வெள்ளி, டிசம்பர் 28, 2012

ஆண்டவனை வேண்டி , அ றம் செய்வோரைக் காக்கும் கலியுகம். அமைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆங்கிலப்புத்தாண்டு  2013 ,
ஆனந்த  மிக்க ஆண்டாக ,
இனிய சுகங்கள் தரும்,
மன நிறைவுதரும் ஆண்டாக.
மகிழ்ச்சிதரும்  ஆண்டாக,
மங்களம் தரும் ஆண்டாக,
சத்தியவான்களும்,
நேர்மையாளர்களும்
நியாயவாதிகளும்
தலை நிமிர்ந்து பயமின்றி செல்லும்
ஆண்டாக ஆரம்பித்து,
ஆண்டாண்டுகள்   தொடர,
ஆண்டவனை   வேண்டி ,
அ றம் செய்வோரைக்
காக்கும் கலியுகம். அமைய
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வியாழன், டிசம்பர் 27, 2012

கலியுகத்தில் உன் நேரடி தண்டனை தேவை; இதுவே எனது இன்றைய பிரார்த்தனை.


செய்திகளும்  மக்களும்

தில்லி கலவரத்தில் காவலர் மரணம்.
உசிலம்பட்டி  காவல்துறை ஆய்வாளர் மரணம்.
கற்பழிப்புகள்;4வயது சிறுமி பலாத்காரம்.

தில்லி காவலர் மரணம் குறித்து
காவல்துறை அறிக்கை ,பொதுமக்கள் கூற்று,
எது உண்மை ?
மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியால்தான்
உண்மை அறிய முடியும்.
மக்களுக்குப் பாதுகாப்புத்தரும்
அரசியல்வாதிகள்,பணம் படைத்தோர்,பணத்திற்கு மயங்கும்
அதிகாரிகள்,இரத்த பந்தத்தால்
இந்தவித குற்றங்களை ஆதரிப்போர்,கம்சன்,
இராமாயண ,மஹா பாரத காலத்தில் இருந்து
நடக்கும் அவலம்.
மாற்றான் மனைவியின்மீது ஆசை கடத்தல்,
இன்றா நேற்றா,
இராவணன்,இந்திரன் ,கம்சன் ,திரௌபதி துகில் உரித்தல்,
அதிகாரபலம்,சூதாட்டம்,வரலாறு காட்டும் உண்மைகள்.
அவரவர்கள் பாதுகாப்பு அவரவர்கள் சக்தியால்,
அறிவுத் திறனால்.
மக்களுக்கு எச்சரிக்கை தேவை.
தங்களைத்தாங்களே பாதுகாக்கும் ஆற்றல்,
ஊழல் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்,
ஊழலை ஆதரிக்கும் பொதுமக்கள்,
தன்னலம் இதுவே இன்றைய சூழல்.
ஒரு தெய்வீக சக்தி,மனித  சக்திக்கு அப்பாற்பட்ட
சக்தி ஒவ்வொரு தனிமனிதனுக்கும்
கிடைத்து,சட்டத்தை,புலனடக்கத்தை,
நீதி,சத்தியம்,தர்மம்,நேர்மை மதிக்கும் பண்பு ,
பெற  இறைவணக்கம்  ஒன்றே வழி .
திரைப்படம்,சுயநல எழுத்தாளர்கள் ,
வணிக நோக்க விளம்பரதாரர்கள்
அரசியல் தலைவர்கள் ,
காமத்துடன் கலந்த காதலுக்கு
முக்கியத்துவம் அளிப்பதால்வரும்
கொடூரங்கள்;
துர்க்கை! நீ நேர்மையாளர்களுக்கு ஆற்றல் கொடு;
ஆணவ அநியாயங்களை ஒழிக்க அவதாரமெடு;
இன்றைய என் பிரார்த்தனை இதுவே.
ஆலயங்களும் வணிக நோக்கம்;
அரசியலும் வணிக நோக்கம்;
கல்வியும் மனித வனிகநோக்கம்;
கலவியிலும்  மனிதநூகாம்;
காளி  தேவியே!
கலியுகத்தில் உன் நேரடி தண்டனை தேவை;
இதுவே எனது இன்றைய பிரார்த்தனை.

செவ்வாய், டிசம்பர் 25, 2012

கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.

ஏசுநாதர்  பிறந்த நாள்.
எளிமை,சேவை,அன்பு, மனிதப்பண்பு,
 பாபங்கள்   தான் ஏற்று ,
மனிதனை துன்பத்திலிருந்து விடுவிக்க,
ரத்தம் சிந்திய மகான்.

இந்நன்னாளில்  நல்லதே செய்து,
செய்த பாபங்கள் உணர்ந்து
 உயர்ந்த சிந்தனைகளுடன் ,
உண்மை,நேர்மை ,சத்தியம் ,அன்பு ,சேவை,
பரோபகாரம் என்ற உயர் குணங்களுடன் ,
உலகில் வாழ்ந்து இறை தூதர் துணையுடன்
உயர்ந்த மனிதனாக வாழ , உள்ளநிறைவு,மகிழ்வுடன்
வாழ ,
கிறிஸ்மஸ் தின 
வாழ்த்துக்கள்.

வெள்ளி, டிசம்பர் 21, 2012

ஜாதி ஒழிந்தது. ஜாதிப் பற்றாளர்கள் ஒழியவில்லை.

"காந்தி என்ற பெயரில் என்ன  இருக்கிறது"---என்றதொரு கட்டுரை.


"காந்தி "  என்ற  பெயரில் ஜாதி இருக்கிறது.பனியா ,வைஷ்ய  என்பதுதான் பொருள்.

நம்த தலைவர்களை  அன்னாஜி ,நேஹ்ருஜி,காமரஜ்ஜீ  என்பதுபோல்

மோகன் ஜீ  என்று அழைத்திருக்கலாம்.இப்பொழுது அனைவரும் காந்தி  சேர்ப்பதால்  ஜாதி ஒழிந்துவிட்டது. ஆனால் ,காந்தி என்றால் இந்திரா,ராஜீவ்,சோனியா  என்றே பலர் நினைக்கின்றனர். படித்தோருக்குத் தெரிந்து  இப்பொழுதுதான்  அனைவரும் துணிந்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

நான் முதலில் இதை வெளியிட்ட பொழுது பலர் ஆச்சரியப்பட்டனர்.

ஹரிஜன்  என்ற  சொல் கபீரின்  தோஹையில்  உள்ளது.

கபீர்  சொல்கிறார்=="நாடும்,சொத்தும்,பெயரும்,புகழும் இறைவன் அளிப்பவை.

இறைவனை அளிப்பவன் பக்தன் ,அதற்கு அவர் எழுதிய சொல் "ஹரிஜன்".

எளிய மொழியில் ஆழ்ந்த கருத்தை வெளி யிட்டால் அது படிக்காதவன் ,கிராமீயப்பாடல்.
அது அனைவருக்கும் புரியும்  மொழி. அனைவராலும் ஒதுக்கப்படுவது

அதனால் தான் நாம் அடிமையானோம் .

இன்றும் பலர் பல விஷயங்கள் புரியாமல் இருக்கும் மொழியிலேயே

புரிந்துகொள்ள விரும்புகின்றனர்.

சோனியா காந்தி ஊழல் என்றால் காந்தியின் வாரிசின் ஊழல் என்று
நினைப்போரும் உண்டு.
தேசீய கீதம்   வங்க  மொழி என்பது தெரியாதவர்களும் உண்டு.

    காந்தி  என்பதற்கு முக்கியத்துவம் அளித்து  ஜாதிப்பெயர்   பொதுப் பெயராகியது.

ஜாதி ஒழிந்தது.

ஜாதிப் பற்றாளர்கள் ஒழியவில்லை.




. இதுதான் உலகம்.

நமது முன்னோர்கள்  வாழ்க்கையை பிரம்மச்சரியம்,க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம்,சன்யாசம் என்று பிரித்து   மனப்பக்குவம் ஏற்படுத்தி உள்ளனர்.

அமெரிக்காவிலும் அவர்கள் வாழும் முறை சாகும் வரை தன சக்தியை நம்பியே.90 வயதில் கார் ஓட்டி  செல்லும் முதியர்.ஒரு கை இல்லாமல் ஒரு முதிய பெண் சாமான்களை எடுத்து காரில் வைத்தபொழுது உதவச்சென்ற  என் மகனைத் தடுத்துவிட்டார்.அது அவர்கள் தன்னம்பிக்கை. நான் 58 வயதில் வயதில் ஒய்வு பெற்றதும் தளர்ந்துவிட்டேன்.அங்கு சென்றதும்  இளமையை உணர்ந்தேன். ஏன் என்றால் எங்கள் வீட்டின் அண்டைவீட்டுக்கரர் என் அப்பா சிறுவயதில் இறந்துவிட்டார் என்றார், அப்பாவின் வயது 74.
நம் சனாதன  தர்மம் வாழ்க்கைத் தத்துவங்களைக் காட்டுகிறது. தசரதர் மூப்படைந்ததும் இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார்.

நாம் வயதானாலும் 52 வயது மகனை குழந்தையாய் தான் பார்க்கிறோம். நாம் நமது கலாச்சாரத்தை ஆழ்ந்து படித்தால் பிரிவு ஒன்றும் பெரிதல்ல.

தாயின் கருவில் இருக்கும் காலம் தாய் நாடு.பின் நாம் வெளிநாடுதான். இயற்கை நீதி  ஆகையால் தான் நம் சகோதர மதம் இஸ்லாம் இறப்பில் சிரிக்கிறது.  பிறப்பில் அழுகை.வாழ்க்கையின் எதிர் நீச்சல். இதுதான் உலகம்.

வியாழன், டிசம்பர் 20, 2012

குஜராத் தேர்தல்

குஜராத்  தேர்தல் 

மோதியின்   வெற்றி அவரின் தனிப்பட்ட சாதனையின்  வெற்றி. அதன் சான்றுதான் 
ஹிமாச்சல் பிரதேச  தோல்வி.

மக்கள்  சாதனைகளைப்ப்பார்க்கிறார்கள் ,சாதி-மதம் 
பார்ப்பதில்லை.இருப்பினும் ஊழல் என்று போற்றப்படும்  காங்கிரஸுக்கு  ஓட்டுகளும் ,வெற்றியும்   மக்களின் மோகம் சற்றே குறைந்தாலும் சற்றே மீண்டும் காங்கிரசுக்கு  ஆதரவு  உள்ளது. மக்கள் ஊழல்களை ஆதரிப்பதுபோல்  உள்ளது. படுதோல்வி ஏற்பட்டாலே விழிப்புணர்வு என்ற நிலை மாறி 
சற்றே  அதற்கு உயிர்காற்று கிடைத்துள்ளது. 
மக்கள்  மீண்டும்  தங்கள் சக்தியை 2014 தேர்தலில் காட்ட  வேண்டும்.ஒரு முறை ஊழலுக்கு மரண  அடி கொடுக்கத் தயங்காத  நாட்டுப்பற்று வரவேண்டும். சர்வசக்தியான ஆண்டவன் அருள பிரார்த்தனைகள்.

புதன், டிசம்பர் 19, 2012

மன சாட்சி இல்லா போராட்டம்.


நாட்டில்  ராமரையும் இறைபடங்களையும் செருப்பால் அடித்தபோது மௌனம்.

இறைவன் உருவம் பதித்த உடைக்கு எதிர்ப்பு. 

எத்தனையோ புடவைகள் இறைவனின் படத்துடன் வந்துள்ளன.

கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடலாமா என்ற பாட்டிற்கு எதிர்ப்பு இல்லை.

குஷ்பு விஷயப்போராட்டங்கள்   வீண்.மன சாட்சி இல்லா போராட்டம்.

இறவன் படம் நாமம் போட்ட துண்டுகள் அணிகிறோம்.
ஐயப்பன்  பெயர் எழுதிய துண்டுகள்.
கோயிலில் சாமி படம் போட்ட திரை. 

அதில் துடைக்கும்  ஈரக்   கைகள்.
சாமி அல்லது அம்மன் திரை அழுக்குத்திரையாக.

வீண் போராட்டங்கள் விடுத்து ஆக்கப்பணிகள் செய்தால் 
மதங்கள்  வளரும்.

ஏழைகள் வேதனைப் படமாட்டார்

மனிதர்கள்  மனம் ஆழ்கடல் போன்றது.

அதில் யதார்த்த வாதிகள் படும் துன்பம் 


அவர்களுக்குக் கிடைப்பது அவமரியாதை 

மட்டுமல்ல,வெறுத்து ஒதுக்கும்  மனிதர்கள்.

சுயநலம்  வேண்டியபொழுது மட்டும் பயன்படுத்தல்,உடனே அந்த யதார்த்தவாதியை 

அவமரியாதை என்ற சிகரத்தில் ஏற்றல் ,
அலக்ஷியம்  செய்தல்,உண்மையாக இருந்தால் 
மிஞ்சுவது    அவமானமே.

உண்மை யாக இருப்பதால் நான் அவமானப்படுகிறேன்.
வெற்றிவாய்ப்பு தோல்வியாக மாறுகிறது.
கிடைக்க வேண்டிய பாராட்டுக்கள் கிட்டாமல் போகிறது.
உற்றார்  உறவினர்கள்,நண்பர்களால் ஒதுக்கப் படுகிறேன்.
ஒருவர் செய்யும் தவறுகள் சுயநலம் உள்ளோரால் 
கபட தாரிகளால் மறைக்கப்படுகின்றன.
தவறே செய்யாத யதார்த்தவாதியை   பெரும் கூட்டமே  சேர்ந்து ஒழி க்கப்பாடு  படுகிறது.

அரசியல்,ஆன்மிகம் இரண்டுமே ஏழைகளை ஒழிக்கும்   சாமார்த்தியமான தலைமைகளக் கொண்டவை.
கோடிக்கணக்கில் சேரும் பணம்  இரண்டுதுறையைச்  சேர்ந்தவர்களையும்
 பேராசைக்காரர்களாக்குகிறது .

அவர்கள் பணத்தைப் பதுக்கி  நாட்டுநலம் என்பதில் 

அக்கறை காட்டுவதில்லை.

கோடிக்கணக்கில்  பணம் புதைத்து கிடக்கிறது.
அதை நாட்டு நலத்திட்டத்தில்  பயன் படுத்தினால் 

ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்ற பாடல் 

மெய்யாகும்.



திங்கள், டிசம்பர் 17, 2012

குஜராத் தேர்தலும் இந்தியாவின் எதிர்காலமும்

குஜராத் தேர்தலும் இந்தியாவின் எதிர்காலமும் 

    குஜராத் தேர்தல் மாநில அளவில் நடந்தாலும்   பாரத நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயம்  செய்யும் தேர்தல்.
இதில்  நாட்டு  மக்கள் சுயநலத்தை மறந்து ஓட்டுப் போட  வேண்டும்
,.ஜாதி,மதம்,இனம் என்று மக்கள் மனதில் விஷ விதைகள் தூவும் அரசியல் தலைவர்கள் ,சுயநல அரசியல் வாதிகள் 
ஒழிக்கப்படவேண்டும்.
கருப்புப்பணத்திற்கு முக்கியத்துவம் அளித்து வெளிநாட்டு முதலீட்டிற்கு  கை ஊட்டுப்பெறும்  சோனியா காங்கிரெஸ்  முற்றிலும் 
ஒதுக்கப்படவேண்டும். பல ஊழல் புகார்கள் மேல் எவ்வித உறுதியான நடவடிக்கை இன்றுவரை எடுக்கப்படவில்லை. அப்படிப்பட்ட அரசியல் 
கட்சிகளும் ,ஊழலுக்குத் துணை  போகும் மாநிலக்கட்சிகளும் மாறி மாறி கூட்டணிவைத்து நாட்டின் பொருளாதாரம் ஏழைகளுக்குப்  பயன்படாமல் 
பணமுள்ளவர்களே கல்வி பெறமுடியும் என்ற அரசியல் ஒழி க்கும் சக்தி  மக்களிடம் தான் உள்ளது. இந்திய மக்களின் விழிப்புணர்வு  எப்படிப்பட்டது 
என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். பாரத நாட்டைக் காக்கும் ஒரு தெய்வீக சக்தி மக்கள் மனதில் நேர்மை உணர்வைத்  தரவேண்டும்.

சனி, டிசம்பர் 15, 2012

வளரும் பாரதம். ஆண்டவன் காக்கும் பாரதம்.

பாரத நாட்டில் ஊழல் ,ஊழல் என்றாலும் ,
மக்களும்,மந்திரிகளும் ஊழலுக்கு ஆதரவு என்றாலும்,

நாட்டின் முன்னேற்றம் ,அயல்நாட்டினரை அசரவைக்கிறது.

நாடு என்பதற்கு வள்ளுவன் காட்டிய இலக்கணம்,
மற்றவர்களை நாடக்கூடாது என்பதே.

ஆனால் ,நம் நாட்டின் கல்விமுறை ,
ஆங்கிலேயர் வந்தபின் தான்
அனைவருக்கும் கல்வி என்ற நிலை.
சமவாய்ப்பு,சம அந்தஸ்து என்றாலும்,
அனைவருக்கும் முன்னேற வாய்ப்பு என்ற நிலை இருந்தாலும்,

புதிய தலைமுறையினர் சிந்தனைக்கும்,
பழைய தலைமுறையினர் சிந்தனைக்கும்
மலை-மடு வுக்கு உள்ள வேறுபாடு.

மதங்களால் மனிதனை  பிரிக்கும்
சுயநல ஆட்சியாளர்கள்,
ஜாதிவெறி தூண்டும் குறுகிய மனநிலையாளர்கள்,
சுய நலத்திற்காக   நாட்டைக்காட்டிக்கொடுக்கும்
நயவஞ்சகர்கள்,நா நயம் தவறுவோர்,
தன்  சகோதரனையே அழித்து  நாட்டின் ஆட்சி பிடித்தோர்,
பங்காளிப் பகைகள்,
மாமன்-மச்சான்  வெறுப்புகள்,
இரக் கமில்லா  ஒரு கூட்டம்,
தன்  மொழி தன் இனம் தன பண்பாடு
தன் கலைகள் அழிந்தாலும்
தன தனம் காக்கும் கூட்டம்,
ஆலயங்களின் ஆஸ்திகள்,
ஆஷ்ரமங்களின் ஆஸ்திகள்,
ஆண்டிகளின் கோலங்கள்,
தியாக உணர்வு,
சுய  நலமில்லா கூட்டம்,
  இதற்கு நடுவில் நாட்டின் முன்னேற்றம்,
அதுதான் இது ஆன்மீக பூமி.
அதிகாரம் இருந்தாலும்,
ஆஸ்தி இருந்தாலும்
இங்கேயே நரகவேதனை
மனவேதனை,
கலியுக தண்டனை.
பாரத பூமி, பழம்  பெரும் பூமி,
இந்நினைவு அகற்றாதீர்கள்,
என்ற பாரதியின் கூற்று.
ஆன்மீகத்தால் வளரும் பாரதம்.
ஆண்டவன் காக்கும் பாரதம்.