திங்கள், ஆகஸ்ட் 27, 2012

கணநாயகா !!! ஞானம் கொடு!

கடவுள் - Vinayakar - God - Ganesh - Ganapati - Pillaiyar - பிள்ளையார் - விநாயகர் - கணபதி

பார்க்கப் பார்க்கப்
பரவசம் அடையச்செய்யும்,
கணநாதனின் ,
கருணை உருவம்.
கைகளில் 
கருணை,
படைத்தவனின்,
கடும் உழைப்பு.
அழகு 
உருவம்.
ஓம் என்ற பிரணவ
எழுத்து.
அழகுத்தொந்தி,
அழகுத்தந்தம்,
இந்த அழகு 
பொம்மை,
குரங்குகையில் 
கொடுத்த 
பூமாலையாக,
அங்கம் அங்கமாக ,
கடலலைகளால்,
பிய்க்கப்படுவது ,
ஆழ்ந்த பக்தியின் ,
ஆன்மீக வழிபாடு.
இதில் பல்லாயிரம் 
காந்தி பட காகிதங்கள்.
ஏழைகள்  சிரிப்பில் 
இறைவன் காணும்
 அரசின்பாதுகாப்பு.
இது பக்தியா?
அழகு இறைவன் 
ஆகாரத்தை,(உருவத்தை)
அவமானப்படுத்தும்,
அநியாயமன்றோ?
சிவகாமிமகனை  ,
கந்தனின் 
மூத்தோனை ,
சிவகுமாரனை ,
சினாபின்னமாக்கும்,

இந்த,
ஆன்மீக வாதிகளின்,
அடிமதில்,
இந்த அறிவற்ற 
பக்திமுறை மாற்ற 
முப்பெரும் தெய்வங்களை,
முப்பெரும் சக்திகளை,
முக்தி தரும் கிராமதேவதைகளை,
நீலியை,காளியை,கருப்பணனை,

மன்றாடி வேண்டுகிறேன்.
கரை ஒதுங்கும்,
உன் முண்டம் ,
கரம்,கை,
தொந்தி,
ஞானம்பெற்ற 
சனாதன 
தர்மத்துக்கே ஒரு 
நீங்காக் கரை யன்றோ?

சனாதன தர்மம் தழைக்கத் 
தடையன்ரோ?
கண்ணீர் மல்க .
காலடி தொழுகின்றேன்.
உவர்மண் நிறைந்த 
வண்ணான்,
சிவனாக காட்சியளித்த 
பக்தர் பிறந்த 
நாட்டில்,
அழகுச்சிலை,
அலங்கோலப் படுவது,
அகிலத்தில்,
அவமானமன்றோ /?
மேல்நாட்டில்,
உள்ளாடையில் ,
உன் உருவம்பதித்து  ,
அணிவது 
மதத்திற்கு,
அவமானமென்று அலறிய ,
ஹிந்துக்கள்,
சாக்கடையும்,
மலமும்,
மூத்திரமும் 
சங்கமாகும் 
கடலில் 
கரைப்பது 
படு பாதகச் 
செயலன்றோ?
கணநாயகா !!!
ஞானம் கொடு!
இந்த இழி   

செயலை,
தடுத்துவிடு.


















உ பிள்ளையார் சுழி ,


உ 
பிள்ளையார் சுழி ,
போட்டு ,
துவங்கும் 
தொழில் ,

வளரும் 
வாழையடி 
வாழையாக 
தளிர்க்கும் .
கண்ட இடங்களில் 
ஆலமரத்தடியில்,
நதிக்கரையில்,
இருக்கும் 
எளிய 
பக்தர்களை 
தன் ,
கருணையால்,
அருள்பார்வையால்,
அருள்பாலிக்கும்,
அம்பிகை புதல்வன்,
சிவனின் 
மூத்த குமாரன்,
முத்தமிழ் 
ஞானம் பெற ,
மூதாட்டி ,
அவ்வை 
வணங்கிய 
துங்கக்கரிமுகன்,
அவனை 
பக்தர்கள்,
கிரிக்கட் விநாயகனாக,
லேப்டாப் விநாயகனாக,
புட்பால் விநாயகனாக,
கலியுகத்தில் 
தோன்றினாலும்,
சர்வ சக்தி விநாயகர்,
வினைதீர்க்கும் 
விநாயகர்,
வித்யா விநாயகர் ,
பல நாமங்களில் 
பாரதம் 
எழுதிய 
பாத விநாயகனை,
பலரூப்ங்களில் 
பிரார்த்திக்கும்,
அன்பர்கள்,
அந்த அழகு 
ஆராதனை,
பிம்பங்களை,
வங்கக்கடலில்,
அலங்கோலம் 
செய்யும் 
அவலம்,
ஆறறிவு,
படைத்த,
மனிதன் 
சரிஎன்று 
செய்வதால்  தான் 
பகுத்தறிவாளர்,
பெரியாரின் 
நாத்திகவாதம் 
நலம் 
என்றே 
ஞானம்பெற்றவருக்கு 
தோன்றுமே.







ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

கணபதி



கணபதி 

தேவ கணங்களுக்கு  அதிபதி,

முப்பெரும் தெய்வங்களை 

முறையாக வழிபட,

முதலில் 
வழிபடும் 

கணபதி  வழிபாடு.

ஆனால் 

இன்று 

கணபதியின் 
அழகான 
பதுமைகள் 
விளையாட்டு 
பொம்மைகள் போல் 
கடலில் கலக்கப்படும் 
கணபதி வழிபாடு,
கால்வேறு கண்வேறு 
காது வேறு 
தொந்திவேறு 
என 
சிதறி 
கரை ஒதுங்கும் காட்டிசியில் 
கழிக்கும் 
பக்தர்கள் 
கூட்டம்.
உள்ளம் பதறும் ,
கண்ணீர் பெருகும் 
காட்சி.
இது தான் வழிபாடு என்றால் 
உண்மை உள்ளம் ஏற்காது.
பெரும்பான்மை ஏற்கும் பக்தி ,
எனக்கு ஏனோ விரக்தி.

vinaayakare oru vendukol.விநாயகரே!வினை தீர்ப்பவரே!



விநாயகரே!வினை தீர்ப்பவரே!

விக்னங்கள் விலக்குபவரே!

உனது அழகு சிலைகள் 

இரவுபகலாக 

கொசப்பெட்டையிலும்,
வேலூரிலும் ,
 கண்ணுக்கு 
அழகாக '
குளிர்ச்சியாக,
உன் வதனம் 
பிரசன்னமாக 
பல் வண்ணங்களில் ,
பல உயரங்களில்,
பல்லாயிரம் 
ரூபாய் சிலவில்,
அழகுக்கு அணிகலனாய் 
உருவாவது கண்டு 
அகமகிழ்ந்தாலும் 
உன்னை ஆராதித்த பின் ,
கடல் அலைகளில் 
தலைவேறு ,
கால் வேறு ,
தொப்பைவேறாக 
அலைகழிக்கப்பட்டு,
கரை ஒதுங்கும் ,
பரிதாபம் 
தான் 
உனக்கு  மகிழ்ச்சி என்றால்,
உனது அருள் பெரும் 
வழிபாடு  -என்றால் 
உன் கருணை  உண்மை 
என்றால் ,
பல கலைஞர்களின் 
உழைப்பை,
அரிய  படப்பை 
அவமானப்படுத்தும் ,
உனது ஆராதனை 
முறை 
அவ்வை இருந்தால் அலறியிருப்பாள் .

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கொடுத்து 
சங்கத்தமிழ் மூன்றும் தா   என்றாள் .

இந்த கடலில் உன்னை 
அலங்கோலம்  
செய்வதால்  
கொலைவெறி தமிங்க்ளிஸ் வளர்கிறதோ?

செந்தமிழ்   தேய்கிறதோ ?

ஆங்கிலம் கலந்த தமிழ் 

அலங்கோலமாகிறதே !!!


வேண்டாம்!பக்தர்கள் எண்ணங்களை  மாற்று.
இந்த படைப்புகளில் உயிரோட்டம் கொடுத்து,
உன் அலங்கோல நிலையை 
நீயே மாற்றிக்கொள்.
கரையில் ஒதுங்கும் உன் முண்டங்கள்,
பக்திக்கு ஒரு ஏளனம்.
இந்துக்களுக்கு இழுக்கு.
ஹிந்து என்ற பெயர் ஏற்பட 
காரணமான வர்களுக்கு  
கொக்கரிப்பு.
சிலைகளை உடைப்பவர்களுக்கு 

பதில் 
சிலை கரைப்பு.
என்னே! தர்மம்!



வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

ஆசிரியர்கள் தினம்.

 
 
 
ஆசிரியர்கள் தினம்.
 
 
 
நம்நாட்டில் "குரு"என்பர்.
 
 
"குரு "  என்றால் 
 
 
"பெரிய " என்ற பொருள்  உண்டு.
 
 
குருவே  பிரம்மா ,விஷ்ணு,மகேஸ்வரன்.
 
 
குருவே  சாக்ஷாத்  பர  பிரம்மம் ,
 
 
குரு வாழ்க,குருவே  துணை.
 
 
என்று தான்  வித்யாரம்பம்   செய்வார்கள்.
 
ஆங்கில மீடியா ,
வந்ததும்,
"குரு"
ஆசிரியர், டீச்சர்,மிஸ் 
ஆனார்.
ஊதியம்  பெறும் 
ஊழியர்   ஆனார்.
விளைவு,
புனிதப்பணி 
ஊழியம் 
பெரும் 
பணியாளராக  மாறியது.
காலை  எட்டு மணிமுதல் நான்கு வரை 
கடமை முடிந்தது.
இன்றைய 
நிலை.
 
அரசியல் வாதிகளின்  கல்வி முறை 
ஆசிரியர்களை அடிமைப்படுத்துவது.
இந்த  ஆண்டு 
பெற்றோர்களிடம் 
ஆசிரியர் தின 
ஒரு வேண்டுகோள் 
தயவு  செய்து 
குழந்தைகள் முன் 
ஆசிரியர்களை 
மட்டம் தட்டி,
குறை சொல்லி பேசாதீர்கள்.
ஆசிரியர்களிடம்  ஒரு வேண்டுகோள்.
குழந்தைகளின் 
சூழல் அறிந்து 
அன்புடன் போற்றுங்கள்.
வன் முறையான 
சின்ன,பெரிய தி ரைகள்.
நாமும் வன்  முறையாக  பேசினால்,
அதிகாரம்  எடுபடாது.
பெற்றோர்களுக்கும்  இதுவே.
ஆகையால் 
அன்பிற்கு  உண்டோ அடைக்கும் தாழ்     என 
மன மாற்றம் செய்து,
சீரிய  பணியை  சிறப்பாக்குங்கள் . 
 


வியாழன், ஆகஸ்ட் 23, 2012

இறைவன்.

 
 
இறைவன்.
 
 
ஆறறிவு படைத்த மனிதன்,
 
அகந்தையுடன் வாழ்வதால் ,
 
 
புற மகிழ்ச்சியில்
 
 மதி மயங்கி,
 
நிறைவின்றி,
 
அக  மகிழ்ச்சி இன்றி ,
 
உள்ளத்தில் நிறைவின்றி,
 
உண்மையின்றி ,
 
நேர்மை இன்றி,
 
ஆறடி நிலம்  அல்லது ஒரு பிடி
 
சாம்பலில்  அழியும் 
 
விந்தையை  படைத்தவன்
 
 இறைவன்.
 
 


vinthai ulakam.விந்தை உலகம்


இந்த உலகைப்படைத்த ,
இறைவன் ,

இன்னல்கள் 
தரும் 
இன்பங்களை,
எளிதாக .
மயக்கம் தரும் 
காந்தக் கவர்ச்சியாக 
படைத்து,
மெய்  இன்பத்தில் ,
மெய்யான இ ன்பத்தை,

மறைக்கும்  மாயை படைத்து ,
ஆன்மீக மெய் மார்கத்தை ,
வனங்களில் தபம் செய்யும் 
சன்னியாசிகளிடம் 
நன்னெறி காட்டும் 
அறநெறி
எழுதவைத்து
மனிதனுக்கு  அறிவை கொடுத்து
அவனை அறிவிலி ஆக்கி,
துன்ப சாகரத்தில்
மூழ்கடித்து,
இன்பம் காணும் இறைவனை
ஞானம் பெற்றவன் மட்டும் காணும்
விந்தை உலகம் இது .



செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

மறந்தது ஏனோ.?







இந்திய மக்கள் தேர்தல் வாக்கு 


சரியாக

பயன்படுத்தவில்லை .

என்ற குற்றச்சாட்டு.


நான் வாக்களிக்கச்சென்றேன்.

என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.


நான் வாக்களிக்கச் சென்றேன்.

என்பெயர் இருந்தது.-ஆனால் 

முதலிலேயே வாக்களித்துவிட்டனர்.

என்  பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளது.

 ஆனால்  நீக்கப்பட்டுள்ளது.


இவ்வாறன புலம்பல்கள்  எங்கும் எல்லா இடத்திலும்.

வீடு மாறிவிட்டேன் .அதனால்.
ஊர் மாறிவிட்டேன் அதனால்.
மாநிலம் மாறிவிட்டேன் அதனால்.

40%வோட்டு போடப்படுவதில்லை 
மீதமுள்ள 60%சதவீதத்தில் 
35%---.40% 
வாக்கு பெற்றோர் ஆளும் கட்சி.
அதிலும் எத்தனை வன்முறைகள்.
மக்கள் மனம் மாறினாலும் 
அதிகாரிகள்,அடாவடி அரசியல் வாதிகள்.ஆன்மீகவாதிகள் 
இதற்கெல்லாம் 
மிகப்பெரிய 
அமானுஷ்ய சக்தி  தான் இந்தியாவை எப்பொழுதும் 
காப்பாற்றுகிறது.
சிறுபான்மை சுயநலவாதிகளால் 
இந்திய ஜனநாயகம் 
கேலிக்  கூத்தாகிறது.
இறைவனே !!!
உன் அவதாரம் தேவை.
கோடிக்கணக்கில்  ஊழல்கள்.
லக்ஷம் கோடி ஊழல்கள்.
நெஞ்சு  பொறுப்பதில்லையே,
இந்த நிலை கெட்ட தலைவர்கள் 
சுயநலத்தால்.
ஆறடிநிலம்தான் .
மறந்தது ஏனோ.?








இந்திய பணம்


பொருள் இன்றி கல்வி இல்லை.
பொருள் இன்றி  ஆட்சி இல்லை.
பொருளற்ற  வாழ்க்கை பொருள் அற்ற வாழ்க்கை.

  மக்கள் நிலை ,பொருளில் மயக்க நிலை.





          பள்ளிக்கூடம்  என்பது 

          மனதை  பரிசுத்த  மாக்குவது.

ஆனால்,

இன்று  பள்ளிக்கூடம்  ,

பயங்கர  வாதி  சாம்ராஜ்யம். ஆ!ஆ!


பணம் என்ற பயங்கர அரசாட்சி.

இன்று என்பது  ஜனநாயகம் 


பணமாக  மாறியபின்.


1967 ஆம் ஆண்டுவரை அரசு 

ஏழைகளின்  படிப்பில்அனது 



ஏற்றம்  காண முயற்சித்தது.
ஆனால்,
தேர்தல்,தேர்வு, பணிவாய்ப்பு  என்ற 
அனைத்திலும் பணம் ஆதிக்கம்,
குடி ஆட்சியை,
குடிகாரர்களை  உறவாக்கி 
பணத்திற்கு  அடிமை  யான  ஆட்சி ஆகியது.
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக்காணும் ஆட்சி,
வந்தது.
ஏழையின் படிப்பு
ஏளன ஆனது.
மழலைகள் பள்ளிகள் மட்டும் 
தொடங்கப்பட்ட தனியார் துறை,

கல்வி பொறியியல் கல்லூரி 
அனைத்தையும் பணம் ஆதிக்க மாக மாற்றியது.

அரசியல் வாதிகள் ,கருப்புப் பண 
முதலைகள்  இருவித லாபம் பெற்றனர் 
ஒன்று 
ஆண்டவன் கோயில் அமைத்து 
அதனருகில் 
நில வியாபாரம்.
பொறியியல்  கல்லூரி,
அருகில்   நில வியாபாரம்.
மேலும் மேலும் கருப்புப்பணம்.
தேர்தல் சிலவு 
கருப்புப் பணம் முதலீடு.
திரைப்படம்,
கருப்புப்பணம்.
கல்வி கருப்புப்பணம்.
முடிவு 
இந்திய  பணம் முழுவதும் 
வெளிநாடுகளில்..

அனைவரின்  ஆதரவுடன்.









வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

thandhi இலக்கியங்கள் செய்யும் பெரும் பாதகம்.

தந்தை  தாய்  பேண் .


தந்தை  என்பவர்  உழைக்கும் வர்க்கம்.

 தாய்  என்பவர் தந்தைக்கு சத்து உணவு.

இது இயற்கையின்  .இணைப்பு.

இறைவனால்  ஏற்படுத்திய  பிணைப்பு.--இருந்தாலும்

அப்பா என்றால் சும்மா,அதோட எப்படி வாழ்ந்தே தாயே?

மகனின்  கிண்டல்.அப்பா வா?? அம்மா சொல்லாமல் எப்படி?

கலியுக  வாதங்கள். அப்பா வை  திரைப்பட

நாயகர்கள் ,நாயகிகள்  ஏமாற்றும் கலை.

இருபது இருபத்திரண்டு  ஆண்டுகள் வளர்த்து ,

இருபது ,முப்பதாயிரம் ஊதியம் பெற்றவுடன்,

தந்தைக்கு எதுவும் தெரியாது.அவருக்குப் புரியுமா?

காதல் என்பது.என்ன?

அவர் வருவார் .போவார்.

என்னுடைய  அரியர்ஸ் எனது காதல் பாடம்.

என்னுடைய தோல்வியில் அவள் நிலவு முகம்.

அவள் நிழலில் என் ஆனந்தம்.

அப்பாவின் நிழலில்  அவர்

 பணம் மட்டும் தான்.

பொய் ,பொய் , தோல்வி.

பட்டப்படிப்புகள்,புலவர்கள்  காட்டும் பாதை.

இக்கல்வி  காதல்தான் என்னும் இலக்கியங்கள்,

அந்த வயதில்  காதல் இல்லையேல் அலி.ஒன்பது.


இந்திரிய கட்டுப்பாடு  ஆன்மீக வழிகாட்டி.

இதையறியா காதல் இலக்கியங்கள்,


உயர்நீதிமன்ற,உச்ச நீதிமன்ற  விவாக ரத்து

வழக்குகள் .கள்ளக்காதல்கள்.

கள்ள  உறவால், கணவன்   கொலை.மனைவி கொலை.

பெற்ற குழந்தை அநாதை.

 காதல் கூறும்


இலக்கியங்கள்  செய்யும் பெரும் பாதகம்.