வெள்ளி, நவம்பர் 09, 2012

தமிழக ஹிந்தி பிரச்சாரகர்கள் பாவப்பட்டவர்கள்.



ஹிந்தி  பிரசாரம்  தேசத்தந்தை  மோகன்தாஸ் கரம்சந்த்  காந்திஜியின் ஆக்கப்பணிகளில் ஒன்று. 1918ஆம் ஆண்டு தென்னகத்தில் ஹிந்தி பிரசார சபை ,சென்னையில் ,,ஆரம்பிக்கப்பட்டது. காந்திஜியின் புதல்வர் தேவதாஸ் முதல் பிரசாரகர். தந்தை பெரியார்  இல்லத்தில் ஈரோட்டில் ஹிந்தி வகுப்புகள் நடந்தன .
1965=67இல்  ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் .பின்னர் தமிழகத்தில் திராவிட முன்னேற்றகழக ஆட்சி.1968முதல் இருமொழி திட்டம்.தாய் மொழி.ஆங்கிலம்.
இதனால் தமிழே படிக்காமல் தமிழ் நாட்டில்மட்டும் பட்டம் வாங்க முடியும்.மற்றமாநிலங்களில் மாநில மொழி அறிவில்லாமல் உயர்நிலைப்பள்ளி  முடிக்கமுடியாது. எதோ தமிழ் பெயர் சொல்லி ஆட்சி பிடித்தோர் தமிழுக்கு செய்த தொண்டு.
   இந்த தமிழகத்தில்  ஹிந்தி பிரச்சாரம் செய்ய பயிற்சி பெற்ற  நிரந்தர பிரச்சாரகர்கள் கிடையாது.மாநில அரசு எதிர்ப்புடன் இன்றும் ஹிந்தி தேர்வு எழுதுவோர்,தேர்வு எழுதாமல் ஹிந்தி படிப்போர்   லக்ஷக்கணக்கில்.

அந்த புனித பிரசாரத்திற்கு  அரும்பாடு படும் பிரச்சாரகர்களுக்கு  தகுந்த ஊக்கம் சபை தருவதில்லை.அதன் நோக்கம் பொதுமக்களிடம் ஹிந்திப்ரச்சரம் செய்வதை விட  மேல்நிலைப்பள்ளி நடத்துவது,ஆசிரியர் பள்ளி நடத்துவது என்று மாறிவிட்டது.சபையில் தேர்தல் நடக்கும்.நீதிமன்றத்தில் வழக்கும் ந டக்கும்.
ஆனால்,அதிகமான தகுந்த ப்ரச்சரகர்களை  உயர்ந்த ஊ தியத்தில்  செய்பவர்கள் நியமிக்க முயற்சி நடக்காது. 12 வயதில் பி.எ.சமமான பட்டம் வழங்கப்படும்.
பிரச்சாரம்  செய்பவர்கள் தியாகிகளாக  இருக்கவேண்டும். மத்திய அரசில்  வேலை இல்லாத இந்தி அலுவலர்களுக்கு  கோடிக்கணக்கில் பணம். வீ ணாகிறது.
67 ஆண்டு சுதந்திரமாகியும்  ஹிந்திக்காக  பலகோடி செலவழித்தாலும்  தமிழக ஹிந்தி பிரச்சாரகர்கள்  பாவப்பட்டவர்கள்.

பாவிகாள் இந்தப் பணம்.


தமிழ் இலக்கியம் மறக்கப்படுவது  ஏனோ? கருப்புப்பணம்  வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் சேர்த்து வைக்கவோ?

  பாடு பட்டுத் தேடி பணத்தை புதைத்து வைத்த ,
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;
கூடு விட்டு ஆவிதான் போன பின் யாரே 
அனுபவிப்பர்  பாவிகாள் இந்தப் பணம்.


. பழையன  கழித்தல் ,புதியன புகுதல்  இலக்கியத்திற்கு விதிவிலக்காகவேண்டும்.

அப்பொழுதுதான்  தர்மம்  நிலைக்கும். மொழியே மறக்கப்ப்படும்பொழுது   நம் போன்றோர் நினைவு படுத்துவது  காலத்தால் அழியா பாடல்சற்றே  மின்னும் .
சிலர் பயன் பெறுவார். நான் சொல்வது அரசியல் சாமியார்களுக்கு.

புதன், நவம்பர் 07, 2012

ஒபாமா வெற்றியும் நம் நிலை.


ஒபாமா வெற்றியும் நம் நிலைyuம். 

அமெரிக்கத்தேர்தலில்  ஒபாமா வெற்றி. தேர்தல் முடிவு அறிவித்தபின்  ரோமனியின் பெருந்தன்மை. நான்  ப்ரெசிடென்ட் மற்றும் அமெரிக்காவின்  நலனிற்காக பிரார்த்தனை செய்வேன்.
 ஒபாமா அவர்களின் பெருந்தன்மை.ரொமனி என்னை எதிர்த்துப்போட்டி இட்டார் என்றால்,அவர் அமெரிக்காவின் முன்னேற்றத்திற்காக  போட்டி இட்டார். நான் அவருடன் பேசினேன், அவருடன் சந்திக்க ஏற்பாடு செய்வேன்.அவருடன் இணைந்து கலந்து அமெரிக்காவின் முன்னேற்றத்திற்குப்  பாடுபடுவேன். என்வெற்றிக்கு ரொம்னியின் போட்டியே  காரணம்.எத்தகைய  பெருந்தன்மை. .என்னே  நாட்டுப்பற்று. வாழ்க ஒபாமா.
நம் நாட்டில் நாட்டின் நலத்தை விட ஊழல் அதிகம்.
உண்மையாளர்கள் நம் நாட்டில்  ஓரம் கட்டப்படுகிறார்கள்.
நேர்மையான அதிகாரிகள் வேலையை விட்டு விடுகிறார்கள். அல்லது பணி   மாற்றம்,அல்லது இடமாற்றம்.
சிறு-சிறு கட்சித்தலைவர்களை ஊக்கப்படுத்தி,ஜாதி,மதம்,சம்பிரதாயம் ஒழிப்போம் என்று கூறி வளர்க்கிறார்கள்.
இறைவனின்  அழகான உருவங்களுக்கு பூஜை செய்து ப்ரானப்ரதிஷ்டை என்ற உயிரோட்டம் கொடுத்து பின்னர் அவைகளை அவமானப்படுத்தி,கடலில் எரிகிறார் கள் . காளி   சக்தியே உருவானவள்.விநாயகர் முழுமுதற்கடவுள்.இரண்டிற்கும் அவமரியாதை. இது எந்த வேதத்தில்  ,எந்த உபநிஷத்தில் உள்ளது. கடவுளின் அவமானம்  ஹிந்து தர்மத்தினரின்  உச்ச கட்ட  மூட நம்பிக்கை. ஒருக்காலும் இந்த ஈனச்செயலை  கடவுள் மன்னிக்க மாட்டார்.புத்தர் சிலை உடைத்தவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு.கோடிக்கணக்கில் பணம் வீண்.பயம்.பதட்டம்.ஆக்கப் பணி புரியும் காவல் துறை.சாமி சிலைக்கு பாதுகாப்பு. இதைவிட கேவலம் எதுவும் இல்லை. சிந்தித்து செயல் படுங்கள். துன்பங்கள் தீரும்.வெறி யைத்தூண்டும்  வெறியர்களுக்குத் துணைபோகாதீர்.
ஞானத்துடன்  யோசியுங்கள். ஹிந்து மதத்தினர் தான் அதிக அளவில் மதமாற்றம். காரணம் கண்டு பிடியுங்கள். சாமி சிலைகளை அவமானப்படுத்துதல் 
ஒரு கேலிக்கூத்து .சாமிசிலைகளை  செருப்பால் அடித்தவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு. அலைகடலில் கால் தலை முண்டம் என்ன கேவலமான பக்தி.

செவ்வாய், நவம்பர் 06, 2012

ஹிந்தியில் ராமசரிதமானஸ் எழுதிய துளசிதாசர்


ஹிந்தியில்  ராமசரிதமானஸ்   எழுதிய  துளசிதாசர்    மனைவிதாசனாக    சுற்றி -சுற்றிவந்தவர். ஓர்நாள் கொட்டும் மழையில்  மனைவியைத்தேடி 

துளசிதாசர்  மாமனார்  வீட்டிற்குச் சென்றார்.அவர் மனைவிக்கு  கணவரின் செயல்  அவமானமாக இருந்தது.கோபத்தில் அவர் மனைவி பத்ர காளி  ஆனாள் .
கணவனை நோக்கி --எழும்பும் சதையும் கொழுப்பும் இருக்கும் அழியும் மாறும்  இந்த உடலின் மேல் உள்ள பற்றை  இறைவன் மேல் பற்றுக என்றாள் .அவரின் இந்த கோபமும் வெறுப்பும் நிறைந்த  வார்த்தைகள் அவரை  ராம பக்தராக மாற்றியது. அவர் இறைவனை வழிபட்டு ராமரின் அனுக்ரஹத்தால்  ராமசரித மானசை  எழுதினார்.
 சம்ஸ்க்ருதத்தில்  இருந்து மாறி மக்கள் புரியும் மொழியில் எழுதப்பட்ட ராமாயணம்  இன்று ஒவ்வொரு வீட்டிலும் வட இந்தியாவில்
  சிரத்தையுடன் பாராயணம்  செய்யப்படுகிறது.
1.
அவரின் பிரார்த்தனை:--
இறைவனே!  நீ ஏழை பங்காளன் ,ஏழை மேல் தயை காட்டுபவன் என்றால்,நான் ஏழை.
நீ வள்ளல் என்றால்,நான் பிச்சைக்காரன்.
நான் பெரும் பாவி  என்றால்,நீ பாவங்களைபோக்குபவன்.
நீ அநாதை என்றால்,என்னைப்போன்ற அநாதை யாரும் இல்லை.
நான்வேதனையில் மூழ்கிஇருக்கிறேன்.
 என் துன்பத்தைத்  தீர்க்க எவரும் இல்லை.
நீ  பிரம்மம்;நான் ஜீவன்.நீ எஜமானன்;நான் உன்  சேவகன்.
நீ என்னுடைய தாய்; என் தந்தை;குரு;நண்பன்;
எல்லா விதத்திலும் எனக்கு நன்மை செய்யக்கூடியவன்.
உனக்கும் எனக்கும் அநேக வித சம்பந்தம் இருக்கிறது.
உனக்கு எவ்வித உறவு ,ப்ரியமானதோ,
 அவ்வுறவில் நீ என்னை ஏற்றுக்கொள்.
எந்த உறவிலாவது, உன் பாதார விந்தங்களை
 சரணடைவது தான்  என் ஒரே விருப்பம் ;என் ஆசை.
நீ என்னை ஏற்றுக்கொள்.
எனக்குவேறு எவ்வித விருப்பமும் கிடையாது.
         2.
  ஹிந்து மதத்தில் முதற்கடவுள்   விநாயகர்.
அவரைத்துதித்து விட்டுதான்,  மற்ற கடவுளை வணங்குவர்.
அம்முறைப்படி  விநாயகரை துளசிதாஸ் தொழுதுவிட்டு,
அவர் வேண்டுகோளாக  வைப்பது,
ராமரின் மனதில் இடம் பிடிப்பது தான்.

உலகம் வணங்கிப் போற்றி வணங்கும் 
கணங்களின் அதிபதி  விநாயகரின் 
புகழ் பாடுங்கள்.
சங்கரரின்  மைந்தன்;பவானியின் புத்திரன்.
சித்தி அளிப்பவன்; யானை முகத்தோன்;
விக்னங்களை  போக்குபவன்;
கிருபைக் கடல்;மோதகப் பிரியர்;
அவர்  ஆனந்தம் அளிப்பவர்.
மங்கலத்தை அளிப்பவர்;
கல்விக் கடல்; அவர் புத்தியின் பிரம்மம்;
இப்படி  மங்கள  வடிவான ,
விநாயகப் பெருமானை---நான் 
கை கூப்பி வணங்கி வேண்டுகிறேன்;
சீதாராமர்  என்  மனம்  என்ற கோவிலில்  எழுந்தருளட்டும்.

திங்கள், நவம்பர் 05, 2012

பட்டறிவாளர் சொல்வது கேட்டால், பண்பும் அறிவும் வளரும்.



வேங்கடவன் துணை இருக்க,
வேதனைகள் அகலுமப்பா?
வேலனுக்கு மாமன் அவன்,
வேண்டுவோருக்கு துணைவன் அவன்.
வழிக்குத் துணை அவன்
வாழ்வின் மேன்மைக்குத்  துணைவன் அவன்.
இறைவன்  ஒருவனே என்றாலும்,
இந்நில வுலகில்,
அவன்  தோற்றம்
அங்கிங்கெனாதபடி
பல வடிவம்.
கணபதி  என்றொரு இறைவன்.
அவன் தம்பி கார்த்திகேயன்,
அவன் தந்தை சிவன்.
அன்னை பார்வதி.
கல்விக்கு
கலைமகள்.
செல்வத்திற்கு அலைமகள்.
வீரத்திற்கு
மலைமகள்.
என்றெல்லாம்
தெய்வப்பெயர்கள்.
அல்லா   என்பர்.
எப்பெயர்  சொன்னாலும்,
ஏற்றம் தரும்.
நம்பினோர்  கெடுவதில்லை.
நான்கு  மறை தீர்ப்பு.

அதனால் தான்
அனைத்து ஆலயங்களிலும்
அலைமோதும் கூட்டம்.

ஆன்  மீகபயம்,
அகிலத்தில்  உண்டு.
தெய்வம் இல்லை என்றோரும்
தேவன் ஒருவனே என்ற மாற்றம்.

நாத்திக முத்தையா
ஆத்திக கண்ணதாசனாக.
காமுகன்  அருணகிரி ,
திருப்புகழ்  அருங்காவியக்
கலைஞராக.
மனைவியைப்  பிரியா ,
துளசி தாசர் ,
ராமச்சரிதமாநாசம்
படைத்தவராக.
மனிதக் காதல்,
தேவதாசனாக;
அனார்கலி -சலீமாக;
அம்பிகா பதி அமராவதியாக
சோகக்கதைகள்.
பைத்தியமாக அலைவதுதான்
மிச்சம்.
இந்த கிகிளுப்புக்காக
பட்டி மன்றங்களும்  இப்படி.
கல்லுரிகளும் இப்படி.
திரைப்படங்களும் இப்படி. சமுதாயமும் இப்படி.

பட்டு அறியும்  போது ,
படபடப்புதான் மிஞ்சும்.
பட்டறிவாளர்  சொல்வது கேட்டால்,
பண்பும் அறிவும் வளரும்.
அறிவும் அமரத்துவமும் வேண்டுமா ?
கடவுளை வேண்டுங்கள்.
மன அமைதி வேண்டுமா
இறைவன் மேல்,
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவீர்.

கல்லூரியில்,
படிப்பில் தோல்வி உற்று,
உயர் படிப்பிற்கு
வழி  இன்றி
பெற்றோருக்கு பாரமாக,
மனச்சுமையுடன்,
இருக்க வேண்டுமென்றால்,
மனிதக் காதலில் ,
கன்னியின்  பெற்றோரையும்
கலங்க வையுங்கள்.

மன அமைதிக்கு  இறைப்பற்று.
மன  வேதனைக்கு  சதைப்பற்று.
ஆறறிவு படைத்தோரே,
ஆண்டவன் காதலா? மனிதக் காதலா?
சிந்திப்பீர்!!  செயல் படுவீர்!!



















வாழ்க போராடுவோர் மன சாட்சி.



உணவுவிடுதியில்  ஐயர்  பெயருக்கு எதிர்ப்பு.

என்  கண்ணில்   பட்ட  பெயர்கள்:

செட்டி நாட்டு உணவகம்.
செட்டி நாட்டு மண்பானை  சமையல்.
சங்கர லிங்க நாடார் மேல் நிலைப் பள்ளி.
வெள்ளையன்  செட்டியார்  மேல் நிலைப் பள்ளி.
ஹிந்து மேல் நிலைப் பள்ளி.
முஸ்லிம் மேல் நிலைப்  பள்ளி.

கிறிஸ்தவ  மேல் நிலைப்பள்ளி.

யாதவ  கல்லூரி.
சௌராஷ்டிரா மேல் நிலைப்பள்ளி.
நாடார் உறவுமுறை கல்வி நிறுவனங்கள்.

வாழ்க போராடுவோர் மன சாட்சி.

ஜாதிவாரி  மக்கள் தொகை கணக்கெடுப்பு.

காந்தி   என்றால்  செட்டியார்.

தமிழில்  மொழிபெயர்ப்பு.தூய தமிழ்

இந்திரா செட்டியார்.

சோனியா செட்டியார்.(வாணிக )(அரசியல் வியாபாரம் சேமிப்பு கூட்டாளிகள்
வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு)
ராகுல்  செட்டியார்

மகாத்மா செட்டியார்.

மேனகா செட்டியார்.

மூப்பனார்

ஜாதி  ஒழிப்போர்.

ஒரு ஜாதி ஒழிக்க,
ஜாதிவாரி கணக்கு.
அதுவும்3%.

மனசாட்சி இல்லா  போராட்டம்.
மீண்டும்  மீண்டும்  வாழ்க ! பாரதியார் . ஔவையார்
ஜாதிகள் இல்லையடி பாப்பா.

ஜாதி இரண்டொழிய வேறில்லை
இட்டார்  பெரியோர்  இடாதார் இழிகுலத்தோர்.
ஐயர் கடை இட்லி சட்னி வாங்கிட்டுவா.
சாம்பார்  பிரமாதம். இது வழக்கு.
ஆனால் ,
இன்று  அரசியல் நடத்த  போராட்டம்.

ஆண்டாண்டு காலமாக சாலைவசதி, தண்ணீர் வசதி,வாகனவசதி,
மின்வசதி,மருத்துவ வசதி இல்ல இடங்களில் அமைத்துக்கொடுக்க போராடினால் ,போராட்டம்.
ஒழுக்கம்,அமைதி,பிரமச்சரியம்,மனக்கட்டுப்பாடு,
உள்ளதைக்கொண்டு நிறைவுடன் வாழ்
என்று தங்கள் பணி புரியும்  ஒரு ஜாதி.


எந்தப்போராட்டம் அரசியல்?
ஜாதி வளர்ப்பது யார்?

ஐயர் உணவு விடுதி  எதிர்த்துப்போராடுவோர்

சற்றே தங்கள்போராட்டத்தை
 மக்கள் நலம் பக்கம் திருப்புங்கள்.

















ஞாயிறு, நவம்பர் 04, 2012

बलात्कार् की कहानियाँ आजकल की नहीं वर्षों पुरानी।


देश   में बलात्कार 

आज की बात नहीं है,
महाभारत में,
तीन राजकुमारियाँ ,
वीरता के नाम से बलपूर्वक 
लाईं  गई ।
नल-दमयंती की कहानी,
प्रेमकी कहानी,
शकुंतला नाटक कैसा?
मेनका  कैसी/?
विदुर का जन्म कैसा?
वाली की मृत्यु  कैसी?

कर्ण का जन्म कैसा?
कबीर का?

मत देखना
कहते हैं  र्रुषी  मूल ,नदी मूल .
इंद्र के हज़ार आँखें 
किस शाप का फल?
अहल्या  मोक्ष 
किस पुराण  की प्रसांगिक कथा?
ये प्रेम की कहानियां,
पुरुषों के लिए 
एक खेल।
सिखाते हैं हम 
राजा के  तीन पत्नियां।
द्रौपतिके पांच पति।
 पाण्डव  की माँ 
कुंती के  पूत  पाँच .
पूर्व विवाह के पुत्र एक।
पाँच  पुत्रों के पिता अलग-अलग।
बलात्कार  या मजबूरियाँ  
आज नहीं चिर परिचित।
सब के सब अधिकारीवर्ग;शासक वर्ग ;
ईश्वर के प्रतिनिधि;
बलात्कार  या  मजबूरियाँ 
आज नहीं चिर परिचित;
एक राम को ही कहते हैं 
एक पत्नी व्रत।
कृष्ण की लोक रंचक।
आंडाल,मीरा 
राम  की भक्ता  नहीं?
क्यों?
लोकरक्षक से 
लोक्रंचक भाता है अधिक;

वर वधु देखने जाते 
आज भी वधु तमिलनाडु में गाती हैं 
कन्हैया,आँखों की लहरे उठती ,
राम  के लिए नहीं।
कृष्ण  की लीलाएं हैं;
राम की है क्या?
तमिल्  में  है  एक लोकोक्ति ,
रेत  को गिन सकते है,
अर्जुन की  पत्नियाँ  गिन नहीं सकते।
कहानी की नसीहतें 
पालन करना दुश्वार;
ऊपरी  अच्छी हैं;
अतः 
करते है वार;
मधु शालाओं में 
रोशनी भीड़ अधिक,
छोटे अक्षर में लिखा है 
देह के लिए अहित;
सर्कार चलाती है 
आय के लिए;
सोचिये ज़रा!
आय हीन वारंगानायेंकरेगी क्या//?
राज सम्मान 
इंद्रा सभा में ,
तीन सुंदरियाँ .
बलात्कार की कहानियाँ  
आज-कल्  की  बात नहीं। 
वर्षों  पुरानी;

पद्मावत  तो प्रेमकाव्य ,
कहते हैं प्रेमाश्रय;
 बलात्कार्  की   कहानियाँ 
आजकल  की  नहीं 
वर्षों पुरानी।



  


சனி, நவம்பர் 03, 2012

நெஞ்சம் பொறுக்கவில்லை, இந்நிலை நீடிப்பது கண்டு. மாணவர்களே! இந்நிலை மாற்றுங்கள்/

சுதந்திரம்  ஆகி  67 ஆண்டுகள்.
தமிழ் தமிழ் என்றே
தமிழகம் ஆளவந்தோர்.
ஒழுக்கம்,
புலனடக்கம்.
மனக்கட்டுப்பாடு
அறியார்.
தனிப்பட்ட வாழ்க்கை வேறு,
தாரணி ஆளும் திறமை வேறு
என்றாலும்,
தலைவனின் /தலைவியின்
அகவாழ்க்கை,
அறியும்  சமுதாயம்,
அதன் பாதிப்பு,
திரைப்பட வாழ்க்கை ,கதை.
அதன் எதிரொலி
இன்று  கட்டாயக் காதல்,
காதலிக்கவில்லை என்றால்,
அமிலம் ஊற்றல்.
கொலைசெய்தல்.
கற்பழிப்பு,
தற்கொலை,
கள்ளக் காதல்
திருமணமான   பெண் ணுடன்காதல்,
ஆணுடன் காதல் ,
கொலை கொள்ளை காதலுக்காக.
அரசன் எவ்வழி,அவ்வழி மக்கள்.
ராமனை கேலிசெய்யும் இவர்கள்,
 வண்ணானின்  சொல்லுக்காக,
மக்களின் ஒழுக்கம்காக்க ,
கட்டியமனைவியை,
கானகம் அனுப்பிய ராமன் துச்சம்.
தனி ஒருவர் ஒழுக்கம்
தாரணி ஆள்வார் ஒழுக்கம்,
தரணிவாழ்  மக்களைபாதிக்கும்.
விளைவு
குடும்பத்தில் பெற்றோருக்கு அமைதி இல்லை.
இளைஞர்கள்  தேர்ச்சி குறைவு.
கலைகல்லூரி,கலாட்டக்கல்லூரி.,
விடுதலை ஆன பிறகும்
நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்
அடிதடிக் கல்லூரி,
நெஞ்சம்  பொறுக்கவில்லை,
இந்நிலை நீடிப்பது கண்டு.
மாணவர்களே! இந்நிலை மாற்றுங்கள்/


வெள்ளி, நவம்பர் 02, 2012

ஹிந்தி பக்தி இலக்கியத்தில் "கவி விருந்த் "நீதிநூல்


ஹிந்தி பக்தி இலக்கியத்தில்   "கவி விருந்த் "நீதிநூல் எழுதுவதில் 
சிறந்தவர். அவர் ஔரங்க ஜீப் அரச கவிஞர்.
அவர் எழுதிய யீரடிகளின்   பதவுரை.


புலி பசித்தாலும் புல்லைத் திங்காது. வீரத்துடன் யானையைத் தாக்கி அதைக் கொன்று   புலி   யானையின் தலை யைச் சாப்பிடும்
.அவ்வாறே  துணிச்சல் உள்ளவர்கள் ,எளிய-பலம்  இல்லாதவர்கள்  போன்று காரியம் செய்யமாட்டார்கள்.
அவர்கள் தங்கள் துணிச்சலும் ,வீரமும் காட்டும் செயலையே செய்ய விரும்புவர்.
இந்நில  உலகில்   இனிய பேச்சு/புகழ் வார்த்தைகளை விட,
வெகுமதி அளித்தால் மக்கள்  அதிக   மகிழ்ச்சி அடைவார்கள்.
 உலகநாதர் சிவன் எருக்கம்பூ /ஊமைத்தைபூவில் அர்ச்சனை செய்தால் மகிழ்கிறார்.
 விஷ்ணு பகவான்  துளசி  இலை  அர்ச்சனையில் மகிழ்கிறார். வெகுமதியால்  தான் சந்தோசம். வீணான இனிமை பேச்சால் அல்ல.

நோய்  உள்ளவர்களுக்கு நோய் தீர மருந்து.
அவ்வாறே  இல்லாத வறியவர்களுக்கு அழிப்பது தான் சிறந்த தானம். இருப்பவர்களுக்கு கொடுப்பதால் தானத்தின் பயன் இல்லை.இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதே  சிறந்த வள்ளல் தன்மை.

சிரிக்காதே.எதற்காக சிரிக்கிறாய். சிரித்ததால் ஒரு அரச குலமே அழிந்துவிட்டது.துரௌபதியின்   சிரிப்பால் அழிந்தது கௌரவர்  குலம்

.மனிதனுக்கு துன்பமோ ,விபத்தோ வந்தால்,மதி கெட்டுப்போகிறது.விதிவசத்தால் விபத்து ஏற்பட்டால்,ஏழைக்கும்,அரசனுக்கும் மேதைக்கும் அறிவு மழுங்கித்தான் போகும்.பொன்மான் பின்னால்  ராமன் சென்றதால்,அவர் தன்  அன்பு சீதையை  பிரிந்தார்.அந்த  மான் மாய மான் என்று அறியவில்லை.

மற்றவர்கள் கூஜா தூக்கிகள். இந்தமுதலாளி இல்லை என்றால் அந்த முதலாளி. வாழ்க ஜனநாயகம்.

பாரத நாட்டு அரசியல்.


பாரதநாட்டின் அரசியல் ,
பாமரனை   குழப்பத்தில் 

வைத்து குளிர்காயும் 
அரசியல்.

இருபெரும் அரசியல் கட்சி.
இரு  பெரும் மாநில கட்சிகள்.

இவர்களின் மேல்  குற்றம் சாட்டும்,

சிறு சிறு அரசியல்  தலைவர்கள்.

சிறு சிறு ஜாதிக்கட்சிகள்.

தங்கள் சுயநலம்  நிறைவேற 
 பெருந்தலைவர்கள்  ஊழல்,ஊழல்,
என்று சொல்லி 
யார் மேல் குற்றம் 
சாட்டினார்களோ  அவர்களையே 
ஆட்சி யாளர்களாக்க ,
வாழ்க போடும் கூட்டம்.
குற்றம் சாட்டி இன்றுவரை எதுவும் 
நிரூபிக்கப் படவில்லை.
யாரும் தண்டனை பெறவில்லை.
கூட்டணியில் 
சிறுகட்சிகள் மாறி மாறி சேருவதும் 
பிரிவதும் ,
மக்களை குழப்பத்தில் 
ஆழ்த்துவதும்,
ஊழல் கட்சிகள்  வாக்குகள் பெற்று 
ஆட்சியில் அமருவதும் 
குற்றம் சாட்டியவர்கள் 
குளிர் காய்வதும் 
அரசியல் தலைவர்களின் 
அற்புத விளையாட்டு.
அனைவரும் போற்றும் தலைவர்கள்,
காந்தி;நேரு,அண்ணா.
தூற்றும் தலைவர்கள் 
சோனியா;அத்வானி;
லாலுஜி,மாயாவதி ,
கலஞரவர்கள்;செல்வி புரட்சித்தலைவி.
அனைவரையும் தூற்றுபவர்கள் 
அவர்கள் மீது   சாட்டும் 
குற்றங்கள் நிரூபிக்க உறுதியுடன் 
இல்லாத சந்தர்ப வாத 
துணிச்சல் காரர்கள்.
நாட்டின் நலம் விரும்பிகளாக 
இல்லாமல் இருப்பதால் இந்நிலை.
வாழ்க ஜனநாயகம்.
வாழ்க சோனியா;அத்வானி;
கருணாநிதி ;ஜெயலலிதா.
மற்றவர்கள் கூஜா தூக்கிகள்.
இந்தமுதலாளி இல்லை என்றால் 
அந்த முதலாளி.
நடுவில் சுப்ரமணிய சாமி.
வாழ்க ஜனநாயகம்.