வெள்ளி, நவம்பர் 02, 2012

ஹிந்தி பக்தி இலக்கியத்தில் "கவி விருந்த் "நீதிநூல்


ஹிந்தி பக்தி இலக்கியத்தில்   "கவி விருந்த் "நீதிநூல் எழுதுவதில் 
சிறந்தவர். அவர் ஔரங்க ஜீப் அரச கவிஞர்.
அவர் எழுதிய யீரடிகளின்   பதவுரை.


புலி பசித்தாலும் புல்லைத் திங்காது. வீரத்துடன் யானையைத் தாக்கி அதைக் கொன்று   புலி   யானையின் தலை யைச் சாப்பிடும்
.அவ்வாறே  துணிச்சல் உள்ளவர்கள் ,எளிய-பலம்  இல்லாதவர்கள்  போன்று காரியம் செய்யமாட்டார்கள்.
அவர்கள் தங்கள் துணிச்சலும் ,வீரமும் காட்டும் செயலையே செய்ய விரும்புவர்.
இந்நில  உலகில்   இனிய பேச்சு/புகழ் வார்த்தைகளை விட,
வெகுமதி அளித்தால் மக்கள்  அதிக   மகிழ்ச்சி அடைவார்கள்.
 உலகநாதர் சிவன் எருக்கம்பூ /ஊமைத்தைபூவில் அர்ச்சனை செய்தால் மகிழ்கிறார்.
 விஷ்ணு பகவான்  துளசி  இலை  அர்ச்சனையில் மகிழ்கிறார். வெகுமதியால்  தான் சந்தோசம். வீணான இனிமை பேச்சால் அல்ல.

நோய்  உள்ளவர்களுக்கு நோய் தீர மருந்து.
அவ்வாறே  இல்லாத வறியவர்களுக்கு அழிப்பது தான் சிறந்த தானம். இருப்பவர்களுக்கு கொடுப்பதால் தானத்தின் பயன் இல்லை.இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதே  சிறந்த வள்ளல் தன்மை.

சிரிக்காதே.எதற்காக சிரிக்கிறாய். சிரித்ததால் ஒரு அரச குலமே அழிந்துவிட்டது.துரௌபதியின்   சிரிப்பால் அழிந்தது கௌரவர்  குலம்

.மனிதனுக்கு துன்பமோ ,விபத்தோ வந்தால்,மதி கெட்டுப்போகிறது.விதிவசத்தால் விபத்து ஏற்பட்டால்,ஏழைக்கும்,அரசனுக்கும் மேதைக்கும் அறிவு மழுங்கித்தான் போகும்.பொன்மான் பின்னால்  ராமன் சென்றதால்,அவர் தன்  அன்பு சீதையை  பிரிந்தார்.அந்த  மான் மாய மான் என்று அறியவில்லை.

மற்றவர்கள் கூஜா தூக்கிகள். இந்தமுதலாளி இல்லை என்றால் அந்த முதலாளி. வாழ்க ஜனநாயகம்.

பாரத நாட்டு அரசியல்.


பாரதநாட்டின் அரசியல் ,
பாமரனை   குழப்பத்தில் 

வைத்து குளிர்காயும் 
அரசியல்.

இருபெரும் அரசியல் கட்சி.
இரு  பெரும் மாநில கட்சிகள்.

இவர்களின் மேல்  குற்றம் சாட்டும்,

சிறு சிறு அரசியல்  தலைவர்கள்.

சிறு சிறு ஜாதிக்கட்சிகள்.

தங்கள் சுயநலம்  நிறைவேற 
 பெருந்தலைவர்கள்  ஊழல்,ஊழல்,
என்று சொல்லி 
யார் மேல் குற்றம் 
சாட்டினார்களோ  அவர்களையே 
ஆட்சி யாளர்களாக்க ,
வாழ்க போடும் கூட்டம்.
குற்றம் சாட்டி இன்றுவரை எதுவும் 
நிரூபிக்கப் படவில்லை.
யாரும் தண்டனை பெறவில்லை.
கூட்டணியில் 
சிறுகட்சிகள் மாறி மாறி சேருவதும் 
பிரிவதும் ,
மக்களை குழப்பத்தில் 
ஆழ்த்துவதும்,
ஊழல் கட்சிகள்  வாக்குகள் பெற்று 
ஆட்சியில் அமருவதும் 
குற்றம் சாட்டியவர்கள் 
குளிர் காய்வதும் 
அரசியல் தலைவர்களின் 
அற்புத விளையாட்டு.
அனைவரும் போற்றும் தலைவர்கள்,
காந்தி;நேரு,அண்ணா.
தூற்றும் தலைவர்கள் 
சோனியா;அத்வானி;
லாலுஜி,மாயாவதி ,
கலஞரவர்கள்;செல்வி புரட்சித்தலைவி.
அனைவரையும் தூற்றுபவர்கள் 
அவர்கள் மீது   சாட்டும் 
குற்றங்கள் நிரூபிக்க உறுதியுடன் 
இல்லாத சந்தர்ப வாத 
துணிச்சல் காரர்கள்.
நாட்டின் நலம் விரும்பிகளாக 
இல்லாமல் இருப்பதால் இந்நிலை.
வாழ்க ஜனநாயகம்.
வாழ்க சோனியா;அத்வானி;
கருணாநிதி ;ஜெயலலிதா.
மற்றவர்கள் கூஜா தூக்கிகள்.
இந்தமுதலாளி இல்லை என்றால் 
அந்த முதலாளி.
நடுவில் சுப்ரமணிய சாமி.
வாழ்க ஜனநாயகம்.




கபீர். ஞான மார்க்கம் -3


கபீர்.
ஞான மார்க்கம் -3

நீ அறியாமை என்ற முக்காடை நீக்கினால்,

உன் இறைவன் உனக்கு கிடைப்பார்.
அங்குஇங்கு  எனாதபடி 
அகிலத்தில் எங்கும் வியாபித்து 
இருக்கும் இறைவனை ,
நீ சந்தித்து அருள்பெற விரும்பினால்,
கசப்பான வார்த்தைகள் பேசாதே.
செல்வத்தைச் சேர்த்து 
ஆணவமாக இருக்காதே.
பஞ்ச தத்துவங்களால் ஆன,
இவ்வுடல் பொய்யானது.
(நிலம்நீர்நெருப்புகாற்றுஆகாயம்)
அழியக்கூடியது.
ஆகையால் இந்த வெற்று உடலில் 
ஞானம் என்ற விளக்கு ஏற்று.
ஆசனத்தில் அமர்ந்து 
அசையாமல் இரு.
(ஹட யோகம் )
யோக சாதனையில் 
விலைமதிப்பற்ற 
இறைவனை சந்தித்து 
அருள்பெறுவாய்.
அப்பொழுது 
ஆனந்தம் பரமானந்தமே 
உன்னிடம்குடிகொள்ளும்.
உன்மனதில் 
சதா சர்வகாலமும் 
உடலின் ஆறு சக்கரங்களிலும் 
ஆனந்த பேரிகை
 இசைத்துக்கொண்டே 
இருக்கும்.

(குண்டலினி சக்தி ,(அரவ வடிவான இறை ஆற்றல்)
அதுவே பேரானந்தம்.


ஞான மார்க்கம் கபீர் -2


ஞான மார்க்கம் 
கபீர் 

மாயை  மிக மோசக்காரி.
நாங்கள்  அறிந்துகொண்டோம்.(கபீர் )

அது முக்குணங்களை தன்  கையில் 
வலைவிரித்துச்செல்கிறது. 
(சத்வ,ரஜ ,தாமச குணங்கள் )
அது இனிமையான மயக்க மொழி 
பேசிக்கொண்டே சுற்றிக்கொண்டே இருக்கிறது .
விஷ்ணுவிடம் இலக்குமி யாக வும்,
சிவனிடம் பார்வதியாகவும் 
வீற்றிருக்கிறது.
அது பூசாரிகளிடம்
 இறை உருவச் சிலைகளாக,

புனித இடங்களில் 
புனித நீராக,
ரிஷிகளிடம் ரிஷியாக,
அரசினிடம் அரசியாக,
மயக்கிக் கொண்டு இருக்கிறது.
அது செல்வந்தனிடம் வைரமாகவும்,
ஏழைகளிடம் காசுகளாகவும் 
பக்தனிடம் பக்தியாகவும்,
பிரம்மாவிடம் சரஸ்வதியாகவும் 
அமர்ந்து மாயை புரிகிறது.
இந்தமாயை உலகை 
ஆட்டிபடைக்கிறது.
இந்த மாயையின் 
மயக்கும் கதை 
வர்ணனைக்கு அப்பாற்  பட்டது.

ஞான மார்க்கம்-1



கபீர்  ஒரு கல்வி அறிவற்ற  கவிஞர்.
 ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக 
அவர்  பாடிய ஈரடிகள், பத்  என்ற பாடல்கள் .

அவர் இறந்தபின் இந்துக்களும் ,முஸ்லிம்களும் 
அவரது உடலை தத்தம் மதச் சடங்குகள் படி 
அடக்கம் செய்ய விரும்பினர்.
ஆனால் அவர் உடல் மறைந்து 
பூக்களாக மாறின.

அவர் இறைவனை அடைய ஞானம் தான் முக்கியம் என்ற 
ஞான மார்க்கம் தோற்றுவித்தவர்.
அவர் கடவுள் ஒன்றே என்ற தத்துவத்தை 
உணர்த்த பாடல் எழுதியவர்.

அவரின் ஒரு பாடல் கருத்துரை கேளுங்கள்:

இரண்டு கடவுள் எங்கிருந்து வந்தார்?
உன்னை, கடவுள்   இரண்டு என்ற பிரம்மையில் 
ஆழ்த்தியவர்  யார்.?
அவருக்கு அல்லா,கேசவன்,ஹரி,ஹஜ் ரத் என்று 
நாமங்கள் வைத்து இருக்கிறார்கள்..
தங்கத்தால் பலவித பெயரில்  நகைகள். 
.
அந்த நகைகளுக்கு தங்கம் தான் மூலப்பொருள்.

அவ்வாறே கடவுளுக்கு ,
பல நாமங்கள் இருந்தாலும்,
கடவுள் ஒருவரே.
ஒருவர் தொழுகை என்றால்,
மற்றவர் பூஜை-அர்ச்சனை. 
இருவரும் ஒருவரே.
அந்த இறைவனை சிலர் மகாதேவன்,
சிலர் முஹம்மது ,
 என்கின்றனர்.
சிலர் பிரம்மம், 
சிலர் ஆதம் என்கின்றனர்.
சிலரை ஹிந்து, 
சிலரை முஸ்லிம் என்கின்றனர்.
எல்லோரும் ஒரே மண்ணில் வாழ்கின்றனர்.
ஒருவருக்கு வேதம் புனித நூல் .
ஒருவருக்கு  குரான்  புனிதநூல்.
ஒருவருக்கு தர்ம குரு  மௌலானா.
ஒருவருக்கு தர்ம குரு பூஜாரி.
ஆனால் எல்லோரும் ஒருவரே.
ஒரே மண்ணில் செய்யப்பட்ட,
பலவித மட்பாண்டங்கள்.
அவைகளுக்குப் பலவித  பெயர்கள்.
ஆனால், ஹிந்து முஸ்லிம் இருவரும்,
கடவுள் ஒருவரே  என்ற உண்மை 
தத்துவத்தை மறந்துவிட்டனர்.
அதனால் இருவரும் 
இறைவனை அ டையவில்லை.
முஸ்லிம் பசுவதை செய்கிறான்/
ஹிந்து  வெள்ளாட்டை வதம் செய்கிறான்.
அதனால் இருவரும்  
தங்கள்  குறிக்கோளை அடையவில்லை.
இந்த வேறுபாட்டினால் இருவரும் 
தங்கள்  வாழ்க்கையை 
வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வியாழன், நவம்பர் 01, 2012

விரும்பியவளின் நினைவு


விரும்பியவளின்  நினைவு 
அது  விரும்பியவள்  விரும்பாவிட்டால்.
சீ"சீ " இந்தப்பழம் புளிக்கும் என்பதே 
சிறுவயதில் நான் படித்த கதை.
நினைவலைகள் ஆழ்  கடலாக
மன அலைகள் அமைதியாக,
ஓரக் காற்றை ஓரங்கட்ட .
ஒரே வழி  கடமையாகும்.
அதற்கென்றே ஆழ் நிலை தியானம்.
ஆன்மீக வழி ,பிராணாயாமம் .
ஐந்துநிமிட மூச்சு உள்மூச்சு ,வெளிமூச்சு.
நீ  மனிதன் . நினைவலைகள் வாட்டும் போது 
நிராசை அடையாதே.
நானிலத்திற்கு 
பணியாற்றும்  நற்செயலில் மனம் செழுத்து.
விரும்பியவள் விரும்பாவிட்டால்.
அது நட்பா,சதைப்பற்றா  நினைத்துப்பார்.
எதுவுமே  அழுகும் நிலை.
இதை சமுதாயம் இயம்பமறுப்பதால் ,
இளைஞர்கள்  நிலை,
புத்தரை நினை.
உலகம் மாறுகிறது .
உள்ளம் மாறும்.
நினைக்கத் தெரிந்த மனமே மறக்கத் தெரியாதா 
என்பது  உலகியல்.
மறக்க முடியும் என்பது அற  இயல்.
அறம்  நிலையானது.
அவளின் நினைவு அகவை கூடக்கூட 
அழியக்கூடியது.
நீ ஆறு  அறிவு  படைத்த மனிதன்.
நினைவலைகளை  இப்பக்கம் 
திருப்பும் ஆற்றல் மனிதனுக்கே உண்டு;
ஆகையால் தான் 
நன்றிக்கு நாய்.
நாய் போல் நாறாதே; அலையாதே 
என்ற வசவுகள்.

சில பெற்றோர்களால் பாதிப்படையும் பல மாணவர்கள்.பாரதம் ஒன்றே பாரினில் தனக்கு உவமை இல்லாத ஒப்பில்லாதநாடு.

சில  பெற்றோர்களால் பாதிப்படையும் பல மாணவர்கள்.


எனது ஆசிரியர் தொழில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருவிதமான மனக்கட்டுப்பாடற்ற பாலியலில் ஈடுபடும் மாணவர்கள்  இதனால் பலரின் பாதிப்பு.தனியார் பள்ளிகளில் ஒருவிதமானபாதிப்பு 
அனைத்திற்கும் பெற்றோர்களும் சமுதாயமும் பணத்தாசைபிடித்த வியாபாரிகளும் தான் காரணம்.

எனது ஆசிரியர் தொழிலில் முதல் அதிர்ச்சி.

நான் ஒரு  ஐ.சி.எஸ்.சி   அங்கிகாரம் பெற  முயற்சித்த ஒரு பேரூரில் தான் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்.அப்பள்ளியில் ஒருநாள்  யு.கே.ஜி .வகுப்பில்படிக்கும் ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் வகுப்பில் காண வில்லை. வகுப்பறையின் பின்னால் இருந்த சிறு சந்தில் இருந்தனர்.
அவர்கள் இருந்த நிலையில் ஆசிரியை கோபத்தால் திட்டி அழைத்துவந்தார்.
அந்நிலைக்கு அவர்கள் பெற்றோர்தான் காரணம் .பெற்றோர் உறவில் ஈடுபட்டதை  கண்ட குழந்தைகள் அதே நிலையில்  பள்ளியின் பின்புறத்தை 
பள்ளி அறையாக பயன்படுத்த முயன்ற பிஞ்சுகள்.
இது பெற்றோர்கலால்பாதிப்பு.இளம் தளிராக இருக்கும்போதே.
இது பல பிஞ்சுகளில் நஞ்சு சேரக்காரணம்.

சென்னை மாநகரில் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்த பொழுது பல மாணவர்கள்  சாவிக்கொத்து பரிமாற்றம்.அவர்களுக்குள் பேச்சு.அதுவும் ரகசிய முறையில்.பின்னர் தெரிந்தது சாவிக்கொத்தில்பலானா படங்கள்.அதுவும்  பள்ளி அருகில்  உள்ள நடைபாதை வியாபாரிகளால் .பள்ளியின் தேர்ச்சி விகிதம் 25-40%
பின்னர் அறிவியல் வளர்ச்சி .பெருமைபெறும் அளவில் .
படங்கள்.குறுந்தகடுகள். அதிலுள்ளபாலியல்காட்சிகள்.
என்னைபோன்று நகரத்திற்கு பணியில்வரும் ஆசிரியர்களுக்கு  அதிர்ச்சியும் ஆவலும்  இதனால்பல ஆசிரியர்களுக்கும் பாதிப்பு.
இதில் அதிகம் பாதிக்கப் படுவோர்கள் மாநகர  பள்ளி,அரசு உதவிபெரும்   பள்ளி மாணவர்கள்.
பலபள்ளிகளில்  மாணவர்கள் எண்ணிக்கை குறைத்துவிட்டது.
காரணம் 
ஆசிரியர்கள்கடுமையாக தண்டிப்பதை  பெற்றோர்கள்,மாணவர்கள்,சில ஆசிரியர்கள்,அரசு யாரும்விரும்பவில்லை.
மனோதத்துவ முறையில் திருத்த பள்ளிகளில் வசதிகள் இல்லை.
ஆசிரியர்களும் அவர்களை கண்டிக்க முடியவில்லை.அறிவுரையால் தான் திருத்த  முயல்கின்றனர். ஆனால் நகரத்தில் சிறு வீட்டில் ஒரே அறையில் வாழு ம்பெற்றோர்கள்.
அந்த 16--19 வயதில் உள்ள மாணவர்கள் பெண்கள் பின்னால் சென்று தவறுகள் 
செய்கின்றனர்.
அவர்களுக்கு சரியான வழிகாட்டிகள்,ஒழுக்கம்,புலனடக்கம் 
கற்றுக்கொடுக்க சரியான கல்வி முறை,பெற்றோர்கள்,திரைப்படங்கள்,திரைப்பட பாடல்கள் 
பெரியவர்கள்   சூழல் அமையவில்லை.
அன்பழகன் இயக்கத்தில் வெளியான "சாட்டை"கல்வித்துறைக்கு 
ஒரு சாட்டை அடி.
அதுதான் நீயா,நானா  நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசாமல் 
வயதுக்கோளாறு என்று கூறப்பட்டது.
மேல்நாட்டு கலாசாரம் நம் நாட்டில் நுழைந்து வளர்வதும் 
இந்த  கணினிப்  பயன்பாடு.

இந்த சூழ்நிலையில் யோகா,ஆன்மிகம் கலந்த ஒரு பாட திட்டம் அவசியம்.
அமெரிக்கத் தேர்தலில் ஒட்டு போடுவோர்களுக்கு இலவச யோகா வகுப்பு விளம்பரம்.
அது நம் நாட்டு உயர்கலை. 
இங்கு மறக்க ,மறைக்கப்பட்டு 
நல்லதை உடனடியாக ஏற்கும் அமெரிக்க நாட்டில் வளம் பெறுகிறது. 
ஜாதி,இனம் ,மதம் பார்க்காமல் நல்லதை ஏற்றால் நாடு நலம் பெரும்.
நம் நாட்டில் தான் சுயநலம் ஜாதி,மத,இனம்  என்ற பெயரால் 
தடைக்கற்களாக பயன் படுத்தப்படுகின்றனவே.

நாட்டின் முன்னேற்றம் என்ற செயல்பாடு 
சுயநலமற்ற முறையில் இன மத,ஜாதி,மொழி  வேறு பாடு 
கருதாமல்  நடந்தால் 
பாரதம்  ஒன்றே பாரினில் தனக்கு உவமை இல்லாத 
ஒப்பில்லாதநாடு.


பாலியல் குற்றங்களுக்கு யார் காரணம்/?

பாலியல் குற்றங்களுக்கு யார் காரணம்/?

நான் 16 வயதிலிருந்து ஆசிரியர். அதுவும் ஹிந்தி ஆசிரியர்.என்னிடம் ஹிந்தி பயில வந்தவர்கள் 
6 வயது முதல் 70 வயதுவரை.
பல வித பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள்.
பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள்.
கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் ஆசிரியராக 
மெட்ரிக் பள்ளி,மத்திய அரசுப்பள்ளி,அரசு உதவிபெறும் பள்ளி,ஹிந்தி பிரசார் சபை என்று பலவித மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

மாணவர்கள் அனைவரும்  நல்லவர்கள்.
சனாதன தர்மத்தில் பிரமச்சரிய  விரதத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர்.
புலனடக்கம் பற்றி பேசினர் .
வள்ளுவரும் 
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் 
ஏமாப்பு உடைத்து என்றார்.
ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப்படும் -என்றார்.
இது வெறும் ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்று  யாரும் கடைபிடிக்கவில்லை.
கோயிலில் ஆன்மீகம்  கலந்த பாலியல் கல்வி 
அளித்தனர்.
ஆனால் கடவுள் இல்லை என்ற பகுத்தறிவு வாதம்.
அறிவியல் முன்னேற்றம்.  சமுதாயத்தை 
சீரழிக்கிறது.
விந்து சிந்தினால் நொந்துசாவான்  -என்ற 
சித்தர் வாக்கியம் சிரிப்புக்காளாகி ,
ஆங்கில டாக்டர் சொன்ன 
தேநீர் அருந்துவதுபோல் உடலின்பமும் 
ஹஸ்த மைத்துனமும் சாதரண மாகியது.
பேராசிரியர் முதல் தமிழருவி வரை 
காதலிக்கும் வயது அப்படி இப்படித்தான் 
காளை  வயதில்.
அழகுதேவதைகள் நடமாடும்கல்லூரிகளை 
நாடும் வயது  அது என்றனர்.
அறிவுரை கூறுபவர்கள்  இக்காலத்தில் 
மனக்கட்டுப்பாடு என்று  கூறாமல் ,
மனம்போன போக்கில் பெண்கள் பின்னால் சுற்றுவது தான் ஆண்மை  என்ற 
இளைஞர்களை திசை திருப்பும் 
திரைப்படங்கள்,பாடல்கள்.
அதே எண்ணங்கள் இன்று  பெண்கள் மனதிலும்.
தண்டச்சோறுன்னு அப்பன் சொன்னா 
டேக் இட் ஈசி  பாலிசி.
ஆங்கிலத்தால் வந்த வினை.
வேண்டாதவர்கள் பேசினால் எதிர்ப்பு.
கல்யாணம் ஓடிப்போய் கட்டிக்கலாமா?
பிள்ளை குட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமா?
இது ரசனை.
காதல் கலாட்டா ,
ஒருபெண் நாய் முன் பல ஆண்நாய்கள் சுற்றுவதுபோல் 
 சுற்றினால் காதல் என்று 
இளைஞர்களை கெடுப்பது யார்?
ருஷ்ய ஸிங்கர்  என்ற ஒருவரை அவர் தகப்பனார் 
பெண் வாசனை இன்றி வளர்த்தார்.
அதிலிருந்து 
காதல் கட்டுப்பாடு மனிதன் தன்  மனக்கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளக் கூடியது.
அதை தூண்டிவிடும் நூல்கள்,படங்கள் 
இளைஞர்களை  பலகீனப்படுத்துகிறது.
பலன் 
காதலை மறுத்தால் ஆசிட் வீச்சு,கொலை,
காதலித்து ஏமாற்றி குழுவாக கற்பழிப்பு என 
இரக்க  மற்ற உணர்வுகள்.
காளையர்கள் மனக்கட்டுப்பாடு இல்லை என்ற நிலை 
அதன் பலன் கள்ளக் காதல்.
கணவன் கொலை.
மனைவி கொலை.
கள்ளக்காதல்பார்த்த குழந்தை கொலை.
நல்லதை பரப்புவர்கள் குறைந்துவிட்ட காலம்.
ஆன்மிகம் பாலியல் குற்றத்தை தவிர்க்கும்.
சமுதாயம் 
நம் சித்தர்கள் காட்டும் வழியில் செல்லவேண்டும்.
ஆனால் அது வயதானவர்களுக்கு என்று 
ஒதுக்கி வைத்துவிட்டு 
வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும் என்ற 
திரைப்படத்திற்கு 
முக்கியத்துவம் அளிக்கிறது.
அனுபவத்தின் மூலம் எதிர்கால
 இளைஞர்கள்  வாழ்க்கை வளம் பட 
கூறுவது 
ஏளனம் செய்யப்படுவதால்  தான் 
விவாகரத்துக்கள் நீதிமன்றங்களில் 
அதிகமாகிறது.





புதன், அக்டோபர் 31, 2012

ஆகையால் பல மொழி அறிவு வாழ கைகொடுக்கும்.

.

        நான்  ஆசிரியர் பணி  ஆற்றத் தொடங்கியது பதினாறு  வயதில்.எனது குடும்ப சூழல்  அம்மாவின் கடும் உழைப்பு   தேசீய நீரோட்டத்தில் இந்திய தொடர்பு மொழி ஹிந்தி பிரசாரம்.இதில்  வாழ்க்கை நடத்த  வருமானம். என் தாயார் தமிழும் சமஸ்கிருதமும் தெரிந்ததால் லக்ஷ்மிவிலாஸ் வங்கி மேலாளர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் அவர்கள் மனைவியின் தூண்டுதலால் ஹிந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.மாதக் கட்டணம் நாலணா,எட்டணா .என் அப்பாவிற்கு  உழைக்கத் தெரியும்.உழைப்பைப் பெறுபவர்கள் ஊதியம் கொடுக்க தயங்குவார்கள்.கொடுத்தாலும் தன் அண்ணன்   குடும்பத்திற்கும்,ஏழை எளியவர்களுக்கும் போய் சேரும்.அதனால்,எனது தாயார் கோமதிஜி  1953இல் இருந்து ஹிந்தி பிரசாரத்தை ஆரம்பித்தார்.நான் பிறந்த பின் பழனி அரசு பெண்கள்  மேல் நிலைப்பள்ளியில்  படித்தார்.
அதனுடன் ஹிந்தி தேர்வுகளும் .
தாயாரின் ஹிந்தி அறிவு எனக்கும் இயற்கையாக வந்தது.
அவருக்கு முதல் அரசு நியமனம் கொம்புக்கார நேண்தல் என்ற கிராமம்.முத்தனேந்தல் என்ற ரயில் நிலையத்தில்  இறங்கி ஐந்து ஆறு மையில்  நடந்து செல்ல வேண்டும்.பேருந்து வசதிகள் கிடையாது.
பின்னர்  சிங்கம்புணரி பள்ளியில் பணி புரிந்தார்.ஹிந்தி ஆசிரியை.அக்கம்பக்கத்தில் ஹிந்தி எதிர்ப்பு. அமைச்சர் மாதவன் அவர் உறவினர்கள் பக்கத்தில்.ஆதரவு.ஹிந்தி அரசுமொழி ஆவதற்குத்தான் அவர்கள் எதிர்ப்பு. ஹிந்தி விரும்பி கற்போருக்கு என்றுமே தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு கிடையாது.அதனால் தான் இன்றும் தமிழக அரசின் எவ்வித உதவியும் இன்றி ஆயிரக்கணக்கில் ஹிந்தியால் பொருளீட்டுவோரும் ,லக்ஷக்கணக்கில் ஹிந்தி படிப்போரும் இன்றும் உண்டு. ஆனால் ஓய்வின்றி ஹிந்தி பிரசாரம் உண்மையாக செய்வோருக்கு வருமானம் இல்லை.
அரசுக்கல்லூரி,பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தாலும்  ஊதியம் அதிகம்.அதுபோல் மத்திய அரசு ஹிந்தி அலுவலர்கள் வேலை இல்லாமல் இருந்தாலும் ஊதியம் அதிகம்.
இன்று இந்தி பிரசாரம் பிரசார சபைஇந்தி பிரச்சாரகர்களின்  நலனைவிட,அதாவது லக்ஷக்கணக்கில் மாணவர்களை ஹிந்தி  பயிலவைக்கும்  பிரச்சாரத்தை விட்டு விட்டு,மத்திய அரசுபள்ளிகள், கல்லூரி என்பதில் ஈடுபடுகிறது.முழு நேரத்தில் ஹிந்தி பிரசாரம் செய்தல் வறுமைக்கோட்டிற்கு கீழ் தான்.
ஆனால் ப்ரசாரர்களிடமும் ஒற்றுமை இல்லை.
அங்கும் தேர்தல்.வழக்கு.ஊழல். வேலை நிறுத்தம் அனைத்தும்.
எப்படியோ  நான் வளர்ந்தது,ஒரு சமுதாய அந்தஸ்து பெற்றது,உலகப் புகழ் பெற்ற ஹிந்து மேல்நிலைப்பள்ளியின்  தலைமை ஆசிரியராக ஒய்வு பெற்றது  எல்லாம் ஹிந்தியால் தான்.ஆனால் எனக்கு தமிழார்வம் அதிகம்.
தாய் மொழி தெலுங்கு.படித்தது வளர்ந்தது,ரத்தத்தில் கலந்தது தமிழ்.வருமானம் ஹிந்தி.
ஆகையால் பல மொழி அறிவு வாழ கைகொடுக்கும்.




மன சாட்சி உள்ள அரசியல் வாதிகளுக்கு, ஒரு வேண்டுகோள்:

  வேளச்சேரி சாலை குண்டும் குழியுமாக 
பத்துபேருக்குமேல் 
இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் 
படுகாயம்.


மக்களுக்காக மக்கள் ஆட்சி.


நாட்டில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

ஆனால் ,
சிலர் மற்றவர்களை ஏமாற்றி மகிழ்கின்றனர்.
அதில் ஏற்படும்  மகிழ்ச்சி ,
கம்பீரமாக  மேடை போட்டு  சொல்லமுடியுமா/?
கோடிக்கணக்கில் பணம்
வரிகட்டா பணம் வெளிநாட்டு வங்கியில்
சேமிக்கப்பட்டுள்ளது என்பதை
அலங்கார  மேடையிட்டு
அகங்கார  தலைவர்கள்
 முழங்க முடியுமா?
மன சாட்சி  உள்ள  அரசியல் வாதிகளுக்கு, ஒரு வேண்டுகோள்:
ஆயிரக்கணக்கில் குழந்தைகளும் பொதுமக்களும்  சாக்கடை ஓடும் 
சாலையில் நடக்கின்றனர்.
அந்த சாலை பராமரிக்க பணமில்லை.
 அண்ணா வளைவு கலைஞர் வைத்தது என இடித்து பின்னர் எம்.ஜி.ஆர். திறந்தது என அறிந்து மீண்டும் நிலைநாட்ட கோடி.
சமாதி புதுப்பிக்க  கோடிகள் .
கண்ணகி சிலை இடிக்க ,மீண்டும் வைக்க கோடி .
ஆனால் ,வரி  செலுத்தும்  மக்களுக்கு 
சாலை இல்லை.
குடிதண்ணீர் இல்லை.
மின்சாரமில்லை.
மன்னராட்சியில் தான் ராஜ தர்பார்.
மக்களாட்சியிலுமா  இப்படி/?
மக்களின் வரிப்பணம்
 மக்களின் நன்மைக்கே.
அரண்மனைகட்டவும்,அந்தப்புரம் கட்டவும்  அல்ல.
தலைமைச் செயலகம் மாற்றம்.
துக்ளக் தர்பாரா?
கோட்டூர்புரம்   நூலக மாற்றம்.
எதிர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு,
வரிப்பணம்.
மக்கள் ஏமாளிகள்.
தலைவர்கள் இரக்கமற்றவர்கள்.
மடிப்பாக்கம் சாலைகள் 
பள்ளி செல்லும் குழந்தைகள்  படும் அவஸ்தை.
பாதாசாரிகள் படும் அவஸ்தை.
சுகாதாரக்கேடு.
இதற்கெல்லாம் 
நடவடிக்கை இல்லை.
குப்பை;நாற்றம்;
மகிழ்ச்சியில்லா மக்களின் வரிப்பணம் 
மன சாட்சி இல்லாமல் 
பணப்பெட்டிக்காக.
மரணம் நிச்சயம்.
இயற்கையின் சக்திக்கு 
பயந்து  கிடைத்த பதவியை 
மக்களின் நன்மைக்கு 
பயன் படுத்துங்கள்.

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2012,03:36 IST
சென்னை;மடிப்பாக்கம் உள்ளிட்ட தென் சென்னை புறநகரின், பல பகுதிகளில் மீண்டும் பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது "டெங்கு'வாக இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.
மடிப்பாக்கம், பெருங்குடி, உள்ளகரம் - புழுதிவாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை உள்ளிட்ட, பல பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை வசதியில்லை. பல இடங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் சங்கமிக்கிறது. இந்த சுகாதார சீர்கேட்டால் அப்பகுதியில், கடந்த மாதம் பலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது. மடிப்பாக்கம் பகுதியில் இரு குழந்தைகள் உட்பட ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு "டெங்கு' காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சை எடுத்து குணமடைந்தனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களில் மீண்டும் அப்பகுதிகளில் மர்ம காய்ச்சல் தலைகாட்டியுள்ளது. துரைப்பாக்கம், சூளை மாநகர், முதல் தெருவை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் மீனா, 5.இச்சிறுமி, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள, ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி., படிக்கிறாள். இவளுக்கு கடந்த சில நாட்களாக, தொடர் காய்ச்சல் இருந்து வருகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஒரு தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறாள். இச்சிறுமிக்கு "டெங்கு' காய்ச்சலாக இருக்கலாம், என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இச்சிறுமி போல பலர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்சென்னை புறநகர் பகுதிகளில், சுகாதார துறையினர், தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.