சனி, செப்டம்பர் 08, 2012

அழகு விநாயகர்,




அழகு  விநாயகர்,
ஆராதித்த பின்
அலைகடலில்
அலட்சியமாக
அவமானப்படுத்துவதற்கு.


வள்ளுவரின்முதல்திருக்குறள்


வள்ளுவரின் முதல்  திருக்குறள் 

அகரமுதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் 
முதற்றே உலகு.

ஔவை 
எண் எழுத்து இகழேல்.

மன்னன் மண்ணின் மைந்தன்.
கற்றவருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு.

இவ்வளவு சிறப்பு கல்வி  பற்றி கூறும் பொழுது 

அதை அறிவித்தது யார்?

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

அப்பொழுது கல்வி என்பது ஒருவனுக்கு 
இயற்கையாகவே   இறைவனால் கொடுக்கப்படுவது .
அதனால் தான் கவிஞயர்கள் 
வரகவி ஆனார்கள்.
வரகவி பாரதியார் என்கிறோம்.
ராமாயணம் எழுதியவர்கள் அனைவருமே 
இறை அன்பர்கள்.
கவி அரசர் கண்ணதாசனும் சரி ,
கலைஞர் கருணாநிதியும் சரி 
அந்த சொல் நயம் தெய்வீகமாக வெளிப்படுவதுதான்.
இசை ஞானிகள் அனைவருமே இறைப்பற்று மிக்கவர்கள்.
புதிய கண்டு பிடிப்புகள் 
அனைத்தும் அனைவராலும் நினைத்துப்பர்த்தவை.
ஆனால் அதி முதலில் கண்டுபிடித்தவர்கள் 
எந்தப்பல்கலையில் பட்டம்பெற்றார்கள்.?
ஆனால் அவர்கள் எழுதியதைப் படித்தும் பேசியும்  பாடியும் 
வாழ்பவர்கள் பலகோடி.
கண்டுபிடிப்புகளின் பயனாளிகள் பல்லாயிரம்கோடி.
மனிதனின்  ஒரு சொல் ஒருவனை மஹானாக மாற்றுகிறது.
மனிதனின் ஒரு சொல் அவனியில்  அவனை  எதிரி  ஆக்குகிறது.
மனித எண்ணங்கள்,அவன் வெற்றி, தோல்வி,ஆற்றல்,இயலாமை,

ஆசைகள்,பெராசிகள்,பொறாமை,காதல்,களவு,அனைத்துமே 
அவன்பேச்சாக வெளிப்படுகிறது.
ஆகையால் தான் வள்ளுவர் 
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம்தலை  என்றார்.
செவிவழிச் செய்திகள்,கதைகள் ,பழமொழிகள்,திறன் 
ஆகியவை நூலைப்படித்ததைவிட மற்றவர்கள் சொல்வதைக்கேட்டு 
தெரிந்து புரிந்ததுதான் அதிகம்.
ஆகையால் தான் 
கற்றலில் கேட்டல் நன்றே   என்றனர்.
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்றனர்.
அறிவும் ஆற்றலும் பதவியும் செல்வமும் 
முயற்ச்சியால் கடும் உழைப்பால் வருவது.
ஆனால் ஞானம் இறைவனளிப்பது.








மனம் கடும் மனம்
















மனம் கடும் மனம்.


அரச மரத்தடி பிள்ளையார்,
ஆற்றங்கரைப் பிள்ளையார் ,
இடுக்குப்  பிள்ளையார்,
ஈச்சனாரி பிள்ளையார்,
எல்லைப் பிள்ளையார்,
ஏரிக்கரைப் பிள்ளையார்,
ஐந்து முகப் பிள்ளையார் ,,
ஓடக்கரை பிள்ளையார்,
ஔவை விரும்பும் 
பிள்ளையார்.
எளிய பக்திக்கு ஏற்ற பிள்ளையார்.
ஆனால் 
மணக்குள விநாயகா !!!
எனக்கு 
உன் சதுர்த்தி கொண்டாட்டம் 
மனதில் ஒரு 
கலக்கத்தை 
வேதனையைத்தருகிறது.
உனது வண்ணவண்ண அழகு 
உருவங்கள் 
ஆராதனைக்குப்பின் 
அலைகளில் 
அலங்கோலமாகி 
கண்டங் கண்டமாக 
துண்டுகளாகி 
கடற்கரையில் 
மனிதக் கழிவுகளுடன் 
கரை ஒதுங்கி 
நீ சிதைவடையும் போது .

பக்தி என்ற பெயரில் 
உன்னை  சிதைக்கவேண்டுமென்று 
நீ 
என்று மனிதர்களை  வேண்டினாய்.
உருவ வழிபாடு 
உருவ சிதைப்பாக 
மாறியது 
என்னெஞ்சில் 

நெருப்பை 

 உருக்கி 
ஊற்றுவது போல் அல்லவா  இருக்கிறது.
அழகு உன் 
உருவங்கள் 
பல நாள் 
உழைப்பில்  உருவானவை.
ஆராதித்து கலை பொக்கிஷமாக 
போற்றி காக்க வேண்டியவை.
அதை கரைக்கும் 
மனம் கடும் மனம்.


வெள்ளி, செப்டம்பர் 07, 2012

புலம்பல்


புலம்பல் 

மனிதன் 

மனம்
எழும் எண்ணங்கள் 
ஏற்றமும் தரும்,
ஏமாற்றமும் தரும்.
எண்ணத்திற்கேற்ற 
வாழ்க்கை.
உயர்ந்த எண்ணங்கள் 
உயர்த்தும்.
தாழ்ந்த எண்ணங்கள் 
தாழ்த்தும்.
பேராசைகள் 
மைதாஸ் தொட்டது போல் 
ஆகும்.
பொறாமைகள் 
இறுதிவரை 
இன்னல் தரும்.
மன நிறைவு 
என்பது 
மன நிம்மதி என்பது 
முயற்சியில் 
கிட்டும் 
தோல்வியிலும் 
ஏற்பட வேண்டும்.
வெற்றியிலும் 
அகங்காரம் கூடாது.
மனதில் 
அகந்தை 
அழிவைத்தரும்.
ஆத்திரம் அறிவை
 ஆற்றதற்றலாக்கும்.
ஆட்டுக்குக் கால்  அளந்து வைத்ததுபோல் 
அவனவன் கர்மத்திர்கேற்ற 
வாழ்வு அமையும்.
அதுதான் 
ஆண்டவன்  அருள்.
ஆனால் தீயவன் 
கொடுமை -அவனின் 
ஆடம்பர வாழ்க்கை 

நேர்மையாளன் 
துன்பவாழ்க்கை 
அதுதான் 
தீமை வளர்க்கிறது.
அதுதான் 
புரியாத புதிராகிறது.
தீமைக்கு நல்ல பலன்.
உண்மை உரைத்தால் 
கெடுபலன்.
தீமைக்கு துணை நிற்க பலர் .
சத்தியவான் தனிமை
படுத்தப் படுவான்.
இதுதான் 
ஆன்றோர் உரை.
விதி என்பதே 
மதியைவிட 
வலிமை மிக்கது.
மதியால் வென்றவர் சிலர்.
விதியால் வாழ்பவர் பலர்.
மன எண்ணங்கள் 
விதியை மாற்றும்.
விதியை வெல்ல 
இறைவனருள் வேண்டும்.
அவனின்றி ஓரணுவும் அசையாது.





வியாழன், செப்டம்பர் 06, 2012

கோடீஸ்வரன்.



கோடீஸ்வரன்.

கூடிக் கூடி 
வாக்கு வாங்கி 
கோடிக்கோடி 
சேர்த்து 
மக்களை மடையர்களாக்கும் 
மக்கள் தலைவர்கள்.
மாயோனின் 
பேரைச்சொல்லி 
மக்களை 
மயக்கி 
கோடிகோடியாய் சேர்க்கும் 
சுவாமிஜி கள் .
கோடிக் கோடி 
சேர்க்கும் 
ஆலயங்கள் 
இத்தனை 
இருந்தும் 
நடைபாதைவாசிகள்,
பட்டினி  பட்டாளம்.
கொலை .
கொள்ளை.
கோடி  சேர்த்து  ஊழல் 
செய்தாலும் 
நீதி அவர்களுக்கு 
சாதகம்.
தண்டனை இல்லை.
இறை வா !!
நீ  இருப்பது 
மெய்யானால் 
மேதினியில் 
நல்லோரை வாழ விடு.
நலிந்தோரை 
வாழ விடு.
மந்திரிகளை,
ஊழல் செய்வோரை,
கையூட்டு 
பெறுவோரை 
கலக்கத்தில் 
ஆழ்த்திவிடு.
என் வீட்டிற்கு 
லஞ்சம் தராததால் 
மாநகராட்சி 
தண்ணீர் இணைப்பில்லை.
உண்மை 
உறங்கினால் 
பெரியார் தொண்டர்கள் 
தான் அதிகம் ஆவார்கள். 
அ ராஜகம் அதிகரிக்கும்.
கொலைவெறி தலை தூக்கும்.
தர்மம் தலை தெறிக்கும்.
இறைவா!!

புதன், செப்டம்பர் 05, 2012

குரு வணக்கம்




எழுத்து அறிவித்தவன்  
இறைவன் ஆவான்.
தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் 
கண் அளிப்பவர்.
கற்கவில்லை 
என்றால் 
கண்ணிருந்தும் 
பயன் இல்லை.
நம்நாட்டில் 
இறைவழிபாட்டை விட 
கு ரு பூஜைக்கு 
மகத்துவம் அதிகம்.
புனித கபீர் 
குருமஹிமை 
பற்றி 
சொல்லும் போது 

இறைவனும் குருவும் 
முன்னால் வந்தால் 
குருவின் காலில் 
விழுந்து வணங்குவேன் 
ஏனெனில் 
இறைவன் கண்ணெதிரே 
தோன்றக்காரணமே 
குருவின் வழிகாட்டல் தான்.
அந்த குரு 
ஆசிரியராக 
மாறி 
ராத கிருஷ்ணன் 
அவர்கள் 
நம் பாரத நாட்டின் 
ஜனாதிபதி 
பிறந்தநாளில் 
ஆசிரியர் தினமாக 
கொண்டாடும் 
இந்நநாளில் 
ஆசிரி யர்களுக்கு 
வணக்கம்.
எனது 
முதல் ஆசிரியை 
அன்னை.
பிறகு 
மாமா.
முத்தனேந்தல் 
தொடக்கப்பள்ளி 
ஆசிரியை பிலோறேன்சே.
பழனி 
மாநகராட்சி 
பள்ளி ஆசிரியர்கள் 
எஸ்.ஆர்.சுப்ரமணியம் 
அப்துல்ரகுமான் 
ப.சு.நடராஜன் 
சிவலிங்கம் 
வரதராஜன் 
அங்குசாமி 
கோபாலக்ருஷ்ணன் 
பரமசிவம் 
ஹிந்தி ப்ரசார  சபை 
ஆசிரியர் பயிற்சிப்பள்ளி முதல்வர் 
ராமச்சந்திர ஷா 
மீனாக்ஷிஜி 
சுமதீந்திராஜி 
தங்கப்பன் ஜி 
அனைவரும்தெய்வங்கள்.

அனைவருக்கும் 
குரு வணக்கம்.






செவ்வாய், செப்டம்பர் 04, 2012

முதலைக்கண்ணீர்


வேலைவாய்ப்பு 

திரு .காதர் ஒலி  என்பவரின் 
அனுபவ  ஒலி .
 சுயநல அரசியல் 
வாதிகள் 
தமிழகத்தில் 

ஹிந்தி  படிக்கவிடாமல் 
 தன் தன வாரிசுகளுக்கு 
ஹிந்தி தெரிவதால் 
மத்திய  மந்திரிசபை 
மந்திரிகள்.
தன்   வாரிசுகளுக்கு 
தமிழ்  தெரியாமல் 
ஆங்கிலம் 
படிக்கவைத்து 
இரண்டு தலைமுறையாக 
 அரசுப் பள்ளிகளில் 
ஹிந்தி இல்லை.
தென்னக மூன்று மாவட்டங்களில் 
மும்மொழி திட்டம்.
கிட்டத்தட்ட 18 கோடி மக்கள்.
தமிழர்கள்  வலி 
தலைவலி .
தனிவழியாக .
தமிழ் வளர்ந்ததா ?
அதுதான் இல்லை.
ஹிந்தி  மொழி  எதிர்ப்பு 
நான் ஹிந்தி 
எதிர்ப்பில் பங்கேற்றேன்.
ஆனால் என் தாயார் 
ஹிந்தி  கற்றதால் 
வேலைவாய்ப்பு 
என்று 
படிக்க வைத்ததால் 
வேலை பெற்றேன்.
என் 
நண்பர்கள் 
பேருந்து எரித்து ,
புகைவண்டி எரித்து 
போதுசொத்துக்கள் 
நாசம் செய்து 
மத்திய அரசு தரும் 
உதவித்துகை 
இழந்து 
மற்ற மாநிலங்கள் 
பெரும்  மத்திய 
உதவித்தொகை 
பெறாமல் 
சுயநல 
ஹிந்தி எதிர்ப்பு.
பெரியார் வீட்டில் தான் 
ஹிந்தி பிரசாரம் 
தொடக்கம்.
பிள்ளையார் கோயில் 
அவர் வீட்டில்  உள்ளது 
என கேள்வி.
தமிழ் அழகிய மொழி.
ஆனால் 
பணம் 
சம்பாதிக்க 
தமிழ்  போதுமா.
அம்மா அன்பானவள்.
அனால் 
வருமானமின்றி 
அம்மா பட்டினி தான்.
ஆங்கிலம்  வளர்ச்சிக்கே
பல  மொழி
கலப்படம் தான்.
தூய மொழிகள் வளர் வதில்லை.
வடமொழி தென் மொழி
கலந்த வளர்ச்சி.
தூய வடமொழி
இறந்த மொழி.
ஹிந்தி மொழி
இரண்டு இலக்கம் பேர்
பேசிய கடி போலி.
நூறாண்டு தான்
இந்தியின்
வரலாறு.
உலகின்
மூன்றாம் பெரும் மொழி;
 தமிழக  அரசியல்
தமிழை
அழித்து
முதலைக்கண்ணீர்
வடிக்கிறது.
நாற்பது ஆண்டு
கழக ஆட்சி
தமிழ்  வளர்ந்ததா?
மாமி டாடி
பட்டி தொட்டி எல்லாம்
ட்விங்கிள் த்வின்க்லே.








கன்னித் தமிழ்


கன்னித் தமிழ் 

அமெரிக்கா 

அங்கு 
சென்றதும் 
தான் 
தெரிந்தது 
தமிழ் 
பேசினால் 
தரம் 
தாழ்கிறது.
தெலுங்கு 
சுந்தரத் 
தெலுங்கு 
தேனில் 
பாய்கிறது.
தமிழ் 
கன்னித் 
தமிழ் -ஆதலால் 
நாணமடைந்து
மெதுவாக  
பேசுவது 
கேட்பதில்லை.
நம் பெண்கள் 
அடக்கி 
வைக்கும் 
ஆடை
சுதந்திர  
ஆசை 
வெளிப்படுகிறது.



சனி, செப்டம்பர் 01, 2012

மக்களும் உடந்தை

அரசியல் 

அரசியல்  
என்பது 
என்றுமே 
ஆளப் பார்க்கும்.
தமிழக அரசியல் 
மனசாட்சி 
அற்ற 
அரசியல்'
உறுதியற்ற 
கொள்கைகள்.
இறைவழிபாடு 
வேண்டாம் 
என்று 
மறைமுகமாக 
வழிபடும் 
தன்மை.
ஹிந்தி வேண்டாம் 
என்று 
தலைவர்கள் 
மட்டும் 
படி க்கும் எண்ணம்.
ஜாதி வெறியால் 
பாரதியை 
பாராட்டாமல் 
பாரதிதாசனை 
உயர்த்தும் 
அரசியல்'
கண்ணதாசனை 
ஓரம் கட்டும் 
ஓரவஞ்சனை.
அரசியலுக்கு 
அப்பாற்பட்ட 
கலை,இலக்கியம்,
அதிலும் 
அரசியல்.
இவர்களின் 
சுயநலத்தால் 
தமிழ் 
அழியும் நிலை.
தமிழ் தமிழ் 
என்று 
அதை 
காதலியாக 
அன்னையாக 
கொஞ்சி 
ஆங்கிலத்தை 
மிஞ்ச  வைத்த 
அரசியல்.
லாபமே 
என்பதற்காக 
கொள்கை 
மாற்றும் 
அரசியல்.
சிலைவைத்தாலும்,
கலைவளர்த்தாலும்,
மலையைத் தூளாக்கினாலும் 
தனக்கு  கோடி 
கிடைத்தால் போதும் 
என 
நேர்மையை ஓரங்கட்டி 
கோடித்துணி தான் 
மிச்சம்  என்பது 
உணராமல் 
கோலோச்சும் 
விந்தை.
இதற்கு 
மக்களும் 
உடந்தை.
அமுதவன் 
புலம்பல் 
ஆயிரமாயிரம் 
நெஞ்சங்களில்.
ஆனால் கோடிக்கு முன் 
அனைத்தும் 
ஊர்க்கோடியில்.




வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

தர்மம் எப்படி t?!!!

ஆலயங்கள் 
அதிகரிக்கும் 
இந்நாளில் 
அமர கவி 
பாரதியின் ,
பாடல் ஒன்று 
நினைவில் 
வந்தது.
ஆலயம் தோறும் 
பள்ளி சாலைகள் 
அமைப்போம்.
அறிவில்லா 
பக்தி,
பட்டம் 
அழைக்கும் 
பட்டம் பெற 
உதவாது.
அறம்  வளர்க்காது.
ஆறாம் அறிவு 
வேலை செய்யாது.
அறிவுடன் பணி  புரிய 
அறிவாலயம் .
ஆண்டவன் ஆலயம்,
சக்தி இருந்தால்,
 அரிச்சந்திரன்
மயானம் காக்கும் 
சோதனை ஏன் ?
வையகத்தில் 
வாய்மை ஊமை ஆகவோ.?!!!
அழிவிற்குப் பின் 
தர்மம் வெல்லும் 
என்றால் தர்மம் 
எப்படி 
தழைக்கும்?!!!