வியாழன், அக்டோபர் 25, 2012

வையகத்தின் இயக்கம்.



ஆயுதம்  ஒன்று நினைவுகள் அகற்ற;
வையகத்தில் இல்லை.
அப்படி ஒரு  ஆயுதம் ஒன்று உண்டாகின்
வையகம் இல்லை.
ஒரு பிரளயம் தான்.
சிலருக்கு
ஆண்டவனின்  நினைவு.
சிலருக்கு
பொருள் சேர்க்கும் நினைவு.
சிலருக்கு
உலகைக் காக்கும் நினைவு.
சிலருக்கு
இன்னல் தீர்க்கும் நினைவு.
சிலருக்கு
அல்லல் தீர்க்கும் நினைவு.
நினைவுகளும் கனவுகளும்
தான்
வையகத்தின்  இயக்கம்.


அதனால் தான் இன்னல்கள் சூழும் உலகம்நல்லது செய்து நானிலம் காப்பீர்! வையகம் போற்றும்.. அதனாலேயே பதவிகள் இழக்கும் சூழல்.

முப்பெருந்தேவிகளின் 
நவராத்திரி விழா 
முடிந்ததே.
தேவிகள் 
தேடிவந்து 
அருள் தரும் நாட்கள்.
பண்டிகைகள் ,
ஆராதனைகள்,
ஆனால்,
அந்த நாட்களில் 
பக்தர்களின்  பக்தி 
வியாபாரிகளுக்கு சக்தி.
இரண்டு நாவல்பழம் ஒரு ரூபாய்.
பூவின் விலை உயர்வோ 
பூமியை விட்டு விண்ணைத் தொடும்.
விலைவாசி ஏற்றம் தான் 
பண்டிகைகளின்  பலன்.
இந்த மூட பக்தி 
இறைவனின்  அருள்கிட்டவா?
இந்நில  உலகின் பொருள் கிட்டவா?
அதிக விலைவாசி ஏற்றி 
ஆன்மிகம் வாணிகமாவதால் 
ஆண்டவன்  தரும் விலை ஏற்றம்.
பக்தி வெளிப்பகட்டாக மாறியதால்,
மின்தட்டுப்பாடு.
கும்மிருட்டு.
ஆலயம்  செல்வதால்.
யாகம் செய்வதால்,
தண்டனைகுறையும்;
பாவங்கள்  போகும்  என்றால் 
பதவிகள் போவதேன்.
கோடிகள் பல இருந்தாலும் 
நெஞ்சுக்கு  நிம்மதி  இல்லை.
தொல்லைகள் என்பது 
விபத்துக்கள் மூலம்.
நோய்கள் மூலம்.
தோழிகள் மூலம்.
பிள்ளைகள்  மூலம்.
தொண்டர்கள் மூலம்.
எப்படியும் வரும்.
தர்மம் தலை காக்கும்.
செய்த புண்ணியங்கள் 
பலன் தரும்.
பாவங்கள்  தண்டனை தரும்.
இது தேவனின் தீர்ப்பு.
வாழ்க்கையின் அனுபவம்.
அதனால் தான் 
இன்னல்கள் சூழும் உலகம்.
அதனாலேயே 
பதவிகள் இழக்கும் சூழல்.
மனம் திருந்தும் நேரம்பதவி.
பதவி பெற்ற ஊழல் தோல்வி.
சிந்திப்பீர்!செயல் படுவீர்!
பல்லாயிரம் பேருக்கு நமை செய்யும் 
திட்டம் தீட்டுவீர்.
நினைவுச் சின்னங்கள்  சில ஆயிரம் போதும்.
மக்கள் நன்மைகளுக்கு  பல கோடி.
ஒரு துருப்பிடிக்காத  தூண் 
இன்றுமுள்ளது.அதுபோதுமே நினைவுச் சின்னம்.
வெள்ளம் சூழ்ந்து தத்தளிக்கும் மக்கள்.
கண்ணீர் சிந்தும் மக்கள்.
சமாதிபுதுப்பிக்க ,வளைவு வைக்க பலகோடி.
அம்மையீர்! சிந்திப்பீர்!
நிரந்தர முதல்வராக 
அடுத்த  வெள்ளம் 
சாலையிலோடாமல்,
கால்வாயில் ஓடட்டும்.
அம்பத்தூர்,ஆவடி,மடிப்பாக்கம்,பள்ளிக்கரணை 
மக்கள் பாவிகளா?அங்கு வீடு கட்ட அனுமதி அளித்த 
கடன் அளித்த அதிகாரிகளா?அமைச்சர்களா ?
அல்ல இந்த அல்லல்களுக்கு நிரந்தர 
நிவாரணம்  காணா  முதல்வர்களா ?
நல்லது  செய்து
நானிலம் காப்பீர்!
வையகம் போற்றும். 
அசோகர் செய்த கொடுமைகள் மறந்து,
மரம் நட்டார்;சாலைகள் அமைத்தார்  என போற்றும் உலகம்.
அல்லல்பெரும்மக்கள் துயர் தீர்க்க துரவரம்பூண்ட புத்தர்.
சித்தர்கள்.
முற்றிலும் துறந்த மகாவீரர்.
ஆனால் ,இன்று 
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம்.
நாட்டு மக்கள் ஏழைமக்கள்,நடுத்தர மக்கள் 
பஸ் படிக்கட்டுகளில் தொங்கி மரணம்.
இந்தியா ஏழைநாடா ?
இரக்கமற்ற தலைவர்கள்,
உலகில் நான்காவது பணக்காரி  வாழும் நாடு.
இந்த கோடிகள்  வெறும் கோடித் துணிக்கு.


புதன், அக்டோபர் 24, 2012

மீண்டும் மக்கள் சிந்தனைக்கு


மீண்டும் மக்கள் சிந்தனைக்கு 


தமிழ்நாடு  மழை  பெய்கிறது.

ஏரிகள் விலை நிலமாகின்றன.

இலவசங்கள்  அதனால் என்ன பயன்.
மடிகணினி மடியில்.
மின்சாரம் இல்லை.
இன்டர்நெட் வசதி இல்லை.
அதற்குமாதம் பணம்கட்ட
 வழியுமில்லை.
பாதுகாப்பான மிதிவண்டி பயனத்திர்கேற்ற 
சாலை வசதிகள் இல்லை.

தலைவருக்கு சமாதி அவசியம் தான்.
ஒவ்வொருமுறையும் அதன் வடிவழகு
 மாற்ற கோடிக்கணக்கில் 
சிலவு செய்து மக்களுக்கு 
அடிப்படை வசதிகள் செய்யாமலிருப்பது 
அத்தலைவரின் ஆத்மா துன்புறும்  செயல்.

ஒரு தலைவர் வைத்த வளைவோ என்ற ஐயத்தால் இடிப்பு.
நம் தலைவர்   வைத்தது என அமைப்பு.
கோடிக்கணக்கில் பணம் சிலவு.
யார்  பணம்!!!
இது நமது வரிப்பணம்.
சட்டசபை மாற்றம்.
  கோடிக்கணக்கில்  பணம் விரயம்.
மீண்டும்  பொன் விழா வளைவு .
கோடிக்கணக்கில் சிலவு.
யார் பணம்!!
மடிப்பாக்கம் ,ஆவடி;அம்பத்தூர்,பள்ளிக்கரணை 
ஒவ்வொரு ஆண்டும் மக்கள் படும் அவஸ்தை;
இது மீண்டும் ஊழலுக்காக.
செய்த சிலவே செய்து 
மக்களை   ஏமாற்ற.
 மக்களி ன் அமைதி;
இவர்களுக்கு  வசதி.
நடுத்தர வருமானம் 
போராட வசதியுமில்லை;
வருமானமும் இல்லை.
ஆளுவோருக்கும் அதிகாரிகளுக்கும்,
வட்டங்களுக்கும் மன சாட்சியும் இல்லை.
ஆண்டவனுக்கும் இரக்கமில்லை.
ஆள்வோருக்கும் இரக்கம்ல்லை.
பிரம்ம சக்தி ஆலயம் அமைந்த சாலை;
போக்குவரத்து மிகுந்த  சாலை;
குண்டும் குழியுமாய்  அல்லல் படும்மக்கள்.
பல ஆண்டுகளாய் மக்கள் படும்    துன்பங்கள் தெரிந்தும் 
நிலையான நிவாரணம் செய்ய அரசு.
மனசாட்சி இல்லோரே!
நீங்கள் செய்யும் பாவம்
புண்ணியம்
என்னைப்போன்ற ஆத்மாக்கள் ஏசும் ;போற்றும்.
மரணம் திண்ணம்.





उसमें कमीशन नहीं मिलता।

चुनाव 

देश के हित केलिए चुनाव 

इस केलिए बेकार खर्च।
ये पद स्थाई नहीं हैं;
यों सोच-समझकर 
 करोड़ों की संपत्ति खर्च करके 
बनते हैं विधायक;सांसद;
यह तो अवधि पांच सालकी;
बादमें फिर चुनाव में
 जीतेंगे या हारेंगे ,
नामी दल  फिर  उम्मेदवार चुनेगा या नहीं;
यदि हार जाएँ तो खोटे  सिक्के बन जायेंगे;
अतः इन पांच सालोँ  में जितना चाहे लूटो।
वे नहीं चाहते स्थायीपद;
चाहते तो करते सच्ची सेवा।
ईमानदार ,आदर्श सेवक  चुनाव में हार जातेहैं;
कुल्जारी लाल नंदा अपमानित हुए।
कर्मवीर कामराज,जिनका  बैंक बैलेंस नहीं 
हार गए  चुनाव में;
जनता चाहती है चुनाव में 
धन;
मुफ्त की  घोषणा करके,
जनता के कर पैसों में 
मिक्सी,ग्राइंडर,सायिकिल् लैप-टॉप बांटकर 
देतेहैं  रिश्वत जनता को।
लेपटॉप  देते  हैं  मुफ्त।
बिजली नहीं; इन्टरनेट की सुविधा  नहीं;
जनता के पैसों  को दान जनता को;

सड़कें कच्ची;जलधारा नहीं;
मच्छ्रों    का भरमार । 
समाधी को  नया रूप देने  करोड़।
आर्च  तोड़ने पुनार्निर्माण  करने 
करोड़ों रूपये;
शिला  तोड़ने  शिला फिर स्थापित करने करोड़ों रूपये;

जनता को जल नहीं;
पहले  सड़कें  बनाओ;
जनता को सुख से रखो।

ये देश के सेवक अपनी संपत्ति  जोडने  की,
कमीशन मिलनेकी योजनामें लगे रहते हैं।
गाँव के गाँव खाली  होते हैं 
उसका  ध्यान नहीं रखते।
वर्षा होती हैं;पानीबेकार होता है।
उसको सुरक्षित रखने प्राथमिकता नहींहै;
उसमें कमीशन नहीं मिलता।
यही तमिलनाडु राजनीति।









செவ்வாய், அக்டோபர் 23, 2012

சாதாரண குடிமகன் என்ன செய்ய முடியும். இது ஆன்மீக வரலாறின் சாரம்.

சாதாரண குடிமகன் என்ன செய்ய முடியும். இது ஆன்மீக வரலாறின் சாரம்.

நவராத்திரி ;.தீபாவளி;சூரசம்ஹாரம்.
முஹர்ரம்;ஈஸ்டர் ;

தீய சக்திகளை தேவ சக்திகள் 
அழிக்க முடியாது.
தெய்வமே நேரடியாக வரவேண்டும் 
என்ற 
தத்துவத்தின் சாரம்.

தேவ அரசன் இந்திரன் பதவி 
போகக்கூடாது என்பதற்கு ஓணம்.
வாமனாவதாரம்.
வரம்பெற்ற அசுரனால் 
சிவன் தலை வெடிக்கும் சூழ்நிலை.
மோகனாவதாரம்.
கல் அடி வாங்கிய  முஹம்மது நபி,
சிலுவையில் தொங்கும் ஏசு நாதர்.
இந்த உலக  வாழ்க்கையின் 
அதி பயங்கர நிகழ்வுகள்.
பின்னரும் நாம் 
ஊழல் பற்றி எழுதுகிறோம்.
லஞ்சம் பற்றி எழுதுகிறோம்.
அரசியல்படு கொலைகள் பற்றி ,
நீதிமன்றம் ஜாமீன் விடுதலை பற்றி.
இது நம் முட்டாள் தனம் அல்லாவா?
தெய்வ சக்திகளுக்கே இந்நிலை.
சாதாரண குடிமகன் என்ன செய்ய முடியும்.
இது ஆன்மீக வரலாறின் சாரம்.


திங்கள், அக்டோபர் 22, 2012

பாரத நாடு பாக்கியவான் களுக்கு. பணக்காரர்களுக்கு வாழ்க ஜனநாயகம்.


பாரத நாடு பாக்யவான்களுக்கு.

பணம்படைத்தொருக்கு.
கல்வி வேண்டுமா?
மருத்துவம் வேண்டுமா/
நீதி வேண்டுமா?
கழிப்பறை வேண்டுமா?
கழிவு நீர் வடிகால் வேண்டுமா/
வீடு கட்டவேண்டுமா//
அங்கீகரிக்காமல் கட்டடம் 
கட்ட வேண்டுமா?
தண்ணீர் இணைப்பு வேண்டுமா/
பத்திரப்பதிவு வேண்டுமா?
மின் இணைப்பு வேண்டுமா?
பணம்!பணம்!பணம்!
அரசு ஆரம்பப் பள்ளிகளில் 
மாணவர்களைவிட 
ஆசிரியர்கள் அதிகம்.
அரசு மருத்துவ மனை 
ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ஊழல்!ஊழல்!ஊழல்!
லக்ஷரூபாய் ஊழல் மந்திருக்கு அழகல்ல.
பல கோடி  ஊழலே மந்திரிக்கு அழகு.
இருநூறு லஞ்சம் வாங்கும் கடைநிலை ஊழியருக்கு தண்டனை.
கோடிக்கணக்கில் ஊழல் செய்தால் 
ஜாமீனில் விடுதலை.
வாழ்க ஜனநாயகம்.

பாரத நாடு  பாக்கியவான் களுக்கு.
பணக்காரர்களுக்கு 
வாழ்க ஜனநாயகம்.

.இயற்கையின் நியதி ஏற்று சமாதானம் அடையத்தான் வேண்டும்.

இயற்கையின் நியதி  ஏற்று சமாதானம் அடையத்தான் வேண்டும்.

அகவை   கூடுகிறது.
ஆற்றல் குறைகிறது.
அன்பான குழந்தைகள்
அழகான பேரன் ,பேத்திகள்,
மகிழ்ச்சிக்கு  குறைவில்லை.
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் .
இருப்பினும் மூப்பு,
தள்ளாமை,
இயலாமை.
அதனால் வரும் கோபம்.
உணவுக்கட்டுப்பாடு.
புதுவகை  உணவுகள்.
நம்காலக் கருத்துகள்.
நிகழ கால கருத்துகள்.
எண்ணெய்  தேய்த்து குளித்தல்.
சின்ன சின்ன விஷயத்திலும்
எவ்வளவு பெரியமாற்றம்.
சாப்பிடும் நேரத்தில்
உடல் நலத்திற்காக
சொன்னாலும்,
அதில் அக்கறை என்று தெரிந்தாலும்
என்ன பாப்பம் செய்தோமோ என்ற  எண்ணம்.


ஈர்க்கவில்லை.
உள்ளத்தில் எதோ சோர்வு.
ஊக்கம்   குறைந்ததாலோ,
என்னவோ,அனைவரும்
ஏளனம்  செய்வதுபோல்  ஒரு
ஐயம்.
முப்பதாண்டு   அகவை வேறுபாட்டால்,
காலத்திற்கேற்ற  அறிவு குறைவுதான்.
அறுபத்தைந்து ஆண்டுகளில் ஆன மாற்றம்.



நாம்படித்த  ஆத்திச்சூடி,கைவீசம்மா கைவீசு,
அம்மா சுட்ட தோசை   சொல்ல,
அவர்கள் தமிழ் வராது என்பதுபோல்
ஆங்கில ஏ ,பி சி,பாடல்
நமக்கு ஒவ்வாததுபோல்,நாம்சொல்வது
அவர்களுக்கும் ஒவ்வாமை ஆகிவிட்டது.

நடந்து சென்றால் நல்லது என்பது,சொல்ல முடியாது.
இப்பொழுது வாசப்படியில் நான்கு சக்கர வாகனம்,
அல்லது இரு சக்கரவாஹனம்.
நாம்பெசுவதேல்லமே காலத்திற்கேற்றார் போல் இல்லை.

இப்பொழுது என்  தாத்தாவின்  நினைவு.
அவர் காந்தி கதை கூறி,
பென்சில்  சிறிதானாலும் எழுதச்சொல்வார்.
வெள்ளைக்காகிதம்  வீணாக்கக் கூடாது என்பார்.
ஒருபென்சில்வாங்கி  இரண்டாக ஒடித்துத்
தருவார்..

அப்பொழுது தாத்தாவின் மீது எரிச்சல்  வரும்
.
இன்று  சிக்கனம் பற்றி பேச முடியாது.

அறிவியல்  வளர்ச்சி.தொலைகாட்சி,கணினி
அதிகம் பார்க்காதே;கண் கெடுதல் என்றால்,
தாத்தாவின் மீது நான் பட்ட எரிச்சல் தானே ,
 பட்ட எரிச்சல்  தானே  பேரன் பத்திகளுக்கும்.
 அவர்களுக்கும்
தாத்தாவின் மீது வரும்.
இவ்வாறு  பல  .

இயற்கையின் மாற்றங்கள்.
அறிவியல்மாற்றங்கள்.
அகவை கூடி ஓய்வு பெறும்போது,
அலைபாயும்  பாயும் எண்ணங்கள்
அறியாமை,ஒவ்வாமை,
ஓஹோ! இது தான்

காலன்  வரும் நேரம்.
காலனை விரும்பி ஏற்கும் நேரம்.
கடமை முடிந்து விட்டது என
நீ   நிம்மதியாகப் போகலாம்
என    சக வயதினர்  பேசும் காலம்.
இயற்கையின் நியதி .
பெருசு அனைத்தும் செய்து சென்றுவிட்டார்.
கல்யாணசாவு  என சமாதனம் செய்து கொள்ளும் காலம்.
இயற்கையின் நியதி
ஏற்று சமாதானம் அடையத்தான் வேண்டும்.

ஞாயிறு, அக்டோபர் 21, 2012

கோடிக்கணக்கில் பணம் ஏன் சிந்திப்பீர். செயல்படுவீர்.

கோடிக்கணக்கில் பணம் ஏன்  சிந்திப்பீர். செயல்படுவீர்.

மதங்கள் 
மத நம்பிக்கைகள்,
கடவுள் 
கடவுள் நம்பிக்கைகள் 
மனிதனை 
மனிதானுக்குகின்றன.

ஆனால் 
அந்த நம்பிக்கைகள் 
சிந்தனையுடன் செயல்படவேண்டும்.
ஆனால் 
இன்று 
அவைகள் மூடநம்பிக்கைகளாகி 
வாணிகமாகிவிட்டன.

இன்றைய செய்தி.
ஒருஆஷ்ராமத்தில் 
குருபாத தீர்த்தம் என ஒரு மயக்க மருந்தளித்து 
ஒரு பெண்ணை பலர் சேர்ந்து கெடுத்துள்ளனர் 

ஆஷ்ரமங்கள்  ஆஸ்திகள் சேர்த்ததுமே 
இந்தமாதிரியான   செயல்கள் தொடங்க ஆரம்பிக்கின்றன.
இன்றைய கலியுகத்தில்  இறைவழிபாடும் 
ஒரு வணிகமயமான ஏமாற்றும்   ஸ்தலமாக 
மாறிவருகின்றன.
இன்றும் சக்திவாய்ந்தசித்தர்கள்  உள்ளனர்.
உண்மையான பக்தியால் இல்லத்திற்கே ஏதோ 
ஒருவிதத்தில் நம்மை ரட்சிப்பார்.
ஆகையால் 
ஆஸ்ரமங்கள் நாடிச்சென்று ஏமாறாதீர்கள்.
பணம்பத்தும் செய்யும்.
சிறைசென்ற சாமியார்கள்  பண  பலத்தால் 
சஞ்சரிக்கின்றனர்.
சாமி யார் என்ற நிலைக்கு வந்தபின் 
கோடிக்கணக்கில் பணம் ஏன்  சிந்திப்பீர்.
செயல்படுவீர்.


மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம்,,நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.

மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம், நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.

திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?

அல்லது

பெற்றோர்களின் அவசரமா?

அல்லது  இயற்கையின்  உந்துதலா?

பெற்றோர்கள் தங்கள் கடமை முடிக்கவேண்டும்  என்ற கடமை உணர்வா?

காதலிப்பதாலா?

 அனைத்து  திருமணங்கள்  ஆனந்தத்தில் முடிகிறதா?

மண  முறிவு பெறப்படுவது   ஏன் ?

குழந்தைகள் பிறப்பு ,வளர்ப்பில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்?
படித்த  மேதைக்கு  அறிவில்லா  குழந்தை.
படிக்காத  அறிவிலிக்கு  குழந்த அதி மேதாவி.

ஏழையின்  குழந்தை பணக்காரனாகிறான்.

பணக்காரனின் குழந்தை ஏழை ஆகிறான்.

மருத்துவரின்குழந்தைநோயாளி ஆகிறான்.
பணம் படைத்தோரும்  மன வேதனையில் உள்ளனர்.

இதனால் தான் ஜோதிடக்கலை வளர்கிறது.
சாமியார்கள் வளர்கிறார்கள்.
இதில்  உண்மையானவர்கள்  மரத்தடியிலேயே வாழ்கின்றனர்.

போலிகள்  கோடீஸ்வரனாகின்றனர்.

மக்களிடம்  இறைவன் மேல் உண்மையான  பக்தி,நேர்மை ,சத்தியம்
இருந்தால் தனக்கு  வரும்  சோதனைகளில் நிம்மதி அடையலாம்.

கலி யுகத்தில்   நாம ஜெபமே போதும்.
அங்கிங்கெனாதபடி  எங்கெங்கும்  ஆனந்த பூர்த்தியாய்  இருக்கும்
ஆண்டவனை  ,சத்குருவை  வீட்டில்வழிபட்டால்  போதும்.

கடன்வாங்கி,தானம் வாங்கி ஹோமங்கள் ,யாகங்கள் செய்ய முடியாது.
பணமுள்ளவர்களுக்கே  பாப விமோசனம்  என்பது தான் மூடநம்பிக்கை.

சற்றே மனதில் சிந்தியுங்கள்.நம்மிடம்   உண்மை,நேர்மை,சத்தியமிருக்கிறதா?
என்று. உலக  வாழ்க்கையில்  இது  சாத்தியமா? என்று வினவினால்  துன்பமே.

தூயமனத்தில் இறைவன் மட்டுமே இருப்பான். செய்த  பாபங்களை விட்டுவிடுங்கள்.

நீங்கள் எந்த மதத்தில்  தோன்றிநீர்களோ,
உங்கள்  பெற்றோர் எந்த இறைவனை 
வழி பட்டனரோ,
அந்த இறைவன்பெயரை  மட்டும் சொல்லுங்கள்.
கடமையாற்றுங்கள்.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் 
"நாம ஜபம்" செய்யுங்கள்.
குறுக்குவழியில்
 முன்னேறுபவர்களை ப் 
பார்க்காதீர்கள்.
உலகில் யாருமே மன நிறைவுடன் இல்லை.

இறைவன் பெயரை முடிந்த அளவுக்கு 
சொல்லுங்கள்.
மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம்,,நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.
கலியுகம்=சுய சிந்தனை 
உள்ளவர்களுக்கு.
நேர்மையாளர்களுக்கு.
தன்  இல்லத்திலேயே 
நாம ஜபம் செய்வோர்களுக்கு.
வெளியில் அனைத்துமே
வணிகமே.
கபீர் தாசர் :
பூவில்  மண மிருப்பதுபோல்,
கஸ்தூரி மான் வயிற்றில் 
மணமுள்ள  கஸ்தூரி இருப்பதுபோல்,
கடவுள்  உன் மனதிற்குள் இருக்கிறார்.
உனக்குள்  இருக்கும்  இறைவனை அறியாமல்  வெளியில் தேடுகிறாய்.
இதற்குப் பொருள்  இறைவன் மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் அளித்துள்ளான்.உன் இறைவனை உனக்குள் தேடு.
வெளியில் தேடினால் பொருளாதாரக் கேடு.
அதில் தானம் ,தர்மம் செய்.










விதி என்பது வலியது என்றனர்.---சிலர் விதியை வெல்லலாம் என்றனர்.


விதி  என்பது வலியது என்றனர்.---
சிலர் விதியை  வெல்லலாம் என்றனர்.

மதி எல்லாம் அதிக பட்சம் குற்றங்கள் 
புரியவே?
மதிமயக்கும் விதி என்பர்.
அதனால் தான்  ஊழல் புரிந்தோர்,
ஊழலின் எல்லைக்கே சென்று--இன்று 
செய்தித் தாளில் நீ ஊழல் -நான் ஊழல்,
அவன் ஊழல்,ஊழல் ஊழல் என்று சொல்பவனும் 
ஊழலுக்குத் துணை போவோர் சிலரின் 
ஊழலை மறைப்பதாகக்  குற்றச்சாட்டு.
குற்றம்புரிந்தவன்  வாழ்க்கையில்  
நிம்மதி  எது?
ஆனால்விதி மதியை மயக்கி 
மேலும்மேலும் குற்றங்கள் .
நடந்த  வண்ணமாக உள்ளன.
அதை பாரத மக்கள் மதியால் வெல்வார்களா//??

அல்லது  விதியென  துன்பங்களை  அனுபவிப்பார்களா/
அப்படித்தானே அயலார் ஆட்சியையும்
இப்பொழுது  மன்மொஹன்சிங்கை ஆட்டிவைக்கும்
தலைவியையும் ஏற்று வாக்களிக்கின்றனர்.