புதன், மே 08, 2013

ஆடம்பர பக்தி என்பது முக்திக்கு வழி இல்லை.

  மனித அறிவு  என்பதை  நம் முன்னோர்கள்

,ரிஷிகள் நன்கு ஆராய்ந்து

நமக்கு விளக்கி மெய்ஞானத்தைக் காட்டினர்

. ஆனால் நாம் இந்த உலகில் கிடைக்கும் சுகம் தான்

 பெரிது என்று நினைத்து பல துன்பங்களை  அனுபவித்து

துன்பங்களுக்கு இடையில் இன்பம் காண்கிறோம்.


எப்பொழுதும் இன்பம் அளிப்பதற்காகவே  ஆன்மீக அறிவு.

துன்பங்களை அனுபவித்துக்கொண்டே இன்பங்கள் தருவது


அறிவியல் அறிவு துன்பங்களுக்கு இடையில் இன்பங்கள் தருவதுபோல்

ஒரு மாயை. அது ஏன்? என்பதற்கு கபீர் தாசர் ஒரு விளக்கம் தருகிறார்.

அது என்ன?

 பெரிய பெரிய ஞானிகள் தரா  விளக்கம்

 என்று நமக்குத் தோன்றும்.

ஞானிகள் தரும் விளக்கத்தை படித்தோரும் படிக்கா தோரும் எளிதாக

புரிந்து தெளிவடையவே  எளிய விளக்கங்கள் தரும் சித்தர்கள்

பாடல்கள்;பாரதியார் போன்ற யுகக் கவிஞர்கள்.

சில திரைப்படப்பாடல்களும் மெய்ஞானத்தை விளக்குகின்றன.

  ஆனால் அனைத்துமதங்களிலும்  கூறும் ஒரு மாயை/,சைத்தான்,/சாத்தான்

உலகை ஆட்டிவைக்கிறது.

அந்த தீய சக்தியிலிருந்து வையத்தைக் காக்கவே ஆன்மிகம்;பக்தி மார்க்கம்.

எப்படிப்பட்ட அறிவியல் வாதிகளும்  இதை மறுப்பதில்லை.

மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் ,

அவர்களால்  மரணம் என்று நாள் குறித்தோர்களில் சிலர் நீண்ட நாள்

உயிர்வாழ்வதும்,அவர்கள் ஆரோக்யமான நோயாளிகள் என்பவர்கள் மரிப்பதும்

அவர்களை  ஒரு தெய்வீக சக்தி இருப்பதை ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன.

           அறிவியல் என்பது ஜட அறிவு. அதில் மாற்றங்கள் பெருகிக்கொண்டே

இருக்கின்றன, தேவைகள் அதிகரிக்கின்றன.

பணத்தசைகள் பெருகு கின்றன.மனத்தாசைகள் பெறுகின்றன;

அவைகளால் ஆணவம்,போட்டி ,பொறாமை ,ஏற்றத் தாழ்வுகள் ,சண்டை

சச்சரவுகள் பெருகி வருகின்றன; அமைதி கெடுகிறது; இவை எல்லாம் உலகின் அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன.

ஆனால், பர அறிவு ,மெய்ஞானம்  என்பது சத்தியம்,நேர்மை,தியாகம்,பிறருக்கென வாழ்தல்,ஆணவத்தை அளித்தல்,
மனிதர்களிடம்  பரஸ்பர அன்பை ,பரோபகாரத்தை ,கோபத்தை,காமத்தை,

அடக்க வழிகாட்டுகிறது.

   ஆனால் இன்றைய ஆன்மிகம்,ஆஷ்ரமம்  லக்ஷ்மி தேவிக்கே முதலிடம் என்று  ஜட அறிவை வளர்க்கிறது.ஆஷ்ரமங்கள்,ஆலயங்கள்
பொன்னுக்கும் பொருளுக்கும் பிரதானத்தை அளித்து  பக்தி மார்கத்தை

மாசு படுத்திவருகின்றன.
குரு  என்பவர் இன்று ஆசிரியர் என்று மாறி  வணிகர்களாகி வருகின்றனர்.

பள்ளிகள் என்பது வணிக ஸ்தலங்களாகவே  மாறிவிட்டன.

ஒரு மூன்று வயது குழந்தையை பள்ளியில் சேர்க்க பெற்றோர் படும் பாடு

கல்வி   என்பது எவ்வளவு உயர்வானது;நாட்டிற்கு எவ்வளவு இன்றி

அமையாதது   ஆனால்  இன்று  ஆசிரியர் பயிற்சி பட்டம் வாங்கிய

நான்கு லக்ஷம் பேரில் தகுதி உள்ளவர்கள்  ஆயிரத்திற்கும் குறைவு.


 இதைத்தான் கபீர் தாசர்

உண்மையைச் சொன்னால் நம்புவோர் இல்லை;

பொய்யை நம்புவோர் ஏற்போர் அதிகம் ;

பால் வியாபாரி தெரு தெருவாக சென்று விற்கிறான்

மது வியாபாரி ஒய்யாரமாக அமர்ந்து விற்கிறான்;

எவ்வளவு உயர்ந்த கருத்தை எவ்வளவு எளிமை படுத்தி உள்ளார்;

நல்லது என்பது  பிரச்சாரப்   பொருள்;

தீமைகள் பிரசாரமின்றியே பெருகுபவை;

  ஆலயங்களிலும் இன்றைய ஆலயங்கள் ஒரு வணிக ஸ்தலம்;

அங்கு மெய்ப்  பொருளுள்ள பக்தர் களுக்கு   முதலிடம் இல்லை;

கைப்போருளுள்ள பக்தர்களுக்கு முதல் மரியாதை.


இதனால் பக்தர்கள் மனதில் பக்தியை விட,

பர அறிவை விட ஜட அறிவே வளர்கிறது.

இது மக்களுக்கு இன்னல் ,அமைதி இன்மை ,ஆணவம்,பொறமை,,குரோதம்

விரோதம்  தரக்கூடிய பக்தி.

இதற்காகவே  வியாசர்  தன குரு கீதையில்:

शिलाया किम परम ज्ञानं  शिलासंघः प्रतारानः

स्वयं  तर्तुम  न  जानती परम निस्तारयेत  गतम ;

 கல்லால் இறைஞானம் பெறமுடியுமா/

கல் தன்னாலே இயங்க முடியுமா?

கல்லில் வைக்கும் அன்பு ஏமாற்றமே.

சிவவாக்கியர்:

நட்ட கல்லை தெய்வ மென்று நாலு புஷ்பம் சாற்றியே

சுற்றிவந்து  முணுமுணுத்து சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?

************
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை,
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கடந்த பின்

வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்,

கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே;


அகஸ்தியர்:

சொல் பிறந்த இடமெங்கே?முப்பாழ் எங்கே?

துவார பாலகரெங்கே முதற்பாழ்   எங்கே?

நல்ல சங்கு கத் எங்கே?வைகுண்டமேங்கே?

நாரணனும் ஆலிலைமேல் துயின்ற தெங்கே?

அல்லல் படும் ஐம்பூத  ஒடுக்கமேங்கே?

ஆறைந்து இதழிரெண்டு முளைத்த தெங்கே?

சொல்லவல்லார்

 உண்டானால்  அவரை நாமும்

தொழுது குரு எனப் பணிந்து  வணங்கலாமே?



திருக்குறள்;

பெறுமவற்றுள்  யாமறிவதில்லை  அறிவறிந்த
மக்கட் பேறல்ல  பிற.


 பர அறிவு என்பதை சிறந்த குருவால் தான் அளிக்க முடியும்.

இறைவனைக் கண்டதாகக் கூறுவோர்  உணர்ந்து அதன் மூலம் எளிய பக்தியைக்  காட்டுவர்.

சுவாமி விவேகானந்தர்  பக்திக்கு முதலிடம் அளித்தார் ;பணத்திர்கல்ல;

ஆரம்ப நிலையில் ஆன்மீக வாதிகள் ஆடம்பர நிலையில் இல்லை.

இன்றைய சூழலில் ஜட அறிவைப்பெருக்கும் ஆன்மிகம்.

இதிலிருந்து மெய்ஞானம் பெற வேண்டும்.

ஆடம்பர பக்தி என்பது முக்திக்கு வழி இல்லை.

















ஞாயிறு, மே 05, 2013

தேசப்பற்று மிக்கோர்கள் கண்ணீர் சிந்தும் காலமிது.

சுதந்திரம் கிடைத்தும் அரசியல்வாதிகள்

 இன்னும் ஆங்கில ஆட்சியின் போராட்டங்களையே.

பொது சொத்துக்களை  அழிப்பது ,எரிப்பது,

  தொடர்வது நாட்டுப்பற்று  உள்ளவர்களுக்கு வேதனை தருகிறது.

வன்முறையால்  பொதுமக்களுக்கு  இடையூறு

ஏற்படுத்துவதால்  கட்சி வளருமா?

மக்களுக்கு பயம் வருமே ?

எத்தனை பயணிகள்?

 எவ்வளவு இடையூறுகள்.

அவசரப்பயணம்-  அது

 சிகிச்சைக்காக  இருக்கலாம்.

சுப காரியங்களுக்குச் செல்ல ,

இதுவே அபசகுனம் என்று தடையாகலாம்.


வேலைக்கு நேர்காணல் செல்வோருக்கு

வேலைவாய்ப்பு  இழக்கும் சூழல்.

பேருந்து  ௨௦௦க்க்கு மேல் என்றால்

அது மக்களின் சொத்து அல்லவா?

மக்களின் வரிப்பணம் அல்லவா?

நடு இரவில் இறங்கி கண்ணீர் விடும் பயணிகள் .

பெண்கள் ,குழந்தைகள் படும் இன்னல்கள்,

இரக்கமில்லா அரசியல் போராட்டம்.

இவர்களின் அதரவு பெற்று தேர்தலில் வெற்றி பெற

வன்முறையில் ஈடுபடுவோருக்கு அதரவு  குரல் எழுப்பும்

பெருந்தலைகள். நெஞ்சு பொறுக்கவில்லை

வேதனை!!   ஏன் சுதந்திரம் பெற்றோம்!!! என்று.

ஊழல் ,சட்டங்களை மதிக்கா அரசியல் தலைவர்கள்.

அவர்களுக்கு சலாம் போட்டால் பதவி உயர்வு என

அராஜகத்திற்கும் ,கொடுமைகளுக்கும் உடன் செல்லும்

அதிகாரிகள்;  அவர்களைவிட  ஊழல் அரசியல் வாதிகளுக்கு

வாக்களிக்கும் கூட்டம்;  தேர்தல் சாவடி வன்முறைகள்;

கள்ள  ஓட்டுக்கள்;  ஓட்டுச் சாவடி சென்றால்

  வாக்களர் பட்டியலில்  பெயர் இல்லை;

அல்லது வாக்களிக்கப்பட்டது  என்ற நிலை;

பணம் தான் என்று மனசாட்சி  இல்லா

 வாக்காளர்கள்,

இலவசம் என்ற பெயரில் மக்கள்  வரிப்பணத்தில்

கொடுக்கும் பொருள்கள் ,
தங்கள் கட்சி அளிப்பதாகக் கூறி

ஏமாற்றும் அரசியலுக்குத்

தாளம் போடும் அறியாத மக்கள்.

மின்சாரம்  இல்லா ஊரில்

மின்விசிறி,மாவரைக்கும் இயந்திரம் இலவசம்.
வலைதள வசதியில்லாமல் மடிகணினி;

அடிப்படை வசதி செய்யா இலவசம்;
கோடிக்கணக்கில் பணம்; விரயம்;

குருடனை ராஜா பார்வை பார் என்பது போல்;

பயன்படுத்த முடியா இலவசங்கள்;

ஊழல் விரும்பிகள்,கைஊட்டளித்து  கையூட்டு பெற்று வாழும்

பொதுமக்கள் ; அதிகாரிகள்;கட்டைபஞ்சாயத்து;

இதைவிட  வரிப்பணம் கட்டிய ரசீதை காட்டவேண்டுமாம்

இல்லை எனில்  வரி கட்டவில்லை என்றே  கருத்தாம்.

அரசுப்பதிவேடுகள் என்ன ?

  இரக்கமற்ற இள நிலை உதவியாளர்கள்;

அவர்களுக்கு ஆதரவாக  இருக்கும் அதிகாரிகள்;

என்னே ஜனநாயகம்!!!

இது பண நாயகம்???!!!

அரசியல் வாதிகளின் அராஜகம்;

பணம் பெற்று வாக்களிக்கும்

நாட்டுப்பற்று,நியாயம்,நேர்மை விரும்பா

சுயநல  வாக்காளர்கள் நாயகம்!!!.

இப்பொழுது பாரதியின் பாடல் தான் நினைவுக்கு

வருகிறது----

நெஞ்சு பொறுக்க   வில்லையே இந்த

நிலைகெட்ட  மானிடரை  நினைத்து  விட்டால் ...

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்ணீர் சிந்தும் குடியாட்சி!!

ஊழல் ஒழிக்க வழியில்லை என்று

நீதிபதிகள்  கண்ணீர் சிந்தும் காட்சி!!!

தேர்தல் ஆணையர் தேர்தல்

 நேர கள்ளப்பணம் கண்டு

விடுக்கும்  அறிக்கைகள் ;

ஒழுங்குநிலை படுத்த முடியவில்லை என்ற ஒப்பாரி.

பொதுச்சொத்து நாசப்படுத்துவோர்களுக்கு

கடும் தண்டனை அளிக்கும் வரை

இத்தகைய அரசியலை    பொது ஜனம்  வெறுக்கும் வரை ,

ஒதுக்கும் வரை, நேர்மை காண முடியாது;

தேசப்பற்று மிக்கோர்கள்  கண்ணீர்  சிந்தும் காலமிது.
















புதன், மே 01, 2013

learn hindi tamil easy.

 ௧.१.    மத்திய அரசு  மானியம் அளிக்கிறது.= மத்ய சர்கார்( கேந்திர சர்கார் ) மான்யதா  தேதி  ஹை.

मत्तिय  अरसु मानियम अलिक्किरतु==मध्य सरकार  मान्यता देती है.
मध्य -मान्य तुलना कीजिये.

மத்ய =மான்ய  தமிழ் -ஹிந்தி ஒப்பிடுக.

  २.விவாதம் செய்யாதே,=விவாத்  மத் கரோ. विवादम सेय्याते -विवाद मत करो.

  ३.நகர  வாழ்க்கை நரக வாழ்க்கை.  நகர் கீ ஜிந்தகி நரக் ஹை.
नगर   वाल्क्कै  नरक  वाल्क्कै.==नगर की जिंदगी  नरक है.

நகரம் -நரகம் ==நகர் =நரக்  नगरं=नगर .नरकं =नरक.

பரிவாரத்தோடு  வந்தான் --பரிவார் கே சாத் ஆயா.

பரிவாரம் =பரிவார்= குடும்பம் -குடும்ப
  परिवारात्तोडू  वन्तान=परिवार के साथ आया.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுர் தர்ஷன் கோடி புண்ய ஹை.

गोपुर  दरिसनम कोटि   पुणनियम '==गोपुर  दर्शन कोटि पुण्य है.



வாழ்க தொழிலாளர்கள்.



உழைப்பாளர் தினம்.

ஊர்  சுத்தமாக இருக்க தேவை
 ஒரு  உழைப்பாளி.

காணி விளைய தேவை உழைப்பாளி .

தொழில் புரிவோர் எல்லோரும்
உழைப்பாளி வர்க்கம்.

அழகான ஆடை  தைக்க தையல்
தொழிலாளி.

ஆடம்பரமான கட்டடம் கட்ட
 கட்டிடத்  தொழிலாளி.

சிகை அலங்காரம் செய்ய
முடிவெட்டும் தொழிலாளி.

பேருந்து ஓட்ட ஓட்டுனர்
நடத்த நடத்துனர்,

மர  வேலை செய்ய ,
நகைகள் செய்ய

பாட்டாளி தொழிலாளி

இல்லை என்றால் ஏற்றம்

உண்டா வையகத்திற்கு,
ஆகையால் தேவை  தொழிலாளி.

கைத்தொழில்  ஒன்றைக் கற்றுக்கொள்,
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.

சமையல் தொழிலாளி

இந்த தொழிலாளர்கள் வாழ மகிழ

தொழிலாளர்  இல்லை எனில்
என்ன  ஆகும்.
நகரப்புரங்களில்  பழைய பொருட்கள் சரி செய்ய
ஒரு சிறந்த தொழிலாளர்  அமைப்பு  தேவை.
விலை  உயர்ந்த பர்னிச்சர்கள்,ஆடைகள்,மின் சாதனங்கள்
இன்னும் எத்தனையோ வேலைகளுக்கு
சிறந்த பனி புரியும் தொழிலாளர் அமைப்பு இருந்தால்.
நேர்மையும் திறனும் இருந்தால் வேலைவாய்ப்பு அதிகம்.

இத்தகைய தொழிலாளர்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும்.


வாழ்க தொழிலாளர்கள்.







வியாழன், ஏப்ரல் 25, 2013

சான்றோனாக்குவது தந்தைக்குக் கடனே

      இன்றைய  கட்டுரைத் தலைப்பு  "என்னை செதுக்கிய நூல்கள்",.செதுக்குதல் என்ற சொல் ஆழ்ந்த கருத்துடையது.கல்லை சிலையாக செதுக்குவர்கள்.
உருவமற்ற கல்  ஆண்டவனாக உயிர் பெறுகிறது..அதற்கு உளிகொண்டு அடிக்கிறார்கள். ஒரு அழகிய சிலை உருவாகிறது.அது தெய்வச்சிலை ஆனால்
அனைவரும் வழிபடுகிறார்கள்.அவ்வாறே நல்ல நூல்கள் ஒருவனை அழகாக செதுக்கி மரியாதைக்குரிய  மனிதனாக்குகிறது.மனிதனை மனிதனக்குவது கல்வி. அந்தக் கல்விக்கு வேண்டியவை  நல்ல நூல்கள்.ஒவ்வொரு நூலும் கட்டாயம் ஒரு நல்வழி அல்லது நீதி புகட்டுவதாகத்தான் அமையும்.

      நூலகம்  வாசகர் வட்டம் கட்டுரைப்போட்டி -- நூலகர்  கலந்துகொள்ளத் தூண்டியதும்  சரி என்றேன்.என்னைப்போன்றே ஒய்வு பெற்றவர்கள்  ஆறு பேர் கலந்துகொண்டோம். நீண்டனாட்களுக்குப்பின்  பேனா வில்  எட்டுப்பக்கம்  தோன்றியதை எழுதினேன்.

இறுதியில் துளசிதாசர் தோகையின்  தமிழ் கருத்துடன் முடித்தேன்.

அப்பொழுதுதான் நூலின் அருமை தெரிந்தது.நூல்கள் மனிதனை எப்படி செதுக்கு கின்றன என்பதை அறிந்தேன் .
 அறம் செய விரும்பு ... ஒரு சிறிய ஆத்திச்சூடி.ஆனால்எவ்வளவு  பெரிய படிப்பினை. ஊக்கமது கைவிடேல் -எப்படிப்பட்ட தன்னம்பிக்கை தரும் சூடி.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் ,அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.

எப்படிப்பட்ட குரள்.

சான்றோனாக்குவது தந்தைக்குக் கடனே. எப்படி செதுக்குகிறது.

  

முதலிடம் பெறவேண்டும்

 இன்றைய தேவை  மனிதம்.இது

இன்றியமையாத  ஒன்று.

ஆணவம்,பேராசை,காமம் ,கோபம்  இவை
நான்கும் மிருக குணங்கள்.

ஆசை ,அவா ,வெகுளி ,இன்னா சொல் இவை நான்கும்
இழுக்க இயன்றதரம் .  என்றார் வள்ளுவர்.

நமது பண்பாடு கற்புக்கு முதலிடம் அளித்தது.

பத்தினிப்பெண்டிர்களை  தெய்வமாகப் போற்றியது.

இன்று  கற்பழிப்பு செய்திகள் அதிகம்.

இரக்கமில்லா கள்ளக் காதல் கொலைகள் அதிகம்.

பிறர் மனைவி,கணவன் ஆசையால் தம் மக்களை

தன் கட்டிய மனைவியை கொலை செய்தோர் அதிகம்.

விவாக ரத்து வழக்குகள் அதிகம்.

காரணம் நம் தமிழ் நீதி நூல்கள்  இன்றைய தலைமுறையினர்கள்

மறந்து ஆங்கிலமோகம் .
கல்வியில் நேர்மை இல்லை.
மழலைகள் பள்ளிக்கே பல லக்ஷம்.
மேற்கல்விக்கோ  மேலைநாட்டு மோகம். விளைவு
நமது சித்தர்கள்,சித்த வைத்தியம் சொன்ன

புலனடக்கம்  புறக்கணிக்கப்படுகிறது.

புலவர்கள்  புவியில் ஒரு ஒழுக்கம் ஏற்படுத்த

நீதி நூல்கள் எழுதினர்.

மம்மி டாடி யாருமில்லை -கண்ணாளா
என்றெல்லாம்  பாடல் எழுதவில்லை .

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா என்ற பாடல்,
விவசாய முக்கியத்துவப்பாடல்
இன்று ஒரு போக்கிரி கதாநாயகன்.
காவல் துறை வேடிக்கை பார்க்க,
போக்கிரி  ,பொறுக்கி என்று காவல் துறை மேம்பாடு.
கறுப்புப் பணம் கள்ளப்பணம்  கையூட்டு
இது ஒரு பழமொழியை நினைஊட்டுகிறது

அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்.
அரசு வருமானத்திற்கு போதைப் பொருள்  அங்காடிகள்.
அரைகுறை ஆடை வருமானத்திற்கு,
திரைப்படம் முக்கியத்துவம்.
நாயகிகள் கதா நாயகிகள் அழகு காட்டும்  விதம்,அதுவே வருமானம்.
அனைத்திலும் அலங்கோலம். 
அறுபது வயதுக்கே கிறுகிறுக்கும் என்றால்.
இளம் மாணவர்கள் மதிப்பெண் 
மதிப்பு  என்ன ஆகும்?
மாணவர்கள் தேர்ச்சி குறைவு ?
காரணம் கவர்ச்சிப்பாடல் ,கவர்ச்சி காட்சி அதிகம்.
மன சாட்சியுடன் இதற்கு ,
பண சாட்சி மறந்து,
பண்டைய பிரம்மச்சரியம் ,புலனடக்கம்  ஆகியவை முதலிடம் பெறவேண்டும்.

 मनुष्य तभी बनता है, जब उसमें  जीती है मनुष्यता.
अब  आहिस्ते -आहिस्ते  मनुष्यता तोड़ रही है दम;
मनुष्यता  में  सत्य  निहित है,  
मनुष्यता में  दया निहित है,
मनुष्यता में संवेदना निहित है;
मनुष्यता में अहिंसा  और  प्रेम  निहित है;
मनुष्यता में सहानुभूति निहित है;
मनुष्यता  में  संयम प्रधान है;
ब्रह्मचर्य  विशिष्ट  तत्व है;
ईमानदारी ,कर्त्तव्य परायणता  तो प्रधान अंग है;
निस्पृह जीवन इंसानियत का  सार  है;
दूसरों के लिए  जीना-मरना इंसानियत के प्राण है;
अब  ये इंसानियत के गुण छत्तीस  का नाता बनकर 
नव -दो ग्यारह बन गए --कारण स्पष्ट  है---
यथा राजा तथा प्रजा --लोकोक्ति सार्थक बनता जा रहा है.

புதன், ஏப்ரல் 17, 2013

வாக்களித்து பாரதத்தின் நற்பெயரை,புகழை வானளாவச் செய்வதே கடமை .தேசப்பற்று.


    ௨௦௧௪   பாராளுமன்ற தேர்தல்.

பார் புகழ்  பாரதம்,
 இன்று  ஊழல்,லஞ்சம் ,பலாத்காரம்  என்று

பார் இகழ் பாரதமாக
பாரினில் களங்கப்  பெயருடன்
பயணிகள் வெளிநாட்டுப் பயணிகள்
பயப்படும்  படி  எச்சரிக்கைகள்
கொடுக்கும் பத்திரிகைச் செய்திகள்.


குற்றவாளிகள் தண்டிக்கப்  பட்டாலும் ,
நாட்டை இரத்தக் கிளறி ஆக்கும் குண்டுவெடிப்புக்குத்

துணை போனாலும் நீதிமன்ற தீர்ப்பிற்கு மேல்

ஆதரவளிக்கும் மத்திய அமைச்சர்கள் ,மின்னும் விண்மீன்கள் ,
குடித்து காரோட்டி பலரைக் கொன்றாலும்
வழக்கு நடந்துகொண்டே இருக்கும் அவல நிலை.
அவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் .

இவைகளைக்  கருத்தில் கொண்டு ,
இந்தியாவின் இன்னல்களைத் தீர்க்கும்
அச்சம் போக்கும் அனைவருக்கும்
ஆனந்த மளிக்கும் நேர்மைக்கும்
உரிமைக்கும் நீதிக்கும் உண்மைக்கும்
ஊக்கமளிக்கும் அரசாங்கம் அமைய
இந்திய இளைஞர்கள்
இந்த பாராளுமன்ற தேர்தலில்
 வாக்களித்து பாரதத்தின் நற்பெயரை,புகழை
வானளாவச் செய்வதே கடமை .தேசப்பற்று.






இதை நாட்டு நலனுக்கும் ,ஏழை எளியோருக்கும் பயன் படுத்தலாமே ?

 இறைவனைப் பற்றி ,
பற்றுக  என்பதே ஆன்றோர் வாக்கு.
அனுபவத்தில்  மனிதன் தனக்கும்
 தன் சமுதாயத்தில்  மிக உயரிய நிலையில்
இருப்பவர்களை ஒப்பிடுகிறான்.

அவனுக்கு  இறவனைப் பற்றுக என்ற எண்ணம் மேலோங்குகிறது.

சாய்பாபா  கோயிலுக்கு ௨௦௦ கோடி ரூபாய் நன் கொடை கொடுத்த செய்தி.

திருப்பதி எழுமலையானுக்கு 16 கோடி .

வைரக்கிரீடம் .

காணிக்கைகள் குவி கின்றன.

அரசர் காலத்திலிருந்தே  பணமும் தங்கமும் குவியும் இடம் கோயில்.

இந்த ஆலயங்களில் இருக்கும் பணம் ,ஆஷ்ரமங்களில் இருக்கும் பணம் .

இதை நாட்டு நலனுக்கும் ,ஏழை எளியோருக்கும்  பயன் படுத்தலாமே ?

என்பது நாத்திக வாதமா?பகுத்தறிவு சிந்தனையா? இறை  நிந்தனையா?

என்ற சிந்தனையில்  என் மனத்தில் தோன்றும் சிந்தனை  இந்த துகை/நகை/
மூலம் ஊழலற்ற ,லஞ்சம் அற்ற நேர்மையான அரசு ஊழியர்கள்,அமைச்சர்கள்
மற்றவர்கள் இருக்க ஏற்பாடு செய்யலாமே?

ஆண்டவனிடம் ஒரு பிரார்த்தனை --
(  ஏனென்றால் பல நிகழ்வுகள் ஆண்டவனைஉணர ச்செய்கின்றன.)

ஊழல் ஒழிக்க  / இரக்கமற்ற லஞ்சம் ஒழிய ஒரு அரசு சக்தியை
அசுர சக்தியாக ஏற்படுத்தட்டும்.பணம் தான் எல்லாமே சாதிக்கும் என்ற எண்ணம் ஒழிய கருணை காட்டட்டும்.
மக்கள் குறிப்பாக அதிகாரம் படைத்தவர்கள் மனதில் கடமை /நேர்மை
கோப்புகளை உடனுக்குடன் முடித்தல்,பொதுமக்களை வீணாக அலைக்களைத்தல்  ஆகியவை மாற ஆண்டவனிடம் பிரார்த்தனை.

திங்கள், ஏப்ரல் 15, 2013

ஞானம் வரும் இது அறிவியல் உண்மை.




தூய மனத்துடன் 

தும்பிக்கையானை
  நாளும் துதித்து 
நம்பிக்கையுடன் 
துவங்கும் பணிகள் 
துரிதமாக  
துள்ளியமாக
தங்கு தடையின்றி
நினைத்தபடி 
நிறைவேறுமே.

சங்கடங்கள் தீர்ப்பான் 
சக்தி மைந்தன் ,
சங்கட ஹர விநாயகன்.
சகல சுகம் தருவான் 
சர்வ சித்தி விநாயகன்.
சகலமும் தருவான் 
கற்பக விநாயகன்.
கந்தனுக்கு 
மூத்தோன்.
சிக்கலைத் தீர்ப்பான் 
சிவனின் ஜேஷ்ட குமாரன் .
முக்திக்கும் சக்திக்கும்
 வித்தாவான் 
முக்குருணி விநாயகன்.
சக்திகள் நவநிதி தருவான் 
சக்திவினாயகன்.
காதலுக்கும் கரம் கொடுப்பான்
கார்த்திகை சகோதரன்.
தாய் தந்தையரே உலகம் என்று 
சிறாருக்கு வழிகாட்டி,
கலியுகத் தெய்வம் கந்தனை 
பழனியம் பதிக்கு அனுப்பி,
தென்னாட்டில் 
தமிழகத்தில் 
காக்கும் தெய்வமாக 
தண்டாயுத பாணியை 
முருகப்பெருமானை,
ஆறுமுகனை,
கந்தனை,கடம்பனை
அனுப்பி அனுக்ரகித்த
யானை முகத்தோனை,
எளிய பக்திக்கு 
எங்கும் வீற்றிருக்கும் 
எலி வாகனனை 
இருசெவி பிடித்து 
தோப்புக்கரணம் 
போட்டால் 
ஞானம் வரும் 
இது அறிவியல் உண்மை.














விஜய வருடம்

தொண்டரடிப்பொடி ஆழ்வார்  என்று தொண்டு செய்யவே 
தொல்லுலகில்  தோன்றியோர் பலர்  நம் பாரதத்தில் - 
ஆன்மீகக் கொள்கைக்கும் ,ஆசையில்லா வாழ்க்கைக்கும் 
வழிகாட்டிய  தர்மத் தலைவர்கள் ,கவிஞர்கள் 
வெற்றிநடை   காட்டிய  வழியினில் 
பக்தி  வழியில் பார் புகழும் பாரதத்தில் ,
பாதை தவறி முறை தவறி  பணமே பெரிதென்று 
நீதி தவறி வாழ்வோர் மனம் மாறி நேர்மை வளர 
நேர்வழியில் செல்ல  ஆண்டாள் நாச்சியார் 
ஆள்வோரை சீர் படுத்த இரு கரங்கள் கூப்பி ,வேண்டி 
விஜய  வருடம் அனைவருக்கும்  வெற்றி தர 
வாழ்த்துக்கள்; பிரார்த்தனைகள்.