திங்கள், டிசம்பர் 19, 2011

saayee se prarthna

शिर्डी साई
अनंत आनंद दे, अग को.
अनन्य भक्तों को ,
नेक कोI
,हरिश्चंद्र-सा,
परेशान मत कर.
कलियुग का मनुष्य,
सद्य: फल चाहने वाले,
देखते हैं हम,
भोगी संत.
अन्यायी की जीत.
न्यायी की चाह,
अन्यायियों के बीच ,
उसका अंतर्वेदना,
तेरे जीवनी में भी.
अत्याचार का आनंद नर्तन.
भक्तों का शोक.
रामायण में,
महा भारत में,
महा बलि के जीवन में,
मनुष्य का अवतार,
दुख  झेलने ,
अन्याय की सजा,
अंत में.
कई धर्मात्मा की मृत्यु के बाद.
कहते हैं पूर्व जन्म का फल.
इस जन्म को जानने  में,
असमर्थ मानव ,
प्रत्यक्ष पर भरोसा रख,
भ्रष्टाचारी घूसखोरी ,

अत्याचारी,हत्यारे बनता है.
न्यायी अपना जन्म फल पर पछ्ता,
अग-जग के सुख भोग भूल,


त्यागी बनता है .
यह क्यों.
साई ,
दें सही उत्तर.
आधुनिक सुखों का भोगी,
ईमानदार और सत्यवान क्यों न होते.




iraippatru.love towards God

இறைப்பற்று

அனந்த ஆதிஅந்தம்  இல்லா,  ,
ஆண்டவன் மேல் அன்பு,
அவனியில் இருந்தால்,
புறக்கவலைகள்
 நீங்கி,
அக மகிழ்ச்சி
உண்டாகும்.
அவன் செயல்,
அவன் லீலை,-என்றால்
அவனியில்
 அமைதி உண்டாம்.
முயற்சியில்
முழு மனிதனாகவும் ,
முக்கால ஞானம் பெறவும்,
முழு முதற்கடவுளின்,
நற் கருணை ஒன்றே வசியம்.
ஆண்டவன் அருள் பெற்றோர்,
அவனியில் ஆண்டவனே.
அறிஞர்கள்,
அறிவியல்
 ஆன்றோர்,
ஆட்சி பீடத்தில்
ஆட்சி செய்தோர் என,
அவனியில்,
பல்லாயிரம் பேர்.
காலத்தின்
 மாற்றத்தால்,
அவர்கள்
சிந்தனைக்
கொள்கைகள்,
கண்டுபிடிப்புகள்,
மாற்றமே ஆகி,
அவர்கள் அடிக்கல்
ஆகின்றனர்.--ஆனால்
ஆன்மீகப்பெரியார்கள்,
உயர்ந்த சிகரத்திலே ,
உயர்ந்து
போற்றப்படுகிறார்கள்.
அவர்களின்,
சத்தியம்,
நேர்மை,
 பரோபகாரம்
,தொண்டுள்ளம்,
தியாகம்,மனிதநேயம்,
அவனியில் ஆணிவேராகி,
அழியும் அவனியிலும்,
ஆணிவேராக
ஆலாக,
வளர்ந்து,
அன்பே வுருவாகி,
பண்பே பதிவாகி,
அமைதி! அமைதி ! அமைதி!
ऊं शांती !शांती! शान्ति: !





computer

கணினி காலத்தின்
கண்ணாடி,

இளைஞர்களின் இதயத்துடிப்பு.
ஆறு -எழு இலக்க ஊதியம்.
கனா   நிறைவேறி ,
காரில் வளம் வரும்,
வேலைவாய்ப்பு.
துடிப்பான இளசுகளை,
மணிக்கணக்கில் கட்டிப்போடும்,
மாய மடிகணினி.
ஆன் மீகம்  முதல் அடுப்படி வரை,
அனைத்தும் தரும்
அறிவுக்களஞ்சியம்.



-



modern cinema /t.v.seriel





இன்றைய திரைப்படங்கள்
 தொலைக்காட்சி தொடர்கள்


இளம் தலைமுறையினர்
 மனதில்,
துளிர் விடும்
 எண்ணங்கள்.
அரசு இயந்திரத்தில்
கருப்பு ஆடுகளால்,
நீதிகள் தாமதம்.
நீதிமன்றம் சாட்சிகள்
மிரட்டப்படுதல்.
 மாற்றாள்
 கணவனை
விரும்பி
வில்லியாகும்
கன்னிகள்
இரக்கமின்றி
கொலை செய்யவும்
 திட்டமிடும்,
கொலைவெறியர்கள்.
அரசியல்
அமைச்சர்களின் 
அராஜகம்.
காவல் துறை
 கண்டுபிடிக்க இயலாத,
குற்றவாளிகளை
சாதாரண
குடிமகன்கள்
கண்டுபிடித்தாலும்,
அவர்களை
தப்பவைக்கும்
காவல்துறைகளின்
கையால்
 ஆகதத்தனம்
இவை
இளம் தலைமுறையினரை
அவநம்பிக்கை
  வன்முறை
 அரசு என்றால்
வெறுப்பு
என்று தீய எண்ணங்கள்
உருவாக்கும்
 என்பது தவாறன கருத்து.
பெருந்திரை,
சின்னத்திரை ,
அராஜகங்களை ,
வெளிச்சமிட்டு காட்டும்
கலங்கரை விளக்கு.
இளைஞர்கள்
விழிப்புணர்ச்சியுடன்
வாழ வழி வகுக்கும்
காலக்கண்ணாடி.







 ,





,











iraivanseyal ariyaa manithan



நீ தர்மத்தின் சார்பு என்றால்',
அதர்மத்தை ஏன் படைத்தாய்?
வாய்மையே கடவுள் என்றால்
,பொய்யை ஏன் படைத்தாய்?
பூவை படைத்த நீ
முள்ளையும் ஏன் படைத்தாய்?
உன் திருவிளையாடல்
 புரியா மக்கள்,
பாவத்தை செய்து
 பரிகாரம் தேடுகிறார்கள்.
அதன் தண்டனை
அனுபவித்தும் ,
தெரிந்தும்
 அறிந்தும்
 வாழ்கிறார்கள்.
அதற்குத்தான்
தண்டனையா?
அம்ருதம்,
ஆலகால விடம்,
அது புரிந்தும்
மனிதன் செய்யும் தவறுகள்.
விடமருந்தா
 மனிதன்
பாவம்  செய்வது ஏன்.?

அதற்கே கடவுள்,
வேடிக்கை பார்த்து
தண்டனை.
இயற்கையின் சீற்றம்,
 குண்டு வெடிப்புகள்,
 நோய்கள்,
விபத்துகள்.
அகால மரணங்கள்.
மனிதன் அறியாமல்
 செய்த  தவறுகளுக்கும்,
 தண்டனை.
அது புரியா
 மனிதர்களுக்கு
 வேதனை.
எல்லாம்
இறைவன் செயல்.

kaliyugam




கலியுகம்,கஷ்டகாலம்.
யாருக்கு.
சோம்பேறிகளுக்கு.
நல்லகாலம்,
யாருக்கு?
நன்மை செய்வோருக்கு.
இறை நாமம் ஜெபிப்போருக்கு.
அநீதி வெல்லும்
 என்கிறார்களே --அது.
மாயத்தோற்றம்.
எப்படி?
அதர்மத்தால் வென்றவர்களை,
கேட்டுப்பார். தெரியும்.
பணம் புரளும்.
சிற்றுந்தில் உலா வருவர்.
மாலைகள் விழும்.
மனம்  மலராது.
நிறைவு பெறாது.
கலியுகத்தில்;
கடவுளுக்குத்தான் எத்தனை
புதுப்புது ஆலயங்கள்.
உண்டியல் நிரம்புகிறது.
இது மூட நம்பிக்கையா?
அநீதி முடவர்களின்,
அநியாய அக்கரை.
வீதி தோறும் கல்விக்கூடங்கள்.
ஆலயங்கள்.
ஆண்டவன்,
நோயின் மூலம்,
விபத்தின் மூலம்.
இயற்கை சீற்றத்தின் மூலம்,
ஆதி மூலமாய் இருந்து,
ஆர்பரிக்கிறான்.
இதை தெரிந்தும் ,அறிந்தும்  புரிந்தும்.
ஆறறிவு படைத்த மனிதன் ,
ஆசை என்னும் சிற்றலை ,
பேரலை  களில்   சிக்கி,
கரையை அடைவது போல்,
சம்சார சாகரத்தில்,
அலைக்களிக்கப்படுகிறான்.
களிப்படையாமல்,
கலக்கமடைகிறான்.
 .











கலியுகம்

கலியுகம்
,கஷ்டகாலம்.
யாருக்கு.
சோம்பேறிகளுக்கு.
நல்லகாலம்,
யாருக்கு?
நன்மை
 செய்வோருக்கு.
இறை நாமம்
 ஜெபிப்போருக்கு.
அநீதி வெல்லும்
 என்கிறார்களே --அது.
மாயத்தோற்றம்.
எப்படி?
அதர்மத்தால்
 வென்றவர்களை,
கேட்டுப்பார்.
 தெரியும்.
பணம் புரளும்.
சிற்றுந்தில்
 உலா வருவர்.
மாலைகள் விழும்.
மனம்  மலராது.
நிறைவு பெறாது.
கலியுகத்தில்;
கடவுளுக்குத்தான்
எத்தனை
புதுப்புது
 ஆலயங்கள்.
உண்டியல்
 நிரம்புகிறது.
இது மூட
 நம்பிக்கையா?
அநீதி முடவர்களின்,
அநியாய அக்கரை.
வீதி தோறும்
 கல்விக்கூடங்கள்.
ஆலயங்கள்.
ஆண்டவன்,
நோயின்
 மூலம்,
விபத்தின்
 மூலம்.
இயற்கை
 சீற்றத்தின்
 மூலம்,
ஆதி மூலமாய்
 இருந்து,
ஆர்பரிக்கிறான்.
இதை
தெரிந்தும் ,
அறிந்தும்
  புரிந்தும்.
ஆறறிவு
 படைத்த
மனிதன் ,
ஆசை என்னும்
சிற்றலை ,
பேரலை  களில்
  சிக்கி,
கரையை
அடைவது போல்,
சம்சார
சாகரத்தில்,
அலைக்களிக்கப்படுகிறான்.
களிப்படையாமல்,
கலக்கமடைகிறான்.
 .


-













science and spirituality



அறவியல்


அறம்
ஆன்மிகம் வளர்ப்பது அறம்.
அறிவியல் வளர்ப்பது புறம்
அறிவியல் தேவைகள்,
பொருளாசை வளர்ப்பது.
புற ஆசைகள் வளர்ப்பது.
புறத்தால்அகம் மலரும்.
அது தற்காலிகம்.
அகத்தால் அகம் மலரும்
அது நிரந்தரம்.
ஆத்மா நிறைவிற்கு,
ஆன்மிகம்.
ஆன்மிகம் ஆசைகள்,
துறக்கச்செய்வது .

அது
மனித நேயம் காப்பது.
அன்பு  வளர்ப்பது.
ஆசை தவிர்ப்பது.
இன்னல் களைவது.
ஈகை வளர்ப்பது.
எண்ணங்களில்,
சிந்தனைகளில்,
ஏற்றம் தருவது.
ஐயம் அகற்றி ,
ஒருமனதுடன்.
ஒற்றுமை,
ஓங்க செய்வது.
அகத்தே
அமைதி தருவது.
அந்த
ஆன்மீகத்திலும்,
சுயநலம்
நாம பேதம்,
தர்ம பேதம்,
இன பேதம்,
சாதி பேதம்.
மனித பேதம்
வண்ண பேதம்.
வழிபாட்டில் பேதம்,
மொழி பேதம்,
பேதங்கள்  நடுவில்,
மனித நேயம்.
இரக்கம்.
பரோபகாரம்.
நேர்மை.
பண்பு ஒழுக்கம்.
சத்தியம்,
உதவி.
ஆன்மிகம் ,
அமைதிக்கு
 வழியாவது.
அறிவியல்.
மாற்றம் பெரும்.
ஆன்மிகம்.,




--
Regards,
Anandakrishnan.S
9941303639




 Reply

 Reply to all

 Forward







Click here to Reply, Reply to all, or Forward

mobile















கைபேசி
கைபேசி வந்ததால்,
காதலர்
கொண்டாட்டம்.
பெற்றோருக்கோ
பெரும் சிலவு.
தொலை பேசிஎண்கள்
 பதியப்படுவதால்,
ஞாபக மறதி அதிகம்,
கைபேசி
 தொலைந்துவிட்டால்,
நண்பர்கள்
தொடர்பு,
துண்டிப்பு.
கைபேசி
மாற்றினால்
 எண்கள் மாற்றம்.
நண்பர்கள்
இணைப்பு ஏற்படுத்தி ,
கிட்டாமையால்
 எரிச்சல்.
விளம்பர அழைப்புகள் ,
எரிச்சல்.
அன்பு செய்திகள்.
அச்சுறுத்தும் செய்திகள்.
எச்சரிக்கை செய்திகள்.--
இருப்பினும் ஏனோ,
பெருசுகளுக்கு
 எரிச்சல்.
இளசுகளுக்கு,
நமைச்சல்.
சொன்னதையே
 சொல்லி,
கேட்டதையே
 கேட்டு,
வீண் அரட்டை
 வேண்டாமே.
பண விரயம்
 வேண்டாமே.
இப்படி பேசுவதால்,
இளைஞர்கள்,
தொலைதொடர்பு ,
நிறுவனங்களுக்கு,
 வேலைவாய்ப்பு.
புரியுமா,
பெருசுகளுக்கு.
எதிர்காலம்,
அனைத்துமே,
கை பேசியால்'
வலைத் தொடர்பு
உட்பட.

DHARMAM

அவனின்றி அசையாது
 உலகத்திலே,-ஆனால்
அநீதிகள் அவனியில் ஏன்?
அதர்மங்கள்
அழிக்கப் படுமுன்,
தர்மங்கள் தவிப்பது ஏன்?
அரிச்சந்திரன் கதை கூறி ,
உண்மையாக இரு  என்றால்,
மாண்டவன் மீண்டு வந்து ,
மகிழ்ச்சிதரும் கூற்று,
அகிலத்தில் சாத்யமா./?
மகாபாரதப்போர் 
அனைத்தும் அழிந்தபின் ,
அமைதி என்றால்,
அதன் பயன்தான் என்ன//?
ராமாயண முடிவு,
சீதை பூமியில் புகுவது தான்.
ராமனின் போர் ,
ராவணனின்   மரணம்
மட்டுமா?
தெயவீகப்போர்களின் ,
வெற்றியும் சூழ்ச்சி,
பொய்,கபடவேடம்,
என்றால் வினா,
தர்மம் வெல்லுமா ,
அகிலத்தில்?
தர்மத்தால்.
விடை,
அவன் லீலை யார் அறிவார்?
தடி எடுத்தவன் தண்டல்காரன்.
அருளில்லதவர்களுக்கு
அவ்வுலகு இல்லை,
பொருளில்லதாவர்களுக்கு
 இவ்வுலகு இல்லை.
இவ்வுலகில் தோன்றியபின்,
 அவ்வுலகு சிந்தனை ,
ஏன்?
ஆகவே,
போலி சாமியார்கள்
,போலி ஆலயங்கள்,
இறைவன் பெயரால் ,
பரிகாரம்,என்ற பெயரால்,
மூடநம்பிக்கை கள்.
பெற்ற தந்தைக்கு
 உணவளிக்காதவன், .
ஊர்பெருமைக்கு
புரோகிதருக்கு
 தானங்கள்.
இவ்வளவிற்கும்
மத்தியில்,
தர்மத்தின்
சத்தியத்தின் மேல் ,
அசையா
நம்பிக்ககைகள்.
நல்லவர்கள்
 சத்தியவான்கள்,
தியாகிகள்,
இருக்கத்தான்
 செய்கிறார்கள்.
அதுதான்,
நல்லார் ஒருவர்
 உளரேல் அவர் பொருட்டு ,
எல்லோருக்கும்
 பெய்யும் மழை.
தர்மம் தலைதூக்கும்.
தர்மம் அமைதி தரும்  தரம்.

.தர்மம் நிறைவு தரும்.தரம்.
தர்மம்  நிரந்தரம்.

MOTHER'S LOVE THAAYANBU

___அன்பு __

--
உதட்டளவு அன்பு,
உதவத்தெரியா அன்பு.
உள்ளம் நிறைந்த அன்பு .
உள்ளத்தில் இருந்து,
உரிய தருணத்தில்,
உதவும் பண்பு.
அரசியல்   வாதியின் அன்பு,
அரியணையில் அமரும் வரை.
அன்னையின் அன்பு,
தனயனின் தவறுகள்,
தன்மையற்றசெயல்கள்,
அனைத்தையும் ,
அறியாமல்
அதையும் ,
அவனின்
 அறியாமை என,
ஆற்றியும்
 போற்றியும்,
அரவணைத்தும்,
அவன் நலத்திற்கு ,
ஆராதிக்கும்,
ஆழமான  அன்பு.
கலங்கிய
  கண்ணியமற்ற,,
அவனை
கங்கை போன்று
புனிதமாக ,
போற்றும் ,
புன்னியதேவதையின் ,
புனித அன்பு.
போற்றுவோம் அன்னையை.
தூற்றினாலும்,
தூய மனதுடன்,
தூண் போன்று   தாங்கி,
தூற்றுவோரை நிந்தித்து,
 மகனின்
மனக்கவலை
 மாற்றும்,
மருந்தாகும்

 அரிய அன்பு,
 அது,
அன்னையின்
 அன்பு.