சனி, மே 14, 2016

ஆசிரியர் மாணவர்இக்காலம்

ஆசிரியர் சிறந்த ஆசிரியர்
இன்றைய காலங்களில்

யார் என்றால்
பள்ளியில் பள்ளி நேரத்தில்
குறைந்த மாணவர்கள்
மாலை நேரத்தில அவரது
இல்லத்தில் அதிக மாணவர்கள்

(ஹிந்தி கவிதை  )
(அத்யாபக் ஆஜ் கே)

மாணவர்கள் :

கட்டைவிரல்  குரு தக்ஷணை
கொடுத்தது அந்தக்காலம்.
(கட்டைவிரல் காட்டுவது இந்தக்காலம்)

கண்ணீர்

தலைவரும் முதலையும்

தலைவர் : உன்னிடம் கண்ணீர் வாங்கவந்தேன்
தேர்தல் நேரமல்லவா?

வாக்கு பெற வேண்டும் கண்ணீர்

முதலை : ஐயோ ! தாமதமாக வந்து விட்டீர்கள்
உங்கள் எதிர்கட்சித் தலைவர்
வாங்கிச் சென்றுவிட்டார்.
என் கண்களே வரண்டுவிட்டன
  (முதலைக்கண்ணீரே)  (வரண்டுவிட்டது )(ஹிந்தி கவிதை )

வெள்ளி, மே 13, 2016

கூட்டு

காலை வணக்கம்.
கடவுளைத் தொழுதேன் .

மக்கள் நலம் நாட்டுநலம்

மனநலம் நன்கு அமைய
மே பதினாறு .

தலைவருக்காக ஓட்டு வேண்டாம்.

நல்லோருக்காக ஓட்டு.

பெற்றோரையே ஒதுக்கும் யுகத்தில்

சுயநலசொத்து  சேர்க்கும் தலைவரை ஒதுக்கி
நல்லோரை தேர்ந்தெடுங்கள்.
கணவன் மனைவி தலாக் செய்யும்
யுகத்தில்  தலைவிக்கு பயந்து
கொத்தடிமை  யாக கொள்ளைக்கு
தலை குனிந்து கேள்விக்குறியாக
இருக்க வேண்டுமா ..?

மக்களாட்சி தலைவனாே தலைவியோ கோடிகள் சேர்க்க அல்ல.
அரசன் காலத்தில் அந்தப்புர
அழகிகள் சேர்க்க பல வீரர்கள் மனைவிகள் விதவைக்கோலம்.
மக்களாட்சி காலத்தில்
குடிகார தொழிற்சாலை லாபம்
பெற டாஸ்மாக்கால்
வறுமை விதவைகள்
இருவருமே உள்ளுக்குள்
பொருளாதாரக் கூட்டு.
சிந்திக்க வைக்க 
இறைவன் அருள்
வேண்டும் .
மக்கள் மனதில் நல்லோர் வெற்றி பெற அருள ப்ரார்த்தனைகள் .

வியாழன், மே 12, 2016

சிந்திக்க

அன்பு  ஆண்டவன்  அருள் ,

  ஆனந்தம்  ஆண்டவன் அருள்

ஆத்ம  திருப்தி  ஆண்டவன் அருள்

ஆத்மவிஸ் வாசம்  ஆண்டவன் அருள்

ஆஸ்தி   வருவதும் போவதும் ஆண்டவன் அருள் .
மழலைச்  செல்வம்  மகேசன்   அருள் .
பதவி ,பட்டம் ,கலைகள் ,இனிய குரல் ,
அழகு , ஒவ்வொன்றும்  யாருக்கும்
தாங்கள் நினைத்தபடி வருவதில்லை.
புதிய  கண்டுபிடிப்புகள் அதில் ஈடுபாடு  உள்ள நாட்டினர்களுக்கே .
பாரத நாடு  பக்தி.முக்தி. வாழ்க்கைக்கு உணவுவகைகள்,
ஆரோக்யத்திற்கு  ஆன்மிகம் கலந்த மருத்துவ இயல்.
வைகறைதுயில்  எழு.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று .
ஆலயம் சென்றால் சிலர் நேரே கர்பகிரஹம்  மூலவர்  தரிசனம்
புண்ணியம்  என்றே  எண்ணி செயல்பட்டு
சுற்றுலா பேருந்தில் துரித தரிசனம் செய்கின்றனர்.
ஒவ்வொரு ஆலயத்தின்   அமைப்பு  ,,விஸ்தீர்ணம் ,ஐதீகம் அறிந்து
வழிபட வேண்டும்.
பழனி ,திருவண்ணாமலை  கிரிவலமகிமை ,அதை நகரமாக்கமால்
இயற்கை  வளம்  மாறாமல் வலம்  வரவேண்டும்.
பழனியில்  கடம்பவனம் அந்த பூவின் மனம் இன்று அதிகம் இல்லை.
கடம்பவன வாசா கந்தா என்றே  போற்றும் நிலை மீண்டும் வரவேண்டும்.
அவ்வாறே அந்த அந்த க்ஷேத்ர  மரங்கள் வளர்க்கப்பட  வேண்டும்.
புனித க்ஷேத்திரங்கள் வணிகமயமாக மாறி பக்தி குறைந்து லௌகீக
பொருள் வாங்கி ஏமாறுவதிலோ கவர்ச்சியிலோ மனம் ஒருநிலைப்படுவது
ஆலயவழிபாட்டின் முக்கியம். ஒரு புனித க்ஷேத்திரத்தில் வாங்கிய தலை கிளிப் ,பாசி ஊசி பற்றியே பேசாமல் அந்த இறைவனின் புகழைப்  பேசும் நிலை
மாறிவருகிறது.
ஆலயங்களின் அனைத்துப்பிரகாரங்களும்  பிரதக்ஷனம் செய்யவேண்டும்.
இது  பக்தி என்பதுடன் உடற்பயிற்சிக்கு நம் முன்னோர் காட்டிய வழி .
விரதம்  என்பது உணவுக்கட்டுப்பாடு.மனக் கட்டுப்பாடு .மாயையின் கவர்ச்சிக்
கட்டுப்பாடு. அதை விடுத்து கட்டுப்படில்லா பக்தி மன ஒருமைப்பாட்டிற்கு
வழிவகுக்காது. மற்றொன்று பக்திக்கு மனமே பிரதானமாகும்.
மன சஞ்சலம் கூடாது.
அரசகுமாரர்கள் துறவறம் பூண்டது பாரத புண்ணிய க்ஷேத்திரத்தில்.
உணவு ,ஆரோக்கியம் இரண்டுக்கே நம்முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர். உடை ,உறையுள் மிக எளிமை.
தூக்கம் கட்டாந்தரையில் படுத்தாலும் வரவேண்டும்  என்ற நிலை.
இன்று சிலருக்கு குளிர் சாதான அறையில்  பட்டுமெத்தையில் தூங்கினாலும் தூக்கம் வராது.
எளிமை ,இனிமை,தியாகம் ,துறத்தல் ,தானம் ,தர்மம் ,யோகா ,பிராணாயாமம் ,
குடிலில் வசித்தல், இயற்கை உணவு ஏற்றல் ,கசப்பான மருந்து உபயோகித்தல்  என்ற நிலையே பக்தி நெறி. இதனால் தான் பாரத தேசம் வளர்ந்த  உ லக நாடுகளுக்கு  அனைத்துத் துறையிலும் வழிகாட்டி உள்ளது.
  ஹோமப்  புகையின் மஹத்துவம் ரஷ்யர்களால் வியக்கப்படுகிறது.
திருந ள்ளாரின்  அமைப்பு  அறிவியல் வியப்புக்கு காரணமாகிறது.
சிதம்பரத்தின் புவி ஈர்ப்பு மையம் ,நாடி நரம்பு விகிதாசார அமைப்பு அதிசயிக்கவைக்கிறது.
   நாம்  மன ஒருமைப்பாடு தியாகம் நிறைந்த வாழ்க்கையை பின்பற்றுவோம்.
தியானம் களையா  தியானம் அதில் இவ்வுலக அதாவது லௌகீகம் குறைந்து
அலௌகீகம்  அவ்வுலகவாழ்க் கையில் நாட்டம் செலுத்துவோம்.
அதுவே நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அமைதியும் ஏற்றமும் எளிமையும் உயர்ந்த எண்ணமும் ,பாதுகாப்பும் தரும்.
பல நாகரீகங்கள் அழிந்தாலும் அழியாமல் இருப்பது இந்திய நாகரீகமும் பண்பாடும்..இந்த பண்பாடு அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
மாத,பிதா குரு தெய்வம்.
கூட்டுக்குடும்பம் சகிப்புத்தன்மை  தெய்வீகம் வளர்த்து வையகத்தை வாழ  வைக்கும்.
जय  जगत। वसुदैव   कुटुम्बकम।  सर्वे जनाम सुखिनोभवन्तु।

செவ்வாய், மே 10, 2016

சிந்திக்க

நாடு நலம் பெற தேர்தல்.
மக்கள் நலம் பெற தேர்தல்
குடிசைகைள் பெருக்கி

கொசுக்கடியில் வாழவைத்து
கூவம் நாற்றத்தில் வாழவைத்து
மழை வெள்ளம் வந்தால்
முதலைக்கண்ணீர் வடித்து
ரேசன் கார்டழித்து
அடமானம் வைத்து
போதைஅளிக்கும் கடைகள்
தன் தொழிற்சாலை
லாபத்திற்கு வைத்து
கள்ளுக்கடை ஒப்பந்தத்தில்
கொள்ளை அடித்து
தலைவணக்கு பல கோடி
தலைவிக்கு பலகோடி
சொத்துக்கள்
ஆங்கிலப்பள்ளிகள் திறந்து
தமிழ் தமிழ் என்று ஏமாற்றி
தமிழ் வழி படிப்போரை இழிவி படுத்தி
ஆளும் ஆட்சி  கழகங்கள் ஆட்சி
பள்ளிகளில் கழிப்பிடமில்லை
வளைவுக்கு பலகோடி
மெட்ரோ ரயிலுக்கு வழி சுற்றல்
எது செய்தாலும்  இந்த இரண்டில்
ஒன்று தான் என்பதே தமிழகம் .
சிந்தித்து வாக்காளர்கள்
மாற்றம் ஆட்சிமாற்றம்
கொண்டு வர
ஆண்டவன் தான் நல்ல எண்ணங்கள்
தரவேண்டும்.
தரமில்லா தலைவர்கள்
ஒதுக்கிவைக்க ஓட்டுக்கள்
அளிக்கவேண்டும் .

இறைவனருள்  வேண்டும்

வெள்ளி, மே 06, 2016

Knowledge Sharing: வேண்டுகோள்

Knowledge Sharing: வேண்டுகோள்: பீப்ரேப் பொங்கும்மக்கள் ,சினேகாசெருப்புபோட்டாபொங்கும் மக்கள் குஷ்புருத்ராக்ஷதாலிக்குபொங்கும்மக்கள் ஊழலுக்கு பொங்காதது ஏன் ? தவறுக்குதப்பிக...

வேண்டுகோள்

பீப்ரேப் பொங்கும்மக்கள்
,சினேகாசெருப்புபோட்டாபொங்கும் மக்கள் குஷ்புருத்ராக்ஷதாலிக்குபொங்கும்மக்கள்
ஊழலுக்கு பொங்காதது ஏன் ?
தவறுக்குதப்பிக்கமொட்டை
குற்றவாளி தப்பிக்க தற்கொலை
ஊழலுக்கு மௌனம்.
இரண்டு ஊழலில் கூட்டு
அதை அறிந்தே ஓட்டு.
நேர்மைக்குவெட்டு.
இரண்டுஊழலில்ஒன்றே ஆட்சி.
நாட்டில்நடப்பதென்ன?
சிந்திப்பீர்! மாற்றம்,ஏற்படுத்துவீர்!
நாட்டைநல்லோர் கையில்ஒப்படைக்க
ஒருவாய்ப்பு இந்ததேர்தல்.
இறைவனே! நாட்டில் நல்லாட்சிஅமைய
போலியாகம்தானம்செய்வோருக்குதரும் அருளைமாற்று.
ஹிரண்யன்ஆடியஆட்டம்.
அசுரர்கள்ஆடியஆட்டம்
உச்சகட்டம்அடைந்து நல்லோர்நலிந்தபின்
நீஅவதாரம்என்ற தாமதம் வேண்டாம்.
உடனடி நடவடிக்கையில்இறங்கு.
இதுவே நல்லோரின் பிரார்த்தனைகள்.

செவ்வாய், ஏப்ரல் 26, 2016

தேர்தல்

சிந்திக்கும் ஆற்றல் இல்லா தொண்டர்கள் இருக்கும்வரை
செஞ்சோற்றுக்கடன் என்று அதர்மத்தின் பக்கமாக இருக்கும் துரோணர்பீஷ்மர் கர்ணண் இருக்கும் வரை அதர்மமும் தர்மமும் போரிடும்.
தர்மம் அதர்மத்தால் வெல்வதால் அதர்மம் ஒழியாது.
தர்மமும் வெல்லாது. இதற்கு தர்மம் செய்த  அதர்மம் கர்ணண .அதர்மம் செய்த தர்மம் கர்ணண். ஆயுதமில்லா குருவை ஹத்யா செய்த தோசம் பாண்டவர்கள் மீது. அஷ்வத்தாமா   ....குஞ்சரஹ என்ற தோஷம்  கிருஷ்ணனுக்கு.தர்மம் அதர்மம் எப்படி ?  விளையாடுகிறது. இதுதான் வையகம்.

தேசீய ஒற்றுமை

காலை வணக்கம் .
கடவுள் வணக்கம் .
ஜாதி வெறி நாட்டுப்பற்றை விட உயர்வாகிறது.
  பாரதீய ஜனதா  இந்துமதம் ஆதரிப்பதால் ஒதுக்கப்படுகிறது.
அந்தணர்கள் ஒது்கப்படுவதால்
அதிமுக ஆதரவு .
அதிமுக வில் எத்தனை அந்தணர்கள் வேட்பாளர்கள் ?
  ஸ்டாலின் வென்ற தொகுதியில்
அந்தணர்கள் ஓட்டு யாருக்கு.
நாடார் ஓட்டு வன்னியர் ஓட்டு
முதலியார் ஓட்டு .
இந்து மதம் பெயரில் தனி ஓட்டு.
அப்படியானால்   இந்து மத ஒற்றுமை மறைந்து ... ஜாதி ஒற்றுமை மேலோங்கு கிறது.
பின்னர் மாநிலம் .
தேசீயம் இல்லை
ஆந்திரா வங்காளம்  அஸ்ஸாம் மஹாராஷ்ட்ரா .
முதலில்  தேசீயம் மாநில நன்மைக்கு கை கொடுக்கும
என்ற நம்பிக்கை அளிக்க 
காங்கிரஸ் தன் சுயநலத்தால்தவறவிட்டுள்ளது.
அக்கட்சியில் மதப்பற்றும் இல்லை
ஜாதிப்பற்றும் இல்லை.
கான் காந்தி .வீட்டு வாடகை 
கூட ஏமாற்றி நேரு குடும்பத்திற்கு
பெருத்த அவமானம்.
தேசீயம்வளரவில்லை என்றால்
பாரத ஒற்றுமை மிகவும் அரிதாகிவிடும் .
ஓவாசி போன்றோருக்கு  மிகவும்
ஆணவம் ஏற்படும்.
பணம் விளையாடினால் துரோஹிகள் கிடைப்பார்கள் என்ற
நிலையில் தான் இன்றைய
    அரசியல் மத நிலமை.
இதை மாற்றும் சிந்தனைகள் வளரவேண்டும்.
வாழ்க பாரதம்.
ஜய் ஹிந்த்

வெள்ளி, ஏப்ரல் 15, 2016

சட்டம் ஒழுங்கு

பாதுகாப்புப்படை சுட்டதால் மரணம். ஏன் சுட்டது ?
இவ்வாறனதலைப்புசெய்திக்குகொடுப்பது தவறு.
சும்மாஇருந்தகூட்டத்தையா சுட்டது.
காவல்துறையோஅல்லது ராணுவமோ
மக்கள்பாதுகாப்பிற்கு.
இதைகண்டிக்கும்எதிர்கட்சிகளுக்குநாட்டு பக்தி இல்லை.
பதவிமோகம் தான். எரிப்பார்கள். கல்எறிவார்கள்.
காவலர் அல்லதுஜவான்காயப்படுவார்.
காவல் வாஹனம்எரியும். போலீஸ்மண்டை உடையும்.
பிறகுதான்துப்பாக்கிச்சூடுதடியடி. இந்த
கேவலமானஅரசியல்
நடத்தும்கட்சிகளால்நாட்டிற்குநலம் இல்லை.
ஒருகல்லெறி
பட்டதுமேகலவரக்காரர்களுக்குகடும்தண்டனை.
அப்பொழுதுதான் சட்டம்ஒழுங்கு காக்கப்படும்.
இதைமக்கள்சிந்திக்கவேண்டும்
பேருந்துகாவல்துறைவாகனம் நம்பொதுசொத்து.
அதைஒருகூட்டம்எரிப்பதை கைகட்டிவேடிக்கை
பார்க்கவாகாவல்துறை.
தடிஅடிஆணைவருவதற்குள்
பொதுச்சொத்துதனியார்சொத்து சேதம்.