செவ்வாய், அக்டோபர் 02, 2012

சமயம்பார்த்து தண்டித்து மனதை மாற்றும்.


மகாத்மா காந்தி

உலகம் போற்றும் தலைவர்.

சிக்கனத்தின் சிகரம்.
அரை ஆடை பக்கரி.
பொதுப்பணத்தில்  அரைத்தம்படி
தனக்காக எடுக்காதவர்.
தனது வாரிசுகள் பற்றி
கவலைப்படாதவர்.
 ஒருநாள் அவர் எதையோ
 தேடிக்  கொண்டிருந்தார்.
அது ஒரு பென்சில் துண்டு.
இதைப்போய் ஏன் தேடுகிறீர்கள்
என்பதற்கு அவர் கூறியது
அது ஒரு சிறுவனின் அன்பான அன்பளிப்பு.
யாருக்குவரும் அந்த எளிமை.
இன்றைய காந்தீய வாதிகளுக்கு வருமா?

சிறுவர்களுக்கான  கதைகள்.
ஒருநாள்  பள்ளிக்கு கல்வி அலுவலர் வந்தார்.
அவர் வகுப்பில் ஒரு கதை கூறினார்.
குழந்தைகளே!
நீங்கள் ஒரு அடர்ந்த காட்டிற்குள்
 சென்று கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுடன் உங்கள் தாயும் தந்தையும் வருகின்றனர்.
உங்கள் முன் அப்பா செல்கிறார்.
உங்கள் பின்னல் அம்மா. நடுவில் நீங்கள்.
அப்பொழுது பசியுடன் ஒரு சிங்கம்
உங்கள்மூவரையும் நோக்கிவருகிறது.
நீங்கள் யாரைக் காப்பாற்றுவீர்கள்?
குழந்தைகள் பதில் சொல்ல வேண்டும்.
அப்பொழுது
காந்தி குழந்தை என்னசொன்னது தெரியுமா?
நான் நேரே சிங்கத்திடம் சென்றுவிடுவேன்.
எனது தாய் தந்தை இருவரும் காப்பாற்றப்படுவார்கள்.

இதுதான்  காந்தீஜீயின்  தியாக எண்ணம்.
அவ்வாறே  ஹிந்து -முஸ்லிம் ஒற்றுமைக்காக
உயிநீத்த உத்தமர்.
சுதந்திர இந்தியா ஊழல் மயமாக
உத்தமரை  கொலை  செய்தனர்.
அவரது ஆன்மா அல்பாயுசு தான்.
அது அழுது கொண்டுதான் இருக்கிறது.
அது இந்த அரசியல் கொள்ளையர்களை
சமயம்பார்த்து
தண்டித்து மனதை மாற்றும்.
வாய்மை வெல்லும்.
அதர்மம் ஒழியும்.
அவரது அவதாரம் மீண்டும் எடுக்கும்.
இந்திய இளைஞர்கள்
வெகுண்டு எழுந்தால்
காந்திஜியின் கனவு நினைவாகும்.











அவரது ஆத்மா நாட்டின் ஊழல்கண்டு அழுது கொண்டுதான் இருக்கும்


தேசத்தந்தை 
உலகின் அனைத்து நாடுகளும் 
போற்றி  வணங்கும் 
உத்தமத் தலைவர்.
சுதந்திரப் போராட்டத்தில் 
அனைத்து மதங்களையும் 
இணைத்து 
மனித சமுதாயத்திற்கு விடுதலை 
என்பதை உணர்த்தியவர்.
ஈஸ்வர் அல்ல தேரே நாம் 
சப்கோ சன்மதி தே பகவான் என்று 
பஜனைப்  பாடல் பாடியவர்.
ஹிந்து ,முஸ்லிம் ,सीख சீக்  ஈசாயீ 
ஆபஸ் மென் ஹைன் பாயி  பாஈ  என்று 
இசைத்தவர்.

காந்தி என்றால் வைஷ்யர் ;பனியா ;செட்டியார்;
இந்த சாதிப்பெயர் பொதுப்பெயராக மாறி 
ஜாதி வேறு பாட்டை ஒழித்தவர் .
இத்தலி மருமகளும் சோனியா காந்தி.(செட்டியார்)
சென்னையில் ஹிந்தி பிரசார் சபையின் 
மையம் அமைத்து 
தமிழகத்து மக்கள் 
ஆளும் அரசு எதிர்த்தாலும் 
இந்தியத் தொடர்புக்கு 
ஹிந்தி மொழி கற்க 
1918இல் அடிக்கல் நாட்டியவர்.
ஹிந்தி தெரியவில்லை என்ற ஆதங்கம் 
இன்று தமிழகம் முழுவதும் மக்கள் 
ஆழ்  மனதில் உதிக்க கார ணமானவர் .
தொழில் கல்வி அவசியம் என்றவர்.
தாய் மொழி கல்வியே தரம் .
சிந்தனை வளர்ப்பது என்றவர்.
உண்மை.நேர்மை,அஹிம்சை ,எளிமை என்று வாழ்ந்தவர்.
ஆனால் 
இன்று ஆண்டவன் பெயரைச் சொல்லி யும் 
உத்தமர் காந்திபெயரை சொல்லியும் 
கருப் பு ப் பணம் வெளிநாட்டில் சேகரித்து,
கோடிக்கணக்கில் கேடிகளை வைத்து 
அரசியல் நடத்தும்  அநியாயத் தலைவர்கள்.
உத்தமர் சமாதியில் வணங்கி 
உத்தமக்கொள்கைகளையும் சமாதி வைக்கின்றனர்.
அவரது ஆத்மா நாட்டின் ஊழல்கண்டு 
அழுது  கொண்டுதான் இருக்கும்.
இன்று முதல் 
அவரது கொள்கைகளை 
உண்மையாக நடத்த உறுதியுடன் 
இருப்பது தான் அவரது ஆத்மசாந்தி யடைய 
நமது  சிர ந்தாஞ்சலி.

வாழ்க  காந்தீஜி.

திங்கள், அக்டோபர் 01, 2012

திருந்துமா மக்கள் மனம்.?


மக்களின்  சிந்தனைக்கு 

இன்று  சுதந்திரம் அடைந்து  65 ஆண்டுகளுக்குப்பின்  அன்னா ஹஜாரே 

அலறுகிறார்.இத்தனை ஆண்டுகள் அவருக்கு எவ்வித எழுச்சியும் 
வரவில்லை.காரணம்,ஊழல்  தன்  இறுதி எல்லைக்கு சென்று விட்டது.

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்று  பாரதியார் பாடினார்.
இன்று  எங்கும் எதிலும் ஊழலே பேச்சு என்றாகிவிட்டது.
நானும் சிந்தித்தேன்.
விளைவு?

விவசாயிகள் 80% இருக்கும்  நாட்டில் 
 விவசாயத்திற்கு முதலிடம் தர வேண்டும்.
ஆனால் 
வெளிநாட்டு  கமிசன் தலைவர்களுக்கு கிடைக்காது.
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் சேராது.
நாட்டின் ராணுவத்திலிருந்து,தொலைத்தொடர்பு வரை 
பகல் கொள்ளை அடிக்கமுடியாது.
ராமாயணத்தில் மந்தரை,
மகாபாரதத்தில் சகுனி,
விடுதலை இந்தியாவில் 
உலகில் நான்காவது பணக்காரி.
கருப்புப் பண பட்டியல் வெளியிடத் தடுக்கும் 
தலையாட்டி பொம்மை,
பொம்மலாட்ட  பொம்மை 
பிரதமர்.
ஊழல் என்று போராடுவோரும்  ஊழல் 
ஊழல் ஒழிக்க என்னிடம் ஒரு மந்திரக்கோல் இல்லை 
என மௌனமாகும் பிரதமர்.
தமிழக ரஹசிய(சிதம்பரம்) அமைச்சர் நில ஊழல்.
மமாதாவும்  கருப்பு பணப்பட்டியல்  பற்றிய பேச்சு இல்லை.
விலை நிலங்கள் விற்று  தொழில் மய  மாயை .
ஏன் ?
விவசாயிகள் வறுமை.
அவர்கள் அறியாமை,
தலைவர்கள் சுயநலம்.
நாடு தொழில் துறையில் முன்னேற்றம் என 
நாட்டுத்தொழில்  ஒழிப்பு.
காரணம் 
விவசாயிகளுக்கு நன்மை செய்தால் கமிசன் கிட்டாது.
விளைநிலம்   தொழில் மயமானால் கோடிகள் 
தன்  இல்லம் சேரும்.
மாயையில் மக்கள்.
மகிழ்ச்சியில்  மந்திரிகள்.
விழித்துக் கொள்ளுமா ஜனநாயகம்?
தப்புமா விளை  நிலம்.
கோடிகள்  சேர்த்தாலும் சுடுகாடுதான் மிச்சம் என 
நினைக்கும அரசியல் தலைகள்.
கங்கையே சாக்கடை ஆக்கும் 
தொழில் மாயம் 
அதன் சாபத்தால் அழியுமோ பாரதம்.
எங்கும் ஊழல் என் பதே பேச்சு.
அது ஒழியாது  ஊழலாலே 
ஊழல் பணம் தேர்தலில்  நடமாடும் வரை.
திருந்துமா  மக்கள் மனம்.


பாரத மக்கள் மேல் கருணை காட்டு.



இன்றைய  இளம் வாக்காளர்கள் 

18 வயது பூர்த்தி ஆனவர்கள் 

பாரத நாட்டின் முன்னேற்றத்திற்கான 

பார் புகழ் பெரும் போக்கைத் 
தடுக்கும்  அரசியல் கட்சிகளை 
  ஒழிக்க புதிய சக்தி யாக 
ஒலி  -ஒளி  கொடுக்கவேண்டும்.
காங்கிரசும் ஊழல்.
கலைஞரும் ஊழல்.
அம்மாவும் ஊழல்.
பாரதிய ஜனதாவும் ஊழல்.
இவர்களுடன் கூட்டுச்
சேருவோரும்  ஊழல்.
ஊழல் வழக்கு சந்திக்காதோர் யார்?
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும் 

அனைவரும் ஊழல் என்றும் 
கூறி  கூட்டணி வைக்கும் சிறு கட்சிகள்.
காமராஜரைப் புகழும் 
கக்கனைப் புகழும் 
அவர்கள் 
ஊழலில்  ஒன்றுபட்டு
 மாறி மாறி
 ஆட்சி செய்தது 
போதும்.
பூஜை ,யாகம்,ஹோமம் என்று 
அவர்கள் செய்தாலும் 
நல்லாட்சி அமைய அனைவரும் 
தினமும் பத்து நிமிடம்  
ஏன்  ஐந்து நிமிடம் 
சிந்தியுங்கள்.
அதுவே பிரார்த்தனை.
ஆண்டவா!!
ஊழல்கள் வளர்ந்தால் 
அதற்கு நீ உறுதுணையா!
உன் மேல் பக்தி வருமா?
ஊழல் ஒழிக்கும்  சக்தி கொடு.
அறிவைக் கொடு.
மக்கள் நேர்மைக்கு தலை வணங்கட்டும் .
அநியாயத்தை வேரோடு ஒழி க்கட்டும்.
ஆண்டது போதும் பணப் பேய்கள்.
பாரத மக்கள் மேல் கருணை காட்டு.




ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

வாழ்க ஜனநாயகம்.-varippanaththil kaioottu.




நாட்டிற்கு  விடுதலை,
இன்றும்
நடைபாதை வாசிகள்,
குடிசை வாசிகள்,
சமத்துவபுரம்
நாட்டின் ஒதுக்குப்புரத்திலே.
அவர்கள் ஏழைகள்.
பணிபுரிய வர  நடக்கமுடியும்.
நகரப்பேருந்தில் தொற்றிக்கொண்டு,
உயிரைப்பணயம் வைத்து
பயணம் செய்யமுடியும்.
ராஜமார்க்கம் இன்றி.
மழைநீர் சேற்று நீரில் நடக்கமுடியும்.
மின்சார மின்றி சம்சாரம் நடத்தமுடியும்.
அவர்களுக்கு  மின்விசிறி ,
மிக்சி,கிரைண்டர்,
எதற்கென்று தெரியுமா?
ஒட்டுப்போட்ட  நன்றிக் கடனுக்கு.
நவராத்திரி கொலு போம்மை போல்
அடுக்கிவைத்து
அவசர ஆத்திரத்திற்கு ஈனக் கிரயத்தில்
விற்று வயிறு வளர்ப்பதற்கு.
கட்சி
வளம்  பெற,
வரிப்பணத்தில் கொடுக்கும் நேரடி கை ஊட்டு.
இலவச மிதி வண்டிகள்
நகர மாணவர்கள் விற்க பள்ளி அருகிலே தரகர்கள்.
தொலைக்காட்சிபெட்டிகள்,
பார்ப்பதற்கு மின் சாரமில்லை.
விற்றால் டாஸ்மார்க்  இன்ப பானம் அருந்த.
தாலி  மெதுவாக விலைபோகும்.
அடுத்த தேர்தல் கை ஊட்டுக்கு
என்ன இலவசமோ?


,குடிநீர் வசதிசெய்ய  இயலா   அரசு,
ஏழைகள்  வசதியாக வாழவைக்க
விரும்பா அரசு.
கல்விச்சாலைகள் இலவசமாக திறந்து வைத்து,
அவைகளை தரமில்லாமல் செய்து,
தனியார் தான் அனைத்தும்  என்று
கறுப்புப் பணத்தால்
ஆடம்பரமாக வாழும்
கருணை அற்ற அரசு.
இதைப்புரிந்தும்  அவர்களுக்கு விலை போகும்
மக்கள்.
வாழ்க ஜனநாயகம்.



வாழ்க ஜனநாயகம். பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை


நம்  மக்கள் நாட்டு நலம் சிந்திக்கும்  காலம் 


நம் நாடு விடுதலை  அடைந்து   67 ஆண்டுகள்  ஆகியும்  
மக்களிடம்    விழிப்  புணர்ச்சியும்  நாட்டுப் பற்றும் 
கடமை உணர்வும் நேர்மையும் 
பண்பாடும் கலாச்சாரமும் 
குறைந்து கொண்டே வருகின்றன.
இதை அறிவு வளர்ச்சியின்  முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.
பட்டங்கள்  பெறுவது பண்புகள் வளர.
நாட்டுப்பற்று வளர.
நாட்டின் மதிப்புகள் வளர.
ஆனால் 
புற ஆசைகள்  வளர 
ஜன நாயகம்  பண நாயகமாக மாறுகிறது.
நான் குழந்தையாக இருக்கும் போது  
தவறு செய்பவர்கள் வெறுக்கப்பட்டனர்.
அப்பொழுது படித்தவர்கள் எண்ணிக்கை குறைவு.
எனது ஆசிரியர்  வறுமையில் வாடினார்.
தனி வகுப்புகள்  கிடையாது.
இன்று தனிவகுப்புக்கு அனுப்பினால் தான் 
பெற்றோர்கள்  திருப்தி அடைகிறார்கள்.
மழலைப் பள்ளியில் இருந்து 
உயர்கல்வி வரை பணம்.
அவன் கெட்டிக்காரன் .
பதிவாளர் அலுவலகத்தில் பணி .
பணம் கொட்டுகிறது.
அவன் காவல் துறை.அவனுக்கு வசூல் தான்.
அவன் சட்டமன்ற உறுப்பினன்.
இவன் பாராளுமன்ற உறுப்பினர்.
கோடிக்கணக்கில் தேர்தல் சிலவு.
தொகுதி சீட்டு வாங்க கட்சி தலைமைப் பீடத்திற்கு 
மட்டும்  கோடி.
நாட்டுப்பற்று நா நயம் என்பது 
நாணயமாக மாறிவிட்டது.
ஊழல் ,கொலையாளிகள் பலர் 
பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் .
நாடு முன்னேறுகிறது.
வேலைவாய்ப்புகள் பெரு குகிறது.
ஆனால் 
சமுதாயம் அமைதி இழக்கிறது.
மின்சாரம் இல்லை.
விலைவாசி உயர்கிறது.
கொலை கொள்ளை ஊழல் அதிகரிக்கிறது.
அடுத்த தேர்தலுக்கு  கோடிக்கணக்கில் 
பணம் சேருகிறது.
மீண்டும் ஜனநாயகம் 
ஜீவிக்கிறது.
கோயில் நிலம்.புறம் போக்கு நிலம் விளைநிலம் 
விலை போகிறது.
பட்டதாரிகள் எண்ணிக்கை  கூடுகிறது.
ஊழலை எதிர்த்து போராட்டம் செய்யும் 
குழுவிலும் ஊழல் தெரிகிறது.
அங்கிருப்போரின்  பேரிலும் 
ஆளும் கட்சியினரின் பேரிலும் ஊழல் அறிக்கை/
பல ஊழல் தலைவர்களின் கூட்டணி ஆட்சி 
தொடர்கிறது.
ஜனநாயகம்  கூட்டணி என்ற போர்வையில் 
ஊழல்  நாயகர்கள் சேர்ந்து 
புதிதாக மலர்கிறது.
வாழ்க ஜனநாயகம்.
பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை 
என்பதை நிர்ணயிக்கிறது.





வாழ்க ஜனநாயகம்.


மக்கள்   நலம் 

மக்கள் நலம் விரும்பும் மக்கள் பிரதிநிதிகள்
  ஒரு புதிய குடி இருப்பு 

உருவாகும் பகுதியில்
  உடனடியாக சாலை வசதிகள்,
குடிநீர் வசதிகள்
 மின் மின் வசதிகள் 
,சுகாதாரம்,கழிவுநீர்  வெளியேறும் வசதிகள் போன்றவற்றை 
செய்ய முழு முயற்சி எடுக்கவேண்டும்.

வரிகள் மட்டும் வாங்கி சிலை வைக்க ஒரு அரசு சிலவு செய்கிறது.
அதற்கு சில லக்ஷங்கள்.
மற்றொரு அரசு சிலை எடுக்க சில லக்ஷங்கள் 
சிலவு செய்கி றது.
ஐந்தாண்டுகளுக்குப்பின் மீண்டும் சிலை வைத்த அரசு 
ஆட்சிக்கு வருகிறது.
மீண்டும் சிலை வைக்க சில லக்ஷங்கள் சிலவு செய்கிறது.
இது எல்லாம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத சுகாதாரமற்ற 
பகுதிகளில் வாழும் மக்கள் வரிப்பணம்.
சமாதிகள் புதுப்பிக்க லக்ஷக்கணக்கில் பணம்.
குடை வைத்த சிலவு,
குடை அகற்றி சீர் படுத்த சிலவு,
ஆயிரக்கணக்கில் மக் கள்   செல்லும்  சாலைகள் 
மேடு,பள்ளம் ,கழிவு நீர் ஓடும் சாலைகள்,
உண்மையில் ஜனநாயகத் தலைவர்கள் ஆத்மா  ஷாந்தி அடையுமா?
ராம்நகர் வாசிகள்,குபேர் நகரவாசிகள் எவ்வளுவு வேதனை உடன் வாழ்கிறார்கள்.
நாடு வளம் பெற மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும்.
ஒருபகுதியில் பூங்காவிற்கும் சாலைக்கும் அழகுபடுத்தி, 
ஒருபகுதி மக்களை குண்டும் குழியும் சாக்கடை நீரும் உள்ள பகுதியாகவைத்து.
ஓட்டுமட்டும் பெரும் அரசுக்கும் 
ஜனநாயகம் என்ற பெயர்.
சட்ட மன்றம் மாற்ற,மீண்டும் மாற்ற, இடிக்க, கட்ட சிலவு.
அடிப்படைவசதியில்லாப் பகுதி அப்படியே .
கழிவுநீர் ஓடும் துர்நாற்றத்துடன்.
வாழ்க ஜனநாயகம்.
மக்கள் ஒருநாள் விழித்தெழ 
பகுத்தறிவு வேண்டும்.
ஆயிரக்கண க்கில் வாழும் குடி இருப்பு 
பகுதி மக்கள்   தங்கள் அடிப்படை வசதிக்குப் 
போராடவேண்டும்.
சுதந்திர நாட்டில் மீண்டும் வரிகொடா இயக்கம் வேண்டும்.

வரி வசூலிக்கும் அரசு தண்ணீர் விநியோகம் செய்யாமலேயே 
தண்ணீர் வரி வசூலிக்கிறது.
மன சாட்சி இல்லா, அரசு,அமைச்சர்கள் .அதிகாரிகள்.
இதைக்கேட்கத் தயங்கும் மக்கள்.
மன்னர்கள் காலத்தில் மன்னர்கள் சுகபோக வாழ்க்கை.
ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள்.
வாழ்க ஜனநாயகம்.


சனி, செப்டம்பர் 29, 2012

வாழ்க பாரதம்.


நமது நாட்டில்   தெய்வ  நம்பிக்கை 
 அதிகம் இருப்பது நல்ல விஷயம் என்றாலும்  
,அந்த நம்பிக்கை சுயநலத் தோடு 
பொதுநலம் குறைந்து காணப்படுகிறது.
நம் நாட்டின் வரலாற்றில் மக்கள் நலத்தைவிட 
மன்னர்கள்  தங்கள் நலத்தைத்தான் பாதுகாக்க 
மாடமாளிகைகளும்,சமாதிகளும் 
கட்டிவந்தனர்.
மக்கள் நலமாக வாழ அனைத்துத்தரப்பு 
மக்களும் முன்னேற வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
கல்வி அனைவருக்கும் தர முன் வரவில்லை.
சிலரை அடிமைத் தொழிலுக் காக 
அறியாமை  என்ற சமுத்திரத்தில் 
மூழ்கி  இருக்க முழு முயற்சி செய்தனர்.
அதன் விளைவு 
நமது நாட்டு இந்துக்ககள் மதம் மாறிய அளவுக்கு 
எந்த நாட்டிலும்  ஏற்பட்டதில்லை.
நம்நாட்டில் செல்வம் இன்றும் குறையவில்லை.
ரோடுகள் மேடுபள்ளமாக இருந்தாலும்,
ஏரிகள், குளங்கள் தூர்வாரி நீர் சே மி க்காவிட்டாலும் 
வளைவுக்கு ஒருகோடி,
சிலைஎடுக்க,வைக்க 
சில பகுதிகளில் மட்டும் சாலைகள் மீண்டும் மீண்டும் 
பராமரிக்க  
கோடிக்கணக்கில் பாழடைந்து கிடக்கும் கட்டிடங்கள் கட்ட 

பணம் இருக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் இடங்களில் சாலைகள்  அமைக்க 
முடியாது.
வாழ்க பாரதம்.

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

நியாயங்கள் சாகும் நேரம்.


காதல் படு கொலைகள் 

செய்த்திதாள்   படிக்க ஆரம்பித்தால்   கொலை பற்றிய செய்திகளும் 

குழு கற்பழிப்பு செய்திகளும் வருகின்றன.
கடத்தல் செய்திகள் வேறு.
அதைவிட  நாட்டுப் பாதுகாப்புப் படைகள்  போன்று 
கூலிப் படைகள்.கடத்தல் படைகள்.
இதை எல்லாம்  மிகைப்படுத்திக்காட்டும் 
திரைப்படங்கள்.
பரிதி தொலைகாட்சி நாடகங்கள் அனைத்திலும் கடத்தல் 
காட்சிகள்.
மருத்துவ மனை ,சிறைச்சாலைகள் கொலை களங்கள் .

சிறைச்சாலை ஜோதிடம் ; காதல் திருமணம் பெற்றோர்களால் 
நிச்சயிக்கப்பட்ட  பெண்  கடத்த திட்டம்.
தங்கம் நாடகத்தில் கடத்தப்பட்ட பெண் நீரில் மூழ்கடித்து 
கைதான கொலை முயற்சி செய்த கைதி விடுதலை.
காவலர் கையில் இருந்த குற்றச்சாட்டு மனு கிழிக்கும் தைரியம் 
ஒரு பெண்ணுக்கு.மாவட்ட ஆட்சியாளர் செய்வதறியாமல் விடுதலை.
நாடு எங்கே செல்கிறது.
பணம்,பலம்,கூலிப்படைகள் இருந்தால் எதுவும் 
சாதிக்கலாம்.
நியாயங்கள் சாகும் நேரம்.


வியாழன், செப்டம்பர் 27, 2012

எல்லாம் இறைவன் திருவிளையாடல். சனாதன தர்மம். எல்லாம் இறைவன் திருவிளையாடல்.எல்லாம் இறைவன் திருவிளையாடல்.




சனாதன  தர்மம்.

மனிதர்கள்  மட்டும் சிந்தித்து  செயல் ஆற்றுபவர்கள்.

ஆனால் அவர்கள் மனத்தில் எழும் எண்ணங்கள் 

எப்படி  உண்மைக்கும் பொய்மைக்கும் சார்ந்து  

நடைமுறையாக மாறுகின்றன.

ஒருவர் நேர்மையாகவும் ,ஒருவர் நேர்மை   அற்றவராகவும் 

இருக்க காரணம் என்ன?

தெய்வ சக்திக்கும் ,அசுர சக்திக்கும்
  புராணங்களிலும்  போராட்டம்.
அதர்மம் தலை தூக்கும் பொது தர்மத்தை நிலை நாட்ட  இறைவன் 
அவதரிக்கிறான்  என்றும் ,ஒவ்வொவொரு யு க த்திலும் 

இறைதூதர்கள்  அவதரிக்கின்றனர்.

பாரத தேசத்தில் மட்டும்  தர்மத்தை நிலைநாட்ட ஆண்டவன் 
அவ்வப்பொழுது  அவதாரம் எடுத்துள்ளான்.
ஆண்டவனைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை 
ஆண்டவனாக  ஆராதிக்கும் தேசம் பாரதம்.
ஆனால்  பாரதநாட்டில்  
இறைவன் பெயரைச்சொல்லி  ஏமாற்றுபவர்கள் அதிகம்.

அதற்கு காரணம் மக்கள் இறைவனை
 சரணாகதி அடையாமல் 
நடுவில் சாமியார்கள்,மந்திரவாதிகள்,ஜோதிடர்கள்,
மாந்திரீகர்கள் ,தாயத்து, ஹோமம் என்ற 
பெயரில்  இறை சக்தியின் பெயரால் ஏமாற்றுபவர்கள் அதிகம்.

ஏமாற்றுபவர்களைவிட ஏமாறுபவர்கள் அதிகம்.

இறைவனிடம் சரணாகதி அடைபவர்களைக்
 காக்க இறைவனே வந்து  பணியாளாக 
வாழ்ந்த புராணக்கதையும் உண்டு.
இறைவனே சாக்ஷி சொன்ன கதைகளும் உண்டு.
திரௌபதி  மானம் காக்க இறைவன் நேரில் அவதரித்த 
 கதையும் உண்டு.
கஜேந்திர மோக்ஷம்  கதையும் உண்டு.

ஆனால் ஆச்ரமங்களை நம்பும் கூட்டம் அதிகம்.
மடாலயங்களில் கோடிக்கணக்கில் பணம்  சேருவதும் அதிகம்.
ஆஸ்ரமங்களில் நடக்கும் காம லீலைகளும் அதிகம்.
சாமியார்கள்  ஆஸ்ரமங்களில்  அனைத்து 
 நவீன அறிவியல் சாதனங்களும்  ,தொலை தொடர்பு சாதனங்களும் அதிகம்.

அங்கு சத்சங்கம் ,இறைவன் பற்றிய உபன்யாசங்களும் ,
தீக்ஷைகளும் ,போதனைகளும் அதிகம்.
அதே சமயம் போதைப்  பொருள் களும் அதிகம்.
தங்கம்,தங்கக்கட்டிகள், கோடிகள்  புரளும் இடமாகவும் 
ஆஸ்ரமங்கள் இருக்கின்றன.

இவையெல்லாம் ஆண்டவன் லீலைகளா ?
அல்லது 
மக்களின் அறியாமையா?
இதுதான் இன்றைய சனாதன தர்ம  நிலை.
ஒரே  ஒரு சந்தேகம் 

இந்த ஆஸ்ரமங்கள் இறை பணியை  விட்டு  விட்டு 
அரசியல் ஊழல் பற்றி பேசும் போதுதான் 
ஆஷ்ரம ஊழல்கள் .கடவுச் சீட்டு ஊழல்கள் வெளி வருகின்றன.
அரசியல் வாதிகளுக்கும் ,ஆஷ்ரம வாசிகளுக்கும் தொடர்பு 
இராமாயண காலத்தில் இருந்து வருகின்றன.
ஆனால் சிறுகுடிலில் வனாந்திரங்களில் கட்டாந்தரையில் 
படுத்து எளிய வாழ்க்கை  அது அந்தக்காலம்.
விலைஉயர்ந்த மெ த்தைப்படுக்கையில்
 படுப்பது  இன்றைய ஆஷ்ரமம்.

எல்லாம்  இறைவன்  திருவிளையாடல்.