புதன், அக்டோபர் 17, 2012

அவரவர்கள் புத்திசாலித்தனமாக வாழ வேண்டியதுதான்.

அரசியல் கட்சிகள் சட்டத்திற்குப்  புறம்பாக  சந்தா  துகை வெளிநாடுகளில் வசூலித்ததை  தேர்தல் ஆணையம் கண்டு பிடித்துள்ளது-செய்தி.

இதற்கு   சட்டப்படி  யார் நடவடிக்கை எடுப்பது.
ஒன்று ஆளும் கட்சி. மற்றொன்று பிரதான எதிர்க்கட்சி.

நாட்டில் புறம்போக்கு நிலம் ஆக்ரமித்ததற்கே  ஒன்றும் செய்ய முடியாது.

இதற்கு என்ன செய்வார்கள்?

பார்க்கலாம்.

அரசியல் கட்சிகள் வாங்கும் சந்தா துகைக்கு சரியான கணக்குக் கிடையாது.

இதற்கு அன்ன ஹசாரே,கேஜ்ரிவால் போன்றவர்கள் என்ன சொல்வார்கள்.
அவர்களும் சந்தா வசூலிக்காமல் போராட முடியாதே.

முடிவாக , ஒன்றும் நடக்காது.
அவரவர்கள் புத்திசாலித்தனமாக வாழ வேண்டியதுதான்.




செவ்வாய், அக்டோபர் 16, 2012

ஊழல் அரசியல் வாதியாகிய நான் ஆயிரம் கோயிலில் சத்தியம் செய்து சொல்கிறேன் .


ஊழல் அரசியல் வாதியாகிய நான் 

ஆயிரம் கோயிலில் சத்தியம் செய்து 
சொல்கிறேன் .
ஊழல்   குற்றச்சாட்டு 
என் மீது சாற்றப்படுகிறது.

உண்மை நிலை இது தான்.
ஊழல் செய்தாலும் 
மீண்டும் நான் பாராளுமன்ற  உறுப்பினன்.
சட்டமன்ற உறுப்பினன்.
முதல் அமைச்சர் .
அமைச்சர்  நான்.
நானா! குற்றவாளி.!
நான் குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறேன்.
கற்பழிப்பவர்களை 
காப்பாற்றுகிறேன்.
நேர்மையான அதிகாரிகளை 
தண்டிக்கிறேன்.
சதய்வான்களை ஒழித்துவிடுகிறேன்.
கோவில்நிலங்களை 
அபகரிக்கிறேன்.
நிலஊழல் செய்கிறேன்.
கிரைனட் ஊழல் செய்கிறேன்.
நிலக்கரி ஊழல் செய்கிறேன்.
போபார்ஸ் ஊழல்புரிந்தேன்.
தொலைபேசியில் ஊழல்.
கறுப்புப் பணம் வெளி நாட்டு வங்கிகளில் .
இதற்கெல்லாம் என் மேல் மட்டும் 
குற்றம் சாற்றும் 
மிகப்பெரிய குற்றவாளி 
யார்?யார்?
சற்றே 
மனச்சாட்சி !உள்ளோரே !!.!!
நினைத்துப்பாருங்கள் !!
எனக்கு மீண்டும் மீண்டும் வாக்களித்து 
எனக்கு  பதவி சுகம் அளித்து 
நாற்காலியில் அமரவைக்கும் 
வாக்காள  பொது மக்களே!!
நீங்கள் தான்.
இது சத்தியம்! சத்தியம்.
நாங்கள் அரசியல் வாதிகள் 
பாவிகள் அல்ல.
வாக்களிக்கும் நீங்கள்  பாவிகள்.
ஆகையால் தான் 
நாங்கள் சுகமாக இருக்கிறோம்.
நீங்கள்  அல்லல் படுகிறீர்கள்.
எங்களுக்கு மின் தடை இல்லை.
தொலைபேசித் துண்டிப்பு இலை.
விலைவாசியால் எங்களுக்கு 
எவ்வித பணத்தட்டுப்பாடும் இல்லை.
மருத்துவவத்திற்கு எங்களுக்காக 
பல கோடி ரூபாய்கள் சிலவு செய்கிறோம்.
சிகிச்சைக்கு விமானத்தில் செல்கிறோம்.
நாங்கள் செல்லும் சாலைகள் 
குண்டும் குழியுமாக இல்லை.
எங்களுக்கு  எவ்வித  குறை ஒன்றும் இல்லை கண்ணா.
நாங்கள் புண்ணியவான்கள்.
பாவிகள் நீங்கள் தான்.
நீங்கள் அளிக்கும் ஓட்டுக்கள் தான்.
எங்களை நோட்டுகளில் புரளச்செய்கின்றன.
வாழ்க ஜனநாயகம்.
எங்களுக்கு வாக்களித்தவர்கள் 
மீண்டும் வாக்களிப்பார்கள்.
ஆகவே 
பாவிகள் இன்னலுருவர்.
கலியுகம்.
கர்ம வினை கல்லறை வரை விடாது.
இது சத்தியம்.


சுருக்கம்: வேலியே பயிரை மேய்கிறது.

நாடு எங்கே செல்கிறது?

மக்களே!
இன்றைய  தலைவர்களும்
அரசியல் வாதிகளும்

இந்திய ஜனநாயகமும்.

பொருளாதாரவளர்ச்சி  எப்படி?

அது அரசியல் வாதிகளுக்கே?
ஊழல் புரிவோருக்கே.
பெரும் பணக்கார முதலாளிக்கே.
ஊதியம் பெரும்தொழிலாளிக்கல்ல .
நடுத்தர மக்களுக்கு  அல்ல.
தினத்தொழி ளாலர்களுக்கு அல்ல.

அரசியல் வாதிகளுக்கும் ஊழல் வாதிக்குமே.

தினந்தோறும் செய்திகள் ,அதனால் அறிந்த உண்மைகள்.

நாடு முன்னேறுகிறது.

கட்டடங்கள் உயர்கின்றன.
மகிழ்வுந்துகள் பெருகுகின்றன.
ஆனால்,
கொலைகள் ,கற்பழிப்புகள்,கூலிப்படை,
கொள்ளை, சங்கிலி பரிப்பு,
குழு கற்பழிப்பு.

அரசியல் தலையீட்டால் குற்றவாளிகளை 
கைது செய்யமுடியவில்லை.
எழுபதுலக்ஷ ரூபாய் ஊழல் ஊழல்  அல்ல.(உருக்குத்துறை அமைச்சர்)
பாரதத்தில்  கற்பழிப்பு சர்வ சாதாரணம் (சோனியா)
பெண்கள் விரும்பி வருவதால் குழு கற்பழிப்பு (ஹரியானா காங்கிரஸ் தலைவர்)
காவல் அதிகாரி தூண்டுதலால் திருட்டு.
போலி மருத்துவர்கள் எழுபதுபேர் கைது. நூற்று ஐம்பது போலி மருத்துவர்கள் தலைமறைவு

அழகிரிமகன் கைது செய்ய நீதிமன்றம்  ஆணை.

அடிக்கடி தொடர்கொள்ளை .முதல் தெருவில் திருடு.அங்கு காவலர்கள் விசாரிக்கும்  பொழுதே பக்கத்துத்  தெருவில்  மூன்று வீட்டில் கொள்ளை.

மூதாட்டிகளை கொன்று கொள்ளை.

இது அனைத்திற்கும் செய்திகளின் அடிப்படையில் அமைச்சரகள் ,அதிகாரிகள்,

உள்ளூர் ரௌடிகள்,வட்டங்கள் ,மாவட்டங்கள்  உள்ள  அரசியல் சுயநல வாதிகள்  தலை ஈடு.
மின் தடையால் திருட்டு,கற்பழிப்பு ,மாற்றானுடன்  இருட்டில் இரு சக்கரவாஹ்னத்தில் சென்ற  மனைவி.

சோனியாவின் மருமகன் சம்பந்தப்பட்ட  தொழிற் சாலை மூட நடவடிக்கை எடுத்த மாவட்ட அதிகாரிக்கு மிரட்டல்.

சுருக்கம்:   வேலியே   பயிரை  மேய்கிறது.






ஊழல் அற்ற பாரதம் உருவாகுமா?


ஊழல் அற்ற பாரதம் உருவாகுமா?


மக்களே!சிந்திப்பீர்!
ஊழலுடன் இணைந்து இருக்கும் 
கருணை மமதா  மற்றும் கட்சிகள்  பற்றியும் 
சிந்திப்பீர்.
நாடு காக்க ஊழல் ஒழிக்க 
உறுதிமொழி எடுப்பீர்.
ஊழல் என்பதுஒரு ரூபாய் 
லஞ்சம் பெற்றாலும்   ஊழல் தான். 


உருக்குத் துறை அமைச்சர் பெநிப்ரசாத் வர்மாவின் 
ஊழல் பற்றிய கருத்தும் 
இந்திய ஜனநாயகமும்.

நம் நாட்டில் ஊழல் ஒழிய உண்ணாவிரதம் போராட்டம் என்று தினமும் செய்திகள்.
இந்நிலையில்  
ஊழல் என்பது  லக்ஷங்கள் இல்லை/
கோடிகளும்  அல்ல.
பல லக்ஷம் கோடிகள்
  செய்தால் தான் ஊழல் 
நாட்டை ஆளும் அமைச்சர்  உரை.
அரும் பாடுபட்டு,
அல்லல்பட்டு,
செக்கிழுத்து 
சிறையில் சித்தரவதைப்பட்டு,
பிரம்படி பட்டு ,
சொத்து இழந்து .
சுகம் இழந்து 
பெற்ற சுதந்திரம்.
இன்று 
சுதந்திர நாட்டில் 
ஊழல்புரிவதே லட்சியம் .
லக்ஷரூபாய்கள்  ஊழல் என்பது 
ஊழல் அல்ல என்றவர்களின்  
கையில் ஆட்சி.
ஆளும் கட்சியினர் இளைஞர்களுக்கு 
காட்டும்பாதை.
இந்த ஆளும் கட்சிக்கு இன்னும் 
கைகொடுத்து ஊக்குவிக்கும் 
சில்லறைக் கட்சிகள்.
ஒருதுளி ஆனாலும் விஷம் .
ஆயிரம் லஞ்சம் வாங்கினால் 
அரசு அதிகாரிகள் பணி  நீக்கம் .
அமைச்சர்கள் எழுபது லக்ஷம் 
வாங்கினால் ஊழல்அல்ல.
மக்கள் மடையர்கள் 
மீண்டும் வாக்களிப்பார்கள்
என்ற நம்பிக்கை.
வாழ்க  பாரத ஜனநாயகம். 



திங்கள், அக்டோபர் 15, 2012

விழித்தெழும் காலம் எப்போது.?


பாரத  நாடு 

பாரத மக்கள் எப்பொழுதுமே
தங்கள் தலைவர்களுக்காக ,
தங்கள் அரசர்களுக்காக,
உயிரைவிடுபவர்கள் .

தங்கள் அரசனுக்காக
முதுகில் அடிபடாமல்
நெஞ்சில் அடிபட்டு 
சாகும்  தன்  ஒரே மகனைப்பார்த்து 
 மகிழ்பவள் வீரத்தாய்.

அந்த மன்னன் எதற்காகப் போரிட்டான் 
,நாட்டின் நலனுக்கா 
தன்   அரண்மனை வளத்திற்கா
,அந்தப்புர அழகுக்கா 
  என்று கூட 
சிந்திக்காத மக்கள்
.அழகான அரசகுமாரி
மன்னன் ஆசைப்பட்டான் 
என்பதற்காக பல்லாயிரமான  வீரர்கள்
தன் உயிர்த்தியாகம் செய்த நாடு.
குடி ஆட்சியிலும் அதே பரம்பரை ரத்தம் ஓடுகிறது.

தான் விரும்பும் நடிகனின்
நிழற்படத்திற்கு பாலாபிஷேகம்.
தேங்காய் உடைப்பு.
தன்  வீட்டில் சாப்பாடு
 இல்லை என்றாலும் .
வீட்டில் உள்ளோர்
பட்டினி கிடந்தாலும்
பரவாயில்லை.
தண்டச்சோறுன்னு அப்பன் சொன்னா 
டேக்  இட் பாலிசி தான்.

சினிமா டிக்கட் நூறு இருநூறு  என்றாலும் 
திருட்டுத் தனமாக  ஒரு டிக்கட் 
ஆயிரம் இரண்டாயிரம் என்றாலும் 
வாங்கி திரைப்படம் பர்த்து மகிழும் கூட்டம்.
அந்த திரைப்பட அரங்கு வாயிலில் 
பசிக்கு அழுகும் குழந்தைக்கு 
உதவாத உயர்ந்த உள்ளம். 
அங்கு  கோடியில்  புரள்வது 
கருப்புப் பணம் சேர்வது 
தெரிந்தாலும் 
ஊழல் வளர்க்கும் கூட்டம்.

சேவகம் செய்தே வளர்ந்த   மக்கள்,
நம் மக்கள்.
தலைவர்களுக்கு  பிரதிபலன் 
பாராமல்    தொண்டு  செய்யும்  உள்ளம் படித்தவர்கள்.
விழித்தெழும் காலம் எப்போது.?
தங்கள் தெரு குண்டும் குழியுமாக 
இருக்க 
இடிக்க கட்ட ,கட்ட இடிக்க 
என்று 
தங்கள் வரிப்பணம் 
வீணாவதை  எதிர்த்துப்
  போராடும் 
காலம்  
எப்போது?


ஞாயிறு, அக்டோபர் 14, 2012

பாத்திரம் அறிந்துபிச்சை போடு; இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே தர்மம்.

தானம்  என்பது மற்றவர்களுக்கு 

கொடுப்பது.
இது  ஒரு தர்மம்.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு 

கொடுத்து உதவு வது  தானம்.

இந்த கலியுகம்  கர்மயுகம்.
உன்  கர்மங்களை  செய்.பலனை எதிர்பாராதே என்பது  இறை தத்துவம்.

ஆனால் ,இந்த உண்மை புரியாமல்,
தன்  கஷ்டங்கள்  ,துன்பங்கள் தீர 
சாமியார்களை சந்தித்து தானம் அழிப்பது,ர கோயில் உண்டியல்களில் போடுவது  தானம் ,புண்ணியம் என்றே 
ஒரு  நம்பிக்கை. அதனால் போலி சாமியார்களும்,ஜோதிடர்களும்,குறி சொல்பவர்களும் ஏமாற்றி  வருகிறார்கள்.கோயில்கள் பெருகிவருகின்றன.
ஆண்டவன் பணக்காரர்களை படைத்து 
சோதிக்கிறான்.
பெரும்பாலும் பணம்படைத்தவர்களுக்கு 
சந்தானபாக்கியம்  குறைவு.
எத்தனையோ கோடீஸ்வரர்கள் 
குழந்தை இல்லாமல் சொத்துக்களை 
ஆஷ்ராமங்களுக்கு எழுதிவைப்பதை 
புண்ணியமாக கருது கின்றனர்.
அவர்கள்  மகிழ கர்ம யுகம் என்ற தானம் செய்யவேண்டும்.

கிராமங்களில்  ஒளிபெற சூர்ய  மின்சாரம் தாயரிக்க  ஏற்பாடு செய்யுங்கள்.
தோழிகள் வளர அல்ல.
தொழில் வளம்பெற வேண்டும்.

விவசாய மேன்பாட்டுக்கு உதவுங்கள்.

நீர்வளம் பெருக கிராமங்களில் மழை 
நீர் சேமிப்பு குளங்கள் வெட்டுங்கள்.

கோயில்  காணிக்கைகள் நாட்டு  நலத்திட்டங்களுக்கு  பயன் படுவதில்லை.

ஏழை மாண வர்களுக்கு உயர் கல்விக்கு உதவுங்கள்.

மருத்துவ வசதி செய்து கொடுங்கள்.

பலருக்கு வேலைவாய்ப்பு தரும்  நிறுவனங்கள்  அமைத்துக்கொடுங்கள்.

எது செய்தாலும் தங்கள் நேரடிபார்வை அவசியம்.

சாமியார்களுக்கே  தங்க அரியணை விரும்பும் காலம்.

ஆகையால் தான் தமிழில் ஒரு பழ மொழி :
பாத்திரம் அறிந்துபிச்சை போடு;
கோத்திரம் அறிந்து  பெண்ணைக் கொடு..

ஆண்டவன் தனக்கே மீண்டும் மீண்டும் வைரக்கிரீடம்  வேண்டும் என கேட்கவில்லை.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே தர்மம்.

உங்கள்ரூபாய்கள் உண்மையாக கஷ்டப்படுபவர்களுக்குப் பயன் படட்டும். ஆயிரக்கணக்கனவர்கள் 
உங்களை வாழ்த்தி  பிரார்த்திப்பார்கள்.
உங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி கிடைக்கும்.

உண்டியலிலும்,ஆஷ்ரமங்களிலும் கொட்டி   ஊழலை  வளர்க்காதீர்கள்.
அரசியல்கட்சிகளுக்கு எதற்குப் பணம்.
ஊழலை ஒழிக்க செயல் திட்டங்களை நிறைவேற்றுங்கள்.
நாட்டுக்கு தொண்டு செய்யும் கட்சிகள் 
தன்  சொந்தபணத்தில்  செய்யட்டும்.

ஆடம்பர கட்சி அலுவலகங்கள் 
ஊழலை வளர்க்கும்.
உங்கள் நன்கொடை  பல்லாயிரம் பசிப்பவர்களுக்கு உதவட்டும்.
வீண் ஆடம்பர சமாதிகளுக்கும் ,ஆடம்பர கட்சி ஊர்வலச் செலவுகளுக்கும்  பயன்பட வேண்டாம்.
ஆண்டவன் அருள்பெற்று  வரும் 
பணம்  எளியோருக்கு உதவட்டும்.

நீங்கள் ஆண்டவன் கிருபைக்கும் .
வாழ்வியல்  இன்பத்திற்கும் .மன நிறைவிற்கும்   உரியவர்களாவீர்கள்.

வீடுகள்  கட்டி  குறைந்த வாடகைக்கு விடுங்கள். சிற்றூர் களில் .









சனி, அக்டோபர் 13, 2012

தினசரி செய்திகளும் எனது சிந்தனைகளும்


தினசரி செய்திகளும் எனது சிந்தனைகளும் 

1.   பச்சிளம்  குழந்தை இரக்கமின்றி சாலை ஓரத்தில் 
கிடந்தது.

        மகாபாரதம் தொடர்கிறது.
கர்ணன் ஆற்றில் வீசப்பட்டான்.

2.காதலின் மோகத்தால் காதலியின் கணவன் கொல்லப்பட்டான்.
ஷேர்ஷஹைக் கொன்று ஷாஹ்ஜஹான் மும்தாஜை கவர்ந்தான்.

ராவணன்  சீதையை தூக்கிச் சென்றான்.

3.தங்கையின் காதலனை அண்ணன் கொன்றான்./தந்தை.

எனக்கு மதுரைப் பல்கலைக்கழக பேராசிரியர் சொன்ன  கதை நினைவிற்கு வருகிறது.
அவர் சொன்ன முறை ஒரு காட்சியை முன் வைத்தது.

ஷாஹ்ஜஹான் மாளிகையின்  அந்தப்புரம்.
அவள் மகள் தன்  காதலுடன் 
  ரஹசியமாக   பேசிக்கொண்டிருக்கிறாள். அப்பொழுது தன்காதல் மனைவிக்கு
  தாஜ்மஹால் கட்டிய ஷாஹ்ஜஹான் 
அங்கு வருகிறார்.
 தந்தை வரவை  அறிந்த மகளும்
 பேரரசர் வருகை அறிந்த 
 காதலனும் அஞ்சுகின்றனர் .
ஓடி ஒழிய அங்கு இடமில்லை.

காதலன் அங்குள்ள பெரிய வெந்நீர்
 கொப்பரையில் ஒளிந்து கொள்கிறான்.
பாதுஷாஹ்  இதை கவனிக்கிறான்.உடனே பணியாட்களை அழைத்து  அந்த  கொப்பரையை  அடுப்பில்வைத்து  தீ மூட்டச் சொல்கிறான்.
காதல் மதிப்பை அறிந்த மன்னவனின் இரக்கமற்ற செயல்.
.மகள் கண்ணீர் மட்டும் விடுகிறாள்.
 அங்கு அவள் காதலன் வெந்து மடிகிறான்.
 இது வரலாறு.

4. மகளைகாதலித்த காதலனுடன்  தந்தை சண்டை.

சிவபெருமான் தக்ஷனுடன் சண்டை.வள்ளியின் பெற்றோருடன் முருகப்பெருமான் சண்டை.

ஆகையால் காதலும் பிணக்கும் சண்டையும் கொலையும் ஆதிகாலத்தில் இருந்தே வருகின்ற கதைகள்.

5.ஹிந்தி  இலக்கிய வரலாற்றில் 
 பக்திமார்க்கம் ஒரு பொற்காலம்.
அதில் அன்பு மார்க்கம் என்று ஒன்று
.இறைவனை அடைய ஞானத்தைவிட
 அன்பே பிரதானம் என்பது.
அதில்முக்கிய கவிஞர் 
மாலிக் முஹம்மது ஜாயசி 
.அவர் எழுதிய" பத்மாவதி"  மகா காவியத்தில்
  ராஜா ரத்னசேன்  தன் காதலி  பத்மாவதிக்காக  கடும்போர் புரிகிறான்.
காதலியை பல தடைகள் மீறி அடைகிறான்.அவ்வாறே 
 இறைவனை அடைய முயலவேண்டும்
  என்பதே காவிய நோக்கம்.

ஆகையால் காதல் தெய்வத்தை அடைவதாக இருக்கக்கூடாது.தெய்வத்தன்மை  கொண்டதாக  இருக்க வேண்டும்.









ஆன்மீக நாடு இந்தியா.

ஆண்டவனை 
கீழுள்ளவாறு 
காட்டினாலும் 
ஆதீனங்களிலும் 
ஊழல்.
அரசியல்வாதிகளிலும் ஊழல்.
அதிகாரிகளிடமும் ஊழல்.
ஆன்மீக நாடு இந்தியா.
ஆலயங்களிலும் ஊழல்.

வெள்ளி, அக்டோபர் 12, 2012

மக்களின் நன்மைக்கு பயன் படுத்துங்கள்மக்களுக்காக மக்கள் ஆட்சி.

மக்களுக்காக மக்கள் ஆட்சி.


நாட்டில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

ஆனால் ,
சிலர் மற்றவர்களை ஏமாற்றி மகிழ்கின்றனர்.
அதில் ஏற்படும்  மகிழ்ச்சி ,
கம்பீரமாக  மேடை போட்டு  சொல்லமுடியுமா/?
கோடிக்கணக்கில் பணம்
வரிகட்டா பணம் வெளிநாட்டு வங்கியில்
சேமிக்கப்பட்டுள்ளது என்பதை
அலங்கார  மேடையிட்டு
அகங்கார  தலைவர்கள்
 முழங்க முடியுமா?
மன சாட்சி  உள்ள  அரசியல் வாதிகளுக்கு, ஒரு வேண்டுகோள்:
ஆயிரக்கணக்கில் குழந்தைகளும் பொதுமக்களும்  சாக்கடை ஓடும் 
சாலையில் நடக்கின்றனர்.
அந்த சாலை பராமரிக்க பணமில்லை.
 அண்ணா வளைவு கலைஞர் வைத்தது என இடித்து பின்னர் எம்.ஜி.ஆர். திறந்தது என அறிந்து மீண்டும் நிலைநாட்ட கோடி.
சமாதி புதுப்பிக்க  கோடிகள் .
கண்ணகி சிலை இடிக்க ,மீண்டும் வைக்க கோடி .
ஆனால் ,வரி  செலுத்தும்  மக்களுக்கு 
சாலை இல்லை.
குடிதண்ணீர் இல்லை.
மின்சாரமில்லை.
மன்னராட்சியில் தான் ராஜ தர்பார்.
மக்களாட்சியிலுமா  இப்படி/?
மக்களின் வரிப்பணம்
 மக்களின் நன்மைக்கே.
அரண்மனைகட்டவும்,அந்தப்புரம் கட்டவும்  அல்ல.
தலைமைச் செயலகம் மாற்றம்.
துக்ளக் தர்பாரா?
கோட்டூர்புரம்   நூலக மாற்றம்.
எதிர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு,
வரிப்பணம்.
மக்கள் ஏமாளிகள்.
தலைவர்கள் இரக்கமற்றவர்கள்.
மடிப்பாக்கம் சாலைகள் 
பள்ளி செல்லும் குழந்தைகள்  படும் அவஸ்தை.
பாதாசாரிகள் படும் அவஸ்தை.
சுகாதாரக்கேடு.
இதற்கெல்லாம் 
நடவடிக்கை இல்லை.
குப்பை;நாற்றம்;
மகிழ்ச்சியில்லா மக்களின் வரிப்பணம் 
மன சாட்சி இல்லாமல் 
பணப்பெட்டிக்காக.
மரணம் நிச்சயம்.
இயற்கையின் சக்திக்கு 
பயந்து  கிடைத்த பதவியை 
மக்களின் நன்மைக்கு 
பயன் படுத்துங்கள்.







வியாழன், அக்டோபர் 11, 2012

மதங்களின்புனிதநூல்கள்அன்றாடம்படிக்கப்பட வேண்டும்.



மதங்களின்  புனித நூல்கள் அன்றாடம் படிக்கப்பட வேண்டும்.




உலகுக்கு  வேண்டிய  அனைத்தும்
 ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே
உலகின் அனைத்து  மதங்களின் புனித நூல்களில்
கூறப்பட்டுள்ளன.
வேதங்கள்,குரான்,பைபிள் அனைத்தும்
தினமும் மீண்டும் மீண்டும்  படிக்க வேண்டியவை.
அந்நூல்களை ஆழ்ந்து புரிந்து படித்தால்
மனித நேயம் வளரும்.
ஹிம்சை எண்ணங்கள் வளராது.
மனித உயிரை  எடுக்கும் இரக்க மற்ற  செயல்கள்
நடைபெறாது.
எந்த மதமும் மற்ற  மாற்றுக்கருத்துள்ளவர்களை
 கொன்று குவித்து
நீ மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று
 போதிப்பதில்லை.
மற்றவர்களை  வெறுத்து ஒதுக்கிவிடு
என்றும்
கூறுவதில்லை.
அவ்வாறு   கூறினால்
 அந்த மதம்  ஏற்றுக்கொள்ள முடியாது.
மனிதன நேயத்தையும்,ஒற்றுமையையும் ,அஹிம்சையும்
பரப்பிய ஒரு 14வயது சிறுமி சுடப்பட்டது
ஒரு வெறிச்செயல்.
அல்லா ! அவர்கள் மனம் திருந்த ,
அந்த சிறுமி உலகில் நல்லனசெய்ய
உயிர்பிழைக்க
தொழுவோம்.பிரார்த்திப்போம்.ஆராதிப்போம்.
*********************************************************
இறைவன்

அறிவுப்புரட்சி.
அறிவியல் புரட்சி,
அரசியலில் புரட்சி.
ஆகாயத்தில் ஆய்வு.
ஆற்றலில் புரட்சி.
ஆழ்கடல் ஆராய்ச்சி
அனைத்தும் செய்தாலும்
மனிதனிடம்
ஒரு பயம்.
பதட்டம்.
புதியதை
அறியாததை,
புரியாததை
தெரியாததை
தெரிந்து
அறிந்து
அடைந்து
மீதம்
உள்ளதோ
மன நிறைவற்ற நிலை.
பற்றற்ற நிலையிலும்
ஒரு பற்று.
நாம் அனைத்தும் செய்தோம்.
  புலன்களுக்குப்புலப்படா
ஆற்றல்  நம்மை ஆட்டிவைத்தது.
இப்பொழுது
ஐம்புலன்களும்
அடங்கும் நேரம்.
ஆடிய ஆட்டங்கள்,
பாடிய ஆட்டங்கள்,
உற்றார் உறவு
சொத்து சுகம்
அனைத்தையும்
துறந்து
மண்ணில்  புதைந்தோ
தீயில் எறிந்தோ
மற்றவர்கள்  காண முடியாமல்
ஆகும் இயற்கை நிலை.
சிலரின் உற்றார் ,உறவினர்கள்,
இறைவனாக ஆராதிக்கலாம்.
போற்றலாம்.
ஆனால்
அகிலத்தில் இருக்கப்போவதில்லை.
அப்பொழுது தான்
இறைவன்  உணரும் நேரம்.
மனிதனுக்கு  இந்த தீர்ப்பு நாள்
நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.
அதனால் தான்
இறைத்தூதர்கள்
இருக்கும் வரை
உண்மையாக இரு என்றனர்.
மற்றவர்களுக்கு உதவியாக இரு என்றனர்.
நேர்மையாக இரு என்றனர்.
ஒற்றுமையாக இரு என்றனர்.
இறைவின் படைப்பில்
ஆற்றல் வலிமை,அழகு,அறிவு என
உள்ளவற்றிற்கு
மாறாக உள்ளவர்கள்   அதிகம்.
தனக்குள்ள ஆற்றல்
மனித அமைதிக்கு ,அன்பிற்கு,பயன் பட வேண்டும்.
ஆணவம் கூடாது.
வெறுப்பு ,பொறாமை கூடாது.
ஹிம்சை கூடாது.
அனைத்தும் கற்கிறோம்
தேர்விற்காக.
அதனால் தான்
வள்ளுவர்   திருக்குறளில்

"கற்க கசடற கற்க கற்றபின் நிற்க
அதற்குத் தக."
ஒழுக்கம் விழுப்பம் தரலால், ஒழுக்கம்
உயிரிலும் ஓம்பப்படும்.
அன்பில் அதனை வெயில் போல் காயுமே
என்பில் அதனை  அறம் .

குழந்தைப்  பருவத்தில் இருந்தே
தெய்வீக  நூல்களை  கற்பிக்கவேண்டும்.