வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

இறைவன்


இறைவன் 

இன்றைய செய்தியில் 
எங்கும் 
வன்முறை,
வழக்காடும் 
வழக்கறிஞர் 
பதவி ராஜினாமா.
தனியார் பள்ளி 
ஊதிய  நிர்ணயக்குழு 
தலைவர் 
ராஜினாமா.
நீதிபதி 
மாற்றம்.
எல்லாமே 
ஒரு 
நாடகம்.
பலரிடம் 
கைபேசி எண்  இருந்தாலும்,
கண்டு பிடிக்க முடியாத 
சகான 
சிறு  சேமிப்பில்  மோசடி.
திருடர்களை 
உருவாக்கும் 
ஆய்வாளர்கள்.
அனைத்துக்கும் 
பொறுப்பு 
இறைவன்.

வியாழன், ஆகஸ்ட் 30, 2012

இறைவா! எழுந்தருள்.


பாரத நாடு பழம்  பெரும் நாடு.
பலம்  ஆன்மீக பலம் 
பழம் பெரும் நாட்டை 
காத்து வருகிறது.
நாத்திக வாதம் 
ஆஸ் திகத்தின் முன் 
ஆட்டம் போட்டாலும் 
ஆன்மீகத்தின் முன் 
அடங்கித்தான் 
போகிறது.
அலெக்சாண்டர் 
எளிய சாதுவின் முன் 
பணிந்த கதை உண்டு.
குளிரில் நடுங்கிய சாது 
என நினைத்து 
கம்பளி ஆடை வழங்கிய 
மாவீரன் 
அவரின் உலகியல் உண்மை 
தத்துவம் 
அவனின் ஆசையால் நேரும் 
ஹிம்சையை 
உணர வைத்தது.
வையகம் வாழ்க 
என்ற உயர்ந்த தத்துவம்,
விருந்தினர் களை 
தெய்வமாக நினைத்த தத்துவம்,
தேவாசுர போராட்டம் 
உலகியல் 
என்பதற்கே 
ராமாயணம் ,மகாபாரதம் 
கந்தபுராணம் 
ஐயப்ப ஜனனம்.
ஆணவம் ,
ஜாதிபேதம்,
பொறாமை,
பகை ,
அஹங்காரம் 
அனைத்தையும் 
அழிக்க 
ஒரு 
நரசிம்ஹ அவதாரம்,
அன்பைப்பெற 
துருவ 
சரித்திரம்.
எளிய 
பக்திக்கு 
கண்ணப்பர் ,
நந்தனார்,
ரைதாஸ் .
மீரா,
ஆண்டாள்.
இப்பொழுது 
ஊழல் அரக்கனை,
லஞ்ச அரக்கனை 
ஒழிக்க 
மீண்டும்  ஒரு 
நரசிம்ஹாவதாரம் 
எடுக்க 
நேர்மையாளர்கள் 
தவமும் 
நாம 
ஜபமும் 
பிரார்த்தனையும் 
செய்யும் காலம் 
இது.
காரணம் 
நீதிபதியே 
விலைபோகும் 
காலம் இது.
அரசியல் 
அதிகாரிகள் 
காப்பதற்குப் 
பதிலாக,
நேர்மை ,நீதியை,
கோடிக்கணக்கில் 
கேடிகளை 
உருவாக்கும் 
உண்மைப்போக்கு.
இதை நீக்க 
தேவை 
ஒரு சூரசம்ஹாரம்.
ஒரு நரசிம்ஹாவதாரம்.
ஒரு மோகினி அவதாரம்.
ஒரு மகிஷாசுர  அவதாரம்.
சாமியாரும் 
ஆடம்பரம்.
ஆட்சி 
யாளரும் 
ஆடம்பரம்.
ஆலயங்களும் 
ஆடம்பரம்.
கோடிக்கணக்கில் 
சொத்து 
இல்லையேல் 
சந்நியாசிக்கும் 
மதிப்பில்லை.
என்னே கொடுமை.
குடிசை சாமியார்கள்,
இன்று 
ஆடம்பர ஆஷ்ரமத்தில்.

இறைவா!
எழுந்தருள்.







எண்ணங்கள்  
சாபம்,
பழிபாவம்,

ஆன்மாவின் 
குரல்,
ஆண்டவன்  
தண்டனைஎதற்கும் 
அஞ்சாமல் 
நீதி தேவனுக்கும் 
அஞ்சாமல்,
கோடிக்கணக்கில் 
ஊழல் 
செய்யும் 
ஆட்சியாளர்கள்,
அதிகாரிகள் 
ஊழல் செய்தார் என்று 
உண்ணாவிரதம் 
இருப்போரும் 
ஊழல் 
கோயிலிலும் 
ஊழல்,
காவல் 
நிலைய 
ஊழல் 
நிலக்கரி 



புதன், ஆகஸ்ட் 29, 2012

ஜனநாயகம் வாழ்கிறது.


எங்கும் ஊழல்,லஞ்சம் என்பதே பேச்சு,
அதைவளர்ப்பதே அரசின் மூச்சு.
கல்விச் சாலையில் 
ஊழல் வளர்ப்போம்.
கல்லறையிலும் 
ஊழல் வளர்ப்போம்.
ஊழல் பணத்திலே 
ஆட்சி அமைப்போம்.-அந்த 
நீதிபதிக்கும் லஞ்சம் கொடுப்போம்.
நீதி தேவனுக்கு சமாதி கட்டுவோம்.
நாங்கள் மக்களால் தேர்ந்தெடுத்த 
மக்கள் பிரதிநிதிகள்.
அதிகாரம் பெற்றுவிட்டோம்.
கல்குவாரி பதினெட்டு 
நூறு கோடி,
ஸ்பெக்ட்ரம் ஊழல் 
பல கோடி.
சுடுகாட்டு ஊழல்.
பிச்சைக்கார அட்டை ஊழல்,
அனைவரும் 
சேரும் இடம் ஒன்றென்றாலும்,
ஓட்டுப்போடும் 
மக்கள் போடும் ஓட்டில் 
எத்தனை தில்லுமுல்லுகள்.
நான் ஒட்டுப்போடசென்றேன்.
என் ஓட்டுப்போடப்பட்டு விட்டது,
என்று  புலம்புவோர் 
எத்தனைபேர்.
இத்தனைஊழல் 
அத்துணை பேரும் 
அறிந்த ஒன்று.
ஆனாலும் 
பாரதத்தில் ஜனநாயகம் வாழ்கிறது.
அமைச்சர்கள்,உறவினர்கள் 
வாழ்கிறார்கள்.
அதிகாரம் பெற்றவர்கள் 
வாழ்கிறார்கள்.
அதனால் 
கிரிக்கட் ஊழலில் வாழ்வதுபோல்,
ஜனநாயகம்  
வாழ்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

காசினியில் வாழ காசுதானே.


எனது கல்வி 

நான்  படித்த தமிழ் 

எனது ஐந்து வயதில்.

அப்பொழுது தர்மப் பள்ளி.

ஆசிரியர்கள் வறுமை நிலை.

ஊதியம் 
சரியாக வராததால் 
எத்தனையோ ஆசிரியைகள் 
இறைவனடி சேர்ந்த 
வரலாறு  தன்னிச்சையாக.

அவர்கள் சொல்லிக்கொடுத்தது 
அறம்  செய விரும்பு.
ஆறுவது சினம்.
இன்று எனது பேரன் 
ஐம்பதாயிரம் நன்கொடை.
பள்ளிக்கட்டணம்.
சீருடை 
புத்தகம்,
காலணி  என 
எழுபத்தைந்தாயிரம்.
படித்தது 
ஆங்கிலம்.
அந்தப்பாடல் 
பொருள்  தெரியாத 
பொருள் செலவு செய்த 
பொறுப்பற்ற  பாடங்கள் .
ஆறுவது சினம் 
அறியாத கல்வி.
விளைவு 
ஆசிரியை கத்தி குத்து.
ஆங்கிலக்கல்வி 
இயல் வது கரவேல்.
ஈவது விலக்கேல் 
என்று கற்பிப்பது  இல்லை.
பணம் படைத்தோர் கல்வி.
ஆங்கிலம்.
ஏழையின் கல்வி 
தமிழ் .
தேசத்தந்தை 
தாய்மொழிக்கல்வி 
அவசியம் என்றார்.
ஆனால் 
தமிழ் தமிழ் 
என்றவர்கள் 
ஆட்சியில் 
பெயர் தமிழ்.
பெயருக்குத்தமிழ் .
நாற்பது 
ஆண்டுகாலம் 
தமிழ் ஆட்சி.
ஆனால் 
வளர்ந்தது 
ஆங்கிலம்.
திரைப்படப்பாடல் 
take it policy.
 தலைவர் 
தலைவர் மகன் 
மகள் 
அனைவரும் நடத்தும் பள்ளி 
மத்திய அரசுப்பள்ளி.
ஏனென்றால் 
கட்டண க்  கட்டுப்பாடு 
மாநில அரசு கட்டுப்பாட்டுப் பள்ளிகளே 

எனவே 
பல 
 மெட்ரிக்  பள்ளிகள் 
சட்டம் வரும் என்று 
முன்னறிவிப்பு  பெற்று 
சி.பீ.எஸ்.சி.பள்ளிகளாக 
மாறிவிட்டன,
கல்வி காசு இருந்தால்'
காசினியில் வாழ  காசுதானே.









திங்கள், ஆகஸ்ட் 27, 2012

கணநாயகா !!! ஞானம் கொடு!

கடவுள் - Vinayakar - God - Ganesh - Ganapati - Pillaiyar - பிள்ளையார் - விநாயகர் - கணபதி

பார்க்கப் பார்க்கப்
பரவசம் அடையச்செய்யும்,
கணநாதனின் ,
கருணை உருவம்.
கைகளில் 
கருணை,
படைத்தவனின்,
கடும் உழைப்பு.
அழகு 
உருவம்.
ஓம் என்ற பிரணவ
எழுத்து.
அழகுத்தொந்தி,
அழகுத்தந்தம்,
இந்த அழகு 
பொம்மை,
குரங்குகையில் 
கொடுத்த 
பூமாலையாக,
அங்கம் அங்கமாக ,
கடலலைகளால்,
பிய்க்கப்படுவது ,
ஆழ்ந்த பக்தியின் ,
ஆன்மீக வழிபாடு.
இதில் பல்லாயிரம் 
காந்தி பட காகிதங்கள்.
ஏழைகள்  சிரிப்பில் 
இறைவன் காணும்
 அரசின்பாதுகாப்பு.
இது பக்தியா?
அழகு இறைவன் 
ஆகாரத்தை,(உருவத்தை)
அவமானப்படுத்தும்,
அநியாயமன்றோ?
சிவகாமிமகனை  ,
கந்தனின் 
மூத்தோனை ,
சிவகுமாரனை ,
சினாபின்னமாக்கும்,

இந்த,
ஆன்மீக வாதிகளின்,
அடிமதில்,
இந்த அறிவற்ற 
பக்திமுறை மாற்ற 
முப்பெரும் தெய்வங்களை,
முப்பெரும் சக்திகளை,
முக்தி தரும் கிராமதேவதைகளை,
நீலியை,காளியை,கருப்பணனை,

மன்றாடி வேண்டுகிறேன்.
கரை ஒதுங்கும்,
உன் முண்டம் ,
கரம்,கை,
தொந்தி,
ஞானம்பெற்ற 
சனாதன 
தர்மத்துக்கே ஒரு 
நீங்காக் கரை யன்றோ?

சனாதன தர்மம் தழைக்கத் 
தடையன்ரோ?
கண்ணீர் மல்க .
காலடி தொழுகின்றேன்.
உவர்மண் நிறைந்த 
வண்ணான்,
சிவனாக காட்சியளித்த 
பக்தர் பிறந்த 
நாட்டில்,
அழகுச்சிலை,
அலங்கோலப் படுவது,
அகிலத்தில்,
அவமானமன்றோ /?
மேல்நாட்டில்,
உள்ளாடையில் ,
உன் உருவம்பதித்து  ,
அணிவது 
மதத்திற்கு,
அவமானமென்று அலறிய ,
ஹிந்துக்கள்,
சாக்கடையும்,
மலமும்,
மூத்திரமும் 
சங்கமாகும் 
கடலில் 
கரைப்பது 
படு பாதகச் 
செயலன்றோ?
கணநாயகா !!!
ஞானம் கொடு!
இந்த இழி   

செயலை,
தடுத்துவிடு.


















உ பிள்ளையார் சுழி ,


உ 
பிள்ளையார் சுழி ,
போட்டு ,
துவங்கும் 
தொழில் ,

வளரும் 
வாழையடி 
வாழையாக 
தளிர்க்கும் .
கண்ட இடங்களில் 
ஆலமரத்தடியில்,
நதிக்கரையில்,
இருக்கும் 
எளிய 
பக்தர்களை 
தன் ,
கருணையால்,
அருள்பார்வையால்,
அருள்பாலிக்கும்,
அம்பிகை புதல்வன்,
சிவனின் 
மூத்த குமாரன்,
முத்தமிழ் 
ஞானம் பெற ,
மூதாட்டி ,
அவ்வை 
வணங்கிய 
துங்கக்கரிமுகன்,
அவனை 
பக்தர்கள்,
கிரிக்கட் விநாயகனாக,
லேப்டாப் விநாயகனாக,
புட்பால் விநாயகனாக,
கலியுகத்தில் 
தோன்றினாலும்,
சர்வ சக்தி விநாயகர்,
வினைதீர்க்கும் 
விநாயகர்,
வித்யா விநாயகர் ,
பல நாமங்களில் 
பாரதம் 
எழுதிய 
பாத விநாயகனை,
பலரூப்ங்களில் 
பிரார்த்திக்கும்,
அன்பர்கள்,
அந்த அழகு 
ஆராதனை,
பிம்பங்களை,
வங்கக்கடலில்,
அலங்கோலம் 
செய்யும் 
அவலம்,
ஆறறிவு,
படைத்த,
மனிதன் 
சரிஎன்று 
செய்வதால்  தான் 
பகுத்தறிவாளர்,
பெரியாரின் 
நாத்திகவாதம் 
நலம் 
என்றே 
ஞானம்பெற்றவருக்கு 
தோன்றுமே.







ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

கணபதி



கணபதி 

தேவ கணங்களுக்கு  அதிபதி,

முப்பெரும் தெய்வங்களை 

முறையாக வழிபட,

முதலில் 
வழிபடும் 

கணபதி  வழிபாடு.

ஆனால் 

இன்று 

கணபதியின் 
அழகான 
பதுமைகள் 
விளையாட்டு 
பொம்மைகள் போல் 
கடலில் கலக்கப்படும் 
கணபதி வழிபாடு,
கால்வேறு கண்வேறு 
காது வேறு 
தொந்திவேறு 
என 
சிதறி 
கரை ஒதுங்கும் காட்டிசியில் 
கழிக்கும் 
பக்தர்கள் 
கூட்டம்.
உள்ளம் பதறும் ,
கண்ணீர் பெருகும் 
காட்சி.
இது தான் வழிபாடு என்றால் 
உண்மை உள்ளம் ஏற்காது.
பெரும்பான்மை ஏற்கும் பக்தி ,
எனக்கு ஏனோ விரக்தி.

vinaayakare oru vendukol.விநாயகரே!வினை தீர்ப்பவரே!



விநாயகரே!வினை தீர்ப்பவரே!

விக்னங்கள் விலக்குபவரே!

உனது அழகு சிலைகள் 

இரவுபகலாக 

கொசப்பெட்டையிலும்,
வேலூரிலும் ,
 கண்ணுக்கு 
அழகாக '
குளிர்ச்சியாக,
உன் வதனம் 
பிரசன்னமாக 
பல் வண்ணங்களில் ,
பல உயரங்களில்,
பல்லாயிரம் 
ரூபாய் சிலவில்,
அழகுக்கு அணிகலனாய் 
உருவாவது கண்டு 
அகமகிழ்ந்தாலும் 
உன்னை ஆராதித்த பின் ,
கடல் அலைகளில் 
தலைவேறு ,
கால் வேறு ,
தொப்பைவேறாக 
அலைகழிக்கப்பட்டு,
கரை ஒதுங்கும் ,
பரிதாபம் 
தான் 
உனக்கு  மகிழ்ச்சி என்றால்,
உனது அருள் பெரும் 
வழிபாடு  -என்றால் 
உன் கருணை  உண்மை 
என்றால் ,
பல கலைஞர்களின் 
உழைப்பை,
அரிய  படப்பை 
அவமானப்படுத்தும் ,
உனது ஆராதனை 
முறை 
அவ்வை இருந்தால் அலறியிருப்பாள் .

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கொடுத்து 
சங்கத்தமிழ் மூன்றும் தா   என்றாள் .

இந்த கடலில் உன்னை 
அலங்கோலம்  
செய்வதால்  
கொலைவெறி தமிங்க்ளிஸ் வளர்கிறதோ?

செந்தமிழ்   தேய்கிறதோ ?

ஆங்கிலம் கலந்த தமிழ் 

அலங்கோலமாகிறதே !!!


வேண்டாம்!பக்தர்கள் எண்ணங்களை  மாற்று.
இந்த படைப்புகளில் உயிரோட்டம் கொடுத்து,
உன் அலங்கோல நிலையை 
நீயே மாற்றிக்கொள்.
கரையில் ஒதுங்கும் உன் முண்டங்கள்,
பக்திக்கு ஒரு ஏளனம்.
இந்துக்களுக்கு இழுக்கு.
ஹிந்து என்ற பெயர் ஏற்பட 
காரணமான வர்களுக்கு  
கொக்கரிப்பு.
சிலைகளை உடைப்பவர்களுக்கு 

பதில் 
சிலை கரைப்பு.
என்னே! தர்மம்!



வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

ஆசிரியர்கள் தினம்.

 
 
 
ஆசிரியர்கள் தினம்.
 
 
 
நம்நாட்டில் "குரு"என்பர்.
 
 
"குரு "  என்றால் 
 
 
"பெரிய " என்ற பொருள்  உண்டு.
 
 
குருவே  பிரம்மா ,விஷ்ணு,மகேஸ்வரன்.
 
 
குருவே  சாக்ஷாத்  பர  பிரம்மம் ,
 
 
குரு வாழ்க,குருவே  துணை.
 
 
என்று தான்  வித்யாரம்பம்   செய்வார்கள்.
 
ஆங்கில மீடியா ,
வந்ததும்,
"குரு"
ஆசிரியர், டீச்சர்,மிஸ் 
ஆனார்.
ஊதியம்  பெறும் 
ஊழியர்   ஆனார்.
விளைவு,
புனிதப்பணி 
ஊழியம் 
பெரும் 
பணியாளராக  மாறியது.
காலை  எட்டு மணிமுதல் நான்கு வரை 
கடமை முடிந்தது.
இன்றைய 
நிலை.
 
அரசியல் வாதிகளின்  கல்வி முறை 
ஆசிரியர்களை அடிமைப்படுத்துவது.
இந்த  ஆண்டு 
பெற்றோர்களிடம் 
ஆசிரியர் தின 
ஒரு வேண்டுகோள் 
தயவு  செய்து 
குழந்தைகள் முன் 
ஆசிரியர்களை 
மட்டம் தட்டி,
குறை சொல்லி பேசாதீர்கள்.
ஆசிரியர்களிடம்  ஒரு வேண்டுகோள்.
குழந்தைகளின் 
சூழல் அறிந்து 
அன்புடன் போற்றுங்கள்.
வன் முறையான 
சின்ன,பெரிய தி ரைகள்.
நாமும் வன்  முறையாக  பேசினால்,
அதிகாரம்  எடுபடாது.
பெற்றோர்களுக்கும்  இதுவே.
ஆகையால் 
அன்பிற்கு  உண்டோ அடைக்கும் தாழ்     என 
மன மாற்றம் செய்து,
சீரிய  பணியை  சிறப்பாக்குங்கள் .