சனி, செப்டம்பர் 15, 2012

ஏன் இந்த கடவுள் அவமானம்?இன்றைய செய்தி.



இன்றைய செய்தி.

வெளிநாட்டில் வாழும் இந்திய மாணவர்கள் 
கட்-அவுட் வைக்கும் சிலவிற்கு 
ஒரு கிராமத்தைத்  தத்து எடுக்கலாம் 
என்று கூறி உள்ளனர்.
இந்த செய்திக்கு பிரான்சு நாட்டு 
இந்தியர் தன்  கருத்தாக 
போனமா பார்த்தமா என்று வாருங்கள்.
இல்லை என்றால் பத்திரமாக திரும்ப முடியாது 
என்று தன் அனுபவ உண்மையாக கூறி உள்ளார்.
இது ஒரு ஜனநாயக நாட்டில் எவ்வளவு  பெரிய  அபாயம்.

நான் எழுதுகிறேன் 

6500 பிள்ளையார் சிலைகள் .(சென்னையில் மட்டும்)
குறைந்தது ஒன்று ஆயிரம் என்றால் 
6500 X 1000=6500000.
ஆறு லக்ஷத்து  ஐம்பதாயிரம்.
அலைகட்லிலோ ஆற்றிலோ எரிய 
காவல்துறை பாதுகாப்பு ,போக்குவரத்து பராமரிப்பு 
என  கோடிக்கணக்கில் பணம் 
விநாயகரை சிதைக்க.
இந்த தொகையை நாட்டு நலம்,
சாலை சீரமைப்பு போன்றவற்றிற்கு 
பயன்படுத்தினால் 
விநாயகர்  அருள் கிட்டும்.
இது சென்னையில் மட்டும்.
பகுத்தறிவுத் தந்தை 
கடவுள் இல்லை என்கிறார்.
கடவுள் இருக்கிறார் 
என்பவர்கள் மனத்தில் 
ஏன் 
இந்த கடவுள் அவமானம்.

இன்றைய நாகரிகமும் அறிவியல் வளர்ச்சியும



இன்றைய நாகரிகமும் அறிவியல் வளர்ச்சியும்.

பாரத நாட்டில் அறிவியலும் ஆன்மீகமும் 
இணைந்தே கற்பிக்கப் பட்டன.
ஆண்பெண் ஈர்ப்பிற்கு மனக்கட்டுப்பாடு 
தேவை எனவும் அதைக்கட்டுப்படுத்த 
பூஜை விரதங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டன.
சித்த வைத்தியத்திலும் 
"ஒன்ரைவிடேல் ,இரண்டை அடைக்கேல் "
என்று கூறப்பட்டது.
ஆனால் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் 
பல முன்னேற்றங்கள் இருந்தாலும் 
மனிதன்  குறிப்பாக 
இளைஞர்கள் இளைஞிகள் 

காதல் ,காதல் என்று 
கைபேசியுடன்  அழைகின்றனர் .
இதனால் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களே.
கட்டுப்பாடு இல்லாமல் சுற்றுவதுடன் 
காதல் கைகூடாவிடில் 
கொலை தற்கொலைவரை சென்றுவிடுகின்றனர்.
அதைவிட கொடுமையான செய்தி 
ஹிந்தி நாளிதழில் 
படித்து  எதிர்கால பாரதம் எப்படி இருக்கும்?
என்ற வேதனை பெற்றோர்களுக்கு  வரும்.
பதிமூன்று முதல் 20 வயது வரை உள்ளவர்கள் 
75% no problem ,no commitment,  என்று 
காண்டமும் கருத்தடை மாத்திரையுடன் 
அலைவதாக சேதி.
சென்னை பிராட்வே கொலை தற்கொலைக்கு காரணம் 
காண்டம்.
காதலனின் பாக்கெட்டில் காண்டம் கண்ட காதலி 
காதலை மருத்துள்ளாள் .
காண்டமே அவள் உயிருக்கு   எமகண்டமாகி உள்ளது.
அறிவியல்  வளர்ச்சி பகுத்தறிவு அவசியம் தான்.
ஆனால் மனரீதியான நோய்  தீர 
ஆன்மிகம் அவசியம்.
ஆனால் அது.

திரைப்படங்கள் கொலைவெறி ;
பாடல்களுக்கும் சென்சார் தேவை.
காதலிக்க மறுக்கும் பெண்ணை அவன் நண்பர்கள் 
அடிடா  அவளை;உதைடா  அவளை ;வெட்டுடா அவளை;
விளைவு 
பிராட்வே  கொலை.




வெள்ளி, செப்டம்பர் 14, 2012

ஏமாறும் வணிக ஸ்தலங்கள்.




ஆலயம்  தொழுவது  சாலவும் நன்று .
அறம்  வளர்ப்பது ஆலயம்.
ஆலயம் சென்றால் ஆத்ம சுகம்.
ஆன்மிகம்  வளர்ப்பது  ஆலயம்.
ஆலயத்தின் நோக்கமே 
ஏழை களுக்கு உதவுதல்.
அன்னதானம் ,
பால் அபிஷேகம் , 
பஞ்சாமிர்தம் ,
தினைமாவு ,
தேன் ,
சிதர்  தேங்காய்,
தன  தானம் ,
என 
அனைத்துமே 
ஆறாம் வளர ,
ஆலயம் .
புடவை, 
வளையல் ,
சுமங்கலி பூஜை ,
நவராத்திரி சுண்டல் 
என 
மற்றவர்களுக்கு 
கொடுக்கும் எண்ணம் 
வளர 
வளர்ந்தது ஆலயம்.
இன்று 
ஆலயம் ஏழைகளுக்கு அல்ல .

பணம் படைத்தோருக்கு.
இன்றுமட்டுமல்ல 
அரசர்கள்  காலத்திலும்.
அனந்த பத்மநாபர் 
ஆனாலும் 
திருப்பதி ஆனாலும் 
பழனி ஆனாலும் 
அங்கு பக்தர்கள் 
பெருகினாலும் 
பக்தியைக்  காட்டி ,
பட்டை நாமமோ 
பட்டை விபூதியோ 
போட்டு ஏமாற்றும் 
கூட்டம் ,
ஏமாறும் கூட்டம் அதிகம்.
ஆலாயங்களா ?
அங்காடித் தெருக்களா?
கிரிவலப்பாதையா?
கடைவீதிகளா?
ஆலயம் என்பது 
இன்று 
வணிகவளாகங்கள்.
பக்தர்கள் 
ஏமாறும் 
வணிக ஸ்தலங்கள்.






புதன், செப்டம்பர் 12, 2012

சைத்தானின் சாம்ராஜ்யம்




இலக்கியம்  என்பது  சமுதாயத்தின் கண்ணாடி.

இன்றைய இலக்கியம் 

பெரும்பான்மையான 

மக்களைக் கவர்வது 

பெரிய திரை, சின்னத்திரை.

செய்தித்தாள்.

அனைத்திலும் 

காதல்.கொலை.கற்பழிப்பு.
லஞ்சம்.
காவல்துறையின் 
ரானுவத்துரையின்,
பொதுமக்கள் தொடர்பு சாதனங்கள் 
மருத்துவ மனைகள் ,
வீட்டுமனைகள்,
மின்துறை ,
போக்குவரத்துதுத் 
துறை 
அனைத்திலும் வெட்டவெளிச்சமான 
கையூட்டுகள்.
பத்திரத்துறை ,சார் பதிவாளர் அலுவலகம் 
அனைத்திலும் ஊழல்.
பெரும்மலை  தூளாகும் வரை 
அரசு  கவனிக்காதநிலை.
ஏழை பொதுமக்கள் குறை -குற்றச்சாட்டு 
உள்ளூர் அதிகாரிகள் போக்கு ,
உள்ளம் வெந்து சாகிறது.
சாவதுதான் நீதி என்றால் ,
சைத்தானின் சாம்ராஜ்யம் 
தான் 
ஜன நாயகம்.






மக்கள் படும் திண்டாட்டம்.


மக்கள் படும் திண்டாட்டம்.

கோட்டூர்புரம்  கோட்டை 
யாகும் என செலவு  கோடி .
கோட்டையான ஓமந்தூரார் 
பழைய கோட்டைக்கே 
மாற்ற கோடி.
அண்ணா வளைவு 
தாங்கிப் பிடிக்க 
நாளுக்கு நான்கு லக்ஷம்.
கொட்டுர்புரம் 
நூலகம் செயல்படாதிருக்க 
வழக்குச்செளவு.
அரசு சாதனை விளக்கமளிக்க 
பல கோடி.
வரிகட்டும் மக்களுக்கோ 
தண்ணீர் இல்லை .
மடிப்பாக்கம்,
ராம்நகர்,குபேர் நகர் 
மக்கள் 
சாலைவசதியின்றி 
படும் அவலம்.
பள்ளிக்கரணை 

ராஜேஷ்  நகர் ,

வேளச்சேரி  என 
ஆயிரக்கணக்கில் 
மக்கள் படும் துயரம் 
அதற்கு திட்டமிட்டு 
துயர் நீக்கும் பணியில் வேகமில்லை.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பால் 
பலகோடி வீண் விரயம்.
கூடங்குளம் 
கூட்டு சதியா/?
நாட்டுக்கு சனியா?
அஸ்திவாரம் போடும்போது 
போராடாமல் 
வரிப்பணங்கள் கோடி கோடியாக 
விரயமான பின் காட்டும் 
வீரப்போராட்டம் 
வீண் போராட்டமா/?
அடிப்படைவசதி செய்யாமல் 
வரிப்பணத்தை விரயம் செய்யும் அரசு.
எண்ணி ப்பார்க்கதுடிக்குது  மனசு.
தண்ணீர் இல்லை. 
மின்சாரமில்லை.
கோட்டை  கட்டவும் 
வளைவு மாற்றவும் 
கோடிக்கணக்கில் 
மக்கள் பணம்.
நெஞ்சம் பொறுக்கவில்லை,
இந்த நிலைகெட்ட 
அரசியல் ஊழலால்.



செவ்வாய், செப்டம்பர் 11, 2012

சனாதன தர்மம்.



னாதன தர்மம்.

சனாதன தர்மம் 
சத்தியம் 
தர்மம் 
பிரமச்சரியம் 
தவம் 
நாம ஜபம் 
முதலியவற்றுக்கு 
முக்கியத்துவம் 
அளித்தது.
இறைவனருள் 
பெற்ற 
வால்மீகி 
ஞானம் 
பெற்றது 
ராமநாம 
ஜபத்தால் .
பக்த 
துருவன் 
அருள்பெற்றது 
கானகம் 
சென்று தபம் 
செய்ததால்.
நாராயண 
மந்திரம் 
பக்த  ப்ரகலாதனுக்கு 
உற்றதுணையாக 
இருந்தது.
துளசிதாசர் 
நாம ஜெபத்தின் 
மகத்துவம் 
பற்றி 
ராம் ராம் என்றால் 
ஒளி மயமாகும் 
வாழ்க்கை 
என்றார்.
அருட்பெருஞ்சோதி 
அருட்பெருஞ்சோதி 
தனிப்பெருங்கருணை 
என்றே 
வள்ளலார் 
பக்திக்கு 
வழிகாட்டினார்.
பஞ்சாக்ஷர மந்திரம் 
சாய்  ராம் 
மந்திரம் 
ஷடாக்சரம் 
என்றே 
எளிய 
பக்தி  மார்க்கம் .
தூய மனம் 
தூய செயல் 
தூய எண்ணம் 
அன்னதானம் 
நாம ஜபம் 
இதுவே 
முக்திக்கு 
வழி .
பாபங்கள் செய்து 
யாகங்கள் 
செய்வதால் 
பிராயச்சித்தம் 
ஆகாது.



சனி, செப்டம்பர் 08, 2012

அழகு விநாயகர்,




அழகு  விநாயகர்,
ஆராதித்த பின்
அலைகடலில்
அலட்சியமாக
அவமானப்படுத்துவதற்கு.


வள்ளுவரின்முதல்திருக்குறள்


வள்ளுவரின் முதல்  திருக்குறள் 

அகரமுதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் 
முதற்றே உலகு.

ஔவை 
எண் எழுத்து இகழேல்.

மன்னன் மண்ணின் மைந்தன்.
கற்றவருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு.

இவ்வளவு சிறப்பு கல்வி  பற்றி கூறும் பொழுது 

அதை அறிவித்தது யார்?

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

அப்பொழுது கல்வி என்பது ஒருவனுக்கு 
இயற்கையாகவே   இறைவனால் கொடுக்கப்படுவது .
அதனால் தான் கவிஞயர்கள் 
வரகவி ஆனார்கள்.
வரகவி பாரதியார் என்கிறோம்.
ராமாயணம் எழுதியவர்கள் அனைவருமே 
இறை அன்பர்கள்.
கவி அரசர் கண்ணதாசனும் சரி ,
கலைஞர் கருணாநிதியும் சரி 
அந்த சொல் நயம் தெய்வீகமாக வெளிப்படுவதுதான்.
இசை ஞானிகள் அனைவருமே இறைப்பற்று மிக்கவர்கள்.
புதிய கண்டு பிடிப்புகள் 
அனைத்தும் அனைவராலும் நினைத்துப்பர்த்தவை.
ஆனால் அதி முதலில் கண்டுபிடித்தவர்கள் 
எந்தப்பல்கலையில் பட்டம்பெற்றார்கள்.?
ஆனால் அவர்கள் எழுதியதைப் படித்தும் பேசியும்  பாடியும் 
வாழ்பவர்கள் பலகோடி.
கண்டுபிடிப்புகளின் பயனாளிகள் பல்லாயிரம்கோடி.
மனிதனின்  ஒரு சொல் ஒருவனை மஹானாக மாற்றுகிறது.
மனிதனின் ஒரு சொல் அவனியில்  அவனை  எதிரி  ஆக்குகிறது.
மனித எண்ணங்கள்,அவன் வெற்றி, தோல்வி,ஆற்றல்,இயலாமை,

ஆசைகள்,பெராசிகள்,பொறாமை,காதல்,களவு,அனைத்துமே 
அவன்பேச்சாக வெளிப்படுகிறது.
ஆகையால் தான் வள்ளுவர் 
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம்தலை  என்றார்.
செவிவழிச் செய்திகள்,கதைகள் ,பழமொழிகள்,திறன் 
ஆகியவை நூலைப்படித்ததைவிட மற்றவர்கள் சொல்வதைக்கேட்டு 
தெரிந்து புரிந்ததுதான் அதிகம்.
ஆகையால் தான் 
கற்றலில் கேட்டல் நன்றே   என்றனர்.
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்றனர்.
அறிவும் ஆற்றலும் பதவியும் செல்வமும் 
முயற்ச்சியால் கடும் உழைப்பால் வருவது.
ஆனால் ஞானம் இறைவனளிப்பது.








மனம் கடும் மனம்
















மனம் கடும் மனம்.


அரச மரத்தடி பிள்ளையார்,
ஆற்றங்கரைப் பிள்ளையார் ,
இடுக்குப்  பிள்ளையார்,
ஈச்சனாரி பிள்ளையார்,
எல்லைப் பிள்ளையார்,
ஏரிக்கரைப் பிள்ளையார்,
ஐந்து முகப் பிள்ளையார் ,,
ஓடக்கரை பிள்ளையார்,
ஔவை விரும்பும் 
பிள்ளையார்.
எளிய பக்திக்கு ஏற்ற பிள்ளையார்.
ஆனால் 
மணக்குள விநாயகா !!!
எனக்கு 
உன் சதுர்த்தி கொண்டாட்டம் 
மனதில் ஒரு 
கலக்கத்தை 
வேதனையைத்தருகிறது.
உனது வண்ணவண்ண அழகு 
உருவங்கள் 
ஆராதனைக்குப்பின் 
அலைகளில் 
அலங்கோலமாகி 
கண்டங் கண்டமாக 
துண்டுகளாகி 
கடற்கரையில் 
மனிதக் கழிவுகளுடன் 
கரை ஒதுங்கி 
நீ சிதைவடையும் போது .

பக்தி என்ற பெயரில் 
உன்னை  சிதைக்கவேண்டுமென்று 
நீ 
என்று மனிதர்களை  வேண்டினாய்.
உருவ வழிபாடு 
உருவ சிதைப்பாக 
மாறியது 
என்னெஞ்சில் 

நெருப்பை 

 உருக்கி 
ஊற்றுவது போல் அல்லவா  இருக்கிறது.
அழகு உன் 
உருவங்கள் 
பல நாள் 
உழைப்பில்  உருவானவை.
ஆராதித்து கலை பொக்கிஷமாக 
போற்றி காக்க வேண்டியவை.
அதை கரைக்கும் 
மனம் கடும் மனம்.


வெள்ளி, செப்டம்பர் 07, 2012

புலம்பல்


புலம்பல் 

மனிதன் 

மனம்
எழும் எண்ணங்கள் 
ஏற்றமும் தரும்,
ஏமாற்றமும் தரும்.
எண்ணத்திற்கேற்ற 
வாழ்க்கை.
உயர்ந்த எண்ணங்கள் 
உயர்த்தும்.
தாழ்ந்த எண்ணங்கள் 
தாழ்த்தும்.
பேராசைகள் 
மைதாஸ் தொட்டது போல் 
ஆகும்.
பொறாமைகள் 
இறுதிவரை 
இன்னல் தரும்.
மன நிறைவு 
என்பது 
மன நிம்மதி என்பது 
முயற்சியில் 
கிட்டும் 
தோல்வியிலும் 
ஏற்பட வேண்டும்.
வெற்றியிலும் 
அகங்காரம் கூடாது.
மனதில் 
அகந்தை 
அழிவைத்தரும்.
ஆத்திரம் அறிவை
 ஆற்றதற்றலாக்கும்.
ஆட்டுக்குக் கால்  அளந்து வைத்ததுபோல் 
அவனவன் கர்மத்திர்கேற்ற 
வாழ்வு அமையும்.
அதுதான் 
ஆண்டவன்  அருள்.
ஆனால் தீயவன் 
கொடுமை -அவனின் 
ஆடம்பர வாழ்க்கை 

நேர்மையாளன் 
துன்பவாழ்க்கை 
அதுதான் 
தீமை வளர்க்கிறது.
அதுதான் 
புரியாத புதிராகிறது.
தீமைக்கு நல்ல பலன்.
உண்மை உரைத்தால் 
கெடுபலன்.
தீமைக்கு துணை நிற்க பலர் .
சத்தியவான் தனிமை
படுத்தப் படுவான்.
இதுதான் 
ஆன்றோர் உரை.
விதி என்பதே 
மதியைவிட 
வலிமை மிக்கது.
மதியால் வென்றவர் சிலர்.
விதியால் வாழ்பவர் பலர்.
மன எண்ணங்கள் 
விதியை மாற்றும்.
விதியை வெல்ல 
இறைவனருள் வேண்டும்.
அவனின்றி ஓரணுவும் அசையாது.