வியாழன், மே 30, 2013

ஆனந்தம் என்றாலே பொருளுள்ள வாழ்க்கை

பொருள் என்றால் செல்வம்,

பொருளுள்ள என்பதில் செல்வமும் அடங்கும் .

அர்த்தமும் உள்ளது.

வடமொழியிலும் அர்த்த என்பதற்கு செல்வம் ,பொருள் என்ற

இரட்டை பொருள்.

பொருளா ?தாரமா.? என்றால்

இல்லானை இல்லாளும் வேண்டாள்

என்று இவ்வுலக வாழ்வில்

பொருளும் இணைந்தே புகழ் பெற்றுள்ளது.

பொருள் -பொருள்  இல்லாதவருக்கு

இவ்வுலக ஆனந்தம்  எங்கே?

இதுதான் வையகம். ஐயோ!பாவம் !நல்லவன் !

தரணி ஆள  ,
பொறுத்தார் பூமி ஆள்வார் 

பொறுமை  கடலினும் பெரிது.

இந்த பொறுமை வையகத்தில் சாத்தியமா?

குனியக் குனியக் கொட்டுவோரே அதிகம்.
ஐயோ !பாவம்! நல்ல மனிதர் !

என்பதை ஆராய்ந்து ஹிந்தியில் ஒரு கதை.

யார் ஏமாறுகிறார்களோ அவர்களையே சமுதாயம் 

ஐயோ பாவம் நல்ல மனிதர்கள் என்கிறது.

பல ஆண்டுகளாக வாடகை உயர்த்தாத 

வீட்டுச் சொந்தக்காரர்,

குறைந்த வாடகையில் வரும் ரிக்ஷா தொழிலாளி,

கதை,கட்டுரை எழுதி பணம் கேட்காத எழுத்தாளர் 

என ஒரு பெரிய பட்டியலுடன் நகைச்சுவை 
கலந்த கதை  ஐயோ !பாவம்! நல்லவர்கள்.

கடன் கொடுத்து திருப்பிக் கேட்காத நண்பர்கள்,
கைமாறு கருதாமல் கூலி அதிகம் கேட்காதவர்கள் 

ஐயோ!பாவம் !நல்லவர்கள்.
அனுபவத்தில் கதை ஆசிரியருக்கு 
தன்னை யாரும் புகழ்ந்தாலோ /
நல்லவர் என்று சொன்னாலோ  

அவர் மனதில் தோன்றுவது 

தான் ஏமாறுகிறோம் /அல்லது ஏமாற்றுகிறோம் என்பதே.

கெட்டிக்காரன்/சாமார்த்திய சாலி என்று 

பாரட்டப்படுவோர் கிரிக்கெட் விளையாட்டைப்போல் 

அரசியல்வாதிகள் போல் 

மற்றவர்கள் கருவைத்திருடி 
 கதை மாற்றி எழுதுபவர்கள் போல் 

எமாற்றுபவர்கலாகவே இருக்கின்றனர்.

பொறுத்ததுபோதும் பொங்கி எழு 

என்பது இந்நிலையில் பொருத்தமாகிறது.

அதே நிலையில் தான் நானும்.
உறவினர்களுக்கு பொருளுதவி செய்து 
அவசரத்திற்கு திருப்பிக்கேட்டால் 
அவர்களின் வாக்குச் சாதுர்யம் 
என்னை பகவனாக்குகிறது.
அதைத்தான் 

கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை என்கின்றனர்.



மற்றவர்கள் ஏமாற்றும் பொழுது 
.
ஏமாறிக்கொண்டே இருந்தால் 

ஐயோ!பாவம் !நல்லவன் !

விழித்துக்கொண்டால் .....

அனைவருக்கும் பகை.

இதுதான் வையகம்.



திங்கள், மே 27, 2013

ஒரு யுகப்புரட்சியின் போக்கா என்ற மனக் குழப்பமே மிஞ்சியது.



புதுச்சேரி  ,

பாரதியார்  புகலிடம் பெற்ற இடம்.

அரவிந்தரின் ஆன்மீகத்தால் புகழ் பெற்ற இடம்.

பிரஞ்சு ஆதிக்கத்தால் சதுரங்கக் கட்டம் போல் 

அழகாக அமைந்த இடம்.
இந்தியாவுடன் இணைந்ததும் 

அதன் இயற்கை அழகில் பெரும் மாற்றம்.

அழகான தெருக்கள்,
இன்று அதில் அழகு குறைந்தே தென்படுகிறது.

விரிவாக்கப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக 

௧௯௭௨ இல் எனது முதல் பணிநியமனம்  அங்கே.

மட்ராஸ் கபே  என்று ஒன்று உண்டு,

 மதிய மாதச் சாப்பாடு  ரூபாய் முப்பது
அளவு கிடையாது.
திருப்தியான சாப்பாடு.
அதற்கு எதிரில் ஒரு ஐயர் இட்லி வியாபாரம்.

ஒரு இட்லி ஒரணா.
இன்றைய இட்லிகளைவிட
 நான்கைந்து மடங்குக்குகுமேல் 
பெரிது.

மாதச்சம்பளம் ரூபாய்  நூற்று ஐம்பது.

 மன நிறைவான மன மகிழ்ச்சியான நாட்கள்.

இப்பொழுது நான் பாண்டியில் 

கிளப் மகேந்திராவில் தங்கியுள்ளேன்.
மூன்று நேர ஒருநாள்  சாப்பாடு 
ஆயிரத்து முப்பத்தைந்து கூடுதலாக வரி.

மனதில் ஒரு நெருடல்.

பாரதம் முன்னேறி உள்ளதா?

ஆம்.  அங்கும் கூட்டம்.
பணத்தை அலட்சியமாக சிலவு செய்யும் கூட்டம்.

ஏழ்மையான சூழலில் எத்தனையோ பேர்கள்.

எங்கும் ஒரு பெரும் கூட்டம்.

இங்கே உணவு அலட்சியம் செய்யப்படுகிறது.

லக்ஷிமிதேவியின் ஓட்டம்  அதிகம்.

அங்கு  கடல் கரையில்  தானே புயலின் தாக்கம்.

விலை போய் வீடுகளாகி காட்சி அளிக்கும் 

விளை நிலங்கள்.

பாரதம் பொருளாதரத்தில் முன்னேறினாலும் 

ஏக்கப் பெருமூச்சுவிடுவோர் எண்ணிக்கையில் அதிகம்.

நாடு முன்னேறியதா? என்பதில் ஐயம் அதிகம்.
மனித மனம் கல்மனமாக 
இரக்கமற்றதாக சுயநலமாக மாறிவருகிறது.
அரசியல் நாட்டு முன்னேற்ற சமத்துவப் 

பாதையில் செல்லாமல் ,
சிலைகளுக்கும் நினைவு மண்டபங்களுக்கும் 
கோடிக்கணக்கில்  சிலவு செய்வது 

முன்னேற்றமா ?எதிர்கால சந்ததியினர்களின் 
ஒரு யுகப்புரட்சியின் போக்கா 
என்ற மனக் குழப்பமே மிஞ்சியது.










.




வெள்ளி, மே 24, 2013

போராட்டமே. ஐம்பது சதவிகிதம்.



திருமணம்  என்பதில் மன ஒற்றுமைக்கும் ,

அன்பிற்குமே முதலிடம்  கொடுக்கவேண்டும்.

ஆனால் அதில் பெற்றோர்கள்  இளம் உள்ளங்களை 

பாதிக்கும் அளவிற்கு  பேசும்  பேச்சுக்கள்,

அதை மறந்து வாழ்ந்தாலும் அதை நினைக்கச் செய்யும் 

மீண்டும் மீண்டும்  சம்பவங்கள்.

இன்றைய கல்விப்புரட்சி யுகத்தில் 

பிரிந்தோ பிரிக்கப்பட்டோ வாழும்

 இளம் தலைமுறையினர்,

சின்ன சின்ன விஷயங்கள்,அதனால் வரும் 

மன அழுத்தங்கள் ,விளைவாக விவாகரத்துக்கள்.

பெண்கள் வீட்டிலும் சரி,ஆண்கள் வீட்டிலும் சரி 

இளம் உள்ளங்களை பிரித்துவிடும் ஆலோசனைகள் 

விவாக ரத்து வழக்குகள்.

கொலை ,தற்கொலை ,வெறுப்பும் எல்லை.

பொறுமை,சகிப்புத்தன்மை இல்லா நிலை.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை ,

குழந்தைகள் படும்  திருமணத்திற்குப் பின் ,

இல்வாழ்க்கை கசக்கும் நிகழ்ச்சிகள்.

அநாதை நிலையில் பெற்றோர்கள்,

கல்விப்புரட்சி  யுகத்தில் 

திருமண பந்தங்கள் போராட்டமே.
ஐம்பது சதவிகிதம்.










மனித மனம்.

  மனிதன்  மன எண்ணங்கள்,எண்ண அலைகள்,நடவடிக்கைகள்,நண்பர்களை

இணைத்தல்,நண்பர்களை ஒதுக்குதல்,நண்பர்களால் ஒதுக்கபடுதல்,

உறவினர்களால் போற்றப்படுதல், வெறுக்கப்படுதல் ,மற்றவர்களின் மனம் கவரப் பேசுதல்  இந்த ஆற்றல்கள் இயற்கையாகவே ஏற்படுகின்றன.

மனிதர்கள்  போற்றப்படும் ,இகழப்படும் குணங்கள் இயற்கையாகவே வருகின்றன.

அதனால் ஒருவர் சிறந்த தலைவர்களாக முடிகிறது.சிலரால் சிறந்த நிர்வாகியாக முடிகிறது.

மனித மன எண்ணங்கள் மாறுவதும் ,எண்ணங்கள் மனதில் தோன்றுவதும்
ஒரு இயற்கையான ஒரு சக்தியால் ஏற்படுகின்றன.அதை மாற்றி உத்தமனாக
மாறும் அறிவையும் ஞானத்தையும் இறைவன் அளித்துள்ளான்.அந்த மெய் ஞானத்தைப் பெற முயற்சிக்கும் மனிதன்  தெய்வமாகிறான்.

இவ்வுலகில் உண்மை பேசுவதால் நண்பர்களை ,உற்றார்களைப் பிரிய நேரிடுகிறது. கசப்பான உண்மைகள் அதாவது நண்பர்கள் தவறு,உற்றார் உறவினர்கள் தவறு  ,தலைமைப்பீடங்கள் செய்யும் தவறுகள் மறைக்கப்பட வேண்டும்; அல்லது  போற்றப்படவேண்டும். இதுதான் உலகியல் எண்ணமாக,உளவியல் எண்ணமாக மாற்றப்படுகிறது.



வியாழன், மே 16, 2013

பால் மணக்குது பழம் மணக்குது தென்பழநியிலே


தமிழ் நாட்டில் சாகு படி  நிலம் குறைந்துவருகிறது.

சி .ஏ.ஜி   அறிக்கை.

பழனி   ஷண்முக  நதி செல்லும் வழி முப்போகம் என்று என் தத்தா கூறுவார்.

சுயலத்தால் இப்பொழுது  ஷண்முக நதி செல்லும் இருகரைகளிலும்

கட்டடங்கள். பள்ளிகள்.


வையாபுரிக்கண்மாய்  இன்று பாதி பேருந்து நிலையம்.சிவகிரிப்பட்டி அருகில் சித்த மருத்துவகே கல்லூரி அல்லது பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை.

பேருந்து நிலையம்  வெளியில் புனித ஸ்தலத்தில்  வெட்டவெளி சிறுநீர் கழிப்பிடம். பன்னீரும் சந்தனமும் ஜவ்வாதும் மணக்கும் பழனி பேருந்து நிலையம் இறங்கினால் சிறுநீர் நாற்றம்.வையாபுரிக் குளம் சாக்கடை நாத்தம்.

கிரிவலம்  புனித கடம்பமரப் பூக்கள் மணம், சஞ்சீவி க் காற்று போய்

கடைவீதியில் வளம் வருவதுபோல்  உள்ளது.

அங்கும் விளைநிலங்கள்  முன்பு போல் இல்லை. வெறும் கட்டடங்கள்.

இயற்கையான புனிதம் போய் இப்பொழுது  வெறும் செயற்கை ஆடம்பரம் தான்.பெரிய வையாபுரிக்குளம் பாதியாக குறைந்தது,சுயநலத்தால்

புனித ஸ்தலம் வணிகஸ்தலமாக  மாறியது,

இருப்பினும் கூட்டம்.

அதுதான்  தண்டபாணி  அருள் என்றாலும்

பக்தர்கள் மனம் பக்தியை மட்டும் நினைக்கிறதா?

இந்த இயற்கையான புனிதம் செயற்கை யாக  மாறுவதும்

இறைவனின் லீலையா?

தண்ணீர் கஷ்டம் பழனியிலே.

பால் மணக்குது பழம்  மணக்குது
தென்பழநியிலே  என்பது மாறி,

சிறுநீர் ,சாக்கடை நாற்றம் தென் பழனியிலே

என்று பாடும் சூழல் சுயநலவாதிகளாலே !!


இந்நிலை மாற பழனி முருகனைப்

போற்றி பிரார்த்திப்போம்.






புதன், மே 15, 2013

பல்லுப் போனவயதில் பலம் கொடுக்கும் இடுகை.

இடுக்கண்  வாருங்கள் நகுக  என்பது போய் -இன்று

இடுக்கண் களைய  இடுகை இடுக என்று

ஓய்வுபெற்ற பின்   மனதில்  உள்ளதை


கொட்டித் தீர்க்க ,பொழுது போக்க

கூகுல்  வலைத் தளம்.

அரசியல் விருப்பு -வெறுப்பு

அன்றாட பிரச்சனைகள்


செய்தித்தாள் வாரமலர்கள்

வெளியிடவில்லை

நாமாக வெளியிட்டு  படிப்பவர்கள் இல்லை என்றாலும்

இடுகை இட்ட மகிழ்ச்சி முதுமையில்

அதைக் கூறும் போது   மனைவி முதல் மற்றவர்களின்

அலட்சியப்பார்வை, ஒதுக்கப்பட்ட

ஒய்வு பெற்றோர்  உளறல் ;உள்ளக்  குமுறல் ;

மற்றவர்கள் ஒதுக்கும் வயது என்று

இடுகை இடுவதில் இருந்து ஒதுங்கும்

  எண்ணம் வரும் போது

ஒரு பாராட்டும் கருத்துரை ;

ஓஹோ!! நம் இடுகையையும்  படிக்கிறார்கள் என்ற

எண்ணம்; எழுது; என்றாவது யாராவது  படித்துப்

பயன் பெறுவர்  என்ற எண்ணம்.ஒரு ஊக்கம்.

பல்லுப் போனவயதில்

பலம் கொடுக்கும்  இடுகை.

 I THANK THE BRAIN  WHO INVENTED GOOGLE AND BLOGSPOT.

WHICH GIVES HAPPINESS AND STRENGTH ,SELF-CONFIDENCE

FOR RETIRED PEOPLES. THE SOUL ALWAYS BLESS THEM ,







ஞாயிறு, மே 12, 2013

அன்புக்கு தியாகத்திற்கு இணை ஏதும் இல்லை.

 அன்னை  அன்புக்கு,

ஆதரவிற்கு,

இக்கட்டான சூழலில் ,


ஈடில்லா  அன்பு காட்ட;


என்றும் எச்சூழலிலும்


ஏற்றம் அடைய .

எத்துனை துயரம் இருப்பினும்

அத்துனையும் மறந்து

தன் பசி தேவைகள் மறந்து

தன்  சேய்  தேவை அறிந்து

சேவை செய்யும் ஒரே ஆத்மா அன்னை.

ஐக்யமாகி அன்புகாட்டும்


ஒப்பில்லா தெய்வ உருவில்

அன்னை  ஒரு ஆலயம்.

அன்புக்கு தியாகத்திற்கு

இணை ஏதும் இல்லை.



ஆண்டவன் ஒரு குற்றவாளி.

சென்னை  நகரில்  தண்ணீர் மாநகராட்சி  லாரிகளில் விநியோகம்,

தண்ணீருக்காக பதிவு செய்து ஒரு வாரமாகியும் தண்ணீர் இல்லை;

நாவறட்சி  விநியோகம் செய்வோருக்கு மனசாட்சி இல்லை.

மனிதாபிமானம்  வற்றிவிட்டது;

தொலை பேசியில் ஒருவர் மூன்று நாள் என்கிறார் ,
மூன்று நாளைக்குப்பின்  கேட்டால் ஒருவர் நாளை என்கிறார்
ஒரு பெண் குரல் வராது என்கிறது.

இப்படியே ஒருவாரமாகியும் தண்ணீர் வரவில்லை;

இரக்கமற்ற இதயங்களைப் படைத்த இறைவன் ஒரு குற்றவாளி;

எங்களைப்போல் நேர்மை பேசி கஷ்டப்படும் எங்களைப் படைத்த

ஆண்டவன் ஒரு  குற்றவாளி.

எங்கள் குறைகளை ஆண்டவனும் கேட்கவில்லை;

ஆள்வோரும் கேட்கவில்லை;

தண்ணீருக்காக  கண்ணீர் சிந்தும் எங்கள் அடுக்குமாடி குடி இருப்போர்
படும்  வேதனை  ஆண்டவன் இருந்தால் கேட்கட்டும்.
இல்லை எனில் நாங்கள் தண்ணீர்வரி கட்டியும்
எங்கள் அடுக்கத் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பாரில்லை.
நன்றி மாநகர பொறியாளர் மற்றும் உறுப்பினருக்கு.

உண்மை என்றால் ஊழல் பெருகட்டும்;

அரசின் திட்டங்கள் அரிய -பெரிய
அருமையான  திட்டங்கள் -ஆனால்

அது சாமானிய மக்களை

 சென்றடைவதில் தான்

சிக்கல்கள்.

பட்டா  மாற்றம் ,

மனசாட்சி உள்ள அமைச்சர்கள்.அதிகாரிகள்
ஆண்டவன் மீது சீ-- சீ-- மன சாட்சி மீது கைவைத்துக்

கூறட்டும் கை ஊட்டு இல்லை என்று.

மாநகராட்சி தண்ணீர் இணைப்பு,

சொத்து வாங்கி பெயர் மாற்றம் ,

எல்லாமே கை ஊட்டு.

ஊழலுக்கு பொதுஜனம்  உடைந்தை  ஆகும் காலம் இது.


வாக்களிக்கும் பொது மக்கள்

 வாங்கும் கள்ளப் பணம்,

கறுப்புப் பணம் ,அமைச்சர் கள்

ஆடம்பர  வாழ்க்கை

போதுஜனத்திற்கோ

இருண்ட வாழ்க்கை.

பரிந்துரை இல்லாமல்
பகவான்  தரிசனம்  கூட
எளிதல்ல  நம் நாட்டில்

ஏழைகள் ,கையூட்டு தர முடியாதவர்கள்

நேர்மையாக இருப்போர்கள் ,

நான் கடவுள் முடிவு போல் வாழத் தகுதி அற்றவர்கள்;

கோயில் உண்டியலுக்கு கோடிக்கணக்கில்

தங்கக் கிரீடம் குடம் தரும்

அரசியல் வாதிகள்

மக்கள் வரிப்பணத்தில் இலவசம் அளிக்கும்

தந்திரம், அது ஒருவகையான  கை ஊட்டு

வாக்களிப்பவர்களுக்கு.

ஏழைகள்  இலவசங்களைப்பெற்று

குறைந்த விலைக்கு விற்கும் அவலம்;

கைத்தறி ஆடைகள்  கடனுக்கு அளிக்கும் திட்டம்,

எட்டு மாதத் தவணைகள்;

அந்த துணிகளை வாங்கி உடனடிக் கடன் தேவைக்கு

௨௦% தள்ளுபடியில் விற்கும்  அவலம்;

அதை வாங்கி லாபம் தேடும் ஒருகூட்டம்.

என்று தான் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களோ?

அரசும் அமைச்சும் திருந்துமோ?

உண்மை ஜனநாயகம் மலருமோ?

ஆண்டவனுக்கே  வெளிச்சம்;

ஆண்டவன் இருந்தால் உடனடி திருத்தம் .

இல்லை !இல்லை! என்ற பெரியாரின் சொல்

உண்மை என்றால் ஊழல் பெருகட்டும்;

ஊழல் அரசியல் ஆளட்டும்.

ஆண்டவன் பெயரைச்சொல்லி ஆண்டவர்கள்

ஆளுபவர்கள் ஏமாற்றும் காலம் இது.