வெள்ளி, டிசம்பர் 30, 2011

andanan

பார்ப்பனை ஐயரென்ற காலமும் போச்சு என்று பாடியவர் பார்ப்பான்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியவன் பார்ப்பான்.
எங்கே பிராமணன் தொடர் எழுதியவன்  பார்ப்பன்.
குலம் தாழ்ச்சி சொல்வது பாவம்  என்று முழங்கியவன் பார்ப்பான்.
பெரியார் தலைவராக ஏற்ற திராவிடக்கட்சிகள் 44  ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகின்றன.அக்ரகாரங்கள் இன்று சமத்துவ புரமாக காட்சி அளிக்கின்றன.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற ஆட்சி 1969  முதல் தமிழகத்தில்.ஆனால் பட்டி தொட்டி எல்லாம் மம்மி-டாடி கலாச்சாரம் வந்தது அதற்குப்பின்னர் தான்.
இன்றும் இணைய தளத்தில் பார்ப்பனை திட்டி செய்தி வருவது மனசாட்சி இல்லா செயல்.நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் ஒரு இனத்தை மட்டும் அதுவும் சிறுபான்மை  இனம் அது எப்படி மாறிஉள்ளது என்று
எங்கே பிராமணன் தொடர் வந்தும் தாக்குவது மன சாட்சி இல்லா செயல்.குடுமிவைத்த பாப்பான் இல்லை. பஞ்ச கச்சம் கட்டும் பாப்பான் அதிகம் இல்லை.
இன்றும் தாக்கி அரசியல் நடத்துவது அநாகரீகம்.

raheem ke dhohe---tamil

ரஹீமின் ஈரடி.


ஹிந்தியில் ரஹீமின் தோஹை புகழ் பெற்றது.
அவர் பேரரசர் அக்பரின் சேனாபதி.வடமொழி,அரபி,பாரசி போன்ற மொழிகளின் பண்டிதர்.அவரின் ஈரடி கருத்துரை.

௧.ஒருவர் கூறிய கடுஞ்  சொற்கள், 
முயன்றாலும் திருத்திக்கொள்ள முடியாது.
திரிந்த பால் கடைந்தாளும்
 வெண்ணெய் கிடைக்காது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

௨.மரங்கள் பழங்கள் சாப்பிடாது.
ஏரி நீர் பருகாது.
அவ்வாறே,
நல்லவர்கள் மற்றவர்களுக்காகவே,
சொத்து சேர்ப்பார்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

௩.அனைத்து செயல்களுமே,மெதுவாகவே  நடக்கும்,.
தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும்,
பருவ காலத்தில் தான் பழுக்கும்.
௫.ஒரு செயலை செம்மையாகச் செய்தால்,
அனைத்து செயலும் செம்மையாக நடக்கும்.
அனைத்து செயலும் செய்தால்,ஒரு செயலும் நடக்காது.
வேருக்கு ஊற்றும் நீரால்,மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௫.மற்றவர்களிடம் யாசிக்கச் சென்றால்,
பெரியவர்களும் சிறியவர் ஆவர்.
மகா பலி சக்கர வர்த்தியிடம் யாசிக்கச் சென்ற,
நாராயணன் குள்ளமாக,௫௨ அங்குலமாக ஆனாரே.
************************************************************
மகான்கள் தான் தான் பெரியவர் என்று ஒருபொழுதும் சொன்ன தில்லை.
வைரம் ஒருபொழுதும்  தன் விலை ஒரு லக்ஷம் என்று கூறுவது இல்லை.
மற்றவர்கள் தான் அதன் மதிப்புக் கூறுவார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

.





a

hindi poet vrunda --eeradi

ஹிந்தி கவி வ்ருந்தரின் ஈரடி.

1.அரசன் அழிவான் ஆலோசனை  தப்பானால்,
ஆன்மீக சாதுக்கள் சேர்க்கை தப்பானால் அழிவர்.
அன்பு அதிகமானால் புத்திரர்கள் அழிவர்.
அந்தணர்கள் கல்வி கற்கவில்லையானால் அழிவர்.
************************************************************
௨.இனிய சொற்கள் மருந்துக்கு ஒப்பாகும்,
கசப்பான சொற்கள் கூறிய அம்பாகும்.
செவி வழி சென்று,முழு உடலையும்
நடுங்கச்செய்யும்.
*************************************************************
௩.எதையும் அறியாமல்,காணாமல்,தீர விசாரிக்காமல்,
சிந்திக்காமல்,மற்றொரு வரைப்பற்றி
 எப்படி கருத்துக் கூற இயலும்.?
கிணற்றுத் தவளை கடலின்
விஸ்தீரணம் எப்படிக் கூறும்.?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
௪. வீரனின் வேடம் தரித்தாலும்,
கோழை வீரனாக முடியாது.
சிங்கத்தின் தோல் போர்த்தினாலும் ,
நரி சிங்கமாக முடியாது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
௫.முட்டாளும் தன் இடைவிடா,
முயற்சியால்,பயிற்சியால்,
மேதை ஆகலாம்.
கல்லும் கயிறு பட்டு ,
இழுக்க,இழுக்க குழியும்.
++++++++++++++++++++++++++++++++++++++++===




thulasidass eeradi

துளசிதாசர்  ஹிந்தியில் இராமாயணம் எழுதினார்.அது மக்கள் புரியும் அவதி மொழியில் எழுதப்பட்டதால் வால்மீகி சமஸ்கிருதம் மூல காவியத்தை   விட அதிகமாக பூஜிக்கப்படுகிறது.இன்று துளசிதாசரின் சில தோஹாக்கள் அதாவது ஈரடி களின் கருத்துரைகள் .படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

௧.துளசி கூறுகிறார்:---
மரங்கள் வளர்ந்து
 அந்த அந்த பருவங்களில்
 பழங்களைத் தருகின்றன.
அப்பழங்கள் சுவை
அப்பொழுதான் தெரியும்.
அவ்வாறே ஒரு மனிதனின்
 குறைகளும் நிறைகளும்
நேரம் வரும்போதுதான்
தெரியவரும்.
============================
௨.விளக்கு  ஏற்றியதும்
இருள்போய்
    ஒளி தெரியும்.
அவ்வாறே குரு
வந்ததுமே,
அறியாமை
இருள் நீங்கி
சீடர்களுக்கு
ஞான ஒளி
கிடைக்கும்.
=============================
௩.தேன்  பருகி இறப்பவனுக்கு,
விடம் தர வேண்டியதில்லை.
உலகை வெற்றி பெற்ற
பரசுராமர்,
ராமரின் இனிய   சொற்களாலும்,
பணிவாலும் தோற்றுப்போனார்.
தோற்ற ராமன் வென்றார் அவரை.
======================================
௪.தன் அனுபவத்தாலும் ,நன்கு விசாரணை   செய்தும்,
கண்டும் கேட்டும் துளசி  சொல்கிறார்---
கெட்ட மனிதன்  பட்டம் போன்றவன்.
பட்டக் கயிரை இழுத்தால் மேலே பறக்கும்.
தளர்த்தினால் தரையில்   விழும்.
கேட்டவனு அவ்வாறே.
=============================
௫.துளசி  கூறுகிறார் :-----
மற்றவரின் புகழை,
களங்கப்படுத்தி,
தன் புகழை உயர்த்துவோரின்
முகத்தில்  ஏற்படும்
களங்கம் அவர்கள்
இறப்பின் பின்னும் போகாது.
நிலையான களங்கம் ஏற்படும்.
==============================
௬.துளசி  கூறுகிறார் ,
 இரண்டு பெரியவர்கள்,
சண்டை  இடும்போது,
இடையில் சென்றால்,
அழிந்துவிடுவீர்கள்.--எப்படி
கல்லும் இரும்பும் உரசி மோதினால்,
எழும் நெருப்பின் இடையில் மாற்றிய ,
பஞ்சுபோல்.
====================================
௭.  நம்மைப்பற்றி  நன்கு அறியாமல்  ஒருவன் ,
நம்மைப் புகழ்ந்தாலும் ,இகழ்ந்தாலும் ,
அதைப்  பொருட்படுத்திஅதும் ,மகிழ்தலும் ,
வருந்துவதும்  வேண்டிய தில்லை.
----------------------------------------------------------------------
௮. தீராத  நெடுநாள் நோய்வாய்ப்பட்டவன்,
கடும் சொற்கள் பேசுவான்,தரித்திரன் ,பேராசைக்காரன்,
ஆகியோர் உயிர் நண்பராயிருந்தாலும் உடனே விட்டு ஒதுங்குவதே
சாலச்சிறந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
௯.மழை பொழிவதை  அனைவரும் பார்க்கின்றனர்.
சூரியன் மழை நீரை ஆவியாக்கி,மேகமாக மாற்றுவதை
யாரும் கண்டதில்லை.மழை நீர் கண்டு மகிழ்  கின்றனர்.
அவ்வாறு  மக்களுக்கு துன்பம் வராமல் வரிவசூல் செய்து,
கதிரவன் போல் ஆளுநர்கள் அதிர்ஷ்ட வசத்தால் நாட்டிற்குக்
கிடைப்பார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------௧௦.துஷ்டர்கள்  தங்கள்  கெட்ட குணத்தை ,
நல்லவர்களுடன்  இணைந்தாலும் ,
விடமாட்டார்கள்.எப்படி பாம்பானது,
சந்தன மரத்தில் சுற்றியிருந்தாலும்,
விஷமில்லாமல் போகாது.
****************+++*****************************************************************





;



புத்தாண்டு ௨௦௧௨,

புத்தாண்டு ௨௦௧௨,
 புதிய தலைமுறையினர்
மனதில்,
இன்றைய திரைப் படத்தாக்கங்கள் இன்றி,
பெற்றோரின் நிலை அறிந்து,
காதல் உணர்வே பெரிது என்று,
தோல்வியால் தற்கொலை,கொலை,
மதுமயக்கம்,மாது மயக்கம்,
கள்ளக்காதல்,கூலிப்படை,என்ற
எண்ணங்கள் வராமல்,
இறைவணக்கம் எண்ணங்கள் தோன்றி,
ஆமைபோல்  ஐந்தடக்கல்  ஆற்றி,
வளமான வருங்காலம் அமைய,
௨௦௧௨ ஜனவரி திங்களில் என் பிரார்த்தனைகள்.
துளசிதாசர் பெண் பித்தர்,
அவர் மனைவி  அவரைத்திருத்த,
கூறி மொழிகள்,
எழும்பும் சதையும்,
கொழுப்பும் அழகும் உள்ள
 இந்த உடலின் அழகு
நிலையற்றதல்ல.
அழியும் உடலாசை தவிர்த்து,
ஆண்டவன் மேல் பற்று கொண்டால்.
அவனியில் தங்கள் பெயர்,
புகழ் ஓங்கி  நிலைத்திருக்கும்.
அவ்வாறே அருணகிரியின் அவல வாழ்க்கை,
ஆன்மீகத்தால் முருக பக்தியால்
தமிழுக்கு பெருமை சேர்த்தது.
அவர்களின் பட்டறிவு அறிந்து,
இளமை நிலையாமை என்பதை
நினைவில் கொண்டு ,
நானிலம் போற்றும் உத்தமர்களாக,
மாணவர்களுக்கும் ,மக்களுக்கும்
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிரார்த்தனைகள்.






வியாழன், டிசம்பர் 29, 2011

கபீர் ஈரடி

हम तुम्हारो सुमिरन करैं ,तुम मोहिं चितवो नहीं,  सुमिरन मन की प्रीती है,सो मन तुम्हीं माहीं ११

கபீர் இறைவனிடம் சொல்கிறார் --இறைவா!நான் உன்னை பிரார்த்தனை செய்கிறேன்.ஆனால் நீ என்னை பார்ப்பதில்லை.உன் மனதில் நான் உள்ளேனா,
என்பது என் கவலை இல்லை.என் மனதின் அன்பால் உன்னை வேண்டுகிறேன்.என் மனம் உன்னிடத்திலேயே நிலைத்துள்ளது.
இறைவனை நாம் உள்ளன்போடு தியானம் செய்யவேண்டும்.அவன் நம்மை அருள்பார்வையோடு பார்க்கிறான இல்லையா என்ற கவலை நமக்கு ஏற்படக்கூடாது.

हंसा बगुला एकसा ,मानसरोवर माहिं 1   बगा ढून्दूरे    माछरी,हंसा मोती खाहिं 11
கபீர் கூறுகிறார்,
அன்னப்பறவையும் கொக்கும் ஒரே மானசரோவர் ஏரியில் வசிக்கின்றன.
ஆனால் கொக்கு மீனைத் தேடி அலையும்.அன்னப்பறவை சிப்பியில் உள்ள முத்தைத்தேடி அலையும்.ஏனென்றால் இரண்டின் உணவும் வேறுபட்டது.
மனிதர்கள் ஒருவரைப்போல் ஒருவர் இருக்க ஆசைப்பட்டாலும் இறைவன் கொடுத்த இயல்பு வேறு பட்டது.குணமும்  குற்றமும் இயற்கையில் ஏற்படுவது..அதற்கேற்றவாறு மனிதனின் செயல் அமையும்.
************************************************************************************
माला   फेरत    जुग     भया  , फिरा    न  मन का  फेर  , कर    का  मनका   डाली दें  ,मन  का  मनका   फेर./

ஒரு பக்தன் பல யுகங்களாக  ஜபமாலை கொண்டு ஜபித்துக்கொண்டுள்ளான்.
ஆனால் அவன் மனம் பலவிதத்திலும்  சஞ்சலம்  அடைந்து கொண்டிருக்கிறது.
இறைவனருள் எப்படி கிடைக்கும்சுழலும்உண்மை நிலை புரிந்து கையிலுள்ள ஜபமாளையைக் கீழே போட்டுவிட்டு மனம் என்ற மாலையில் சுழலும் மன விகாரங்களை சுழலாமல் நிறுத்து.அதன் பின்  ஜப தபங்களில் மனம் செழுத்து.
அப்பொழுதுதான் ஆண்டவன் பேரருள் கிடைக்கும்.










புதன், டிசம்பர் 28, 2011

rashyaavum bhagavan krishnaleelaiyum

உலகம் போற்றும் உத்தமமான தெய்வீக நூல் பகவத் கீதை.  உலகிற்கே அன்பையும் அஹிம்சையையும் எடுத்துக்காட்டியது.
உலகிற்கு சகோதர  பாசத்தையும், நேசத்தையும்   ,மனித   நேயத்தையும் எடுத்துக்காட்டி  "வையகம்  வாழ்க ";வையகம் ஒரு குடும்பம்" "விருந்தினர்கள் தெய்வம் ",ஒருமைப்பாடு,அஹிம்சை,அமைதி,என்ற ஆதர்ஷங்களை நிதர்ஷ்ணப்படுதியது பாரதம்.
கிடைத்ததைக் கொண்டு  வாழ்,அதிகம் ஆசைப்படாதே,கடமையைச் செய்,பலனை எதிர்பாராதே ,நாம் எதையும் எடுத்துவரவில்லை,எதையும் எடுத்துச்செல்வதில்லை,உலகம் நிலையற்றது.என்றெல்லாம் வாழும் நெறி காட்டுவது.
இன்று ரஷ்யாவில் கீதை பற்றிய விவாதம் நீதி மன்றம் சென்றுள்ளது.அதற்கு ரஷ்யரே கூறியுள்ளார்.பகவத் கீதை அறநெறி காட்டுவது.இருபத்தைந்து ஆண்டுகளாக அப்புத்தகம் இந்த நாட்டில் உள்ளது.அதனால் எந்த பாதிப்பும் இல்லைஎன்று.
என் சிறிய அறிவில் தோன்றியது இதுதான்.இதுவும் இறைவனின் லீலை தான்.
இதுவரை கீதையைப்பற்றி கேள்விப்படாத மேலும் கீதை படிக்காத வெளிநாட்டினரும் கீதை படிக்கத் தூண்டுகோலாய் இந்த வழக்கு அமைகிறது.
அதில் அப்படி என்ன விசேஷம் என்று படிக்காதவர்களும் படித்து கிருஷ்ணா பரந்தாமன் புகழ் பாடத்தான் போகிறார்கள்.இறைவன் ஸ்ரீ கிருஷ்ண லீலை எப்படி இருக்கு.

russia and bhagavat gheetha

हिन्दू  धर्म  संसार को बताती है  कि "वसुदेव कुटुम्बकम" और "जय जगत".भारत के इतिहास में  भारत अपने ऊँचे सिद्धांत के कारण गुलाम बना.भारत का सनातन  धर्म  सहनशीलता सिखाती है."अतिथि देवो भव " के अनुसार चलनेवाले भारतीय  शांति के पथ पर  यह सोचता है कि सुख या दुःख ईश्वर की देन है.जो कुछ स्वतः मिलता है,उससे संतुष्ट होकर जीना श्रेष्ठ है.भारत पर विदेशी आक्रमणकारी चढाई करने आये तो उनके पक्ष में या समर्थन में
भारत के ही लोग थे.भाग्य पर विश्वास करने वाले भारतीय अलेक्सान्दर के सेनापति सेल्यूकस की बहन को अपनी
बहू बनाकर विश्व बंधुत्व का साक्षी  हैं.भारत के वेड शास्त्र पुराण में और कहानियोमें जाति.समन्वय  की बातें है.

अहिंसा की बातें है.भागवत गीता की चर्चा रूस में हुई तो उस ग्रन्थ को और भी पढने वाले होंगे.उसको आज तक किन लोगोंने पढ़ा नहीं, उनको पढने की प्रेरणा भगवान् कर रहे हैं.उस ग्रन्थ के श्रद्धालु और अधिक होंगे.अतः वास्तव में यह मुकद्दमा श्री कृष्ण के भक्त संख्या बढाने का कार्य करेगा. 

prayer for religious tolerence/matha sakippuththanmaikku iraivanakkam

மதங்கள் மனிதர்களிடம் 
சகிப்புத்தன்மை, மனிதநேயம்,
அன்பு,சேவை ,அஹிம்சை,பாசம்,நேசம்,
வளர்ப்பதாக,ஒற்றுமை வளர்ப்பதாக,
ஒருமைப்பாடு வளர்ப்பதாக அமைய ,
நபி,இயேசு , புத்தர், சங்கரர்,மகாவீரர்,
ஒற்றுமை வளர்க்க மதங்கள்.
ஆனால் மதங்களால்  கலவரங்கள்,
இதை ஆண்டவனும் விரும்பமாட்டார்.
இந்த ௨௦௧௨ புத்தாண்டில்,
மத இனக்கலவரங்கள் நடக்காமல்,
மனத்தால்,இனத்தால்,மொழியால்,
கலவரங்கள்,கொலைவெறி நடக்காமல்,
உலக அமைதிக்கு,நட்புக்கு,நேசத்திற்கு,
அல்லாவைத்தொழுவோம் .
யேசுவிடம் விண்ணப்பிப்போம்.
சிவனிடம் பிரார்த்திப்போம்.
ஷீரடி  சாய் பாபா வழியில்,
அல்லா சாயீ,இயேசு சாயீ,
ஷங்கர் சாயீ,விஷ்ணுசாயீ,
என்றே நாளும் ஜெபிப்போம்.
வையகம் வாழ,ஜெய் ஜகத்,
மகாத்மா வழியில்,
ஹிந்து ,முஸ்லிம் ,சீக் ,ஈஸாஈ.
ஆபஸ் மே ஹை பாய் பாஈ,
என வையகம் வாழ,
சுவாமி விவேகானந்தர்,
கூற்றுப்படி,
வையகம் முழுதும்,
சர்வதர்ம ஒற்றுமை பெற ,
ஆண்டவன் உடனிருக்கப்
பிரார்த்திப்போம்.





new year greetings

2012 Happy new year

௨௦௧௨  புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆங்கிலப்புத்தாண்டு ,
ஆனந்தமாக,
இன்னல்களின்றி,
இன்பங்கள் நிறைந்த ,
ஈடு இணையற்ற,
இயற்கை இன்பமாக,
உள்ளம் நிறைவான,
ஊக்கம் தரும்.
எண்ணங்கள் நிறைவேறும்,
ஏற்றம் தரும்.
ஐந்து கரத்தான்,
ஆணை முகத்தான்.
ஆறுமுகத்தான்,
அருள்மழை பொழியும்
வழிநடத்தும் ஆண்டாக
அமைய வாழ்த்துக்கள்.
பிரார்த்தனைகள்.

2०१२ नव वर्ष की शुभ कामनाएँ
                                                               नए  साल में  आप सब को,         

                                                   
                                      
                                                                  अनंत आनंद मिले.इच्छाएं आपको ,ईश्वर की कृपा से,

उत्तम हो .

आप को नाम मिलें,
दाम मिलें .
सारे सपने आपके ,
साकार हो.
अग जग में,
अघ हटें,
आनंद मंगल
प्रसन्नता,
शान्ति,
आशा,
भाई -चारा,
बंधुत्व
प्रेम पाश से
बंधुत्व बढ़ें.
अग-जग में
न्याय  चलें .
प्यार बढें.
प्राकृतिक
बाधाएं
दूर हो.
भगवान सब की भला करें.