புதன், ஜூன் 19, 2013

என்று தணியும் நேர்மையின் தாகம் .

இந்திய அரசியல்.

தடி எடுத்தவன் தண்டல் காரன்.

இன்று பணம் என்ற தடி கொண்டவன் 

அரசியல்வாதி ;மக்கள் பிரதிநிதி;

மக்கள் வரிப்பணம் அதையே இலவசமாக 

வழங்கி வாக்குப் பெரும் அரசியல் தந்திரம்;

அம்மா உணவகம்  நல்ல திட்டம்;

ஆலயங்களில் அன்னதானம் உயரிய திட்டம்.

கல்விக்கொடங்களில் இலவசங்ககள்;

அனைத்தும் உயரிய திட்டங்கள்;

பாராட்டப்பட வேண்டியவைகள்;
அரிசிகார்டுக்கு  இலவசம் ;
சர்க்கரை  கார்டுக்கு கிடையாது.

ஒய்வு பெற்ற முதியோர்கள்,
வருமானம் இழந்தோர் 
எத்தனையோ பேர் 
அன்றைய சூழலில் சர்க்கரை அட்டையாக மாற்றியோர்,

அன்றைய அரிசி  அட்டை,
இன்று  பணவசதி கொண்டோரிடம்,

இலவசங்கள் ஏழைகளை சென்றடைவதில் எத்தனையோ 

ஊழல்கள்; சிக்கல்கள்;

ஒரே வீட்டிற்கு இரண்டு  மூன்று இலவசங்கள்;

இதற்கு ஒரு விசாரணை குழு போட்டால் 

இலவச விநியோக முறைகேடுகள்;

விசாரணைக் குழுக்கள் அறிக்கை  வெளிவராது;
சொத்துக்குவிப்பு வழக்குகள் போல்;

பல விசாரணைக்குழுக்கள் ,பல அறிக்கைகள் 

மீண்டும் கருணை அல்லது ஜெயா;
வேறு மாற்று வழியில்லை 
தமிழக மக்களுக்கு;

என்று ஏற்படுமோ விழிப்புணர்வு;
என் காலம் முடியும் நேரம்;
விழி த்து க்   கொள்ளுமா 

இளைய சமுதாயம்;

பணத்திற்கும் ,இலவசத்திற்கும் 

விலைபோகுமா ,
விலைமதிப்பில்லா வாக்குரிமை.

பாரதி இருந்தால் பாடி இருப்பான்.

என்று தணியும் இந்த இலவச மோகம்,

என்று தணியும் நேர்மையின் தாகம் .



செவ்வாய், ஜூன் 18, 2013


அன்னையர் தினம், சுவைக்கு ,அன்பிற்கென்றால் ,

அப்பாக்கள் தினம் ,அறிவுக்கு,ஆஸ்திக்கு.

அப்பா மட்டும் பொருளாதாரம் என்ற
 நிலை மாறிவரும் சமுதாயம்.
அன்னை யும்  பிதாவும் சேர்ந்து
சம்பாதிப்பதால் பொருளாதார தன்னிறைவு.

ஆனால், மன நிறைவு?

இது என்னைப்போன்ற ஒய்வு பெற்றோரின் புலம்பல்.

ஆனால் ,அனுபவத்தில் பார்த்தால்

எவ்வளவு முன்னேற்றம்.

குழந்தைகளின் திறமைகள்  வெளிப்பட

பொருளாதாரம் தன்னிறைவு ?

அப்பாவின் வருமானம் ,
போதும் என்றால் போதும்.

ஆனால் பெற்ற குழந்தைகளைப் பள்ளிக்கு மட்டும்

அனுப்பினால் போதுமா?

ஓவியம்,இசை,விளையாட்டு,இசைக்கருவிகள்,கராட்டே ,

இன்னும் எத்தனையோ புதைந்து கிடைக்கும் திறமைகளை

வெளிப்படுத்த  தனிப்பயிற்சி. கட்டணம்.

இருவர் சம்பாதிப்பதால்  குழந்தைகள் தங்கள்

திறமையை வளர்த்துக்கொள்ள முடிகிறது.

அதே சமயம் தனிப்பயிற்சி கட்டணம் கட்டி

நேரத்திற்கு குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்ப முடியாமல்

குழந்தைகளின் பயிற்சி அரைகுறை யாவதும் உண்டு.

குழந்தைகளின் ஆர்வம் குறைவதும் உண்டு.

பெற்றோர்கள் சற்றும் அயராமல்,ஓய்வெடுக்காமல் இருக்கவேண்டும்.

இது எவ்வளவு  தூரம் சாத்தியமாகிறது என்றால்......

அது கேள்விக்குறி தான்.








இச்சா சக்தி ,ஞான சக்தி இரண்டும் இருந்தால் தான் க்ரியா சக்தி.

ஆன்மிகம் என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை உணரச்செய்வது.

அது எல்லோரின் வாழ்க்கையிலும் எப்படியோ ஏற்பட்டுவிடுகிறது.


சிலர் தன் ஆணவத்தால் தன்  ஆற்றல் வெளிப்படும் வரை உணர்வதில்லை.
தனிமனிதன் அனைத்தும் தன் முயற்சியால் முழு வெற்றிபெறும் என்றே நினைக்கிறான்.

முயற்சி-முயற்சி-முயற்சி-
- என்னதான் முயற்சி எடுத்தாலும் முதல் பரிசு  ஒருவருக்கே.

அனைவரும் முதல்வராக முடியாது.

அனைவரும் குடியரசுத் தலைவராக முடியாது.

முயற்சி எடுப்போர் அனைவரும் சிறந்த பாடகராக முடியாது.

பணம் படைத்தோர் அனைவரும் தான் நினைத்ததை  சாதிக்க முடியாது.

சாதித்தவர்கள் அனைவரும்  பணம் படைத்தவர்களாக இருக்க முடியாது.


அறிவும் திறமையும் இருந்தாலும்  அனைவரும் புகழும் /ஆதரிக்கும் மகானாக
முடியாது.

முதுகலை/ஆராய்ச்சி படிப்பில் பட்டம் பெற்றாலும்  வரகவிகள் போல்
கதையோ /கட்டுரையோ/கவிதையோ எழுத முடியாது.

பட்டம்,பதவி,புகழ்  முயற்சியால் கிடைத்தாலும் அதற்கு இறைவனின் கருணை வேண்டும்.

படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு,பாடம் படிக்காத மேதைகளும்

பாரினில் உண்டு. என்ற திரைப்பட பாடல்.

ஆலயங்கள் புதிது புதிதாக தோன்றினாலும் ,சில ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம்  அலை மோதுகிறது.

சில ஆலயங்களுக்குச் சென்றால்,மீண்டும் மீண்டும் செல்லும் உணர்வு மேலோங்குகிறது.
சில ஆலயங்களுக்கு செல்லவே மனம் ஈடுபடுவதில்லை.
அப்பொழுது பக்தர்களுக்குள் வேறுபாடு.
விநாயக பக்தர்கள்,காளிதாஸ்,காயத்ரி ,
சிவதாஸ்,ஐயப்ப பக்தர்கள்,முருக பக்தர்கள்,ராமதாஸ்,கண்ணதாஸ் ,சக்தி உபாசகர்கள்,ஹனுமான்  உபாசகர்கள்,

இவைகளைத்தவிர  தேவதூதர்கள்,ஸ்வாமிஜீக்கள், ஆஷ்ரமங்கள் ,மடாலயங்கள்.பாபாக்கள்.அகோரர்கள்,சித்தர்கள்.

   இத்தனை அலௌகீக  சிந்தனை தூண்டுவோர்கள் ,சுய விழிப்புணர்கள்

ஏற்பட்டாலும்  லௌகீக மாயை/சைத்தான்/சாத்தான்  மனிதர்களை
மிகவும் கவர்ந்து ஆட்டிவைக்கிறது.

இதை உணரும் வரை மனிதர்களுக்கு நிம்மதியில்லை.

ஊழல் ,லஞ்சம்,சுயநலம் ,மோகம் முதலியவை  ஒழிய வழியுமில்லை.

மன அமைதிக்கு,மகிழ்ச்சிக்கு,நிம்மதிக்கு ஒரே வழி  மனத்தூய்மை யான

பவித்திரமான  பக்தி.  ஒருநாள் வாழ்நாளில் உணர்வ தே ஆன்மிகம்.

ஆகையால் தான் ஆன்மிகம் பலரின் புகலிடமாக விளங்குகிறது.

பண ஆசை பல   ஆன்மீக  ஆண்டவன் அருள் பெற்றோரையும் பொய்யர்களாக்கி  அவப்பெயர் ஏற்படுத்துகிறது.

அதனால் தான்  மக்கள் சண்டை-சச்சரவு,துன்பம் போன்றவைகளை அனுபவிக்கின்றனர்.

ஆசையே துன்பத்திக்குக் காரணம் என்பதைவிட பேராசையே காரமாகிறது.

இச்சா சக்தி ,ஞான சக்தி இரண்டும் இருந்தால் தான் க்ரியா சக்தி.

ஆனால் இந்த இச்சை  பேராசையாக,புலனடக்கம் இன்றி அதிகரித்தல் துன்பமே மிஞ்சும்.








வியாழன், ஜூன் 13, 2013

ஆரோக்யமாக வாழலாம்.

இறைவனை வழிபடும்போது 

நாம் சுயநலத்திற்காக  வழிபடலாமா?

பொது நலத்திற்காக வழிபடலாமா?

நமது   தேவைகளுக்காக வழிபடலாமா?

பொதுநலப் பணிகளுக்காக?

செல்வம் வேண்டும்  என்பதற்காக ?

இவை எல்லாம் நம் முயற்சியில் 

சாதிக்கக் கூடியவை.

பின்னர்  வழிபாடு?

தெய்வ சக்திபெற.

இறைவன் படைத்த உடல் 

நோய் -நொடியின்றி 

ஆரோக்யமாக வாழ.

மனது சஞ்சலமின்றி வாழ.

மன நிறைவு அமைதியுடன் வாழ.

மனதில் தூய எண்ணங்கள், 
உயர் சிந்தனைகள்  வளர.

மன ஒருமைப்பாடு இருந்தால் 

உயர்ந்த நோக்கங்கள் இருந்தால்,

தீர்க்க ஆயுளுடன் ஆரோக்ய உடலுடன்  வாழலாம்.

கவலை பொறாமை என்பதில் 
வலை உள்ளத்து.
ஆமை உள்ளது.

வலையில்  சிக்கினால் தப்ப முடியுமா?

ஆமை மெதுவாக செல்லும் ,
பொறாமை,பேராசை இரண்டும் 
மெதுவாக  நம்மை கவலை என்ற வலையில் 
சிக்கவைத்துவிடும்.

அதிலிருந்து தப்புவது இயலாத காரியும்.

சிந்தா ,சிதா  என்றவர்த்தைகள்.
சிந்தா என்றால்  கவலை.
சிதா  என்றால் சிதை.
சிதை உடனே எரித்துவிடும்.
கவலை தினந்தோறும் .
இறந்த பின் சிதை.
உயிருடன் அன்றாடம் கொள்வது கவலை.
இதிலிருந்து  மனிதன் தப்பிக்க 
ஆழ்மனதில் முழு விசுவாசத்துடன் 

பக்தி என்ற வலையை வீச வேண்டும்.

நல்ல உயர்ந்த எண்ணங்களுக்கு முதலிடம் 
தந்து 
தீய எண்ணங்களான 
ஆசை,ஆணவம்,பொறமை,கோபம் 
விட்டு விட வேண்டும்,

काम ,क्रोध,मद,लोभ,,जब मन में लगे खान,
तब पंडित मूर्खो  एक सामान..

இந்த குணங்கள் மனதில் குடிகொண்டால் 

படித்த பண்டிதர்களும் ,முட்டாளும் சமமே என்றார் துளசிதாசர்.

வள்ளுவர் 

அறத்தைப் பற்றி கூறும்போது 

அழுக்காறு,அவா,வெகுளி, இன்னா சொல்  இவை நான்கும் 
இழுக்கா இ யன்ற தறம்   என்றார்.
இன்னா சொல்  என்பது
 மற்றவர்களுக்கு தீங்கி விளைவிக்கும் சொற்கள்.
 அதன் விளைவு கவலையில் ஆழ்த்திவிடும்..

 ஆகையால் இவ்வுலகக் கவலையிலிருந்து  விடுபட 

பகவானின் தியானம் அவசியம்.

உலகில் வாழும் நாம் அழியும் உலகம், இவ்வுடல் என்றறிந்தும்,

சுயனலத்தால்  மற்றவர்களுக்கு இன்னல் தரக்கூடாது.

இவ்வுலகியல் இன்பங்களில் பட்டும் படாமலும் 
ஒட்டியும் ஒட்டாமலும் 
ஆண்டவன் ,இறைவன் மேல்  

பக்தி ,சிரத்தை கொண்டு வாழ்ந்தால் 
ஆரோக்யமாக வாழலாம்.


செவ்வாய், ஜூன் 11, 2013

இப்பள்ளிகள் டாஸ்மார்க் மதுக்கடைகள் போல் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்க வில்லை.

பாரத  நாடு ,பழம் பெரும் நாடு;
இன்னினைவகற்றாதீர் --என்றார் 
மஹா கவி பாரதி.
விடுதலைக்கு முன்பே முழக்க மிட்ட பாரதி 
ஆடுவோமே பள்ளுபாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று  ஆடுவோமே என்றான்.

அவரின் தேசீய ஒருமைப்பாடு பாடல் 
வெள்ளிப்பனி மலை மீது உலாவுவோம்,

தேசீய நதி இணைப்புச் செய்தி தருகின்றது.

ஆனால் இன்று காவிரி நதியின் நீருக்காக 

பெரும் போராட்டம்.

தேசீய நதி நீர் திட்டம் வலியுறுத்தும் போராட்டம் இல்லை.

முதலில் ஊழலற்ற தேசீயக் கட்சிகள் இல்லை.

காங்கிரெஸ் ,பாரதீய ஜனதா  இரண்டுமே ஆட்சி பீடத்தில் 

இருந்தாலும் இரண்டுமே களங்கமற்ற கட்சி அல்ல.

ஒவ்வொரு மாநிலக்கட்சியும் 

மம்தா வானாலும் ,மாயாவானாலும் ,ஜெயா வானாலும் 
ஊழலற்றவர்கள் என்று பாராட்டுப் பெறவில்லை.

ஊழல் என்பது அரசியல் வாதிகள் ஊழல் என்றால் கோடிக்கணக்கில் 

என்றால் தான் ஊழல். இலக்ஷக் கணக்கு என்பது ஊழலளல்ல என்று 
ஒரு மத்திய அமைச்சர் விளக்கயுள்ளார்.

அரசியல் வாதிகளின் நிலா ஆக்கிரமிப்புகள்,
மலை மடுவான  உண்மைக் கதைகள்
கற்பனைக்கதைகளாக மாறிவருகின்றன.

நாட்டின் முன்னேற்றம் என்பதில் இந்த 

சுயநலம் ,தேர்தல் ஓட்டுப்போட பணம் வாங்கும் வாக்காளர்கள்,

கோடிக்கணக்கில் தேர்தலில் வெற்றிபெற சிலவு செய்யும் 

அரசியல் வாதிகள்,

கல்வி வாணிகம் ,
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பொறியியல் கல்லூரி ,
மருத்துவக் கல்லூரி என்ற நிலைமாறி 

மழலை பள்ளிமுதல்  பெருமுதலீட்டளர்களுக்கே

என்ற நிலை மாற்றும் அரசின் ஆங்கில மோகக் கல்வி .

பெட்டிக்கடை கூடாது என்பதுபோல் சிறு பள்ளிக்கூடங்கள் கூடாது 

என ஏழை ,நடுத்தர மக்கள் கல்வி நிறுவனங்கள் 
நடத்தக் கூடாது  என்று திட்டமிடும் அரசாங்கம்.
கல்வி அதிகாரிகள்.

பொதுமக்கள் விரும்பி ஏற்கும் பள்ளிகளை மூட உத்தரவு.

எத்தனையோ அரசு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 
அடிப்படைவசதி இல்லை.
மக்களுக்கு கல்விபயில சுதந்திரம் வேண்டும்.
அதை பொருளாதரத்திற்கு முக்கியத்துவம் அளித்து
இடவசதி இல்லை என்று பலர் வயிற்றில் அடிப்பதில் 

சற்று பொறுமை வேண்டும்.
மாணவர்கள் வரவில்லை என்றால் பள்ளி மூடப்படும்.
எத்தனை நகராட்சி,மாநகராட்சி பள்ளிகள் தானாகவே மூடப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகளும் தரமில்லை என்றால் 
அதுவாகவே மூடப்படும்.
இதை நினைவில் கொண்டு மூடப்படும் பள்ளிகளில் 
மாணவர்கள் எண்ணிக்கை இருந்தால் 
மூடக்கூடாது.
சிறு பள்ளிகளும் நடுத்தரவருவாய் 
உள்ள ஏழை,எளிய மக்களுக்குத் தேவை.
பெட்டிக்கடைகள் கூடாது என்று சொல்ல முடியாது.

அவ்வாறே பலனளிக்கும் சிறு பள்ளிகள் இருக்கவேண்டும்.
அரசாங்கத்திற்கு தனியார் பள்ளிகளால் 
கோடிக்கணக்கில் பணம் மிச்சம்.

இப்பள்ளிகள் டாஸ்மார்க் மதுக்கடைகள் போல் 
சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்க வில்லை.

ஆழ்ந்து சிந்தித்தால் இப்பள்ளிகளின் தியாகமான ஆசிரியர்கள்,
நிர்வாகிகளின் உண்மைத் தொண்டு புரியம்.
அரசே!ஏழை எளிய நடுத்தர மக்களை வாழ வைக்கும் 
பள்ளிகளை மூடவேண்டாம்.
பெற்றோர்கள் பொறுப்பில் கல்வி இருக்கட்டும்.









திங்கள், ஜூன் 10, 2013

ஒரு யுகாவதர புருஷனைப் புவிக்கு அனுப்பு.

  நாட்டின் சுதந்திரம்
 தன்நல மற்ற தியாகிகளால் 
கிடைத்தது.
தன நல்லுயிர்,
உற்றார் உறவினர் 
மேல் கொண்ட பாசம் 
கட்டிய மனைவியின் மோகம் 
பெற்றெடுத்த குழந்தை 
நேரடியாக கொஞ்ச முடியா நிலை 
அனைத்துயும் துறந்து 
நாடே பெரிதென 
நாட்டுப்பற்று காரணமாக 
தேசபக்திக்காக 
துறவறம் பூண்டு ,
சிறைச்சாலைக் கொடுமைகள் ,
சுதந்திரம் காணாமலே 
உயிர் துறந்த தியாகிகள்.

ஆனால் ,விடுதலைக்குப்பின் 

நாடு முன்னேற்றம் அடைந்தாலும்,

ஏழைகளும் ,நடுத்தர மக்களும் 

சுகம் பெறவில்லை.

வீடுகட்ட அனுமதி,வங்கிக்கடன்,

ஆனால் கட்டிய வீடுகளுக்கு 

செல்ல நல்ல சாலைகள் கிடையாது.

கழிவுநீர் வசதிகள் கிடையாது,

குடிநீர் வசதிகள் கிடையாது.

சமாதிகள் புதுப்பிக்க,
சிலைகள் எடுக்க ,
வளைவுகள் இடிக்க,மீண்டும் தாங்கி வைக்க 

என பல கோடி ரூபாய்கள்.
இன்று ஒரு சிலைக்கு ௧௦௦ கோடி ரூபாய்.

கட்டிய வீட்டிற்குச் செல்ல சாலைகள் இல்லை.
சாக்கடை நீர் செல்ல வசதி இல்லை.
குடிநீர் வசதி இல்லை.

ஆனால் இது அனைத்திற்கும் வரி மட்டும் வசூல் .

அப்பணம் ஆட்சியாளர் ,ஆளும் கட்சி மகிழ்ச்சிக்கே.

விரிவாக்கம் செய்யப்பட்ட புது நகர்ப் பகுதிக்கு 

அடிப்படை வசதி செய்யா அரசுகள்,

நிரந்தர  முதல்வர்/பிரதமர்  என்ற கனவுகள் 

பலித்தால் ஆண்டவன்
 இருப்பது அகிலத்தில் உண்மையா?
கோடிக்கணக்கில் ஊழல் செய்து ,
சுகபோக வாழ்க்கை.
இறைவா! நீ இருப்பதை நிரூபிக்க 

ஊழல் வாதிகளுக்கு ஒரு முடிவைக் கொடு.

ஒரு யுகாவதர புருஷனைப் புவிக்கு அனுப்பு.






ஞாயிறு, ஜூன் 09, 2013



மனிதனின் ஆற்றல் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதர சகோதரிகளிடையே 

விருப்பங்கள்,வெறுப்புகள்,எண்ணங்கள்,அறிவாற்றல்,

வேறு படுகின்றன.

உணவு விஷயத்திலும் அப்படியே.

ஒரு குழந்தைக்கு தோசை என்றால் ஒருகுழந்தைக்கு ஆடை.

ஆடை விஷயத்திலும் அப்படியே.

வாகனம் ,திரைப்பட நாயகன் ,நாயகி,விளையாட்டு வீரர்கள் 

என அனைத்திலுமே கருத்து வேறுபாடுகள்.

இதற்கும் மேலே சுயநல எண்ணங்கள்.

போட்டி பொறாமைகள்..

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்.

இதானால் அண்ணன் தம்பிகளிடையே பெரும் விரிசல்.

இருபது முப்பது வருடங்களுக்கு முன் மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தில் 

ஒருவர் வருமானம் அதிகமாக இருக்கும்.

பலருக்கு வருமானமே இருக்காது.

ஒருவரின் வருமானத்தில் அனைவரும் உண்டு ,உடுத்தி 

வறுமையிலும் தியாகத்துடன் வாழ்ந்த காலம்..

பாசத்துடன் குடும்பத்தில் பெரியவர்கள் சொல்லை கண் மூடித்தனமாக 
மதித்த காலம்.
வீட்டில் உள்ள பெண்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டு 

வறுமையிலும் ,பொருளாதார ஏற்றத்  தாழ்விலும் 

ஒற்றுமையாக இருந்தகாலம்.

ஆனால் இன்று தனிக் குடித்தனங்கள்,

தனி வாழ்க்கை,
முதியோர் இல்லங்கள்,

இருப்பினும் 
தம்பதியர்களிடம் பிணக்கு.
தாய் தந்தையர்கள் நமக்கு எதுவும் பெரிதாக செய்யவில்லை 
என்ற குற்றச்சாட்டு.முயற்சி எடுக்கவில்லை .
வீடில்லை வாசலில்லை  ,
என்னை சரியாக படிக்கவைக்கவில்லை ,
சொத்து இல்லை .
கல்லூரிக்கு செல்லும்போது கைச் செலவிற்கு பணம் தரவில்லை.
அம்மாவிற்கு அது செய்யவில்லை.
எங்கும் அழைத்துச் செல்லவில்லை.
இதை எல்லாம் ஒய்வு பெற்ற முதியவர்கள் 
சந்திக்கும் போது பேசிக் கொள்ளும் விஷயங்கள்.

இதில் அதிகம் வருத்தம் தரும் விஷயம்,

தனிக்குடித்தனம் செல்லும் தம்பதிகளும்

நிம்மதியாக இல்லை என்பதுதான்.




சனி, ஜூன் 08, 2013

இதுதான் பகுத்தறிவுப் பிரச்சாரமா?

இன்று காலை .

இறைவன்  பற்றிய எண்ணம்.

இல்லை என்போர் வாதம்.

இறைவன்  ஏன் இல்லை என்ற வாதத்திற்குள்?

முச்சந்தியில்  பெரும் கூட்டம் கூடும் இடங்களில் 

இல்லை இல்லை கடவுள் இல்லவே இல்லை.

அதற்கு அருகிலேயே ஆலயம் .

ஆண்டவன்  தன்  சக்தியைக் காட்டும் 

நாகாத்தம்மன் ஆலய.ம்

ராயப்பேட்டை வே.மு.தெரு நடைபாதைக்கோயில்.

அருகில் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற சிலை.

அதற்கு அருகில் இராமலிங்க அடிகளார்.

நடைபாதைக்கோயில்  சனீஸ்வரர்,தக்ஷிணாமூர்த்தி
நாகாத்தம்மன்.

பக்தர்கள் கூட்டம் ;
அம்மனின் மேல் சிரத்தை,பக்தி,
அங்கு புதிதாக வாகனங்கள் வாங்குவோர்,
சுப காரியங்கள் செய்வோர் என்ற பெரும் கூட்டம் 
அன்றாடம் அலைபாயும் பக்தர்கள்.
உண்டியல் வசூல் அரசாங்கமே ஆலயத்தை 
ஏற்கும் அளவிற்கு.

அருகில் தி.க. கூட்டம்.
இறைவன் இல்லை என்ற ஆபாசப் பேச்சு.
அதை காதில்வாங்காமல்   
ஆலயத்தின் பூஜைகள்.

ஹிந்துக்கள் எவ்வளவு  பொறுமை யும்
 சாஹிப்புத்தன்மையும் 
 உடையவர்கள்.

பகுத்தறிவுப் பிரசாரம் நடிகர்கள் கட்டௌட்டிற்கு

பாலாபிஷேகம் செய்யும் அளவிற்குத்தான் 

இளைஞர்கள் மனதில் பதிந்துள்ளது.

கல்லுக்கு அபிஷேகத்தை எதிற்கும் நாத்திகவாதிகள்,

நடிகர்கள் கட்டௌட்டிற்கு  பாலாபிஷேகம் செய்வதை 

எதிர்க்காதது ஏன்?

இதுதான் பகுத்தறிவுப் பிரச்சாரமா?

பலகோடி இந்துக்கள் மனம் புண் படும் நாத்திக பிரசாரம் 

நடிகைக்கு கோயில் கட்டும் அளவிற்கு 

பக்திமயமாகி உள்ளது  என்பது 

அவர்களின் நாத்திகப் பிரசாரம் வீண் 

கடவுள் உள்ளார் என்பதற்கு 

அடிப்படையாக உள்ளது.







வெள்ளி, ஜூன் 07, 2013



அன்புக்கு ,ஆற்றலுக்கு,இன்பத்திற்கு ,ஈகைக்கு ,எங்கும் ஏற்றத்திற்கு ,

ஐயம் இல்லா ஒப்பில்லா ,ஓங்கும் புகழுக்கு ,

கடும் முயற்சிக்கு  இறைவனின்  கடைக்கண் பார்வை ,

க்ருபா கடாக்ஷம் ,பூர்வஜன்ம இந்த ஜன்ம நல்வினைப்பயனே

மூலகாரணமாகும்..

இவ்வுலகில்  தோன்றிய எத்தனை பேர் தங்கள் விரும்பிய வாழ்க்கையை அடைந்துள்ளனர்.?
 எத்தனை பேர் தங்கள் குறிக்கோளில் வெற்றிபெற்றுள்ளனர்.?

எத்தனை பேருக்கு தங்கள்  விரும்பாமலேயே  பதவியும் புகழும் கிடைக்கிறது?

புகழைத் தேடி அலைந்தாலும் கிடைக்காதவர்கள் எத்தனை பேர்?

இந்த சூக்ஷமத்தை அறியும்  ஞானிகள்  எங்கே ?


இறைவன் எங்கே?

இறைவன்  எங்கே?

ஒவ்வொருவருக்கும் 

மனித சக்திக்கு அப்பாற்பட்ட

 ஒன்று 

இவ்வுலகை ஆட்டிப்படைப்பதை 

உணர்ந்தே ஆகவேண்டிய நிலை ஏற்படுகிறது.

மனிதன் தனக்கு இருக்கும் தனித்திறமையால் 

வெற்றி அடைந்து  கொண்டே இருந்தால் 

தனக்கு நிகர் தானே என்று  செருக்கடைகிறான்.

அந்நிலையில்  ஆண்டவனை  மறந்துவிடுகிறான்.

அப்படிப்பட்ட நிலை இப்புவியில் 

எவருக்கேனும் இருந்துள்ளதா?

 இல்லையே?

இந்த இறைவன் எங்கே?

அவனைக்காண முடியாது.

நமக்கு இன்னல் நேரும் போது

நமக்கு அறிமுகமாகாத ஒருவர் 

உதவி செய்வார்.

அவருக்கும் நமக்கும் 

எவ்வித சம்பந்தமும் இருக்காது.

நாம் அவரிடம் 

தெய்வம்போல் எங்களுக்கு

 உதவி செய்துள்ளீர்கள் என்போம்.

சிலரை எனக்கு அவர்தான் தெய்வம் என்போம்.
நமக்கு எத்தனையோ 
அறிமுகம் ஆனவர்கள் இருந்தாலும் 

முன்பின் தெரியாதவர்கள் 
எதிர்பாராத இடத்தில் செய்யும் உதவி 

அங்குதான் இறைவன் நமக்கு உதவி யுள்ளார்.


 அதைத்தான்  கடவுள் மனித உருவத்தால்  வந்துள்ளார் 

என்கிறோம்.

நாம் குழப்பத்தில் இருக்கும்போது 

முன்பின் தெரியாதவர்கள் நம் 

குழப்பத்தைத் தீர்க்கும் படி நம் காதில் 
விழும்படி பேசிக்கொண்டு செலவர்.

அது நம் குழப்பம் தீர