ஞாயிறு, அக்டோபர் 21, 2012

கோடிக்கணக்கில் பணம் ஏன் சிந்திப்பீர். செயல்படுவீர்.

கோடிக்கணக்கில் பணம் ஏன்  சிந்திப்பீர். செயல்படுவீர்.

மதங்கள் 
மத நம்பிக்கைகள்,
கடவுள் 
கடவுள் நம்பிக்கைகள் 
மனிதனை 
மனிதானுக்குகின்றன.

ஆனால் 
அந்த நம்பிக்கைகள் 
சிந்தனையுடன் செயல்படவேண்டும்.
ஆனால் 
இன்று 
அவைகள் மூடநம்பிக்கைகளாகி 
வாணிகமாகிவிட்டன.

இன்றைய செய்தி.
ஒருஆஷ்ராமத்தில் 
குருபாத தீர்த்தம் என ஒரு மயக்க மருந்தளித்து 
ஒரு பெண்ணை பலர் சேர்ந்து கெடுத்துள்ளனர் 

ஆஷ்ரமங்கள்  ஆஸ்திகள் சேர்த்ததுமே 
இந்தமாதிரியான   செயல்கள் தொடங்க ஆரம்பிக்கின்றன.
இன்றைய கலியுகத்தில்  இறைவழிபாடும் 
ஒரு வணிகமயமான ஏமாற்றும்   ஸ்தலமாக 
மாறிவருகின்றன.
இன்றும் சக்திவாய்ந்தசித்தர்கள்  உள்ளனர்.
உண்மையான பக்தியால் இல்லத்திற்கே ஏதோ 
ஒருவிதத்தில் நம்மை ரட்சிப்பார்.
ஆகையால் 
ஆஸ்ரமங்கள் நாடிச்சென்று ஏமாறாதீர்கள்.
பணம்பத்தும் செய்யும்.
சிறைசென்ற சாமியார்கள்  பண  பலத்தால் 
சஞ்சரிக்கின்றனர்.
சாமி யார் என்ற நிலைக்கு வந்தபின் 
கோடிக்கணக்கில் பணம் ஏன்  சிந்திப்பீர்.
செயல்படுவீர்.


மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம்,,நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.

மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம், நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.

திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?

அல்லது

பெற்றோர்களின் அவசரமா?

அல்லது  இயற்கையின்  உந்துதலா?

பெற்றோர்கள் தங்கள் கடமை முடிக்கவேண்டும்  என்ற கடமை உணர்வா?

காதலிப்பதாலா?

 அனைத்து  திருமணங்கள்  ஆனந்தத்தில் முடிகிறதா?

மண  முறிவு பெறப்படுவது   ஏன் ?

குழந்தைகள் பிறப்பு ,வளர்ப்பில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்?
படித்த  மேதைக்கு  அறிவில்லா  குழந்தை.
படிக்காத  அறிவிலிக்கு  குழந்த அதி மேதாவி.

ஏழையின்  குழந்தை பணக்காரனாகிறான்.

பணக்காரனின் குழந்தை ஏழை ஆகிறான்.

மருத்துவரின்குழந்தைநோயாளி ஆகிறான்.
பணம் படைத்தோரும்  மன வேதனையில் உள்ளனர்.

இதனால் தான் ஜோதிடக்கலை வளர்கிறது.
சாமியார்கள் வளர்கிறார்கள்.
இதில்  உண்மையானவர்கள்  மரத்தடியிலேயே வாழ்கின்றனர்.

போலிகள்  கோடீஸ்வரனாகின்றனர்.

மக்களிடம்  இறைவன் மேல் உண்மையான  பக்தி,நேர்மை ,சத்தியம்
இருந்தால் தனக்கு  வரும்  சோதனைகளில் நிம்மதி அடையலாம்.

கலி யுகத்தில்   நாம ஜெபமே போதும்.
அங்கிங்கெனாதபடி  எங்கெங்கும்  ஆனந்த பூர்த்தியாய்  இருக்கும்
ஆண்டவனை  ,சத்குருவை  வீட்டில்வழிபட்டால்  போதும்.

கடன்வாங்கி,தானம் வாங்கி ஹோமங்கள் ,யாகங்கள் செய்ய முடியாது.
பணமுள்ளவர்களுக்கே  பாப விமோசனம்  என்பது தான் மூடநம்பிக்கை.

சற்றே மனதில் சிந்தியுங்கள்.நம்மிடம்   உண்மை,நேர்மை,சத்தியமிருக்கிறதா?
என்று. உலக  வாழ்க்கையில்  இது  சாத்தியமா? என்று வினவினால்  துன்பமே.

தூயமனத்தில் இறைவன் மட்டுமே இருப்பான். செய்த  பாபங்களை விட்டுவிடுங்கள்.

நீங்கள் எந்த மதத்தில்  தோன்றிநீர்களோ,
உங்கள்  பெற்றோர் எந்த இறைவனை 
வழி பட்டனரோ,
அந்த இறைவன்பெயரை  மட்டும் சொல்லுங்கள்.
கடமையாற்றுங்கள்.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் 
"நாம ஜபம்" செய்யுங்கள்.
குறுக்குவழியில்
 முன்னேறுபவர்களை ப் 
பார்க்காதீர்கள்.
உலகில் யாருமே மன நிறைவுடன் இல்லை.

இறைவன் பெயரை முடிந்த அளவுக்கு 
சொல்லுங்கள்.
மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம்,,நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.
கலியுகம்=சுய சிந்தனை 
உள்ளவர்களுக்கு.
நேர்மையாளர்களுக்கு.
தன்  இல்லத்திலேயே 
நாம ஜபம் செய்வோர்களுக்கு.
வெளியில் அனைத்துமே
வணிகமே.
கபீர் தாசர் :
பூவில்  மண மிருப்பதுபோல்,
கஸ்தூரி மான் வயிற்றில் 
மணமுள்ள  கஸ்தூரி இருப்பதுபோல்,
கடவுள்  உன் மனதிற்குள் இருக்கிறார்.
உனக்குள்  இருக்கும்  இறைவனை அறியாமல்  வெளியில் தேடுகிறாய்.
இதற்குப் பொருள்  இறைவன் மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் அளித்துள்ளான்.உன் இறைவனை உனக்குள் தேடு.
வெளியில் தேடினால் பொருளாதாரக் கேடு.
அதில் தானம் ,தர்மம் செய்.










விதி என்பது வலியது என்றனர்.---சிலர் விதியை வெல்லலாம் என்றனர்.


விதி  என்பது வலியது என்றனர்.---
சிலர் விதியை  வெல்லலாம் என்றனர்.

மதி எல்லாம் அதிக பட்சம் குற்றங்கள் 
புரியவே?
மதிமயக்கும் விதி என்பர்.
அதனால் தான்  ஊழல் புரிந்தோர்,
ஊழலின் எல்லைக்கே சென்று--இன்று 
செய்தித் தாளில் நீ ஊழல் -நான் ஊழல்,
அவன் ஊழல்,ஊழல் ஊழல் என்று சொல்பவனும் 
ஊழலுக்குத் துணை போவோர் சிலரின் 
ஊழலை மறைப்பதாகக்  குற்றச்சாட்டு.
குற்றம்புரிந்தவன்  வாழ்க்கையில்  
நிம்மதி  எது?
ஆனால்விதி மதியை மயக்கி 
மேலும்மேலும் குற்றங்கள் .
நடந்த  வண்ணமாக உள்ளன.
அதை பாரத மக்கள் மதியால் வெல்வார்களா//??

அல்லது  விதியென  துன்பங்களை  அனுபவிப்பார்களா/
அப்படித்தானே அயலார் ஆட்சியையும்
இப்பொழுது  மன்மொஹன்சிங்கை ஆட்டிவைக்கும்
தலைவியையும் ஏற்று வாக்களிக்கின்றனர்.

வெள்ளி, அக்டோபர் 19, 2012

கும்பகர்ணனின் சொற்பிழை அவனின் வரம் தூக்க மாக மாறியது.




கும்பகர்ணனின்  சொற்பிழை
அவனின் வரம் தூக்க மாக  மாறியது.


நரிவலம்போனால் என்ன?
 இடம்போனால் என்ன ?
கடிக்காமல் போனால் சரி.
இது பழமொழி.

கண்கள் பேசாது.
பார்க்கும்.
காது கேட்கும்.
பேசாது.

நாக்கு  இரண்டுமே செய்யாது .
ஆனால் இஷ்டப்படி பேசும்.
பார்க்காததையும் பேசும்.
கேட்காததையும் பேசும்.

கபீர்தாசர்  சொன்னார்:
நாக்கு  ஏதாவது பேசும்.
வாயிக்குள் சென்றுவிடும்.
அதன்பலனாக
செருப்படி  தலையில் விழும்.

தலை எழுத்தை மாற்றுவது
ஒரு சொல்.
சொல்லின் ஆழம் ,
சொற்பிழை
பல குற்றங்கள்
புரியும்.
ஆகையால் தான்
மகா பாரதப்போரில்
அஷ்வத்தாமா  என்ற பெரும் குரல்
யானை  என்பதை மறைத்து
குரு  துரோணரின் மரணத்திற்கு
காரணமாகியது.
இது ஒரு ராஜ தந்திரம்.

கும்பகர்ணனின்  சொற்பிழை
அவனின் வரம் தூக்க மாக  மாறியது.

கன்னி என்ற சொல் கனியாக விழுந்ததால்
பாஞ்சாலி  ஐவருக்குப்
பத்தினி ஆனாள்  என்ற ஒரு கதை.
சொற்பிழை    பெரும் தவறாகிறது.

பகலில் பார்த்துப்  பேசு;
இரவில் அதுவும் பேசாதே என்பதும் .
பழமொழி.

பொருள் குற்றம்
தூக்கம்
 துக்கமாக மாறும்.

துக்கம்  தூக்கமாக  மாறும்.

சொற்பிழை  நல்லது நடக்கவும் உதவும்.

என்  என்பதை ஏன்
என்று  மாற்றிப்பாருங்கள்.
அண்ணா  சொன்னதுபோல்
நான் என்பதை  நாம்  என்று
சொன்னால்  ஓட்டும்.

இந்நிலையில்
பலகட்சிகள் உரு ஆவதை
"என்"கட்சி என்ற நிலைமாறி,
"நம் நாடு " என்ற
எண்ணம் வந்தால்.
நாடு  முன்னேறும்.
"நான்"  தான் நாட்டைத் திருத்த
முடியுமென்று
காளான் போல்  தலைவர்கள்  தோன்றுவது,
நாட்டின் நலனுக்கா?
அமைதிக்கா?
நாட்டின் நலம் என்றால்
ஒரே  திட்டம்.
ஒரேகொள்கை.
அதனால் தான்
அனைவரும்
காந்திபெயரை,
காமராஜர் பெயரை
அண்ணா பெயரை
சொல்லி  கட்சி நடத்துகின்றனர்.

வள்ளுவர்  சொல்வதை மீண்டும் மீண்டும் சொல்கிறோம்:

நாடென்பது நாடா வளத்தன; நாடல்ல
நாட வளம்தரும்    நாடு.

தீயினர் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே,நாவினால்
சுட்ட வடு.


செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் ,அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

இனிய உளவாக இன்னாது கூறல் .கனி இருக்க
காய் கவர்ந்தற்றன்று.








रोज़ ख़बरें आती हैं, क्या देशोन्नती की? नहीं।नहीं। भ्रष्टाचार की। इसमें आश्चर्य है क्या?

रोज़ ख़बरें आती हैं, क्या देशोन्नती की? नहीं।नहीं। भ्रष्टाचार की। इसमें आश्चर्य है क्या?


रोज़ ख़बरें आती हैं,
क्या देशोन्नती की?
नहीं।नहीं।
भ्रष्टाचार की।
इसमें आश्चर्य है क्या?
तटस्थ  भ्रष्टाचार के विरुद्ध 
बोलनेवालों पर भी 
भ्रष्टाचार का कीचड।
एक स्वर के  भ्रष्टाचार का नारा 
आज अलग अलग हो गए।
दो प्रधान दल बाघ है तो 
बदल-बदलकर साथ देनेवालेछोते दल है सियार।
आज खून की आवाज हैं;धमकी है।

स्वामीजी  बोले 
उनका शिष्य 
जेल  गया;मिथ्या पासपोर्ट-वीसा के अपराध्  में।
केजरीवाल बोल रहे हैं;
अब उनपर आरोप हैं 
वे कुछ नेताओं के भ्रष्टाचार छिपा रहे हैं।
एक दुसरे तू-तू मैं -मैं  कर रहे हैं।
अन्ना हजारे के विरद्ध एक अध्यापक का अनशन 

पता नहीं  सच-क्या है/झूठ  क्या है/?

जोभी हो  देशोन्नती   में 
बाधा पड  रहीं है।
जागो!युवकों !
जागो! बचाओ!
भारत को।
देश की उन्नत तो हुयी है बेशक।

पर 
सब देशवासियों को नहीं मिली आजाद  का सुख।
भ्रष्टाचार से देश को बचाने की  शक्ति  हैं 
युवकों में।
अतः जागो;
बचाओ  देश को 
भ्रष्टाचार केसंक्रामक रोग् से।


உண்மையெது பொய்யது ஒன்னும் புரியலே, நம்ம கண்ணை நம்மால நம்ப முடியலே.

உண்மையெது பொய்யது  ஒன்னும் புரியலே,
நம்ம கண்ணை நம்மால நம்ப முடியலே.


இளைஞர்  சமுதாயமே!

உண்மை எது?பொய்  எது?
இயற்கையின் சக்தியே!
முன்னேறின் நாட்டின் 
தொத்து  நோய் ஊழல்.
இதிலிருந்து  நாட்டைக் காப்பாற்று.!


மனம்  பலவற்றை  சிந்திக்கிறது.


ஆன்மீக  சிந்தனைகள் 
பற்றற்ற  வாழ்க்கை பேசி.
பகட்டாக  வாழும்  காட்சிகள்.

சனாதன தர்மத்தில் இல்லாத 
பழக்கங்கள்  ஏற்படுத்தி,
கோடிக்கணக்கான பணம் 
சமுத்திரத்தில்  கரையும் காட்சி.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்போரும் 
சிலஊழல் பேர்வழிகளை 
மறைக்கும்  காட்சி.

ஊழலுக்கு  உரத்த குரல் கொடுக்கும் கேஜரிவால், சிலரின் நில  ஊழல் மறைத்த செய்தி.

பதஞ்சலி சீடரின் கடவுச் சீட்டு ஊழல்.
கட்கரே வின் நில ஊழல்.
அதைவெளியிட்டவர் ,
பவாரின் நிலா ஊழல் மறைத்த செய்தி,
அரசியல் என்பது சாக்கடை.
அதை தூர்வாரினாலும் 
நாற்றம் தான் மிஞ்சும்.
 ஆகையால் தான் நல்லவர்கள்,
ஓட்டுப்போடுவதில்லை.
எழுபத்தைந்து சரசரியாரியாக 
அறுபது விழுக்காடு ஓட்டில் 
நாடுஊழல் மயம்.
 உண்மையெது பொய்யது 
ஒன்னும் புரியலே,
நம்ம கண்ணை நம்மால நம்ப முடியலே.
இந்திய காங்ரசும்  ஊழல்,
பாரதீய ஜனதாவும்  ஊழல்.
இரண்டும்புலி என்றால்,
இரண்டுடனும் மாறி மாறி 
கூட்டணி   வைக்கும் 
மாநிலகட்சிகள்  நரிகள்.

புலி அடித்துப்போடும் 
இரைக்காக பின் செல்லும்
 கூட்டங்கள்.
ஆகையால் தான் நாட்டின் நலத்தைவிட அதிகம் 
கட்சிகளும்,
தலைவர்களும் 
தொண்டர்களும் 
பிரிந்து  நாட்டின் ஊழலில் 
பங்கு போடுகிறார்கள்.
எதிர்கால  இளைஞர்களே!
எங்கள் அகவை கூடிவிட்டது.
கூட்டுவைக்கும்  மந்தணம்   அறிய.
நீங்கள் சிந்தித்து செயல் படுங்கள்.
நாட்டின் உயர்வு உங்கள் கையில்.





வியாழன், அக்டோபர் 18, 2012

வையக அமைதிக்கு, சனாதன தர்மம் கூறிய கூற்று, மெய்யாகும் காலம் வரும். ஓம் சாந்தி.ஓம் சாந்தி.ஓம் சாந்தி.

வையக அமைதிக்கு, சனாதன தர்மம்   கூறிய  கூற்று,
மெய்யாகும்  காலம் வரும்.
ஓம் சாந்தி.ஓம் சாந்தி.ஓம் சாந்தி.


அகவை  கூடக் கூட ,
அறுபதுக்குப்பின் ,
அறிவுடன் வாழ்ந்தோமா?
அறிவிழந்து  வாழ்ந்தோமா?
ஆஸ்தி சேர்த்தோமா?
அன்புச் செல்வங்களுக்கு 
ஆதரவளித்து,
அறிவு புகட்டி,
அவர்கள் அகம் மகிழ வளர்த்தோமா?
ஒய்வு பெற்று  ,
ஓய்வூதியம் பெற்றாலும்.
நன்மக்கள் பெற்று 
செல்வச் செழிப்புடன் 
வாழ்ந்தாலும் .
எதோ ஒரு மனக்குறை மனதில் 
எதோ ஒரு ஓரத்தில் 
தோன்றுகிறது.
காரணம்  அறிவியல் வளர்ச்சியா?
இளம் தலைமுறையின் ,
அறிவுமுதிர்ச்சியா?
கணினி இல்லா
 காலத்தில் வளர்ந்து,
இன்று கணினி மூலம்,
பெறு ம் அறிவு,தொடர்பு,
அவ்வையின் 
கற்றது கைமண் அளவு,
கல்லாதது உலக அளவு 
என்ற மொழி  காலத்தால் அழியாதது.
மடிகணினி   தட்டினால்,
அறிவில் நாம் எவ்வளவு 
ஞான சூனியமாக வாழ்ந்தோம் 
என்ற ஞானம் பெற்றேன்.
நமது குழந்தைகள்.
தங்கள் சட்டைப்பையில் ,
அகிலத்தை அடக்கி வைத்துள்ளனர்.
கைபேசியில்.
வணிகத்தொடர்பு 
அரை நொடியில்,
வேலைவாய்ப்பு  நேர்காணல்,
விண்ணப்பம் அனுப்புதல்,
தங்கள்  பள்ளி நண்பர்கள்,
கல்லூரி  நண்பர்கள்,
பல காத தூரம்,
சீனாவில் இருந்தாலும்.
சிங்கப்பூரில் இருந்தாலும்,
ரஷ்யாவில் இருந்தாலும்.
அமெரிக்காவில் 
இருந்தாலும்,
இந்தியாவின் ஒரு 
குக்கிராமத்தில் 
இருந்தாலும் 
முகம்  பார்த்துப் பேசும் 
உன்னத வளர்ச்சி.
நாம் வாழ்ந்த பழைய காலம்,
ஒரு குறுகிய வட்டம்.
எத்தனை எத்தனை குறுகிய 
எண்ணங்கள்.
மதங்களின் பெயரால்,
ஜாதியின் பெயரால்.
இன்று பரந்த உலகம் காணும் போது ,
வையகம் வாழ்க.
வையகம் ஒரு குடும்பம்.
மனித இனம் ஒன்று
சூரியன் ஒன்று.
சந்திரன் ஒன்று.
வையக அமைதிக்கு,
சனாதன தர்மம்   கூறிய 
கூற்று,
மெய்யாகும் 
காலம் வரும்.
ஓம் சாந்தி.ஓம் சாந்தி.ஓம் சாந்தி.




முப்பெரும் தேவிகளின் ஆராதனை , மட்டும் நவராத்திரிப் பண்டிகை நோக்கம் அல்ல.


முப்பெரும்  தேவிகளின் ஆராதனை மட்டும்
 நவராத்திரிப்  பண்டிகை நோக்கம் அல்ல.


நவராத்திரி

முப்பெரும்  தேவிகளின் ஆராதனை  ,
மட்டும் நவராத்திரிப்  பண்டிகை
நோக்கம்   அல்ல.
பொம்மை செய்யும் கைவினைஞருக்கு
ஒரு ஊக்கம்.
குழந்தைகளுக்கு ,
குதூகூலம்.
பெண்கள் தங்கள்
உறவினர்கள்,
நண்பி களுடன்,
சந்திக்க
ஒரு வாய்ப்பு.
இசைக்கலை ஆர்வம்  
வளர ஒரு வாய்ப்பு.
தெய்வங்கள் பொம்மைகள்
ஆன்மீகம்  வளர்த்த
ஆசார்யர்கள்
பொம்மைகள்
செட்டியார் பொம்மைகள்,
விலங்குகள்,
தோட்டக்கலை
என அனைத்துச்
சிறப்புகளுக்கும்
ஆர்வம் ஊட்டும் பண்டிகை.
சக்தி தர மலைமகள்.
கல்விதர கலைமகள்,
செல்வம் தர அலைமகள்
தினம் ஒரு சுண்டல்,
உடல் ஆரோக்யத்திற்கு.
நம் முன்னோர்கள்,
ஆன்மிகம் என்பதை,
அறிவியல் ,கலைகள்
ஆகிய வளர்ச்சிக்கும் சேர்த்தே
வளர்த்துள்ளனர்.
இந்த நாட்களில்
அனைவரும் தேவிகளைவணங்கி
ஞானம்பெறுவோம்.

हमारे साथ कभी माया है तो कभी ममता है।

अपराधी  हम नहीं हैं।

एना हज्जारे,केजरीवाल    हम  पर आरोप  लगाते  हैं।
मैं  कांग्रेस  दल में हूँ।
हमारे  स्थायी अनुयायी है।

वह भारतीय जनता दल में हूँ।
उस के स्थायी  अनुयायी हैं।

हमारे साथ  कभी  माया है  तो
कभी  ममता है।
कभी लाल है तो
कभी यादव है।
अतः  हम सब बनते हैं
सांसद;  विधायक।
क्या थोड़े ही हम अपराधी हैं?
मतदाताओं  में  बदल-बदलकर
माया-या   ममता
अक्सर घेर लेती हैं।
हम बनते हैं  शासक।
अपराध हम नहींकरते।
मतदाता अपराध  करते हैं।
भोगते  हैं कष्ट .
हम सुखी हैं।
अतः  हम हैं भाग्यवान।
जो कष्ट भोगते हैं ,
वहीं पापी है।
हम अपराधी हैं नहीं;
हम है पुण्यात्मा।
हमें बिजली का कष्ट नहीं है।
हमारी सड़कें पक्की हैं।
हमारे  लिए इलाज  की कमी नाहीं।
महंगाई की चिंता नाहीं।
चिंताएं उनको सताती हैं ,
जो अपराध करते हैं;
वे ही बेचारे मत दाता।

புதன், அக்டோபர் 17, 2012

அமைதி நகரம் அமைதி அற்ற நகரமாக மாறியது.

புதிய  குற்றச்சாட்டு.

கேஜ்ரிவால்   பாரதீய ஜனதா  மீது குற்றம் சாட்டியுள்ளார். கடகரி  விவசாயிகளின் நிலத்தை  அபகரித்துள்ளார்.

நம் நாட்டு விவசாயிகளின்  முன்னேற்றம்  பற்றிய அக்கறை ஆளும் கட்சிகளுக்கோ  எதிர் கட்சிகளுக்கோ  இருந்திருந்தால்
விளை நிலங்கள்  விலை போகும்  வீட்டுமனைகளாக  ,
தொழி ற் சாலைகளாக   மாறி இருக்காது.

ஹிந்தியில்  ஒரு கதை.

அமைதி நகரம் என்று ஒரு நகரம்.
மக்கள் மிக மகிழ்ச்சியாக  இருந்தனர்.
அங்கு அன்புதான் குடியிருந்தது.
மக்கள் ஒருவருக்கொருவர்  உதவி செய்து வந்தனர்.
விவசாயம் முக்கிய தொழில்.
சண்டை சச்சரவே கிடையாது.
உழைப்பவர்களுக்கு மட்டுமே உணவு.
அந்நகரில்  அனைவரும் உழைப்பாளிகள்.
காவல் நிலையம்,நீதிமன்றம்கிடையாது.
நால்வர் மட்டும் வேலையில்லாமல் இருந்தனர்.
அவர்கள் சோம்பேறிகள்.
வேலை செய்வது அவர்குக்குப் பிடிக்காது.

சைத்தானின் பார்வை அந்நகரின் மீது  விழுந்தது.

அந்த   நகருக்கு ஒரு  வியாபாரியை அனுப்பியது.
வியாபாரி நகரத்தை வலம்  வந்தார்.
அமைதி  நகரம்.உழைக்கும் வர்க்கம்.
சைத்தானின்  ஆலோசனை பேரில் சோம்பேறிகளை
முதலாளி ஆக்கினான்.
அவன் கொடுக்கும் கூலிக்கு ஆசைப்பட்டு
தங்கள்  வேலை களை விட்டு விட்டு ம க்கள்
தொழிலாளிகளாக   மாறினார்கள்.
முதலில்  மாவாட்டும்   இயந்திரம்.
வீட்டில்  மாவாட்டி வேலை செய்தவர்கள் பலர்
வேலையிழந்தனர்.
இவ்வாறு மற்ற மூவரும்  
தொழில் ஆரம்பித்து பணக்கார்களானார்கள்.
நகரத்தில் பெரும் கட்டடங்கள் எழும்பின.
தொழிற்சாலைகள் பெருகியது.
வறுமையில் மக்கள் இருந்தனர்.
வேலை இல்லாமல் இருந்தனர்.
பட்டினியில் வாடினர்.
திருட்டு, கொள்ளை,அதிகரித்தது.
சொம்பேரியில் ஒருவன் நீதி பதியாகி
பணக்காரனானான்.
ஒருவன் காவலர்களை நியமித் து
மக்களிடம் வசூலித்து குறைந்த கூலிகொடுத்து
பணக்காரனானான்.
மக்கள் வறுமையில் வாடினாலும் ,
தன்  நகரத்தின் புதிய பணம் படைத்தோரின்
கட்டடங்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இப்பொழுது ஒரு சோம்பேறி
கூலி ஆட்களை  நியமித்து வெளி ஊரிலிருந்து
தானியங்கள்   வாங்கி   அதிக விலைக்கு
 விற்று பணக்காரன் ஆனான்.
அந்த நகரத்தில்  நீதிமன்றம்,காவல் நிலையம்,நிறுவப்பட்டது.

அமைதி  நகரம் அமைதி அற்ற  நகரமாக மாறியது.
முதலில்  உழைத்தவர்களுக்கு  உணவு கிடைத்தது.
இன்று சோம்பேறிகள் சாப்பிடுகின்றனர்.

விவாசாயம் முற்றிலும் நடக்கவில்லை.
 இதே நிலைதான் இன்று.

விளைநிலம் வீடுகள்,பொறியியல் கால்லூரிகளாக மாறிவிட்டது.
விவசாயிகள்  நகரை நோக்கி வந்துவிட்டனர்.
எதிர்காலம் உணவுக்காக  வெளிநாட்டை எதிர்பார்க்கும்காலம் வரும்.
அதற்கான இறக்குமதியிலும் ஊழல் நடக்கும்.

இதற்கு கிராமம் தன்னிறைவு திட்டம்  மட்டும் தான்.

ஆனால் கட்காரி   போன்றவர்களால்  அது சாத்தியமற்றுப்போகும்