வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

thandhi இலக்கியங்கள் செய்யும் பெரும் பாதகம்.

தந்தை  தாய்  பேண் .


தந்தை  என்பவர்  உழைக்கும் வர்க்கம்.

 தாய்  என்பவர் தந்தைக்கு சத்து உணவு.

இது இயற்கையின்  .இணைப்பு.

இறைவனால்  ஏற்படுத்திய  பிணைப்பு.--இருந்தாலும்

அப்பா என்றால் சும்மா,அதோட எப்படி வாழ்ந்தே தாயே?

மகனின்  கிண்டல்.அப்பா வா?? அம்மா சொல்லாமல் எப்படி?

கலியுக  வாதங்கள். அப்பா வை  திரைப்பட

நாயகர்கள் ,நாயகிகள்  ஏமாற்றும் கலை.

இருபது இருபத்திரண்டு  ஆண்டுகள் வளர்த்து ,

இருபது ,முப்பதாயிரம் ஊதியம் பெற்றவுடன்,

தந்தைக்கு எதுவும் தெரியாது.அவருக்குப் புரியுமா?

காதல் என்பது.என்ன?

அவர் வருவார் .போவார்.

என்னுடைய  அரியர்ஸ் எனது காதல் பாடம்.

என்னுடைய தோல்வியில் அவள் நிலவு முகம்.

அவள் நிழலில் என் ஆனந்தம்.

அப்பாவின் நிழலில்  அவர்

 பணம் மட்டும் தான்.

பொய் ,பொய் , தோல்வி.

பட்டப்படிப்புகள்,புலவர்கள்  காட்டும் பாதை.

இக்கல்வி  காதல்தான் என்னும் இலக்கியங்கள்,

அந்த வயதில்  காதல் இல்லையேல் அலி.ஒன்பது.


இந்திரிய கட்டுப்பாடு  ஆன்மீக வழிகாட்டி.

இதையறியா காதல் இலக்கியங்கள்,


உயர்நீதிமன்ற,உச்ச நீதிமன்ற  விவாக ரத்து

வழக்குகள் .கள்ளக்காதல்கள்.

கள்ள  உறவால், கணவன்   கொலை.மனைவி கொலை.

பெற்ற குழந்தை அநாதை.

 காதல் கூறும்


இலக்கியங்கள்  செய்யும் பெரும் பாதகம்.






திங்கள், ஆகஸ்ட் 13, 2012

ஒற்றுமை காப்போம்.


சுதந்திர தினம் 

பாரதநாடு  பழம்  பெரும்  நாடு.--பிற 

நாடுகளை நாடிச்செல்லா  நாடு.

கடல் கடந்தால் கரை படியும் 

என   தேசத்தந்தையை   முதலில் தடுத்து,

அன்னையின்  பயம் போக்க 

நல்ல   குணங்கள்  பின்பற்ற 

சபதம்   செய்து  ஒழுக்கமே விழுப்பம் தரும் 

என்ற உயரிய நாடு.

"ஆன்மிகம் "  எண்ணங்களால் , 

 வையகம்  புகழும் நாடு.

இந்த நாட்டில் அன்னியர்  புகலிடம் தேடி  வந்தனர் .

கொள்ளை  அடிக்க வந்த கூட்டம்.-அதில் 

நம்  நாட்டின்  கருங் காலிகளால்,

சுயநலமிகளால்,

 பொறாமை  கொண்டாரால்,

அண்ட வந்தவர்கள் .

ஆட்சியாளராக   மாறிய  விந்தை.

ஆண்டவர்கள்  அடிமையான விந்தை.

பாரதியார் பாடிய  

நம்மில்  ஒற்றுமை நீங்கில் ,

அனைவருக்கும் தாழ்வே .

என்பதற்கு ஓர்  எடுத்துக்காட்டு.

இந்த 66வது சுதந்திர நாளில் ,

நம் நாட்டு தியாகிகளுக்கு அஞ்சலியாக 

இதுதான் சபதம்--

நம் நாட்டு கறுப்புப் பணம் ,

வெளிநாட்டில் இருக்க  இட மாட்டோம்.

இந்த உறுதியில் வேற்றுமை மறந்து 

ஒற்றுமை காப்போம்.

நாடே நமக்கு ;

சுயநல வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க  சபதமெடுப்போம்.










கராச்சியில் இருந்து கொக்ரோஜர் வரை-- இந்துக்களின் கருணைக் கதை.



கராச்சியில்   இருந்து  கொக்ரோஜர்  வரை-- இந்துக்களின்  கருணைக்  கதை.  ---தருண் விஜய்.

   பாகிஸ்தானில்  இருந்து இந்துக்கள்  அகதிகளாக இந்தியாவிற்கு வந்தனர்.அவர்கள் கராச்சி பாகா இந்திய எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அங்கிருந்து இந்தியாவிற்கு இந்துக்கள் அகதிகளாக  சென்றால் அது அவமரியாதை என்பதால்

 இந்துக்களிடம்  பாகிஸ்தான் அதிகாரிகள்  பாரதத்திற்கு சென்று  பாகிஸ்தானத்திற்கு எவ்வித கெடுதலும் செய்யமாட்டோம் என்ற உறுதி மொழி பெற்றுக்கொண்டனர்.
 மரியாதை என்பது பாகிஸ்தானிற்கு உள்ளதா என்பது அன்னாட்டினருக்கே  தெரியாது  என்பதால் அவர்கள் நடவடிக்கை சற்று கடும் விஷயமாகி விட்டது.

         ஒருவரும் தன் வீடு ,சொத்து ,ஊர் ,நாடு ,இருப்பிடம் போன்றவற்றை மிகவும் சுலபமாக விட்டு விட்டு வரமாட்டார்கள் .நிலம் என்பது வெறும் மண்ணோ அல்லது வீடு என்பது  சுட்ட செங்கலால் கட்டப்பட்டது  என்பதை விட  அது உணர்வு பூர்வமான மகிழ்ச்சி,துன்பம் ,மணம்,முன்னோர்களின் வாழ்க்கை,மரணம் ,கவிதைகள்,மரபுத் தொடர்களால் பின்னப்பட்டது.நம் முன்னோர்கள் இருந்த பூமியில்  ஒருவித நம்பிக்கையோடு வாழ்கிறோம்.அது நமக்கு ஒரு பரம்பரை சொத்தாகிறது.புதிய தலைமுறையினர்களின் எதிர்காலத்தை பின்னிப் பிணை கிறோம். அதனுடன் நமக்கு இருக்கும் தொடர்பு நகமும் சதையும் போல.முகமும் கண்களும் போல.
         ஒருவன் தன் உரிமையான இடத்தில் இருந்து வெளியேறும் கட்டாய சூழல் எப்பொழுது உண்டாகிறது?
 அவனுக்கு அங்கே வாழவே வழி இல்லாதபோது,
அனைத்தையும் இழக்கும் போது,மானம்-மரியாதையை  இழந்த அல்லது இழக்கும் சூழல் உருவாகும் போது
  வேறு இடம் செல்ல கட்டாய நிலை ஏற்படுகிறது.அவன் அங்கிருந்து  ஒரு தெரியாத புது இடத்திற்கு செல்கிறான். அவனுக்கு அங்கே பிச்சை  எடுக்கும் நிலைதான்.அனால் அவன் தன் மானம் காக்க,  தன் சொந்த பல தலைமுறையினர் வாழ்ந்த இடத்தை விட்டு விட்டு,
 அனைத்தையும் துறந்து அகதியாக வெளியேறுகிறான்.

        பாரதம் போன்ற மதச் சார்பற்ற  நாட்டுத்தலைவர்களும்,மக்கள் தொடர்பு சாதனங்களும்  ,இந்துக்களுக்கு இன்னல் நேரும் பொழுதெல்லாம் தாலிபன்களாக மாறி  காட்டுத்தனமாக  நடந்துகொள்கின்றன. அங்கு இந்துப்பெண்கள்  பலாத்கரப்படுத்தப்படுகின்றனர். பதின்மூன்று வயது சிறுமிகளை கடத்தி மதம் மாற்றி  கட்டாயத்திருமணம் செய்விக்கின்றனர். பெற்றோர்கள் கதறுகின்றனர். சிந்துவில் மனிஷா குமாரிக்கு  இந்நிலை ஏற்பட்டது. வேறுவழி இன்றி உடுக்கும் இரண்டு துணிகளை சுற்றி எடுத்துக்கொண்டு  மிகவும் வேதனையோடு பரிதாபத்துடன் அகதிகளாக வருகின்றனர்.

  இதைப்பற்றி இந்திய அரசியல் தலைவர்கள் கலங்கவில்லை. இந்த செய்தியை செவிமடுக்கவில்லை. பெற்றோர்கள் எவ்வளவு கதறி இருப்பார்கள்?
அவர்கள் தூங்கியிருப்பார்களா?
              நான் இந்த சேதியை பதினைந்து நாட்களுக்குமுன்  ராஜ்ய சபையில்  எழுப்பினேன்.இது வெளிநாட்டுப்பிரச்சனை என்று பதில் வந்தது. நானும் விடாமல் பல தலைவர்களிடம் கூறிய பின் இந்த அகதிகள் விஷயத்தில் கவனத்தை செலுத்தி மிகவும் கம்பீரமான விஷயம் என்று நடவடிக்கையில் இறங்கினர். அமைச்சர் எஸ்.சி.கிருஷ்ண  இந்த கம்பீரமான விஷயத்தில் பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்வோம் என்றார்.ஆனால் இன்று வரை இது சம்பந்தமான அறிக்கையோ,நடவடிக்கையோ பாராளுமன்றத்தில் எடுக்கப்படவில்லை.

   நான் இந்த பிரச்சனை  தொடர்பாக  எழுதும் பொழுது தமிழர்  களின் மனிதஉரிமை பார்க்கும் ஸ்ரீ லங்கா அரசுக்கு எதிராக கருணாநிதி குரல் எழுப்புகிறார். இது வெளிநாட்டில் நடக்கும்  மனித உரிமைமீறல் பிரச்சினைதானே.இது தொடர்பாக ஐக்கிய நாட்டு சபைகளிலும் வினா எழுப்பப்படுகிறது. பல தலைவர்கள் இது பற்றி பேசுகின்றனர். இது வெளிநாட்டுப் பிரச்சினை என்று யாரும் கருதவில்லை. பூடான்,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,ஆப்கானிஸ்தான் ன் போன்ற நாட்டில் இந்துக்கள்மேல் செய்யப்படும் கொடுமையை எதிர்க்காமல் அது வெளிநாட்டுப்பிரச்சினை தலை இட முடியாது என்கின்றனர்.
ஆங்கு இந்துக்கள்மேல்  மனித உரிமை மீறல்கள்    நடந்துகொண்டிருக்கின்றன.

 தமிழர்கள் பிரச்சனையில் உலக நீதிமன்றத்திலும் வழக்காடவேண்டும்  என்கின்றனர். ஸ்ரீலங்கா,மியான்மர்,பீலிச்தன் ,மால் தீப்.தென் அமெரிக்கா  போன்ற நாடுகளின்  உள் நாட்டுப்பிரச்சனையில் தலையீடு  செய்கின்றனர்.
 ஐக்கிய நாட்டு சபைகளிலும் வினா எழுப்புகின்றனர்.
.அதே போல்தானே  இந்துக்கள் மீது நடத்தப்படும்  மனிதாபிமான மற்ற மனித  உரிமை  மீறல்கள்.
 இது எப்படி வெளிநாட்டு உள் விவகாரங்களில் பாரதத்தின் தலை ஈடாகும். ஆனால் அவர்கள் மதசார்பற்ற நிலை என்ற போர்வையில் ஆத்மாவை  விட்டுவிடுயன்றனர்.

பாரத நாட்டு இந்து தலைவர்கள், இந்து அதிகாரிகள், பாராளுமன்றம், மனித உரிமைக்குழு, உள்துறை அமைச்சகம்,பாதுகாப்புத்துறை  என யாருமே ஒன்று கூடி இந்துக்களுக்காக குரல் எழுப்புவதில்லையே. ஏன்? பங்களாதேஷ்,பாகிஸ்தான் ,பூட்டன்  போன்ற நாடுகளில் இந்துக்கள் மேல் நடக்கும் மனித உரிமை  மீறல் பற்றி  பேசும் போது  அவர்கள் ஆன்மாக்கள்  இறந்துவிடுகின்றன. கொகார்ஜாரில் நடந்த அசம்பாவிதத்திற்கு  முஸ்லிம்  தலைவர் ஒன்று கூடி சந்தித்த பொழுது யாரும் மத சார்பற்ற தன்மை என்று கூறவில்லை. அதை ஏற்றனர்.
சில நாட்களுக்குமுன்  பூடாநிலிருந்து சில அரசுப்பிரதிநிதிகள்  குழு பாரதத்திற்கு வந்தது.
அதனிடம் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட  இருபதாயிரம்  இந்துக்கள் குறித்து யாரும் எவ்வித வினாவும்  எழுப்பவில்லை.
 நேபாளம்  இந்து நாடு  என்ற பதவியிலிருந்து அரசியல் அமைப்பு நீக்கப்பட்டது  என்றதுமே  சில மத சார்பற்ற வாதிகள் விழா  கொண்டாடினர்.
 சர்வதிகாரி சையீத் சா  மதவெறிபிடித்தவனை மதிக்கும் கூட்டம் அது.
 கொர்ஜாரில் இந்து போடக்கள் மீது நடத்திய  கொலை,வன்முறை  இன்னும் பசுமையாகவே உள்ளது.
காஷ்மீரில் இருந்து லக்ஷக் கணக்கான இந்துக்கள் வெளியேற்றப்பட்டதுடன்  இந்துக்கள் அமர்நாத்  யாத்திரையையும்  தடை செய்து   இடையுறாக  உள்ளனர். 

கராச்சியிலிருந்து  காஷ்மீர் வரை, காஷ்மீரிலிருந்து  கொர்ஜார்வரை நமது நாட்டிலேயே லக்ஷக்கணக்கான இந்துக்கள்  அகதிகளாக வாழ்கின்றனர்.இந்துக்களின் வீடுகள் பாழடைந்து  விட்டன. வீரமிக்க இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும் இந்த பரிதாபநிலை ஏன் ?இந்துக்களின் துன்பங்களில் பங்கெடுக்காமல் அமைதி காப்பது ஏன்? அவர்களின் ஆன்மா இவ்வளவு தாழ்ந்துவிட்டதா ?!!

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

வேகத்தடைகளே!!


  1. 66வது  சுதந்திர  தினம் 

  2. நாடு  விடுதலை  அடைந்து 

  3. 66 ஆண்டுகள் கடந்து விட்டன.

  4. நாட்டில்   வளர்ச்சிகள் ,

  5. பலமறுமலர்ச்சிகள் .

  6. உள்ளத்தில் கிளர்ச்சிகள் .

  7. தொழில் நுட்ப வளர்ச்சிகள் .

  8. தேசீய நெடுஞ்சாலைகள் ,

  9. போக்குவரத்துத் துறை ,

  10. அனைத்துத்  துறையிலும்  

  11. முன்னேற்றம் தான் .

  12. சோம்பேறிகள்  தவிர,

  13. அனைவருக்கும்  வேலைவாய்ப்பு .

  14. நகரங்களில்
  15.  
  16. வேலைசெய்யஆளில்லை .

  17. சிற்றூர்களில்  விவசாய நிலங்கள் 

  18. கட்டடங்களாக முன்னேற்றம். 

  19. பொறியியல்  கல்லூரிகள் ஈசல் 

  20. புற்றுபோல்.

  21. கோடிக்கணக்கில் கல்வியில் .

  22. விடுதலை  அடைந்த  முன்னேற்றம் 

  23. மகிழ்ச்சி அளித்தாலும் 

  24. சுதந்திரத்திற்காக  போராடிய,

  25. தியாகிகள்  ஆத்மா  அமைதி யாக 

  26. மகிழ்ந்தாலும் 

  27. முன்னேற்றத் தடைக்கற்கள் 

  28. அவர்களை veவேதனை

  29.  அடயச்செய்யும். 

  1. சுவிஸ் வங்கியில் கருப்புப்பணம்.
  2. ஆன்மீக வழிகாட்டிகள் ஆஸ்ரமங்களில் கருப்புப்பணம்.
  3. கல்வி என்ற பெயரால் பகற்கொள்ளை .
  4. மடாலயங்களில் ஆலயங்களில் மன்மத லீலைகள்.
  5. வருமானத்திற்காக மது ,மாது சாலைகள்.
  6. அரசாங்க அலுவலகம் என்றாலே கை ஊட்டு   ஊழல்கள் .
  7. ஊழலை எதிர்த்துப் போராடுபவர்கள் செய்யும் ஊழல்கள். 
  8. சிசுக்கள்,கள்ளக்காதல்,விளைவு படுகொலைகள் ,விவாகரத்து வழக்குகள் அமைதியற்ற இல்லறம் 
  9. தாய் மொழி வெறுப்பு  ஆங்கில விருப்பு .
  10. தாய் மொழி படிப்பு விளைவு வறுமையால் துடிப்பு.
  11. பெருகிவரும் முதியோர் இல்லங்கள் .
  12. மேலை நாட்டு கலாச்சாரங்கள் .
  13. அரவணைப்பு  ஆதரவற்ற  குழந்தைகள் .
  14. குழந்தைகளை தவிக்கவிட்டு ,புது 
  15. கணவனைத்தேடும் பெண்கள் .
  16. கள்ளக்காதலுக்காக கட்டியகணவனை கட்டிய மனைவியை  பெற்ற குழந்தையை  கருணையின்றி  கொலை செய்யும்  நவீன  திருமண உறவுகள் .
நாட்டின் வளர்ச்சி -மறுமலர்ச்சிக்கு கரும்புள்ளிகள் .

விடுதலை தியாகிகள் ஆத்மா சாந்திஅடையுமா ?!!

இவை முன்னேற  தடைக்கற்களே .
பண்பாட்டின் ,தாய்மொழியின் 
வீழ்ச்சி
 ஒற்றுமைக்கு மன அமைதிக்கு 
வளர்ச்சிக்கு வேகத்தடைகளே .






புதன், ஆகஸ்ட் 01, 2012

.வருமான விந்தை



வருமான விந்தை 
நம்  நாட்டில்  வளம்  என்பது  இல்லை  என்று சொல் முடியாது.நீர்வளம் உள்ளது.  மழை  பெய்கிறது. விளைச்சல் பெருகுகிறது.அரிசிப்பஞ்சம் இல்லை.

அரிசி கிடைக்கிறது. விலைதான் அதிகம்.பருப்பு கிடைக்கிறது .விலைதான் அதிகம்.காய்கறி கள்  கிடைக்கிறது.விலை தான்  அதிகம்.தங்கம் கிடைக்கிறது.
தங்க நகைக்  கடைகள்  நாளுக்கு நாள்  அதிகரிக்கிறது.

வேலை  கிடைக்கிறது. செய்ய ஆள் இல்லை.தமிழ் நாட்டிற்கு  பணி  புரிய  பலர்  வேறு மாநிலங்களில்  இருந்து  வருகின்றனர். காய்கறி   கடைகளில்
விற்பனையாள்  கூட வெளிமாநிலம் கட்டிடப் பணியாட்கள் வெளி மாநிலம்.
எனவே  வேலை இல்லாத்திண்டாட்டம்  கிடையாது.

     இச்சூழலில் தமிழ் நாட்டின் ஜீவாதார வருமானமே டாஸ்மார்க் தான் என்ற நிலை. காரணம் புரியவில்லை. ஒரு தீய பழக்கத்தால்  ஒரு வருமானம் வரும் என்று  ஒரு  அரசு  அதை வளப்படுத்தினால், அந்த அரசுக்கு  பொதுமக்கள் மேல் எவ்வளவு  அக்கறை.!!!
ஏழைகளுக்கு  இலவச அரிசி. மின்சாரம்.ஆனால் வருமானம் அவர்களை  குடிகாரர்களாக்கி  அவர்களிடம்  உள்ள தீய  பழக்கத்தால்  அவரிடமே சுரண்டி
அவர்களுக்கே  அரிசி. குடி குடியைக் கெடுக்கும் . உயிரைப்பறிக்கும்  என்ற சிறு
எழுத்து விளம்பரம்..குடிப்பழக்கத்துக்கு எதிரான அரசு விளம்பர  குறும் படங்கள்  விந்தைதானே.

அந்த குடிக்கு  அடிமை யாவது யார்.?அதைப்பற்றி கவலை இல்லை என்றால்

அது  குடி அரசா? குடியரசா ?

மும்பை போன்ற நகரங்களில் ஒருவகைத் தொழில். அதிக வருமானம்.

டாஸ்  மார்க் அதிக வருமானம்.

புகை உயிருக்குப் பகை.ஆனால் அதைத் தடை செய்தால் பலரின் வேலை வாய்ப்பு  பாதிக்கும்.

தீய பழக்கங்கள் வளராமல்  குடிகளைக்    காப்பது    தான்  அரசு.

காசு வருமானம்  என்றால்  தீயவை தான் பெருகும்

காசு-மது-மாது- மயக்கம் -மரணம் . விளம்பரத்தோடு  வருமானம் .விந்தைதான் 
















molikkolkai.மொழிக் கொள்கை

மொழிக் கொள்கை.

தீரன்  மெட்ரிக் பள்ளி மற்றும்  ஈரோடு பள்ளிகளில்  ஹிந்தி,பிரெஞ்சு  போன்ற மொழிகள் கட்டாயமாக 
திணிக்கப்படுகின்றன என்ற செய்தி  தமிழ் மணம்  வெளி இட்டுள்ளது.

இந்த கட்டாயம் என்பது 1970 முதல் நடை முறையில் உள்ளது.

தமிழகத்தில்  தமிழைத் தாய் மொழி இல்லாதவர்களுக்கு குறிப்பாக தெலுங்கு,கன்னடம் பேசுவோருக்காகவும்  மற்றும் சென்னையில் அதிகமாக உள்ள மார்வாடிகள்,குஜராத். போன்ற வெளி மாநிலத்தவர்களுக்காக 
தமிழுக்கு  மாற்றாக  அவர்கள் தாய் மொழி பயில வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதற்காக இருமொழி திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தாய் மொழி பயில்பவர்கள் தமிழ் படிக்கவேண்டாம்  என்ற நிலையில்   அரசாணை  வெளியிடப்பட்டு  அமலாக்கப்பட்டது.

இது அரசுப்  பள்ளிகளிலும் , அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் நடை முறையில் இருந்துவருகிறது.ஆனால் மெட்ரிக் பள்ளியில்  இது வேறு கண்ணோட்டமாக மதிப்பெண்  பெறுவதற்கான  எளிய வழி என 
பின்பற்றப்  பட்டதால்  இன்று வெளிச்சத்திற்கு  வந்து  புதிதாகத் தெரிகிறது.

தமிழைத் தவிர மற்ற மொழிகளில் குறிப்பாக வடமொழி ,பிரஞ்சு  மொழிகளில் பாட நூலே மிகச் சிறிது தான்.அதில் ஆங்கிலத்தில் விடை அளித்தால் போதும்.

இம்மொழி  மதிப்பெண்கள் வேறு மாநிலத்தில் மதிப்பு பெற்றாலும் 

தமிழக கல்வித்துறைக்கு உண்மை நிலைதெரிவதால் 
.
  தமிழக அரசு மாநில முதல் வரும் மாணவன் தமிழ் எடுத்தால்  தான் 

மாநில முதல் மாணவன் என்று அறிவிக்கிறது.

இப்பொழுது  ஹிந்தியை விட தெலுங்கை விட அதிகம் படிப்பது பிரஞ்சு மொழிதான்.புதுவையில் அதிகம்.



.இந்த இருமொழி க்கொள்கையால்  பாதிக்கப்பட்டது தமிழ் தான்.




private schools in tamilnaadu and language policy.

கல்விக்கூடங்கள்  1970 க்குப்பின்  வணிக நோக்கில்  ஆரம்பிக்கப்பட்டு ,

அரசின் பல் துறைகள் போன்று வசதி படைத்தவர்கள் விரும்பும்
 தனியார் துறை  யாக மாற்றம் அடைந்தது  ஏன்?

இதில்  கல்வித்துறை  அமைச்சகம்,இயக்குனர்கள்,தலைமை ஆசிரியர்கள்,

ஆசிரியர்கள் ,பெற்றோர்கள்,அரசியல்வாதிகள் ,பத்திரிகைகள் ,அரசுப்பள்ளிகளில் படித்த  மாணவர்கள்  என  அனைவரின் ஒத்துழைப்பு
இல்லாமல்  தனியார் பள்ளிகள் வளர முடியுமா?

கல்வி இன்றியமையாத செல்வம்.    ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒளிமயமாக  கல்வி அவசியம்  என்ற நிலை ஏற்பட்டபின்

கல்வி நிலையங்களில் ஏற்றத்தாழ்வுகள்  மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போல் மாறிவிட்டன.

காரணங்கள்:
1.தனியார் வழியிடும்  புத்தகங்கள் ,குறிப்பேடுகள்,கழுத்துப்பட்டை,காலனி,
சீருடை, பேருந்துவசதிகள், எழுது  பொருட்கள் ,விளயாட்டுப் பொருட்கள்,
பள்ளி விளையாட்டுத்திடல்  என அனைத்தும்  தனியார் பள்ளிகள்
கவர்ச்சிக்கு ஒரு மூல காரணம்.
2.ஆசிரியர்கள்,நிர்வாகத்தினர் ,முதல்வர்களின் கடும் உழைப்பு.

3.கல்வி என்பதை  பெற்றோர்கள்  ஆங்கில வழிதான் என முடிவு எடுத்தாது.

4.தமிழ் வழி   ,இந்திய மொழி வழி  படிப்புகள்

வேலைவாய்ப்புத்தராததால்  ஆங்கிலம் தான் என்ற நிலை.

5.ஆங்கிலம் கலந்து தமிழ் மொழி பேசாவிட்டால் அவன் அறிவு வளர்ச்சி இல்லை என்று   அவமானப் ப்படுதல்.

6.தமிழ்  நாட்டில்  தமிழ் படிக்கவேண்டாம்.
.முதல் மொழி வடமொழி.பிரெஞ்சு எடுத்தால்
  ஒரு பாடம் சுலபமாகி றது .
 மதிப்பெண்களும் அதிகம் கிடைக்கும்.

அண்ணாதுரை  அவர்கள் மாண்புமிகு முதல் அமைச்சராக இருந்த போது

மும்மொழி திட்டம் கொண்டுவர முயன்றார்.

 அதில் தெலுங்கு மொழிக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு

 தோல்வி  அடைந்தது .

        தமிழகத்தில்  உள்ள 40%அதிகமாக உள்ள தெலுங்கர்கள் தங்கள் தாய்

மொழி படிக்கவேண்டும் என்ற  எண்ணமே இல்லாதவர்கள்
.தமிழை மிகவும் நேசிப்பவர்கள் .
 திரு வை.கோ.,விஜயகாந்த்,ஈவேரா .உட்பட
.மாண்புமிகு  முதல்வர்  அண்ணாத்துரை கொண்டுவந்த  திட்டத்தில்

 ஹிந்தி படிப்பதில்பெற்றோர்கள்  அதிகம் ஆர்வம் காட்டியதால் திட்டம்

கைவிடப்பட்டது.

பின்னர் பள்ளி நேரத்திற்கு ப பின் ஹிந்தி கற்பிக்கும் ஒரு திட்டம் வந்து  கைவிடப்பட்டது.

ஹிந்தியை விரும்பா அரசியலில், ஆங்கிலம் மகத்துவம் பெற்று தமிழை

விரும்பா மொழியாக்கியது என்பதுதான் உண்மை.

பொதுவாக மக்கள் விரும்புவது தனியார் துறை தான்.
பணம் சிலவானாலும் நிம்மதி.
அரசுப்பள்ளிகளில்  தனியார் பள்ளி போன்று பொறுப்பு ஏற்பது கிடையாது.
ஐந்து ஆண்டுகள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் உள்ளனர்.
பொதுமக்கள் கவனிக்காமல் இல்லை.

இன்று தனியார் பள்ளிகள் விலைவாசி ஏற்றத்தால்  மிகவும் கலக்கத்தில்
உள்ளன .

ஆசிரியர்கள்  ,ஆயாக்கள்   aஅனைவருக்கும்  ஊதியம் kகொடுக்க vவேண்டும்

பொருளின்றி   ஆண்டவன்   தரிசனமே  ஆலயங்களில்  தாமதமாக  கிடைக்கும் .

அறிவாலயங்கள்  என்றுமே அரசபோகம் தான் .







வியாழன், ஜூலை 19, 2012

EDUCATIONAL STRUGGLE WHY?




தனியார்  பள்ளியில் பின் தங்கிய, குறிப்பாக பொருளாதாரத்தில்  பின் தங்கிய

25% மாணவர்களை  தனியார்  பள்ளியில் சேர்க்கவேண்டும்  என்ற அரசு

 உத்தரவு  மிகவும் சிந்திக்க வேண்டிய  ஒன்று.
 பெங்களூர்  ஆக்ஸ் போர்டு  பள்ளியில்  25% மாணவர்களை அவமானப்படுத்துவதாக  செய்தி.
  25% மாணவர்களை ஏன்  தனியார் பள்ளியில் சேர்க்கவேண்டும்? அரசுப்பள்ளிகள்  இயங்குகிறதா  இல்லையா?

தனியார் பள்ளி மாணவர் கள்   சிலர் கொண்டுவரும்  அழிப்பான்  ரூபாய் 50.

 அவர்கள்  வந்திறங்குவது    பல  லட்சங்கள்  மதிப்புள்ள மகிழுந்து.

  அவர்கள் எழுதும் குறிப்பேடு அரசாங்க வெளியிடும் குறிப்பேடு போல்
 இ ரண்டு-மூன்று  மடங்கு விலை உள்ளது.
போன்றே காலணி ;சீருடை;உணவி கொண்டுவரும் லஞ்ச்  பாக்ஸ். 
  இது மாணவர்கள் நிலை.

ஆசிரியர்கள் ஊதியம்.பள்ளி பராமரிப்பு,குடிதண்ணீர்,கழிப்பிடம் போன்ற

வசதிகளுக்கு சிலவு ,ஆண்டுதோறும் பள்ளியை புதுப்பித்தல் ,பேருந்து

வசதிகள்,ஒவ்வொரு வகுப்பறைக்கும் மின்வ்சதிகள்,தலைமை ஆசிரியரின்

குளிர் சாதன அறைகள்,ஆசிரியர்கள் அமர வசதியான

இருக்கைகள்,ஓய்வறைகள்,பெற்றோர்- மாணவர்கள் தங்கள் பள்ளியில்

அதிகம் சேரவேண்டும் என்ற  தளரா உழைப்பு; இப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் 

என்ற ஒரு அரசு ஆணை மட்டும் தான்.பொருளாதார மானியம் என்பது ஒரு

 பைசா கிடையாது.

ஆனால் கடு பிடிகள் அதிகம்.  தர்ம  சிந்தனைகள் உள்ளவர்கள் தான் பள்ளிகள்

 நடத்தவேண்டும் என்றால் சராசரி சிலவுகள் கணக்கிட்டால்  கண்ணீர்தான் 

வரும்.


200  மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு குறைந்த பக்ஷம் ரூபாய் 5000/;ஊதியம் என்றால்  மாதம் ரூ.40,000/;
 ஆயா,துப்புரவுத்  தொழிலாளி தண்ணீர் எடுத்துவைப்பவர், பள்ளிகூட்டுவோர் மின்கட்டணம்,தொலைபேசிக்கட்டணம், முதலுதவி மராமத்து என்றவகையில் ரூ.15,000/
;நிர்வாகத்தினரின் அன்றாட மன உளைச்சல்  மாணவர்கள் பாதுகாப்பிற்கு மதிப்பிட முடியாது.

பள்ளிகள் துவங்கியதே வருமானத்திற்கு என்று  மனசாட்சி

உள்ளவர்களுக்குத்  தெரியும்.

  சில க ல்லூரி குறிப்பாக தனியார் பொறியியல்  கல்லூரி பேராசிரியர் 

ஊதியமே மாதம் 10,000/மட்டுமே
.அதைப்பற்றி யாருக்குக் கவலை .அவர் ஏன்   இப்பணிக்கு வரவேண்டும்.(இக்கல்லூ ரிகள் யார் நடத்துகின்றனர் என்பது உலகறிந்த ரகசியம்) சரி. 

ஒரு தொடக்கப்பள்ளி நடத்த  குறைந்த பட்ச சிலவு  மாதம் 60000/;
வருடம் 60,000 x 12 =  7,20,000/-

தர்மம் செய்பவர்கள் யார்.?

அரசியல் வாதிகள் நடத்தும் பள்ளிகள் ;கல்லூரிகள் 

 ;ஏழைகள் தன பிழைப்புக்காக   நடத்தும் பள்ளிகள் 

,அனைத்தும் மூடிவிட்டு அரசே பள்ளிகள் நடத்த முடியுமா?
 அனைத்துத் தரப்பு மக்களும் இதை  ஏற்பார்களா?

குளிர் சாதனா வண்டியில் பயணம் செல்வோர்,

 கட்டைவண்டியில் செல்வோர் என்ற பொருளாதார நிலை நம் நாட்டில்.

தனியார் பள்ளிகளால் அரசுக்கு பல கோடி சிலவுகள் மிச்சம்.

 கல்வி என்பது அரசர் ஆண்ட காலத்தில் இருந்து இன்று வரை 

பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது

.ஒரு மகிழ்ச்சியான கசப்பான உண்மை

.  
அபதுல் கலாம் அரசுப்பள்ளியில் படித்தவர்.

  கமலஹாசனும் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தவர்.

   அரட்டை அரங்கம்  புகழ்  விசு அவர்களும் அரசு உதவி பெரும் பள்ளியில்

 படித்தவர்தான்.

   அறிவு,திறன் என்பது பற்றி திரு கமல் மற்றும் விசு அவர்களுக்குத்தெரியும்
.
  நான் படித்த மாநகராட்சிப் பள்ளியில் மாணவர் எவ்வளவு  ஒழுக்கமாக 

இருந்தனர் என்பதற்கு தேர்வு மையமே மாற்றப்பட்ட வரலறு உண்டு.

கல்வி சம்பந்த மான,  கட்டணம் சம்பந்தமான போராட்டம் தேவையா?

 விந்தையான  அரசியல்  என்றே தோன்றுகிறது.
  

தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் விடுமுறை எடுக்காமல் 

தொண்டாற்றுகின்றனர்  என்பதுதான்  உண்மை.




செவ்வாய், ஜூலை 17, 2012

goverment school facilities

பொது  மக்களே!
அறுபத்தேழு ஆண்டுகள் ஆகியும் இலவசக்கல்விக்காக

 போராட்டம் நடக்கிறது.

சென்னையில் போராட்டம்;சேலத்தில் போராட்டம்  என.

இலவச   அ ரசாங்க உயர்நிலைப்பள்ளிகள் ,ஆரம்பப்பள்ளிகள்  அரசாங்கம்
 
முற்றிலும்  மூடிவி ட்டதா?இல்லையே.

திருவல்லிக்கேணியில்  இந்து மேல்  நிலைப்பள்ளி,கெல்லட்,என்.கே.டி

 ' மாநகராட்சி , அரசுப்பள்ளிகள்,வெஸ்லி .மோனஹன்,சில்ரன்  கார்டன்

 ,சாந்தோம்,கோபால்ட்  என்று  இத்தனை அரசு உதவி பெறும்  பள்ளிகள்

இருந்தும் ,

பல மெட்ரி குலேசன்  பள்ளிகள்  இயங்கக்  காரணம்  பொதுமக்கள்

விரும்புவதால்  தான்.

அரசின் சலுகைகள்:
  1. இலவச  பாடநூல்கள்
  2. இலவச  பேருந்து  வசதி
  3. தாழ்த்தப்பட்ட பின்தங்கிய பிரிவினருக்கு  உதவித்தொகை
  4. விதவை,முன்னால் ராணுவ வீரர்கள்,துப்புரவுத்தொளிலாளர்
  5.  கு ;ழந்தைகள்  அனைவருக்கும் உதவித்தொகை,
  6. விபத்தில்  உயிர் இழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு சலுகைகள்.
  7. மதிய உணவு    தி ட்டம்.
  8. மாற்றுத் திறனாளி  குழந்தைகளுக்கு  சலுகைகள்
  9. சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  உதவிப்பணம்
இன்னும் பல  நல திட்டங்கள்.
இலவச  குறிப்பேடுகள்,காலணி ,சீருடை,மிதிவண்டி,மடிகணினி,

இருப்பினும்  தனியார்  பள்ளிகள்  காந்தக்  கவர்ச்சி.

விடுதலை ஆகி  67 ஆண்டுகள்.கல்விக்குப்போராட்டம்.தேவையா?
அரசு  மருத்துவ மனை/தனியார்

அரசு  தொலை பேசி/தனியார்.

 விரும் புவோர்    செல்ல   வசதிகள்.

போராட்டம் தேவையா?அமைதியான  நடவடிக்கை

மக்கள்  தங்கள்  குழந்தை  களை   சே ர்ப்பதிலா?

அல்லது  அனைத்தும் அரசாங்கத்தால் ஈடு  செய்ய முடியுமா?

அரசுப்பேருந்துகள்  இருந்தும் ஆட்டோ ரிக்ஷாக்கள்,கால் டாக்சிகள் ,

தனியார் பேருந்துகள்.

எதையும் தடுக்க எதிர்க்க  ஆதரிக்க  மககளாட்சியில்  உரிமை உண்டு.

அவை நியாயமானதாக இருக்கவேண்டும்.

ஞாயிறு, ஜூலை 15, 2012

எல்லாமே நன்மைக்கே.யாருக்கு?


எல்லாமே நன்மை  யாருக்கு ?

மக்கள் மனதில் நல்ல எண்ணங்கள்,பொது சொத்தை அளிக்காமலிருத்தல்,

சட்ட விதிகளை மீறாதிருத்தல்,

 கல்விக்கூடங்களை  மதித்தல் ,

ஆசிரியர்களுக்கு மதிப்பளித்தல்,

ஆட்சி செய்பவர்களை மதித்தல்,

காவல் துறையைப் போற்றுதல் ,

பொது இடங்களை அசுத்தா மாக்காமல்  இருத்தல்,

வாக்களித்தலில் பெறுவதில் நேர்மை காட்டுதல்,

இவை  நமது  நாட்டில்  இல்லை  என்று கூறமுடியாது.

காரணம்  தர்ம தேவதையின்  தண்டனைகள் அதிகம்.

அதே நேரத்தில்  அவைகளை

 உணரா ,உணர்ந்தும் கடைப்பிடிக்க முடியாமல் தவிப்போர் பட்டியல் அதிகம்
.
அந்த பட்டியல்   கலியுக  தர்மம்   என்ற  மூட நம்பிக்கையில்

  நீண்டு கொண்டே செல்கிறது.

அதர்ம  வழியில் செல்வதே தர்ம  வழியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அரசாங்கம்  ஒரு விண்ணப்பம் பெற்று அதற்கு அனுமதி பெற மக்களை

அலைய வைக்கிறது.அதனால் மக்கள் நேரடியாக தங்கள் அலுவல்களை

விட்டுவிட்டு அலைவதால் நேரம்,பணம்  அனைத்தும் விரைய மாகிறது.

வேலை முடிவதில்லை.

அதற்கென  சில முகவர்களை அணுகினால் உடன்  பணி முடிந்து  விடுகிறது.

ஆட்டோவிற்கு  கொடுக்கும் பணம் முகவருக்கு.

இதில் பணம் இல்லாமல் நேர்மையாளர்களுக்கும் நியாயம்

கிடைக்கிறது.
அவனின் ஆயுள் காலம் முடியும் பொழுது அல்லது  ஆயுள் முடிந்த பின்.

இது அவன்  "அவன் தலை எழுத்து" என்ற மூட நம்பிக்கையால்

 மறைக்கப்படுகிறது.

நிர்வாகம் சரியில்லை என்று யாரும் கூறுவதில்லை.

சட்டம் ஓர் இருட்டறை என்ற அறிஞர்  அண்ணாவின் கூற்று மெய்யாகிறது.

அனால் அவர்  நாமம் கூறி மக்களுக்கு நாமம் போடும்  ஆட்சி

தொடர்கிறது.
ஏழைகள் எப்பொழுதும் போல் வெயிலில் நியாயவிலைக்கடைகளின்

 முன் நிற்பது  ஏழைகளின் தலை எழுத்து.

அந்த  நியாயவிலைக்கடைகள் பரிதாமமான இடத்தில்.

ரசீது போடுபவருக்கு வசதியாக அமர இடம் இருக்காது.

மூட்டைகள் இடிக்கும்.பக்கத்தில் திராசு.

.அங்கு நிறுத்துப்போடும் ஊழியர்  நிமிர்ந்து நிற்க இடம் இருக்காது.

அங்கு ஒரு சிறிய  ரவுடிகளின் சாம்ராஜ்யம்.

இது அனைவருக்கும் தெரிந்த ராஜ்ஜியம்.

அங்கு கூட்டம் சேரும் வரை பில்  போடமாட்டார்கள்.

கூட்டம் சேர்ந்த பின் தான் நிறுத்துப்போடுவார்கள்.

அது அவர்களுக்கு வசதி. பொதுமக்களுக்கு அவதி.

எல்லாம்  பொதுமக்கள்  தலைவிதி.

 இந்த நம்பிக்கை உள்ளவரை

அநீதி இழைப்போருக்கு நல்லதுதான்.

எல்லாமே நன்மைக்கே.யாருக்கு?