வியாழன், டிசம்பர் 15, 2011

todays education .

நாட்டில்  தமிழ் நாட்டில் சமச் சீர் கல்வி என்று ஆரம்பித்து வெற்றி என்று கூறினாலும் அனைத்து மாநில தனியார் பள்ளிகள் சி.பீ.எஸ். ஈ பள்ளிகள் துவக்கவும் பெற்றோர்களும் அவ்வகையான கல்விக்கூடங்களை விரும்புவதும்
அங்கு கல்விக்கட்டணம்  பற்றி பொதுமக்கள் எதுவும் குறை கூறாமல் இருப்பதும்,மெட்ரிக் குலேசன் பள்ளிக்கட்டணம் பற்றி மட்டும் எதிர்ப்பதும்
அடிப்பதுபோல் அடிக்கிறேன் அழுவது போல் அழு என்று அரசு அரசுப்பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதும் மூடுவதும்
ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவதும் அரசுக்கு கல்வித்துறை சிலவுகள் குறைவதும் தமிழாசிரியர்கள் வேலைப்பளு அதிகரிப்பதும் மம்மி   டாடி கலாசாரம் வளர்வதும் உண்மை நிலை.அரசு நினைத்தாலும் பொதுமக்கள் தனியார் பள்ளிகளையே விரும்புகின்றனர்.
ஒரே குழந்தை பெற்று வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கல்வித்தரத்தையே  விரும்புவர்.அரசு கட்டணம் என்பது கட்டுபடியாகுமா/?
மனம் என்று ஒன்று இருந்து சாட்சியாக இருப்பவர்கள் கட்டண நிர்ணயம் நியாய மில்லை என்று அறிந்தவர்கள்.
ஒரு இட்லி ஒரு ரூபாயிக்கும் விற்கிறது.இருபது ரூபாயிக்கும் விற்கிறது.
காரணம் வசதிகள்.அவ்வாறு தான் பள்ளிகளும்.கட்டடம்,மைதானம்,குளிர்சாதனம்,ஆயாக்கள்,ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை  சிந்திப்பீர்.
சமச்சீர் கல்வி கொண்டுவந்தவர்கள் நடத்தும் பள்ளிகள் மத்திய அரசுப்பள்ளிகள்.கல்வி மாநில அரசு உரிமை.
மக்கள் அச்சத்தால் அமைதி காக்கின்றனர்.உண்மை நிலை உணருங்கள்.
கல்வி பெறுவது மக்களுக்கு சுதந்திரமாக இருக்கவேண்டும்.

jealous poraamai ramachandra shukla.

மனித மனம் நிம்மதியின்மைக்கும் அந்த நிம்மதியின்மையை வெளியிட முடியாததிற்கும்  அவன் மனதில் எழும் உணர்வுகள் தான்.அதில் அவன் அன்பு,காதல்,கோபம் கருணை   ,பக்தி, வெட்கம்,தயக்கம்,வெறுப்பு,சிரிப்பு,முதலிய அனைத்தும் வெளிவரும்.அவனால் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அவன் வெளிப்படுத்தாத தான் மட்டும் நிம்மதி  இழந்து தனிமையில்  உணரும்  உணர்வுதான் பொறாமை.
பொறாமை பற்றி ஹிந்தி கட்டுரை ஆசிரியர் ஆசார்ய ராமச்சந்திர சுக்ல என்பவர் 
பொறாமை பற்றி  கூறுகிறார் :---
மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு மனிதர் மனதில் துன்பம் ஏற்படுவதுபோல்,
மற்றவர்கள் சுகத்தைக்கண்டு ஒருவர் மனதில் ஏற்படும் துன்பமே பொறாமை.

பொறாமை மனதில் ஏற்படும் போது மூன்று வித துன்பங்கள் வெளிப்பட முடியும்.
  1. அந்தப்பொருள் நம்மிடம் இருந்தால்,
  2. அப்பொருள் அவனிடம் இல்லாமல் நம்மிடம் இருந்தால் நன்றாக இருக்கும்.
அப்பொருள் அவனிடம் இல்லாமல் போனால்,தொலைந்து விட்டால் நல்லது.

கோபப்படும் மனிதனிடம் மனிதன் கோபப்படலாம். ஆனால் பொறாமைப்படும் மனிதன் மேல் பொறாமைப்பட முடியாது.

punch dialogue aluththum uruththum vaakkiyangal

ஆலயம் தொழுவது சாலவும் நன்று  என்ற ஆன்றோர் வாக்கு,
ஆனந்தமளிக்கும்,
ஆத்ம சுகமளிக்கும் ,
 உள்ளத்தில் அமைதி பிறக்கும்.
அனுபவ பூர்வ எனது அநூபூதி  இது.
அகவை கூட கூட
 இந்த உணர்வு மேம்பட்டாலும்,
ஆலயங்களில் கூட்டங்கள் அதிகரித்தாலும்,
தவறுகள் அங்கங்கு தெரிய அறிய வந்தாலும்,
ஆன்றோர் வாக்கு பொய்ப்பதில்லை.
ஆலயமில்லா ஊரில் ,குடியிருக்க வேண்டாம்
என்ற ஆன்றோர்  வாக்கு, சத்ய வாக்கு,
அறிவுள்ள நரன்,நரிபோன்று இருப்பதால்,
அறத்திற்கு எதிரான ஆணவத்தால் அழிவதால்,
ஆலயங்கள் பெறுகிவருகின்றன சாலை தோரும்,
நடைபாதை ஆலயங்கள்,அங்குள்ள முடக்கக் கண்ணி,
திருவீதி அம்மன் ,காளிஅம்மன், மாரியம்மன்,
பயங்கர உருவமுள்ள பிரத்தியங்கரா தேவி,
நரசிம்ஹன்,கருப்பணசாமி,முனிசாமி,மாடசாமி,
சப்தகன்னிகள்,பயங்கர சூலாயுதங்கள்,வேலாயுதங்கள்,
அப்படி இருந்தும் ஊழல்கள்,அநீதிகள்,
அதனால்தான் ஆண்டவன் துதி,நாட்டைக்காப்பற்ற,
கலியுகத்தில் கண்முன் இறைவன் தண்டனைகள்.
அரசன் அன்று என்பதற்குப் பொருள்,
அரசன் அல்ல அநீதிக்குத்  தண்டனை தருபவன்,
ஆண்டவனே!ஆண்டவனே!ஆண்டவனே!
அதனால் தான் அரசன் அன்று!!(அல்ல)
 கொல்வான் ஆண்டவன் நின்று
நினைத்தவுடன்,திருந்த  வாய்ப்பளித்து,
அதனால்தான் அவன்
 அருள் பெற்றவனால்
அனைவரும் விரும்பும்
 பஞ்ச் டயலாக்  ----
ஆண்டவன்  நல்லவங்களை  சோதிப்பான்,
கைவிட மாட்டன்,
கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான்
கைவிட்டு விடுவான்.
சிந்திப்பீர்!! செயல் படுவீர்.!!   


புதன், டிசம்பர் 14, 2011

namathu kadankal

ஆண்டுகள் கூட  அகவை கூடும்.
அகவை கூட வாழ்நாள் குறையும்.
வாழ்நாளில் செய்த நன்மைகள்,
வயதான காலத்தில் அமைதி தரும்.
தீய காரியங்கள் தனிமைப்படுத்தி,
மன அமைதி எரிக்கும்.
கடன் பட்ட நெஞ்சம் கலங்கும்.
கடன் என்றால் மற்றவர்களிடம்
பெற்ற துகை மட்டும் அல்ல.
பெற்ற கடன்,பிறந்த கடன்,
வளர்ந்த கடன்,வளர்த்த கடன்,
வீட்டுக்கடன் ,ஊர்க்கடன் ,
நட்புக்கடன்,நாட்டுக்கடன்,
கடமை யாற்றும் கடன்,
சமுதாயக்கடன் ,
தெய்வக்கடன்,
குரு கடன்,
கல்விக்கடன்,
தாய் தந்தைக்கான கடன்,
இந்தக்கடன்கள் இனிதே
தீர்த்திருந்தால்,
அகவைகூட அமைதிகூடும்.
கடமைகள் தவறியிருந்தால்.
கடமைகளில் கள்ளத்தனம்
இருந்தால் கடைசி அகவையில்
கண்ணீர் அலை துன்ப அலை
மாறி மாறி சிறிய பெரிய அலைகள்
வீசிக்கொண்டே  இருக்கும்.
அதனால் தான் கீதையில்
கடமையைச் செய் பலனை எதிர் பாராதே
என்றார் பரமாத்மா.
ஆசையற்ற செயல் புரியும் மார்க்கம் .
பணம் சொத்து பங்களாக்கள் தோட்டம் 
அனைத்தும் இருந்தாலும்,நீண்ட துயில்
நிச்சயம் வரும்,மீளாத்துயில்,
அப்பொழுது உடன் எதுவும் வராது.
பட்டினத்தார் பட்ட அனுபவம்
பாடிய பாடல்.

26 divine character// sign 26 theivaamsangal lakshanangall

26   தெய்வாம்சம்  ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியது
  1. அபயம்=எவ்வித அச்சமின்றி  இருத்தல்.
  2. சத்த்வசம்சுத்தி   =மனத்தூய்மை
  3. ஞானயோகவ்யவச்திதி:=த்யான யோகத்தில் தொடர்ந்து தத்துவ ஞானம் பெரும் முயற்சியில் நிலையாக இருத்தல்.
  4. தானம் ச =சாத்வீக தானம்.
  5. தம:=புலனடக்கம்.
  6. யஜ்ஞ:=== பூஜை,யாகம்,அக்னிஹோத்ரங்கள் நியமப்படி செய்தல்.
  7. சுவாத்யாய:==வேத சாஸ்திர ஞானங்களை தானே படித்து  மற்றவர்களுக்கும் கற்பித்தல்.
  8. தப :  ச = =சர்வ    தர்மத்தை  கடைபிடிப்பதில் அனைத்து துன்பங்களையும் சகித்துக்கொண்டு  அறத்தில் திடமாக இருத்தல்.
  9. ஆர்ஜவம் -==மன உடல் ரீதியான புலனடக்க நேர்மை
  10. அஹிம்சை=ஒருவருக்கும் மனதாலும் சொல்லாலும் உடலாலும் எவ்வித தீங்கும் தராமை.
  11. சத்யம்==உண்மையையே  பேசுதல்
  12. அக்ரோத:==யாரிடமும் தன் எதிரியிடமும் கோபப்படாமை
  13. த்யாக:==ஆணவம் இன்றி இருத்தல்.
  14. சாந்தி:=மன ஒருமைப்பாடு அமைதி,அலைபாயா மனம்
  15. அபைசுனம் =மற்றவரை  குற்றம் குறை கூறாமை
  16. பூதேஷு தயா ==அனைத்து உயிரினங்களிடத்தும்  இரக்கம் காட்டுதல்
  17. அலோலுப்த்வம்==பற்றற்ற தன்மை .தன்னிடம் வரும்  பொருளிலும் ஆசை இன்றி இருத்தல்
  18. மார்தவம் ===மிருதுவாக இருத்தல்,மென்மை
  19. ஹ்ரிஹி==உலகோடு ஒட்டி அறநெறியுடன் வாழ்தல் அதற்கு ஒவ்வாத செயல் புரிய நாணுதல்
  20. அசாபலம் ==வீண்  வெட்டி  செயல்களை செய்யாதிருத்தல்
  21. தேஜா :=ஒளியும் பொலிவும்
  22. க்ஷமா =மன்னிப்பு
  23. த்ருதி:=கொள்கை உறுதிப்பாடு
  24. சௌசம்=புறத்தூய்மை
  25. அத்ரோஹா=அனைவரிடமும் நட்புடன் இருத்தல்.பகைமை பாராட்டாமை
  26. நாதிமாநித==தற்புகழ்ச்சி இன்மை
மேற்கண்ட தெய்வ குண அடையாளங்களாக பகவத் கீதையின் பதினாறாவது
அத்தியாய ஆரம்பத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியுள்ளார்.

  1.    

hindi tamil spoken tamil

maama inru madurai pokiraar.(WRITTEN ) maama innaikki madhura poraar.(spoken)
maamaa aaj madhurai jaate hain.
मामा  इनरु मधुरै पोकिरार.     मामा इन्नैक्कू मदुरै पोरार. மாமா இன்று மதுரை போறார்.
மாமா இன்னைக்கு மதுரை போறார்.
கோபாலன்  இந்த வீடு ஒரு கோடி ரூபாய் என்று சொன்னான்.
गोपालन ने कहा कि इस घर का दाम एक करोड़ रूपये हैं.
गोपालन इंत वीडु ओरु कोडी नु चोन्नान.



हर

2012 prayer.

2012 ஆங்கிலப் புத்தாண்டு ,
ஆனந்த மாக,
அன்பு நிறைந்ததாக அமையவும்,
அராஜக
அதிகாரிகள்,
அரசியல் வாதிகள்,
ஆன்மீக வாதிகள்,
அர்ச்சகர்கள்,
கருப்பு வணிகர்கள்,
கருப்புப்பணம் சேர்ப்பவர்கள்,
கள்ளச்சந்தை
வியாபாரிகள்,
கடத்தல்காரர்கள்,
கடமை தவறியவர்கள்,
கற்பிக்காமல் ஊதியம் பெறும்
கல்வி நிலையங்கள்,
ஆசிரியர்கள்,
போலி மதிப்பெண் தயாரிப்போர்,
பணம் பெற்று மதிப்பெண் பெறுவோர்,
தர மில்லா  மாணவர்களுக்கு,
சான்றிதழ்  வழங்குவோர்,
கற்பழிப்போர்,
அதர்மத்திற்கு  வழிவகுப்போர்,
வழிப்பரியாளர்கள்,
தெரிந்தே தவறிழைப்போர்,
அறிந்து தவறு செய்து ,
தண்டனை பெற்றும்
திருந்தாத பாவிகள்,
கொலை செய்து கொள்ளை அடிப்போர்,
தானியங்கி வங்கிப் பணம் பெரும் ,
அட்டை மோசடி செய்வோர்
என அனைவரையும்
ஆண்டவன் தண்டிக்க,மனம் திருந்த,
முதல் தேதி ௨௦௧௨ ஜனவரி முதல்,
பிரார்த்திப்போம்.தினம் ௫ நிமிடங்கள்.
ஆண்டவன் சமதர்மர்  என்றால்
போலிச்சாமியார்கள்  தண்டனை பெறட்டும்.
நாட்டில் நல்லவர்,நேர்மையாளர்,உண்மையாளர்கள்,
அநிதீயை கண்டிப்போர், அனைவரும்
உயர்ந்து மனநிறை வாழ்க்கை வாழ பிரார்த்திப்போம்.

செவ்வாய், டிசம்பர் 13, 2011

 போதி மரத்தில் அவன் பெற்ற ஞானம்,
ஆசையைத்  துறந்து அஹிம்சை,
அன்பு ,வாய்மை,தொண்டு  என்று
அவரை ஆசிய ஜ்யோதி ஆக்கியது.
இன்றைய அரசியல் வாதிகள்,
அவர்கள் சேர்க்கும் சொத்துக்கள்,
அவர்களின் ஊழல்கள் ,
நீதித்துறை,காவல் துறை
அனைவரின் அமைதி
நீதியின் தீர்ப்பில் தாமதம்,
இது புத்தர் பிறந்த நாடா?
அவர் சீடரான அசோகர்
மனம் திருந்திய நாடா,
நாட்டின் பணம் ,
கருப்புப்பணம்,
ஊழல் பணம்,
வெளி நாட்டு வங்கிகளில்,
நாட்டுக்கு துரோகம்,
தீமை ,
இந்த துரோகிகள் ,
நிரந்தரமாக,
இருப்பவர்களா//?
இதற்கு சட்டம் கொண்டுவராமல்,
இவர்கள் பட்டியலை
வெளியிடாமல்,
ஆதரவளிப்பவர்கள்,
ஆத்மா சோதனை செய்யாமல்,
மனசாட்சி இல்லாமல் உள்ளனரே.
ஆண்டவன் உள்ளானா?
அவன் லீலை.கர்மவினை என்ற
ஆன்மீக வாதிகள் சப்பைக்கட்டுகள்,
அராஜகம் வளர்க்குமே தவிர
தர்ம வான்கள்  உள்ளம் குமிரிக்கொண்டே இருக்கும்.

soordhass prayer

சூர்தாஸ் ஹிந்தி பக்தி கால இலக்கியத்தின் சூரியன் என்று போற்றப்படுபவர்

பகவான் ஸ்ரீ கிருஷ்ண பக்தரான இவர்  மனம் வேறு எந்த இறைவனையும்

விரும்பவில்லை.

 அவர் பகவான் ஹரியை வணங்கு வதற்கான காரணங்களாக

ஒரு பஜனைப்பாடல் இயற்றி உள்ளார்.

1.
நான் ஹரியின் தாமரைப் பாதங்களை  வணங்குகிறேன்.

அவரின் கிருபையால், கால் ஊனமுற்றவனால் ,

மலைமேல் ஏறி இறங்க முடியும்.

கண்தெரியாதவனால்

 எல்லாவற்றையும் பார்க்க முடியும்.

காது கேட்காதவனால்

 கேட்க முடியும்.

ஊமையால்

 பேசமுடியும்.

ஏழையால்

  மன்னனாக முடியும்.

உலகில்  ஹரியின்  அருளால்

இயலாது  என்பதெல்லாம்

இயல்பாக  இயங்கும்.



                                    2.

சூர்தாஸ்  நந்தனின் புத்திரனிடம் வேண்டுகிறார் :-

பிறந்தது   முதல் ,நான் ஆடாத ஆட்டமில்லை.

காமம் ,குரோதம் என்ற ஆடை அணிந்து ஆடினேன்.

 இவ்வுலக இன்பங்களின் மாலையாக

கழுத்தில்  அணிந்து  ஆடினேன்.

காலில் மோகம் என்ற சலங்கை அணிந்து ஆடினேன்.

இவ்வுலகை  உண்மை என்றும்  ,

நிலையானது  என்றும்  நினைத்து,

  மாயையில்  மனம் என்ற மிருதங்கம்

வாசித்துக்கொண்டே இருந்ததது.

கெட்டவர்களின் சகவாசம் என்னை

  மாற்றி-மாற்றி ஆடவைத்தது.

மாயை என்ற ஆடை  இடையில்  கண்களை  மறைக்க


பேராசையை என்ற திலகத்தை நெற்றியில்  இட்டு

ஆடாத ஆட்டங்கள் ஆடினேன்.-என்

ஆட்டங்கள் அறியாமையால் தான்.

அறியாமல் முட்டாள்தனமான என் ஆட்டங்களுக்கு

வடிகாலாக   உன்னைக்  கருதி  உன்னை

சரணடைகிறேன்.

.நந்தகோபால!சூர்தாஸின்

 வேண்டுகோள்  இதுதான்--

எனக்கு  முக்தி கொடு.
what is the price of one k.g. potato.==oru kilo urulaikkilangu vilai  evvalavu? or vilai enna.=ஒரு கிலோ உருளைக்கிழங்கு விலை எவ்வளவு/ /விலை என்ன?

एक किलो आलू का दाम. कितने रूपये हैं.? ek kilo aalu kaa dam kitne rupye hain  ?