இன்ப வாழ்க்கைக்காக     வா.?
இன்னல் தீர்க்க  வா.?
இறைவனைக்காண வா.
ஈடில்லா வீடுபேறு பெற வா.
எண்ணங்கள் நிறைவேற வா.
ஏற்றம் அளிக்க வா?
 உருவமின்றி உணரவைத்தாலும்
ஏகனாக வந்தாலும்
அத்வைத்துவமானாலும்
ஐந்துகரத்தினை உடையோனாக
ஆறுமுகமாக வந்தாலும்
ஆனந்தமே! இறைவா. வா.வா.
உலகில் நடப்பவை உன்னருள் என்றாலும்
உண்மைகள் உலையில் கொதிக்கும் போது
ஊமையாய் தவிக்கும் போது
ஏனோ! எனக்குள் ஒரு ஐயம்.
உனது படைப்புகள்
உலகில் தவறுகள் செய்கின்றன.
ஒன்றை அளித்து ,ஒன்றை அழித்து
ஒன்றை அலியாக்கி
சம நிலையாக்கும் நீ.
அநீதிகளை ஆர்பரிக்க வைக்கிறாய்.
நீதிகளை அடக்கி வைக்கிறாய்.
ஆழ்கடல் அமைதி என்றாலும்
அலைகடலை கரையில் வைத்து
அமைதிக்கு செல்லும் வழியில்
ஆர்பரிக்கிராய்.
ஆழ் மன தியானம்,
மேல்மன  அலைகள்,
உன்னடி
சரணாகதிக்குத்
தடைகள்.
தடைகள் மீறி  மனதை அடக்கினாலும்
மணம் நாசி வழியில் தடை .
மூக்கைப்பிடித்து முன் சென்றாலும்
பார்வை த் தடை.
கண் னை மூடி மூக்கடைத்து
முன்னே சென்றால்
காதால் தடை.
இவைகளை அடக்கும்  முன்பு
காதல் தடை.
பாசத்தடை.
எல்லாம் தடை மாயம்.
எப்படி உன் சரணம் அடைவது.

சும்மா இரு  என்று அருணகிரிக்கு அருள்.
அவராடிய  ஆட்டங்களுக்கு அறிவுரை  சும்மா இரு.
சும்மா ...அதிலே சுகமா?
உன்னை அறியா சுகமா?
அறிவதிலே சுகமா.
கண் மூடி  செவிமடுத்தல் உன்னருள்.
செவிச்செல்வம் உனது புகழ் .

உன்னடி





சிலந்திவலையில் சிக்கிய புழு.

கணவன்   
கணவன்   மௌனக் கண்ணீர்  வடிப்பவன்

திருமணத்திற்கு முன்  சுதந்திரப் பறவை.
பின்னர் 
மத்தளம் போல் வேதனை இடிகள்.
தாயார் ,தம்பி ,தங்கை  ஆதி உறவு 

மனைவி  புதிய உறவு.

இந்த புதிய உறவை  மகிழ்விக்க 
ஆதி உறவுகள்  சற்றே உதாசீனப் படுத்தும் உணர்வுகள்.
தாய் வீடு  செய்யும் தவறுகள் 
அவமானங்கள்  அநீதிகள் 
உதவாத தன்மைகள்,
கேளிக்கைகள் கிண்டல்கல்கள் அனைத்தையும் 
சகிக்க வேண்டும் கணவன் .
அப்பொழுதான் அன்பின் தழுவல்.
இல்லையேல் மழுப்பல்.
சகுனியின்  செயல்கள் மகாபாரதம்.
கூனி யால் ராமாயணம்.
எல்லாம் தாய்வீட்டு உறவு.
இப்படிப்பட்டவர்களை  சஹித்து
வாழ்ந்தால் இல்லறம் நல்லறம். 
பு திய உறவு /புத்தம் புது வரவு

ஆதி உறவுக்கு ஆனந்தம் குறைவு.
மாமியார் வீட்டார் தவறுகள் 
மனைவியால் அரங்கம் ஏறும்.
மனைவியின் தாய்வீட்டுத் தவறுகள் 
மறைக்கப்படும்.
மறக்கப்படும்.
மனைவியின் முகத்தில்  சிரிப்பு 
அன்பு   காண 
கணவனால் மறக்கப்பட வேண்டியவர்கள் 
கணவன் சம்பந்தப்பட்டவர்கள்.
இந்நிலை அதிகம்.
பாவம் கணவன்.
பாசம் மறக்கும் மோஹ சிலந்திவலையில் 
சிக்கிய புழு.
பாசம் உறவு  இவ்வலையில் மடிந்துவிடும் 
விளைவு முதியோர் இல்லம்.

சனி, டிசம்பர் 07, 2013

மறக்கப்பட்டது

அறச் செயல்
 அறம்  செய விரும்பு.
ஆறுவது சினம்.
இன்றைய மழலைகள்
திரைப்பட பாடல்கள்  பாடுகின்றனர்.
அவர்கள் சினம் ஆறாமல் வளர்கின்றனர்.
சிறுவயதிலிருந்தே ஆண் /பெண் நண்பர்கள்
அவன் பிரண்ட் /நான் லவ் பண்ணலை
மூன்றுவயதுக்  குழந்தையின் மழலைப்பேச்சு.
அதை ரசிக்கும் பெற்றோர்கள்/உறவினர்கள்.
விளைவு மணநாளன்று  மணமகள் ஓட்டம்.
அனைத்து ஏற்பாடுகள், மண மேடை அலங்காரம்,
திருமண மண்டப முன் துகை,
மேளதாள ஏற்பாடு,
சமையல் ஒப்பந்தக்காரர்,
என பெற்றோர் செய்யும் சிலவுகளை
மௌனமாக  பார்த்துவிட்டு ஓடும் மகன்,மகள்.
இந்த சமுதாய அவலம் .
இதற்கு அதரவு,எதிர்ப்பு,
அடிப்படை கொலை,தற்கொலை ,கைபேசி ஆபாசப்படங்கள் ,
மிரட்டல்கள்.
பலன்  அமைதி இல்லா வாழ்க்கை.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
நோ பீஸ் ஆப் மைண்ட்.
இதில் மற்றொரு அவலம் அனைவரும் பட்டதாரிகள்.
மாடியிலிருந்து குதித்து தற்கொலைகள்.
சேர்ந்து வாழலாம் திருமணமின்றி,
பெற்ற குழந்தைகளை அரசு பிராமரிக்கட்டும்----_
!!!உச்ச நீதிமன்றம்.!!!
சின்னத்திரையிலோ ஒருவர் இரு காதலிகள்.
வஞ்சம்.ஏமாற்றம் துரோஹம்.
காதல் கட்டாயப்படுத்த அமிலவீச்சு,தூக்கமாத்திரை.
மணிக்கட்டு அறுத்துக்கொள்ளுதல்
இப்பொழுது  தற்கொலை செய்வதை

பலர் ரசிக்கும் படி
வலைக்காட்சி  . அறிவியல் கல்வியின் மறுமலர்ச்சி.
கல்வி முதுகலைப்பட்டம். பொறியியல் .
காதல் பொறி;கள்ளக்காதல் ,அதற்காக அடியாள் வைத்துக் கொலை.
கல்வி என்பது இப்பொழுது பணத்தை
 ஆதாரமாகவைத்துத்
திணிக்கப்படுகிறது. ஆணவம் அதிகமாகிறது.
பாசம் இல்லை; அன்பு இல்லை;பண்பு இல்லை;நேசம் இல்லை;
இயந்திர வாழ்க்கை. நிம்மதிக்கு போதை;
அதற்கு அரசு மதுபானக்கடைகள்.
அதன் வருமானத்தில் தான்
அரசு நல திட்டங்கள்.
தீயவழி வருமானம்.
அதனால் போடும் சாலைகள்
போட்ட வேகத்தில் பல்லாங்குழி.
தீயவழி வருமானம்.
அதில் கல்விக் கூடங்கள்.
அதுவும் மாணவர்கள் வராத பள்ளிகள்.
பல ஆசிரியர்கள்;சில மாணவர்கள்.
வரும் வருமானம் எப்படியோ அப்படியே வீண் சிலவுகள்.
நீதி கிடையாது,எல்.கே.ஜி.கே சிபாரிசு;கைஊட்டல் ;நன்கொடை;
பணத்திற்கு மதிப்பு;
இதில் அறம் செய விரும்பு இல்லை.
மீனைப்பிடி;விட்டுவிடு.
ஒன்னு,இரண்டு,மூணு,நாலு அஞ்சு.மீனைப்பிடி;
ஆர்,எழு,எட்டு ,ஒன்பது ,பத்து  மீனை விட்டுவிடு.
என் பேரனின் ஆங்கிலப்பாடல் பொருள்.
அருளற்ற ஆங்கிலக்கல்வி.
பூனையே!பூனையே!எங்கே போறே;
லண்டனுக்குப்போறேன் ராணியைப்பாக்க. மழலைப்பாடல்.
மாதா,பிதா ,குரு தெய்வம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்  ஒலிக்கவில்லை;ஒளிரவில்லை;
ஆலயம் தொழுவது சாலவும் நன்று --இந்த அறவுரை அகற்றப்பட்டது.
ஒழுக்கம் இல்லா வளர்ச்சி;

 தற்கொலை;
 காவல் துறை அறிவிப்பு:
நடமாட்டமில்லா  மாடிகள் பூட்டப்படவேண்டும்.
மடிக்கணினிகள்  அனுப்பும் முகநூல்
 ஆபாசங்கள்.

மறக்கப்பட்டது:-
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து.




செவ்வாய், நவம்பர் 05, 2013

குணம் என்ற பொருள் படைத்தோரே வாழ்வர்

பணம்!பணம்!பணம்!
பாரில் வாழ  பணம் .
புண்ணியம் செய்ய பணம்.
பாவங்கள் செய்ய பணம்.
பாவங்கள் தீர்க்கப் பணம் -மன ஆசைகள்
பூர்த்தி செய்ய பணம்..
பூஉலக வாழ்க்கைக்கு
பெருமை சேர்த்திட பணம்.
பேருண்மை மறைத்திட பணம்.
பேராண்மை பெற்றிட பணம்.
பதவிக்குப் பணம் .
பட்டத்திற்குப் பணம்.
பட்டத்திற்கும் பணம்.
பரதேசிக்கும் பணம்.
பரதேசம் போகவும் பணம்.
பிணி அகற்ற பணம்.
பிணிவர பணம்.--
பொருளுள்ள வாழ்க்கைக்குப் பணம்.
பொருளற்று மது,மாது,என்று வாழவும் பணம்.
பொறுக்கும் பணம்,
போருக்கும்  பணம்.
இறுதிச் சடங்கிற்கும் பணம்.-ஆனால்
உயிர்காக்க முடியாத பணம்.
முதுமையைத்  தடுக்க முடியாத பணம்.
நரைமுடியைத்  தடுக்காத பணம்.
பௌர்ணமி போன்று வரும் பணம் -தேய்பிறையாக
வாழ்க்கையில் அமாவாசை போன்று
வரும் இன்னல்கள்,விபத்துக்கள்,அகால மரணங்கள்
வராமல் தடுக்க முடியா பணம்.
மமதை தரும் பணம்;
பேராசை தரும் பணம்.
நல்லதை மெதுவாக ,
தீயதை விரைவாக செய்யும் பணம்.
பணம் உள்ளோர் பாரினில் விரைந்து மறக்கப்படுவார்.
உயர் குணம் உள்ளோர் பாரினில் என்றும் வாழ்வார்.
உத்தமனாக இரு இது என்றும் வாழும் சொல்.
பக்தர்கள் வாழ்கின்றனர்;
சித்தர்கள் வாழ்கின்றனர்--பணப்
பித்தர்கள் வாழா நிலை.
ஆதி சங்கரர் வாழ்கிறார்;
ரமணர் வாழ்கிறார்;
அல்லா வாழ்கிறார்;
இயேசு வாழ்கிறார்;-பாரில்
நல்வழிகாட்டுவோர்  என்றும் எந்நாளும்
வாழ்கின்றார்கள்;
சொத்து சுகம் வேண்டாம்
பூஜைப்ப்பொருள் போதும் என்ற
தியாகராஜர் வாழ்கிறார்;--பணப் பித்தர்கள்
எங்கே வாழ்கின்றார்?
பெண் பித்தர்கள் எங்கே வாழ்கின்றார்.?
இறந்தும் வாழ்வார்கள் பணப் பித்தர்கள் அல்ல;
குணம்  என்ற பொருள் படைத்தோரே வாழ்வர்





வெள்ளி, அக்டோபர் 11, 2013

அதனால் தான் இல்லறம் நல்லறம். இது எனக்கு இறைவனளித்த பெரும் வரம்.

தூக்கம் வரவில்லை
,துக்கத்திநாலா?
துன்பத்திநாலா?
வறுமையினாலா?
எதுவுமே இல்லை .?
இளமையா?பிரிவா?
எதுவுமே இல்லை.
அகவை கூடியதால்
அழைப்புமணி பயமா?
அதுவும் இல்லை.
எதுவுமே இல்லை
ஆனால் ,தூக்கந்தான்
வரவில்லை.
பழைய நினைவுகள்,\.
இருபத்தேழு ஆண்டுகள்
அன்னை-தந்தை கண்காணிப்பில்,
முப்பத்தாறு ஆண்டுகள் மனைவியின் அரவணைப்பில்
இன்றும் அவள் பாதுகாப்பில்.
அகவை எனக்கு இருபத்தைந்து.
அவளுக்கோ இருபது.
மாமன் மகள் தான் ,
அம்மாவிற்கு அண்ணன் மகள்தான்.
வந்தவளின் மனதில் வளர்த்த ஆசைகள்
 என்ன என்னவோ;!!??
எண்ணாமலேயே என்னவளை
என்னடிமை ஆக்கி வைத்தேன்.
இன்றுவரை எதுவும் அவள் கேட்டதில்லை.
கேட்காமல் எல்லாம் கிடைத்துவிட்டதென்பாள்.
அன்பிற்குப்பரிசாய் முத்துக்கள் ,வைரங்கள்,தங்கங்கள்
அனைத்தும் சேர்ந்த விலைமதிக்கமுடியா
வாரிசுகள் மூன்று.
தாயைப்போல பிள்ளைகள்,அதிர்ந்து பேசா அன்புகள்.
நான் என் குழந்தைகள் இப்படித்தான் ஆகவேண்டும் என்ற
திட்டங்கள் தீட்டவில்லை;
வளர்ந்தனர்.வளர்த்தாள் அவள்.
என் சக்திக்கு என்பதைவிட திட்டமில்லா உழைப்பு.
இறை நம்பிக்கை.
மும்முறை இறந்து உயிர்பெற்று வாழ்கிறேன்.
எம்முறையும் என்னிடம் அவள் கலங்கியதும் இல்லை;
மும்முறையும் அவள் பட்ட வேதனைகள்  எதுவும்
பேசியதும் இல்லை;எந்திர கதியில் இயக்கம்;
அதிலே பிறந்த ஊக்கம்;
வளம்பெற வாழ்கிறேன்.


அகவை கூடினாலும் அவளது அரவணைப்பும்
அன்பும் இன்றும் கூடிக் கொண்டிருப்பதால்;
இல்லறம் இல்லத்தரசியின் இனிய இசைவில்.
அதனால் தான் இல்லறம் நல்லறம்.
இது எனக்கு இறைவனளித்த பெரும் வரம்.




புதன், அக்டோபர் 09, 2013

தரம் தாழ்ந்து விட்டது.

ஆதார் அட்டை ,அலைந்தது தான் மிச்சம்.
வலைகளில் தேடினேன்.
அங்கு இங்கு என்று விசாரித்தேன்.
காந்தி ரோடு அரசுப் பள்ளியில் அளிப்பதாகக்
கூறினார்கள்.புனித அந்தோனியார் பள்ளியில்.(வேளச்சேரி)
இரத்த அழுத்தம் அதிகமானாலும்
வாழ்க்கையின் ஆதாரம் ஆடிப்போனாலும்
என்ன ஆனாலும் சரி இன்று ஆதார் அட்டைக்கு
அஸ்திவாரம் போடவேண்டும் என்றே சென்றேன்.
ஆனால்  இங்கு அளிப்பது நிறுத்தப்பட்டதாக
பள்ளித்  தலைமை ஆசிரியை கூறினார்.
பலர் விசாரித்து என்ன செய்வது என்றனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு "ஆதார் அட்டைத் தேவையில்லை
உறுதி செய்யப்பட்டது என்ற செய்தி.
ஆதாரம் தேடி அலையவேண்டியதில்லை .
வெளிநாட்டினருக்கு சுலபமாகக் கிடைக்கிறதாம்.
குடும்ப அட்டை,தேர்தல் ஆள் அறிவட்டை
இதெல்லாம் அவமதிக்க ஆதார் அட்டை;
அதற்கு பல கோடி செலவாம்
அதனால் போலி அட்டைகள் கண்டுபிடிப்பாம்'
ரேசன் கார்டு,எலக்சன் ஐ.டி. கார்டு
இதைவிட ஒரு கார்டு தேவையா/புரியவில்லை.
இது மாநில ,மத்திய தெர்தல்வாரிய
அவமதிப்பன்றோ!அது வழங்குவதில் ஒழுங்கில்லை.
ஒருமுறை சென்ட்ரல் வங்கி; ஒருமுறை சில விலாசம் '
ஏன் ?இந்த மாற்றங்கள்;அஞ்சல் அலுவலகம்
இன்று எங்கு என்ற நிச்சயமில்லை;

உள் நாட்டினருக்கு தாஸ்மார்க்.


தங்கம் வாங்கக்கூடாது
அதிலும் குறிப்பாக ஏழைகள் .
சிதம்பரம் பேச்சு.
தரம் தாழ்ந்து விட்டது.

திங்கள், அக்டோபர் 07, 2013

மொழிகளின் கலப்பும் விந்தையும்.

கடவுள் ,இறைவன்,பகவான்,குதா ,GOD இறைவனுக்கு பல  மொழிகளில் பல சொற்கள்.
அல்லா,ஏசு,சங்கரர்,ராமானுஜர்,ராகவேந்திரா,சத்யசாய்,சீரடி சாய் போன்ற தெய்வீக அருள் பெற்ற வழிகாட்டிகள்./மார்கதரிசிகள்./பைகம்பர்.
இதில் வழக்கு மொழியில் சொன்னால் அந்த வழிகாட்டிகள் என்ற சொல்  மார்கதர்சி/பைகம்பர் என்பதற்குள்ள  காம்பீர்யம் சற்றே குறைந்து இருப்பதாக
உணரப்படுகிறது.

இவ்வாறே நன்றி ஐயா/thank you, சார்,எனது வருத்தம் /மன்னிப்பு என்ற சொற்களைவிட ஸாரி/பர்டன் /excuse என்ற சொற்களில் விரைவாக பயன் படுத்துவதும் சற்றே மரியாதை தருவதும் ஆங்கிலச் சொற்கள்.

பெயர் வைக்கும்போது பெயரைக்கொண்டே ஒரு மரியாதை.தமிழ் பெயர்களைவிட வடமொழி பெயர்களுக்கு உண்டு.இது ஒரு தெய்வீகமான  ஒரு மன நிறைவு.இதில் பெயரில் என்ன?என்ற கேள்வியில் அது நிச்சயம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துவது போல் ஒரு தோற்றமா?அல்லது  இறைவனின்  திருவிளையாடலா?அந்த சமஸ்கிருதப் பெயரை தவிர்க்காத நிலை.பல இயக்கங்கள் முயற்சித்தும் தமிழ் பெயர்களை வைப்பது அவ்வளவு முன்னேற்றமில்லை.

தூய தமிழ் பேசுபவர்கள் ஒரு அதிசயப்பிறவி.ஒரு நடத்துனர் தூய தமிழ் நடையில் பேசுவதை வியந்து செய்திகள்.சொற்பொழிவுகள்.

பிரார்த்தனை/வழிபாடு/பூஜை /அர்ச்சனை/போற்றி /என்பதை மாற்ற முடியாத நிலை.

இன்று திராவிடக்கழகம்  அகில இந்திய அரசியலில் ஈடுபடும் பொது ஹிந்தியை ஒதுக்கமுடியவில்லை.அதைப்பற்றி பேசும் பொது இந்தியை எதிர்க்கவில்லை ,அதன் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் என்று கூறும் நிலை.

இந்த மொழியின் ஆதிக்கம்/கலப்பு / தனி மொழி இயக்கத்தை வீழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றன..அதில் வெற்றிகாணும் முயற்சியில்
தமிழகம் தான் முன்னோடியாக இருக்கிறது.ஆனால்  இது உலக அளவில் எப்படி தொடர்புக்குப் பயன் படும் என்பதும் விந்தைதான்.

பேச்சுவழக்கில் மணி எத்தனை?சாலை,மிதிவண்டி,பேருந்து,,திருகாணி,சலவையகம்,முடி திருத்தும் நிலையம்,தையலகம்,பு கைவண்டி, போன்றவை பெரும்பாலானவர்களால் பயன்படுத்தும் நிலை வரும் வரை  தனித்தமிழ் இயக்கம் எப்படி?
வேகம்/சந்தேகம்,விவேகம் புத்தி ,மூர்க்கன் ,நகரம்,கிராமம்,பாகப்  ,பரிவர்த்தனை  பத்திரம்,சூனியம்,போன்ற ஆயிரக்கணக்கான சொற்கள்
படித்தவர்களும் பாமரர்களும்  பயன்படுத்தாமல் /உபயோகிக்காமல் வழக்கு மாறுமா?
ஆலயம்   தேவாலயம்.கோவில்  கோயில் மசூதி.சர்ச் ,மந்திர்,விஹார் மடம் ,சத்திரம்.
இந்த மொழி விந்தைகள் ஆச்சரியம்/வியப்பு.

செவ்வாய், செப்டம்பர் 24, 2013

இந்நினைவு அகற்றாதீர்.

பட்டதாரிகளும் பாட்டாளிகளும்  பணக்காரர்களும் 
அறிவியல் விந்தை ப்படைப்புகளும் அதிகரிக்கும்
 நாட்களில் 
ஆச்சரியப்படும் விஷயம் பண்புகளும் ,பண்பாடும் 
மனக்கட்டுப்படுகளும் பிறருக்கு உதவும் மாண்பும்
 சிலரிடமே காண்பது.
நல்ல விஷயங்களைவிட
 கடி சிரிப்புகள்,நக்கலான விஷயங்கள் 
ரசிப்பதும் ஒரிரு வாக்கியங்களில்
 அனைத்தும் புரிந்து செயல் படுத்தவேண்டும் என்பதே.
நம் தமிழ் இலக்கியங்களில் திருக்குறள்  அவ்வாறே வழிகாட்டியது.
ஆத்திச்சூடியும் அவ்வாறே.
எத்தனை நீதிநூல்கள் .பழமொழிகள்.நல்வழிகள்.
இவைகளை அதிக அளவில்
 மனப்பாடப்பகுதி இன்றி
 பொருள் விளங்க நடத்தினாலே போதும்.
நாட்டில் அமைதி நிலவும்.

ஆலும் வேலும்  பல்லுக்கு உறுதி.
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி .
யாது ஊரே யாவரும் கேளீர்.
உயர்ந்தோர் யார்?தாழ்ந்தோர் யார் ?
என்பதை அவ்வையார்  போல் யார்
மிக எளிதாக விளக்க முடியும்.
ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் 
நீதிவழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர் 
இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி.

இப்படி நீதி நெறிகள் கூறியும்
 இன்றும் மதத்தின் மாநாடு .
அதில் அரசியல் தலைவர்கள் தலைவிகள்
 பங்கேற்பதற்கான 
பெரும் விளம்பரங்கள் .

வாக்குகள் பெறவேண்டும் என்றால்
 மனிதர்கள் மதம் என்ற பெயரால் 
வேறுபட்டு இருக்கவேண்டும்!!! .
 என்னே உயரிய சிந்தனை.!!!
அதிலும் சிறுபான்மை
 என்று ஒரு வாக்கு   வங்கி 
இனக்கலவரம் .
இன்றைய படித்த இளைஞர்கள் 
 சற்றே சிந்திக்கவேண்டும்.
அறிவை வளர்ப்பது அறிவியல் ;
நல்ல பண்பை  வளர்ப்பது 
 பண்டைய தற்கால நல் இலக்கியங்கள்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா  என்றார் பாரதி.
தயவு செய்து  உங்கள் மதத்தை
 இறைவனை போற்றுங்கள்.
இது நல்வழிகாட்டும்.
சுயநல மதவாதிகள் சொல் கேட்டு 
இனக்கலவரங்களில் ஈடுபட்டு 
அப்பாவி இளைஞர்களை பலி ஆக்காதீர்கள்.
நாட்டின் நலம் கருதுங்கள்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்.
நம் வரலாற்றில் நாட்டு பக்தியைவிட ஆணவம் .சுயநலம் அதிகம்.
அது நம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடை.
அரசனின் காதல் மோகத்திற்காக உயிர் இழந்த 
வீரர்கள் தான் வீரகாப்பியம்.
இந்நிலையில் தான் அன்னியர்கள் ஆட்சி.
நாட்டிற்காக போராடுவோம்.
சுயநல அரசியலுக்கு முடிவுகட்டுங்கள்.
வாழ்க பாரதம்.
நீர் அதன் புதல்வர்.
இந்நினைவு அகற்றாதீர்.(மகாகவி  பாரதி.)