ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

மதி


'மதி 

"மதி "

மதியால் விதியை வெல்லலாம்.
மதி என்றால் நிலவு என்றும் ஒரு பொருள்.
மதிக்கும் மதி என்பது குளிர்ந்து 
இருக்கும்.
சுட்டெரிக்கும் சூரியன் போல் 
மதி நடந்தால் 
மதிகெட்டுப்போகும் .
விதி  விளையாடும்.
ஆகையால் 
மதி என்ற சொல்லுக்கு 
அறிவு,நிலவு  என்ற 
பொருள் போலும்.
மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம் 
எனவே 
மதிப்பு மிக்க வாழ்க்கைக்கு மதிவேண்டும்.
வள்ளலார்  முருகனிடம் 
முதலில் கேட்பது மதி.
மதி வேண்டும்.
நின் கருணை நிதிவேண்டும் என்கிறார்.
"மதம்"என்பதை பேய்  என்கிறார்.
அது ஆணவமாகவும் இருக்கலாம்.
தன்  மதம்  தான் பெரிது 
என்ற எண்ணம் வரக்கூடாது.என்றும் 
இருக்கலாம்.
இறைவன் மதங்களைக்கடந்தவன்.
மதம்  கொண்டவனிடம் இறைவன் இருப்பதில்லை.
மனிதநேய மிக்கவனிடம் இறைவன் 
குடிகொண்டிருப்பான்.
மதி  மதத்தைத் தணிக்கும்.
மதிக்கு அழகு என்று சொல்வார்கள் 
மதியழகன் ,அறிவழகன் ஞான சுந்தரம் 
என்று மதிக்கும் பெயர்.
மதி தான் மதத்தை வெல்லும்.
மனித~ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

அமானுஷ்யசக்திதான்


மனிதனும் மதமும் 


மதம் பிடித்த யானையும் 
மதப்பற்றுள்ள  மனிதனும் 
மனித நேயம் மறுப்பவர்கள்.
மதங்கள்  தோன்றியதே 
அன்பை வளர்க்க.
சத்தியத்தை காக்க.
அஹிம்சை வளர்க்க.
நேர்மை செழிக்க.
அறம் வளர,
தானங்கள் வளர.
பற்றற்ற வாழ்க்கை வாழ.
**************************

ஆண்டவன் பெயரால் 
ஆஸ்திகள் சேர்க்க அல்ல.
தன்  தெய்வம் தான் 
தன் மதம் தான் உயர்ந்தது 
என்று மனிதர்களுக்குள் 
சண்டை போட வைத்து 
மதத்தலைவர்கள் 
மமதையுடன் 
மன்மத லீலையில் 
மகிழ்ந்திருக்க,
வீடியோக்கள் 
அனைத்து ஆஸ்ரமங்களிலும் 
வைத்தால் தெரியும் என்று 
எதிர்கால ஆதீனம் பேட்டி  கூற,
அரசியலின் சுயநலத்திற்கும் 
ஆஸ்திக சுயநலத்திற்கும் 
அதிகாரிகள் சுயநலத்திற்கும் 
அகலா ஒற்றுமை.
மதங்கள் ஊழல் செய்தால் புது மதம் 
உதயமாகிறது.
அரசியல் ஊழலால் 
புதிய கட்சிகள் 
உதயமாகிறது.
உதயசூரியன் 
சுட்டேரிக்கும்போது 
இரட்டை இலை.
முடிவு 
ஊழல்கள்   மலியும்  போதும் 
கேடுகள் அதிகரிக்கும்போதும்
சங்கரர்,இயேசு ,முஹம்மது நபி,ஜைனர்புத்தர் 
போன்ற இறை தூதர்கள் 
தோன்றுகின்றனர்.
அவர்கள்  மறைந்த  பின் 
மதங்கள் துண்டாடப்படுகின்றன.
அரசியல் தலைவர்கள் இறந்த பின்,
கட்சிகள் துண்டாடப்படுகின்றன.

சயனவாதிகள் கைகளில் 
கோடிகள்  புரள்  கின்றன.
அப்பாவி ஜனங்கள் அவர்கள் 
மயக்கும்மொழிகளில் 
மயங்கி  
போதையில் தன் வயம் இழக்கின் றனர்.
போதை  ஏற்றுபவர்கள் 
ஆனந்தப்  படுகின்றனர்.
அடிமையானவர்கள் அல்லலுறுகின்றனர்.
அமானுஷ்ய சக்தி தான் 
மக்களை காக்க வேண்டும்.






வியாழன், செப்டம்பர் 20, 2012

கணநாயகா !! நீ படும் சிதைவு , என் நெஞ்சத்தை சிதைக்கிறது.

கபாலீஸ்வரர்  மூத்த குமாரன்,
கார்த்திகேயன் சஹோதரன்,
கண நாயகன்,
நவகோள்களின் அதிபதி,
நவசித்தி நவ நிதி 
தரும் தயாளன்.
கஜவதனன்.
தயாநிதி.
அரசமரத்தடியில் 
அமர்ந்து 
தன்  சக்தியால்.
காப்பாளர்கள் இன்றி 
தரணி ஆள்பவன்.
அருகம்புல் 
அர்ச்சனையால் 
அகம் மகிழ்பவன்.
எளி மையில் 
ஏற்றம் பெற்று 
ஏழைகளுக்கு 
ஏற்ற தெய்வம்.
ஆகையால் தான் 
ஆராதனைக்குப்பின் 
அலட்சியத்துக்கு 
ஆளாகிறான் .
நாட்டு விடுதலைக்கு 
மக்களை ஒன்று படுத்த 
திலகருக்கு 
தூண்டுதல் அளித்து,
இந்து மதத்திற்கு ஒற்றுமை அளித்தவன்.
அதனால் தானோ 
இன்று 
விடுதலை 
இந்தியாவில் 
துண்டாடப்படுகிறனோ!!?
ஒற்றுமைக்கு 
உறுதுணை அருள் புரிந்தவனுக்கு 
தக்க சன்மானம்.
ஆராதனை செய்து 
அவனை நடுக்கடலில் ,
ஆற்றில் 
போடுவது.
வினாயாகா!!
கணநாயகா !!
நீ  படும் சிதைவு ,
என் 
நெஞ்சத்தை சிதைக்கிறது.
ஒற்றுமை என்பது,
மதம் வளர்வது,
பதட்டம் பயம் இன்றி 
மகிழ்ச்சியால் 
வருவது.
அந்நாளில் 
விநாயகர் புகழ் பாடலாம்.
கரையும் விரயத்தை,
பக்தி கறுந்தகடில்நிரப்பி ,
நூல்கள் பல அச்சடித்து,
நிலையாக ஒற்றுமை 
நிலை நாட்டலாம்.
மற்றவர் புண் படும் தடத்தில் செல்வேன் 
என்று ஒரு பதட்டம்.
காவல்துறை  பாவம்!!
கொலைகளைத் தடுக்குமா!
கொள்ளைகளைத்  தடுக்குமா?
வழிப்பறி தடுக்குமா?
ஷாந்தி அளிக்கும் பக்தி.
அசாந்தி  ஆவதை தடுக்குமா/?
அறிவியல் யுகம் .-ஆனால் 
ஆண்டவன் பெயரால் 
ஆதங்கம்.
அமைதிப்படுத்த பக்தி.
ஆத்திரமூட்ட அல்ல.
பலத்தைக்காட்ட ,
ஒற்றுமை ஏற்படுத்த,
அன்னதானம்,
 புனித நூல்  தானம்.
கோதானம்,
பூதானம்,
கடவுள் உருவச் சிதைப்பு அல்ல.






நானும் பக்தன் தான்


நானும் பக்தன் தான்.


அவனின்றி ஒரு அணுவும் அசையாது  

சிவன் கட்டளை இன்றி எறும்பு கூட கடிக்காது.

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன்.
காடுடைய சுடலைப் பொடி  பூசி ,
எந்நாட்டிற்கும் இறைவனாய் ,
விஸ்வனாதனாக 
விளங்கும் விநாயகன் புதல்வன்,
தன்னை 
ஆற்றிலும் கடலிலும் கிணற்றிலும் 
போட்டு ,
ஊர்வலத்தன்று ஒரு பயத்தையும் 
பதட்டத்தையும் 
உருவாகும் 
ஆராதனையை 
உள்ளம் விரும்பி ஏற்பானா ?
உலகம் இப்படிப்பட்ட 
பக்தியை ரசிக்குமா?
அல்லது கரை ஒதுங்கும் 
அசிங்கப்பட்ட 
அலங்கரத்தைப்பார்த்து 
உள்ளாடைகளிலும் 
காக்க காக்க கனகவேல் காக்க 
என்று 
உருவத்தை அச்சடித்து அணிவதை 
எதிர்க்க நமக்கு அருகதை உண்டா?
சற்றே சிந்தித்த பின் 
எனது பிரார்த்தனை.
விநாயகா!
கணங்களின் நாயகா!
பக்தர்கள் உன்னை சிதைப்பதைத்  
தடுக்க 
அவர்களுக்கு ஞானம் கொடு.
நீ உன்னை அவமானத்தில் இருந்து காத்துக்கொள்.
இது நீ விரும்புகிறாய் ,
என்றால் எனக்கு 
உன்னை சிதைக்கும் செயல் 
நல்லது என்று சாந்தப்படுத்து.
எனக்கு 
உன் உருவம் சின்னாபின்னமாவது 
வேதனையின் 
எல்லைக்கே அழைத்துச் செல்கிறது.

புதன், செப்டம்பர் 19, 2012

ஊழ் - Fate


ஏரிகள் ,விளை  நிலங்கள்,
விலை போகிறது.
சட்டத்திற்குப் புறம்பாக.
மலைகள் தூளாகின்றன.
மலைப்  பிரதேசங்கள் 
குடி இருப்புகளாக மாறுகின்றன.
விளைவாக,
விளைச்சல் குறைகிறது.
மழை குறைகிறது.
குடிநீர்  பஞ்சம் ,
அரிசி விலை ஏற்றம்.
சுற்றப்புற சூழல் 
மாசு படுகிறது.
காசுக்காக 
அரசியல் வாதிகள் 
நில  ஊழல் குற்றச்சாட்டு 
அனைத்துக் கட்சிகள் மேலும்.
ஆனால் 
ஆட்சி மாறும்  போது 
ஆளும் கட்சியினர் மறைக்கப் படுகின்றனர்.
எதிர்க்கட்சியினர் 
கைது செய்யப்படுகின்றனர்.
சிறுசேரி முதல் ஊட்டி ,கொடைக்கானல் 
என 
கட்சினரின் ஊழல் செய்த்தித்தாளில் 
செய்திகளாக வருகின்றன.
செய்திகள் மறக்கப் படுகின்றன.
ஊழல்கள் தொடர்கின்றன.
இது மக்களுக்கு ஊழ்வினைப் பயனாகின்றன.


செவ்வாய், செப்டம்பர் 18, 2012

paadam panivom.பஞ்சகரன் , பாதம் பணிவோம்


Why this ad?
Virtualization White Paper - www.aternity.com - Learn effects of virtualization on business performance & productivity


வேலனின் மூத்தோன்,
வேழமுகத்தோன் ,
சிவகுமாரன்,
சித்திகள் தருவோன்,
பார்வதி குமரன்,
பார் புகழ் பகவான்,
பக்தர்களுக்கு அருள்வோன்,
பார்க்கும் இடமெல்லாம்,
நோக்கர்களுக்கு எளியோனாய்,
கம்மாக்கரையிலும்,
ஆற்றங்கரையிலும் ,
அரசமரத்தடியிலும் ,
வெட்டவெளியிலும் ,
எழுந்தமர்ந்து ,
வேண்டிய வரமளிக்கும் 
வேலனுக்கு மூத்தோனை ,
வேழமுகத்தோன் 
எளிய இறைவன் 
கண நாயகன்,
பஞ்சகரன் ,
பாதம் பணிவோம்.

W & productivity

Expand all

Print all

In new window

(no subject)

வேலனின் மூத்தோன்,
வேழமுகத்தோன் ,
சிவகுமாரன்,
சித்திகள் தருவோன்,
பார்வதி குமரன்,
பார் புகழ் பகவான்,
பக்தர்களுக்கு அருள்வோன்,
பார்க்கும் இடமெல்லாம்,
நோக்கர்களுக்கு எளியோனாய்,
,

எழுந்தமர்ந்து ,
வேண்டிய வரமளிக்கும் 
வேலனுக்கு மூத்தோனை ,
வேழமுகத்தோன் 
எளிய இறைவன் 
கண நாயகன்,
பஞ்சாக்ஷரன் ,
பாதம் வணங்குவோம்.

திங்கள், செப்டம்பர் 17, 2012

ஓம் கணேசாய நமஹ.


ஓம்  கணேசாய  நமஹ.

சனாதன தர்மத்தில் உருவ வழிபாட்டுக்கு என 

ஒரு மகத்தான இடம்.

புத்தர் சிலை சிதைத்ததற்கே சிந்தை கலங்கினோம்.

ஆனால்,

அடுத்தவாரம் ஆயிரக்கணக்கான 
பூஜிக்கப்பட்ட 
ப்ராணப்   பிரதிஷ்டை செய்யப்பட 
ஆயிரக்கணக்கான 
அழகான கவர்ச்சி 
சிலைகள்.
ஆராதனை செய்யப்பட்ட அழகு 
இறை உருவங்கள்.
ஆராதனைக்குப்பிறகு 
வரம் தர ஆயத்தமான 
ஆர்வமுடன்  இருக்கும் 
வினை தீர்க்கும் விநாயக சிலைகள்.

அடுத்தவாராம் கடல் அலைகளால் 
அலங்கோல மாகும் 
அநாகரீகக் காட்சிகள்.
ஆகையால் தான் 
ஆள்பவர்கள் மனதில் 
சுயநலம்.
ஊழல் .
லஞ்சம்.
ஆசிரியர்கள்.
காவலர்கள் 
அதிகாரிகள்,
அலைபேசி.
தொலைபேசி 
அனைத்திலும் 
அழியும் உலகத்திலும் 
அகலா  மாயை.
காம வாசனைகள்.
கற்பழிப்புகள்.
கொலைகள்.
கொள்ளைகள்.
கொலைவெறிப் பாடல்கள்.
வரம்கொடுக்காமல் வரும் விக்னங்கள்.(தடைகள்)
உருவ வழிபாட்டுக்கு  நேரும் அவமானங்கள்.
விநாயக பக்தர்களே!
சற்றே சிந்தியுங்கள்.
அவரின் அழகு உயிர்பெற்ற (பிராணப் பிரதிஷ்டை)
உருவங்களை 
சிதைக்காதீர்கள்.
அவரை இவ்வாறு அலங்கோலப்படுத்துவது,
அவரிடம் அருள் பெறவா ?
சாபம் பெறவா ?
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கணேசாய நமஹ.



சனி, செப்டம்பர் 15, 2012

சிந்தனை தா!1 இறைவா! இறைவன் அருள் யாருக்கு?





இறைவன்  அருள்  யாருக்கு?

ஆஷ்ரமம் என்ற குடிலில் கானகத்தில் 
வாழ்ந்த முனிகள்.
பஞ்சத்தில் அடிபட்டவர்கள் போல் ,
முற்றிலும் அறிந்தும் மௌனியாய் 

இருக்கும் சித்தர்கள்.
உலக நமைக்காக நவ பாஷாணம் சிலை 
அமைத்த போகர்.
வேதங்கள் ,உபநிஷத்கள் ,
பைபிள் ,குரான் ஆகிய 
நன்னெறி காட்டிய இறை நூல் எழுதும்,

இறை தூதர்கள் .

மாயை,சைத்தான், சாத்தான் 
என்றும் 

உலகவாழ்க்கை  போராட்டம் என்றும் 
வாழும் வரை மற்றவர்களுக்காக வாழ வேண்டும் 
வாழு ,வாழவிடு என்ற ஜைனதத்துவம்.
ஆசையை மற  அன்பு காட்டு 
என்ற புத்த தத்துவம்.
எவ்வளவு சேர்த்தாலும் எட்டடி நிலமோ 
அல்லது 
ஒருபிடி சாம்பலோ மிச்சம் 
என பட்டினத்தார் ,ப்ருத்ருஹரி ,
சித்தர் வாக்கு.
அருணகிரிநாதர் வாழ்க்கை ,
கோவலன் கதை,
அனைத்தும் 
இருந்தாலும் 
பக்தி என்ற பெயரில் 
பலகோடி செல்வம் புதைத்து வைத்து ,
தானும் அனுபவிக்காமல்,
நாட்டிற்கும்  பயன்படாமல்
கோடிக்கணக்கில் 
சேர்த்துவைக்கும் 
முதலாளிகள்.
அரசியல்வாதிகள்.
அதை இருக்கும்போதே பலருக்கும் 
பயன் படுத்தலாம்.
விநாயகர் ஊர்வலம் என்ற அண்மைக்கால வழிபாடு.
அந்தக்  கோடிக் கணக்கு விரயம் 
ஒவ்வொரு  தெருவையும் 
சுவர்கமாக்க தூய்மை படுத்த,

கழிவுநீர் தடம் அமைக்க ,
ஏழைகளின் மருத்துவ சிலவு 
என பயன் படுத்தலாம்.
இறைவா!!
மக்களுக்கு நல்வழி  காட்டு.
உன் பெயரால் உன்னை அழகுபடுத்தி, 
அலைகடலில் அழிக்கும் 
அறியாமை பக்தியைப்போக்கு.
புதிய பக்தி முறை, 
நீ படைத்த 
நொடிகள்,
குருடர்கள்,
அனாதைகள்,
நோயாளிகள்,
பசிப் பிணி  உள்ளவர்கள்.
கழிவு நீர் ஓடும் 
மேடுபள்ள புது நகர்கள் 
அனைத்தும் 
பயன் பெற 
கருணைகாட்டு.
நீ விரும்பும் பக்தி 
வால்மீகி,
துளசி,
துருவன்,
வள்ளுவர் 
அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் 
நபி ,
ஏசு,
ஜைனர் 
புத்தர் 
என்றால் 
இந்த மாயை பக்தி 
உன் அழகு சிலை 
சிதைக்கும் பக்தி 
அரசியலும் சுயநலமும் கலந்த பக்தி.
இதை மாற்றும் 
சிந்தனை  தா!1
இறைவா!
விநாயகா!





ஏன் இந்த கடவுள் அவமானம்?இன்றைய செய்தி.



இன்றைய செய்தி.

வெளிநாட்டில் வாழும் இந்திய மாணவர்கள் 
கட்-அவுட் வைக்கும் சிலவிற்கு 
ஒரு கிராமத்தைத்  தத்து எடுக்கலாம் 
என்று கூறி உள்ளனர்.
இந்த செய்திக்கு பிரான்சு நாட்டு 
இந்தியர் தன்  கருத்தாக 
போனமா பார்த்தமா என்று வாருங்கள்.
இல்லை என்றால் பத்திரமாக திரும்ப முடியாது 
என்று தன் அனுபவ உண்மையாக கூறி உள்ளார்.
இது ஒரு ஜனநாயக நாட்டில் எவ்வளவு  பெரிய  அபாயம்.

நான் எழுதுகிறேன் 

6500 பிள்ளையார் சிலைகள் .(சென்னையில் மட்டும்)
குறைந்தது ஒன்று ஆயிரம் என்றால் 
6500 X 1000=6500000.
ஆறு லக்ஷத்து  ஐம்பதாயிரம்.
அலைகட்லிலோ ஆற்றிலோ எரிய 
காவல்துறை பாதுகாப்பு ,போக்குவரத்து பராமரிப்பு 
என  கோடிக்கணக்கில் பணம் 
விநாயகரை சிதைக்க.
இந்த தொகையை நாட்டு நலம்,
சாலை சீரமைப்பு போன்றவற்றிற்கு 
பயன்படுத்தினால் 
விநாயகர்  அருள் கிட்டும்.
இது சென்னையில் மட்டும்.
பகுத்தறிவுத் தந்தை 
கடவுள் இல்லை என்கிறார்.
கடவுள் இருக்கிறார் 
என்பவர்கள் மனத்தில் 
ஏன் 
இந்த கடவுள் அவமானம்.

இன்றைய நாகரிகமும் அறிவியல் வளர்ச்சியும



இன்றைய நாகரிகமும் அறிவியல் வளர்ச்சியும்.

பாரத நாட்டில் அறிவியலும் ஆன்மீகமும் 
இணைந்தே கற்பிக்கப் பட்டன.
ஆண்பெண் ஈர்ப்பிற்கு மனக்கட்டுப்பாடு 
தேவை எனவும் அதைக்கட்டுப்படுத்த 
பூஜை விரதங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டன.
சித்த வைத்தியத்திலும் 
"ஒன்ரைவிடேல் ,இரண்டை அடைக்கேல் "
என்று கூறப்பட்டது.
ஆனால் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் 
பல முன்னேற்றங்கள் இருந்தாலும் 
மனிதன்  குறிப்பாக 
இளைஞர்கள் இளைஞிகள் 

காதல் ,காதல் என்று 
கைபேசியுடன்  அழைகின்றனர் .
இதனால் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களே.
கட்டுப்பாடு இல்லாமல் சுற்றுவதுடன் 
காதல் கைகூடாவிடில் 
கொலை தற்கொலைவரை சென்றுவிடுகின்றனர்.
அதைவிட கொடுமையான செய்தி 
ஹிந்தி நாளிதழில் 
படித்து  எதிர்கால பாரதம் எப்படி இருக்கும்?
என்ற வேதனை பெற்றோர்களுக்கு  வரும்.
பதிமூன்று முதல் 20 வயது வரை உள்ளவர்கள் 
75% no problem ,no commitment,  என்று 
காண்டமும் கருத்தடை மாத்திரையுடன் 
அலைவதாக சேதி.
சென்னை பிராட்வே கொலை தற்கொலைக்கு காரணம் 
காண்டம்.
காதலனின் பாக்கெட்டில் காண்டம் கண்ட காதலி 
காதலை மருத்துள்ளாள் .
காண்டமே அவள் உயிருக்கு   எமகண்டமாகி உள்ளது.
அறிவியல்  வளர்ச்சி பகுத்தறிவு அவசியம் தான்.
ஆனால் மனரீதியான நோய்  தீர 
ஆன்மிகம் அவசியம்.
ஆனால் அது.

திரைப்படங்கள் கொலைவெறி ;
பாடல்களுக்கும் சென்சார் தேவை.
காதலிக்க மறுக்கும் பெண்ணை அவன் நண்பர்கள் 
அடிடா  அவளை;உதைடா  அவளை ;வெட்டுடா அவளை;
விளைவு 
பிராட்வே  கொலை.