புதன், ஜனவரி 02, 2013

இன்று மம்மி டாடி கலாச்சாரத்திற்குக் காரணம்.

எளிய  மொழி 

       படித்தவர்கள்  அனைவரும் புரியும் படியான எளிய மொழிநடையைக் கையாள வேண்டும்.
தங்கள் மொழி அறிவை ,மேதாவித்தனத்தை வெளிக்காட்ட கடின சொற்களை பயன் படுத்துவதால் தான் 
தாய் மொழியான தமிழ் கற்க  அல்லது இந்திய மொழிகள் கற்க இன்றைய மாணவர்களின்  ஆர்வம் 
குறைந்து வருகிறது. ஆங்கிலத்தில் வரும் வாக்கியங்கள் ,சொற்கள் மிக நடைமுறையில் உள்ளதாக இருக்கிறது.
ராமாயணம்,மகாபாரதம்  போன்ற காவியங்களை மூலத்தை விட எளிய உரைநடையில் புரிந்து கொள்வோரே அதிகம்.
வால்மீகி ராமயனத்தைவிட  மக்கள் புரிந்து கொள்ளும் துளசிராமாயணம் வட இந்தியாவில் அதிகம் போற்றி படிக்கப்படுகிறது.
திரைப்பட பாடல்கள் மாணவர்கள் மனதில் பதிவது போல் மனப்படப்பகுதியில் உள்ள பாடல் கடினமாக உணரப்படுகிறது.
பாரதியார்,வாலி,கண்ணதாசன்,வைரமுத்துவின் பாடல்களில் பழமையின் அரிய கருத்துக்கள் எளிய தமிழில் 
அறிந்து கொள்ள முடிகிறது.பொருள் அறியாமல் படித்த வடமொழி பேச்சுவழக்கற்றதாக   மாறியதற்கு ,அறிவியல் மொழியானது 
வெறுப்பிற்கும் ஆளானது அதன் கடினத்தன்மையும் ,தவறான உச்சரிப்பு பாவம் என்பதும்  பரந்த  மனப்பான்மையுடன் 
அனைவருக்கும் கற்பிக்காமல் இருந்தததே.அதன் பலனை நாம் இன்று  உணர்கிறோம்.
ஆங்கிலமும்  இந்தியும் வளர்ந்ததற்கு அதன் பரந்த மனப்பான்மையும் தனித்தன்மை அற்றதும் தான்.
தோய மொழிகள் காலப்போக்கில் அழிந்து விடுகின்றன.தமிழ் வாழ்வதற்கு  ஐம்பெருங்  காவியங்களும் ,ஆதி பகவன் என்ற பிரயோகமே.
சூரியனாரயனார் என்ற பரிதிமாற்கலைஞர்  தனிதமிழ்  நடைப்பற்றாளர்கள்  உறுதியாக இருக்க முடியாமல் இருக்க ஆங்கிலம் கலந்த தமிழுக்கு  மரியாதையும்,இந்திய மொழிச் சொற்கள் கலந்தால்  ஏற்காததும் இன்று மம்மி டாடி கலாச்சாரத்திற்குக் காரணம்.

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

ஆங்கிலப் புத்தாண்டு பிரார்த்தனை.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புத்தாண்டு பிரார்த்தனை.

அன்பும் ,ஆற்றலும் பெருகவே,
அநியாயங்கள் அகலவே,
அதிகாரிகள்,பொதுமக்கள்,
அரசியல் வாதிகள்,
பேராசையின்றி கடமை செய்யவே,
ஊழால்-லஞ்சம் ஒழியவே 
பேரருளாளன் ஆண்டவன் 
அருள் பொழிய ,
அனைவரையும் 
நல்ல நேராளனாக மாற்ற 
நல்லவர்கள் நோய்-நொடி இன்றி 
சகல செல்வங்களும் பெற்று 
தீயவர்கள் நல்லவராகி ,
அன்பும் பாசமும்,நேசமும்,
தேசப்பற்றும் உள்ளத்தில் 
கொண்டு வாழ கிருபைகாட்ட 
கணேசனிடம் பிராத்தனை.
அவன் தம்பி ஆறுமுகனிடமும்.
அவர்கள் தந்தை சர்வேஸ்வரநிடமும்,
விஷ்ணு விடமும் 
அல்லாவிடமும்,
ஏசுவிடமும் 
ஜகம் முழுவதற்கும் கிருபை காட்ட 
பிரார்த்தனை.
புத்தாண்டு பிரார்த்தனை.
ஆங்கிலப் புத்தாண்டு 
பிரார்த்தனை.

சனி, டிசம்பர் 29, 2012

சரியான தண்டனை.

பாலியல் பலாத்காரம்
தில்லியில் படு அமர்க்களம்.
தமிழகத்தில் செய்திதாள்களில்
வராத நாளில்லை.
அதுவும் சிசுக்கள்
மனிதர்களா?மிருகங்களா?
நாய் ஜென்மங்களா?
ஈடுபடுவோர் மட்டுமல்ல,
இக் காமக் கொடூரர்களைக்
காக்க  வக்காலத்து வாங்குவோரும்,
அந்த கொடியோர்களை ஆதரிப்போரும்
தண்டனை பெறவேண்டும்.
இக்கொடூர செயல் எந்த உருவத்திலும்
காக்கக் கூடாது.
குற்றவாளிகளை ஆதரிப்போருக்கும்
தண்டனைகள் கடும் தண்டனைகள்
தரப்படவேண்டும்.
பாலியல் கொடுமை,
மரணத்திற்கு மரண தண்டனையே
சரியான தண்டனை.

இனிதே கொண்டாடி, இந்தியப் பண்பு காப்பீர்.

ஆங்கிலப் புத்தாண்டு ,
 ஆடம்பரமாகக் கொண்டாடுவோம்.
ஆங்கிலம் இல்லையேல்
இல்லையே  வேலை.
வேலை இல்லையேல்
வேதனைதானே.
வைத்தியம் ஆங்கிலம்,
கல்வி ஆங்கில வழி
ஆனால்
காலம் தவறாமை,
கடமை தவறாமை,
கண்ணியமான பார்வை,
பொன் ஆசை இல்லாமை
நேர்மை போன்றவை
பின்பற்றப்படாமல் ,
அங்கு வெறுப்பதை
ஒதுக்குவதை  இங்கு  ஏற்பது ஏனோ?
ஆங்கிலம் அனைத்தும்
தந்தாலும்
நள்ளிரவுக் கும்மாளம்
நமக்கு ஏற்றதா?
எத்தனை எத்தனை இழிசெயல்கள்.
கேக் உணபதற்கா? உடலில் பூசவா?
உடலில் பூசும் கேக்கை
உதவும் கரங்களுக்கு ஈயலாமே?
நடுநிசியில் போதை,ஆட்டம்,
நம் நாட்டு சீதோஷ்ணத்திற்குப்
பொருத்தமா?
இறுக்கமான ஆடைகள்
சில தோல்நோய்கள் அரிப்பு,படைக்குக்
காரணம்.
வெப்பமுள்ள நாட்டில்
வேனைக்கட்டிவருமே/
வியர் வைக்கிருமிகள்
பெருகுமே.
ஆங்கிலத்தைக் கொண்டாடுங்கள்.
நம் பண்பாடு விட்டு
பட்டுப் போகாதீர்கள்.
உணவு நம் முன்னோர்வழி
தான் சிறந்தவழி.
வேக  உணவு,
வேகமாக ஆரோக்கியக்கேடு.
பட்டம் பெற்றோரே!
நள்ளிரவு உணவாக விடுதி
வீண் ரகளை
ஆங்கிலப் புத்தாண்டு
துயர சம்பவம் இன்றி
கொண்டாடுங்கள்.
இங்கிலீஷ் இளைஞர்களுக்கு
ஆங்கிலப்புத்தாண்டு.
இனிதே கொண்டாடி,
இந்தியப் பண்பு  காப்பீர்.







வெள்ளி, டிசம்பர் 28, 2012

ஆண்டவனை வேண்டி , அ றம் செய்வோரைக் காக்கும் கலியுகம். அமைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆங்கிலப்புத்தாண்டு  2013 ,
ஆனந்த  மிக்க ஆண்டாக ,
இனிய சுகங்கள் தரும்,
மன நிறைவுதரும் ஆண்டாக.
மகிழ்ச்சிதரும்  ஆண்டாக,
மங்களம் தரும் ஆண்டாக,
சத்தியவான்களும்,
நேர்மையாளர்களும்
நியாயவாதிகளும்
தலை நிமிர்ந்து பயமின்றி செல்லும்
ஆண்டாக ஆரம்பித்து,
ஆண்டாண்டுகள்   தொடர,
ஆண்டவனை   வேண்டி ,
அ றம் செய்வோரைக்
காக்கும் கலியுகம். அமைய
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வியாழன், டிசம்பர் 27, 2012

கலியுகத்தில் உன் நேரடி தண்டனை தேவை; இதுவே எனது இன்றைய பிரார்த்தனை.


செய்திகளும்  மக்களும்

தில்லி கலவரத்தில் காவலர் மரணம்.
உசிலம்பட்டி  காவல்துறை ஆய்வாளர் மரணம்.
கற்பழிப்புகள்;4வயது சிறுமி பலாத்காரம்.

தில்லி காவலர் மரணம் குறித்து
காவல்துறை அறிக்கை ,பொதுமக்கள் கூற்று,
எது உண்மை ?
மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியால்தான்
உண்மை அறிய முடியும்.
மக்களுக்குப் பாதுகாப்புத்தரும்
அரசியல்வாதிகள்,பணம் படைத்தோர்,பணத்திற்கு மயங்கும்
அதிகாரிகள்,இரத்த பந்தத்தால்
இந்தவித குற்றங்களை ஆதரிப்போர்,கம்சன்,
இராமாயண ,மஹா பாரத காலத்தில் இருந்து
நடக்கும் அவலம்.
மாற்றான் மனைவியின்மீது ஆசை கடத்தல்,
இன்றா நேற்றா,
இராவணன்,இந்திரன் ,கம்சன் ,திரௌபதி துகில் உரித்தல்,
அதிகாரபலம்,சூதாட்டம்,வரலாறு காட்டும் உண்மைகள்.
அவரவர்கள் பாதுகாப்பு அவரவர்கள் சக்தியால்,
அறிவுத் திறனால்.
மக்களுக்கு எச்சரிக்கை தேவை.
தங்களைத்தாங்களே பாதுகாக்கும் ஆற்றல்,
ஊழல் அரசியல்வாதிகள்,அதிகாரிகள்,
ஊழலை ஆதரிக்கும் பொதுமக்கள்,
தன்னலம் இதுவே இன்றைய சூழல்.
ஒரு தெய்வீக சக்தி,மனித  சக்திக்கு அப்பாற்பட்ட
சக்தி ஒவ்வொரு தனிமனிதனுக்கும்
கிடைத்து,சட்டத்தை,புலனடக்கத்தை,
நீதி,சத்தியம்,தர்மம்,நேர்மை மதிக்கும் பண்பு ,
பெற  இறைவணக்கம்  ஒன்றே வழி .
திரைப்படம்,சுயநல எழுத்தாளர்கள் ,
வணிக நோக்க விளம்பரதாரர்கள்
அரசியல் தலைவர்கள் ,
காமத்துடன் கலந்த காதலுக்கு
முக்கியத்துவம் அளிப்பதால்வரும்
கொடூரங்கள்;
துர்க்கை! நீ நேர்மையாளர்களுக்கு ஆற்றல் கொடு;
ஆணவ அநியாயங்களை ஒழிக்க அவதாரமெடு;
இன்றைய என் பிரார்த்தனை இதுவே.
ஆலயங்களும் வணிக நோக்கம்;
அரசியலும் வணிக நோக்கம்;
கல்வியும் மனித வனிகநோக்கம்;
கலவியிலும்  மனிதநூகாம்;
காளி  தேவியே!
கலியுகத்தில் உன் நேரடி தண்டனை தேவை;
இதுவே எனது இன்றைய பிரார்த்தனை.

செவ்வாய், டிசம்பர் 25, 2012

கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.

ஏசுநாதர்  பிறந்த நாள்.
எளிமை,சேவை,அன்பு, மனிதப்பண்பு,
 பாபங்கள்   தான் ஏற்று ,
மனிதனை துன்பத்திலிருந்து விடுவிக்க,
ரத்தம் சிந்திய மகான்.

இந்நன்னாளில்  நல்லதே செய்து,
செய்த பாபங்கள் உணர்ந்து
 உயர்ந்த சிந்தனைகளுடன் ,
உண்மை,நேர்மை ,சத்தியம் ,அன்பு ,சேவை,
பரோபகாரம் என்ற உயர் குணங்களுடன் ,
உலகில் வாழ்ந்து இறை தூதர் துணையுடன்
உயர்ந்த மனிதனாக வாழ , உள்ளநிறைவு,மகிழ்வுடன்
வாழ ,
கிறிஸ்மஸ் தின 
வாழ்த்துக்கள்.

வெள்ளி, டிசம்பர் 21, 2012

ஜாதி ஒழிந்தது. ஜாதிப் பற்றாளர்கள் ஒழியவில்லை.

"காந்தி என்ற பெயரில் என்ன  இருக்கிறது"---என்றதொரு கட்டுரை.


"காந்தி "  என்ற  பெயரில் ஜாதி இருக்கிறது.பனியா ,வைஷ்ய  என்பதுதான் பொருள்.

நம்த தலைவர்களை  அன்னாஜி ,நேஹ்ருஜி,காமரஜ்ஜீ  என்பதுபோல்

மோகன் ஜீ  என்று அழைத்திருக்கலாம்.இப்பொழுது அனைவரும் காந்தி  சேர்ப்பதால்  ஜாதி ஒழிந்துவிட்டது. ஆனால் ,காந்தி என்றால் இந்திரா,ராஜீவ்,சோனியா  என்றே பலர் நினைக்கின்றனர். படித்தோருக்குத் தெரிந்து  இப்பொழுதுதான்  அனைவரும் துணிந்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

நான் முதலில் இதை வெளியிட்ட பொழுது பலர் ஆச்சரியப்பட்டனர்.

ஹரிஜன்  என்ற  சொல் கபீரின்  தோஹையில்  உள்ளது.

கபீர்  சொல்கிறார்=="நாடும்,சொத்தும்,பெயரும்,புகழும் இறைவன் அளிப்பவை.

இறைவனை அளிப்பவன் பக்தன் ,அதற்கு அவர் எழுதிய சொல் "ஹரிஜன்".

எளிய மொழியில் ஆழ்ந்த கருத்தை வெளி யிட்டால் அது படிக்காதவன் ,கிராமீயப்பாடல்.
அது அனைவருக்கும் புரியும்  மொழி. அனைவராலும் ஒதுக்கப்படுவது

அதனால் தான் நாம் அடிமையானோம் .

இன்றும் பலர் பல விஷயங்கள் புரியாமல் இருக்கும் மொழியிலேயே

புரிந்துகொள்ள விரும்புகின்றனர்.

சோனியா காந்தி ஊழல் என்றால் காந்தியின் வாரிசின் ஊழல் என்று
நினைப்போரும் உண்டு.
தேசீய கீதம்   வங்க  மொழி என்பது தெரியாதவர்களும் உண்டு.

    காந்தி  என்பதற்கு முக்கியத்துவம் அளித்து  ஜாதிப்பெயர்   பொதுப் பெயராகியது.

ஜாதி ஒழிந்தது.

ஜாதிப் பற்றாளர்கள் ஒழியவில்லை.




. இதுதான் உலகம்.

நமது முன்னோர்கள்  வாழ்க்கையை பிரம்மச்சரியம்,க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம்,சன்யாசம் என்று பிரித்து   மனப்பக்குவம் ஏற்படுத்தி உள்ளனர்.

அமெரிக்காவிலும் அவர்கள் வாழும் முறை சாகும் வரை தன சக்தியை நம்பியே.90 வயதில் கார் ஓட்டி  செல்லும் முதியர்.ஒரு கை இல்லாமல் ஒரு முதிய பெண் சாமான்களை எடுத்து காரில் வைத்தபொழுது உதவச்சென்ற  என் மகனைத் தடுத்துவிட்டார்.அது அவர்கள் தன்னம்பிக்கை. நான் 58 வயதில் வயதில் ஒய்வு பெற்றதும் தளர்ந்துவிட்டேன்.அங்கு சென்றதும்  இளமையை உணர்ந்தேன். ஏன் என்றால் எங்கள் வீட்டின் அண்டைவீட்டுக்கரர் என் அப்பா சிறுவயதில் இறந்துவிட்டார் என்றார், அப்பாவின் வயது 74.
நம் சனாதன  தர்மம் வாழ்க்கைத் தத்துவங்களைக் காட்டுகிறது. தசரதர் மூப்படைந்ததும் இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார்.

நாம் வயதானாலும் 52 வயது மகனை குழந்தையாய் தான் பார்க்கிறோம். நாம் நமது கலாச்சாரத்தை ஆழ்ந்து படித்தால் பிரிவு ஒன்றும் பெரிதல்ல.

தாயின் கருவில் இருக்கும் காலம் தாய் நாடு.பின் நாம் வெளிநாடுதான். இயற்கை நீதி  ஆகையால் தான் நம் சகோதர மதம் இஸ்லாம் இறப்பில் சிரிக்கிறது.  பிறப்பில் அழுகை.வாழ்க்கையின் எதிர் நீச்சல். இதுதான் உலகம்.

வியாழன், டிசம்பர் 20, 2012

குஜராத் தேர்தல்

குஜராத்  தேர்தல் 

மோதியின்   வெற்றி அவரின் தனிப்பட்ட சாதனையின்  வெற்றி. அதன் சான்றுதான் 
ஹிமாச்சல் பிரதேச  தோல்வி.

மக்கள்  சாதனைகளைப்ப்பார்க்கிறார்கள் ,சாதி-மதம் 
பார்ப்பதில்லை.இருப்பினும் ஊழல் என்று போற்றப்படும்  காங்கிரஸுக்கு  ஓட்டுகளும் ,வெற்றியும்   மக்களின் மோகம் சற்றே குறைந்தாலும் சற்றே மீண்டும் காங்கிரசுக்கு  ஆதரவு  உள்ளது. மக்கள் ஊழல்களை ஆதரிப்பதுபோல்  உள்ளது. படுதோல்வி ஏற்பட்டாலே விழிப்புணர்வு என்ற நிலை மாறி 
சற்றே  அதற்கு உயிர்காற்று கிடைத்துள்ளது. 
மக்கள்  மீண்டும்  தங்கள் சக்தியை 2014 தேர்தலில் காட்ட  வேண்டும்.ஒரு முறை ஊழலுக்கு மரண  அடி கொடுக்கத் தயங்காத  நாட்டுப்பற்று வரவேண்டும். சர்வசக்தியான ஆண்டவன் அருள பிரார்த்தனைகள்.